Monday, September 29, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 22

மற்ற பரீட்ச்சைகளை விட, கணக்குப் பரீட்ச்சைக்கு ஷங்கர் அதிக முக்கியத்துவம் கொடுப்பான். அதற்குக் காரணம், அவனுக்கும் கணக்குப்பாடத்திற்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு என்றாலே எகிறி குதித்து எஸ்கேப் ஆகும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுள் ஷங்கரும் ஒருவன். ஆரம்பத்திலிருந்தே கணக்கில் தடுமாறும் ஷங்கருக்கு, பத்தாம் வகுப்பில் முதல்தாள், இரெண்டாம் தாள் என்று இரெண்டு தேர்வுகள் வேறு இருந்தன. மொழித்தேர்வுகள் எல்லாம் முடிந்து, கணக்குப் பரீட்ச்சை வந்தே விட்டது!


அதிகாலையில் எழுந்து, அசுர வேகத்தில் தயாராகி, பள்ளிக்குக் கிளம்பிச்சென்றான் ஷங்கர். வகுப்பறை காலியாக இருந்தது. அப்போது வகுப்பறைக்குள் நுழைந்த கிருஷ்ணா, தனக்கு முன்னால் ஷங்கர் வந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.


"என்னடா இது, எனக்கு முன்னாலேயே வந்துட்ட? அன்னைக்கு நான் வரசொன்னப்போ ரொம்ப படம் போட்ட?"


"இன்னைக்கு கணக்குப் பரீட்ச்சை....."


"ஓஹோ.... அதான் நெத்தியில பட்டை எல்லாம் பட்டையைக் கிளப்புதோ?"


"பேசுங்கடா, பேசுங்க..... இந்த கணக்குப் பரீட்ச்சை மட்டும் முடியட்டும்"


நேரம் செல்ல செல்ல, அனைவரும் வரத்துவங்கினர். மண்டியிட்டு பிரார்த்தனை புரிதல் எல்லாம் முடிந்த பிறகு, அனைவரும் அல்-அமீன் பள்ளிக்கு கிளம்பிச்சென்றனர். இத்தனை தேர்வுகளின் பொது ஏற்படாத பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டானது ஷங்கருக்கு. கணக்குப் பரீட்ச்சைகளை நல்லபடியாக எழுதிவிட்டால், பொதுத்தேர்வே முடிந்த மாதிரி. வினாத்தாள் எளிதாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.


தேர்வு ஆரம்பித்தது. வினாத்தாள் தன் கைக்கு வரும் வரை படபடப்பாக இருந்தது ஷங்கருக்கு. சற்று நேரத்தில், தேர்வு கண்காளிப்பாளர் வந்து, வினாத்தாளை தன் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார். பரபரப்புடன் அதை எடுத்த ஷங்கர், அவசரமாக அவன் கண்களை அதன் மீது ஓடவிட்டான். நான்கு பக்கங்களாக இருந்த வினாத்தாளில், உடனே கடைசி பக்கத்திற்குத் தாவினான்.


10 மதிப்பெண்கள் அளிக்கும் கேள்வியைப் படித்ததும், தனக்குத் தெரிந்த கேள்வி வந்திருப்பதைப் பார்த்து, நிம்மதியடைந்தான். ஆனால், அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்தது, 5 மதிப்பெண்கள் வழங்கும் கேள்விகளைப் படித்ததும், தலை சுற்றியது. மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஏதேனும் மூன்று கேள்விகளுக்கு விடையளித்தால் போதும் என்றிருந்தாலும், ஒரு கேள்விக்கு கூட விடை தெரியவில்லை. மற்ற கேள்விகளை பார்க்ககூடத்துணிவில்லாமல், கவலையில் ஆழ்ந்தான்.


ஒருவேளை, மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறதோ என்று அனைவரின் முகத்தையும் பார்த்தான் ஷங்கர். பாபு, கிருஷ்ணா, பாலா, அனைவரும் தொங்கிய முகத்துடனேயே காணப்பட்டனர். நட்டு ஷங்கரைப் பார்த்து "போச்சு" என்பதுபோல தலையாட்டினான். சரி, யாருக்குமே தெரியவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு, ஒரு சின்ன ஆறுதல் கிடைத்தது.


தனக்குத் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலெழுதத் துவங்கினான் ஷங்கர். மற்ற கேள்விகளை எல்லாம் எழுதி முடித்துவிட்டு, அந்த 5 மதிப்பெண்கேள்விகளுக்கும் ஏதேனும் ஒரு பதிலை எழுதி வைக்கலாம் என்று முடிவு செய்தபோது தான் அது நடந்தது


தேர்வு முடிவதற்கு இன்னும் 20 நிமிடங்களே இருந்தன. உடனே, அந்த தேர்வு கண்காளிப்பாளர், ஒரு மாணவனை எழுப்பி, வகுப்பறையின் முன்னால் வரச்சொன்னார். என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் முழித்துக்கொண்டிருந்தனர். அல்-அமீன் பள்ளியைச் சேர்ந்த அந்தப் பையனின் விடைத்தாளை வைத்து, அந்த மதிப்பெண் கேள்விகளுக்கான பதிலை அனைவர் முன்னிலையில் உரக்க படிக்கச் சொன்னார்.


நடப்பவை எல்லாம் நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், அந்த பையன் வரிக்கு வரி, அந்த விடையைப் படிக்க, அவசர அவசரமாக அனைவரும் அதை எழுதிக்கொண்டிருந்தனர். ஷங்கர், தன்னையே ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டான். பத்து நிமிடங்களில் மூன்று வினாக்களுக்கான விடைகளையும் படித்து முடித்தான்.


அனைவரும் அதை எழுதி முடித்தபிறகு, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அனைவருக்கும் வாயெல்லாம் பல்லாக இருந்தது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஷங்கர் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு அதிசயத்தை நேரில் பார்த்து அனுபவித்த பூரிப்பில் இருந்தான் ஷங்கர்.

பரீட்ச்சை முடிந்து வெளியில் வந்தவுடன் எதிரில் தென்பட்டான் பாபு. இருவரும் மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டனர். அந்த வாத்தியார், அல்-அமீன் பள்ளியின் கணக்கு வாத்தியார் என்று பின்பு தெரிந்தது. கேள்விகள் சற்று மாற்றி கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் அனைவரும் குழம்பியிருந்தார்கள். நல்லவேளையாக இவர் அப்படி ஒரு காரியத்தை செய்தார் என்று அந்த வாத்தியாரைஅனைவரும் புகழ்ந்து தள்ளினர். அனைவரும், அந்த சம்பவத்தைப் பற்றி பேசிப்பேசி மாய்ந்து போனார்கள்.


கடைசி பரீட்ச்சை....


யாருமே தேர்வு எழுதும் மன நிலையில் இல்லை. விடுமுறையை ஏற்கெனவே கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். பரீட்ச்சை எழுதிவிட்டு, நேரடியாக வாசு தியேட்டர் சென்று 'படையப்பா' பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தனர். ஷங்கர் வேறு, டிக்கெட்டுகளை காட்டி உசுப்பேற்றிக்கொண்டிருந்தான்.


"அடுத்த வருஷம் வேற ஸ்கூல் மாறிடணும் டா..." - திடீரென்று சொன்னான் ஷங்கர்.


யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கடைசி பரீட்ச்சையான ஜியோக்ராபி பரீட்ச்சைக்கு படித்துக் கொண்டிருந்த அனைவரும், ஷங்கரை கேள்விக்குறியோடு பார்த்தனர்...


"நம்ம ஸ்கூல் வேஸ்டு டா... இன்னும் நம்மளை சின்னப்பசங்களாவே நடத்துறாங்க. மத்த ஸ்கூல் எல்லாம் பாரு..."


"நம்ம உண்மையிலேயே சின்னப் பசங்க தான டா?" - மறைந்திருந்து குரல் கொடுத்தான் நட்டு.


"டேய், எவன் டா அவன்?" என்று ஷங்கர் கேட்டதும் பம்மினான்.


"வேற எந்த ஸ்கூலுக்கு போறது?" என்று கேட்டான் பாபு.


"டவுன் ஹை ஸ்கூல்"


"ஏன்?"


"அங்க தான் நிறைய சுதந்திரம் இருக்கும்.... +1 நல்லா என்ஜாய் பண்ணனும்டா...."


"இங்கே மட்டும் என்ன என்ஜாய் பண்ணாமலா இருக்கோம்?" என்றான் குமார்.


"அது வேற... இங்கே நமக்கு படிப்பைத்தவிர என்னடா ஆக்ட்டிவிடி இருக்கு?"


".............."


"எப்படியும் நான் அடுத்த வருஷம் டவுன் ஹை ஸ்கூல்- சேரப் போறேன் டா" - சொல்லிக்கொண்டே ஷங்கரின் அருகில் வந்து அமர்ந்தான் செழியன்.


"சரி, சரி.... இப்போ எதுக்கு அந்த பேச்சு? முதல்ல பரீட்ச்சை எழுதி முதிச்சிட்டு, தலைவர் படத்தைப் பார்க்குற வழியை பார்க்கலாம்" என்று, தற்காலிகமாக அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பாபு.


பரீட்ச்சையை நல்லபடியாக எழுதி முடித்துவிட்டு, இவர்கள் ஆறு பேர் மட்டும் நேராக தியேட்டருக்குச் சென்றனர். அலைகடலென திரண்டிருந்த கூட்டத்தைப்பார்த்து சற்றே மிரண்டனர். அவ்வளவு கூட்டத்தில், பள்ளிச் சீருடையுடனிருந்த இவர்களுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.


"வீட்டுக்குப் போய் சட்டையை மாத்திக்கிட்டு வந்திருக்கலாமோ?" என்றான் குமார்.


கையில் டிக்கெட் இருந்தாலும், தியேட்டருக்குள் செல்ல, நீண்ட வரிசைநின்றுகொண்டிருந்தது. கையில் பெரிய தடியுடன் போலீஸ்காரர்கள்சுற்றிக்கொண்டிருந்தார்கள். உள்ளே செல்ல கேட் திறக்கப்பட்டபோது, தள்ளுமுள்ளு ஆனது. போலீசிடம் அடி வாங்காமல் உள்ளே சென்று விட வேண்டும் என்று, இவர்கள் திகிலுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.


கூட்டத்தில் சிக்கி, சட்டை எல்லாம் கசங்கி, தலையெல்லாம் கலைந்து ஒருமார்கமாக உள்ளே சென்று அமர்ந்தனர். பதினைந்து நிமிடங்கள் வரிசையில்நின்றது, பதினைத்து மணிநேரம் நின்ற களைப்பைத் தந்தது.


அத்தனை களைப்பும், திரையில் "சூப்பர் ஸ்டார்" என்ற எழுத்து வந்த உடனேயே மாயமாய் மறைந்து போனது. திடீரென ஒரு சக்தி வந்தது. இதற்கு மேல், ரஜினி, திரையில் முதலில் தோன்றியவுடன், "தலைவா....." என்று இருக்கையை விட்டு எழுந்து நின்று கூச்சல் போட்டனர். தலைவரைப் பார்த்து, அனைவரும் பரவசநிலையை அடைந்திருந்தனர்....


தொடரும்...

Saturday, September 27, 2008

Thalaiva.... What is in store for us?


அக்டோபர் மாதம், தலைவர் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினரை சந்திக்கப் போவதாக அறிவித்தது தான் அறிவித்தார், உடனே அதனை சுற்றி ஏராளமான யூகங்கள், எதிர்பார்ப்புகள் என்று இப்போது மறுபடியும் 1996ம் ஆண்டு இருந்ததைப்போல், ரஜினி அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னுடைய சக ரசிகர்கள் சிலர், தலைவர் அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிவிட்டார் என்று எண்ணிக்கொண்டு கொண்டாட்டங்களை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டனர். மேலே இணைக்கப்பட்டிருக்கும் படமே அதற்கு சாட்சி. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.... தலைவர், தன் வாயால் எதையும் கூறும் வரை தயவு செய்து எதையும் நம்ப வேண்டாம். தலைவர், 'கோட்டை'க்கு செல்வது போல நாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. தலைவர் இதைப்பற்றி எதுவுமே கூறாத நிலையில்,(1996ம் ஆண்டின் போது, சில அரசியல் கருத்துக்களை தலைவர் வெளியிட்டிருந்தார்) மிகுந்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு, பின்பு அப்படி எதுவுமே இல்லை என்கிற பட்சத்தில் ஏமாற்றம் அடைவதோ, தலைவர் மீது அதிருப்தி கொள்வதோ ஞாயமே இல்லை. இதோ, அக்டோபர் வந்துவிட்டது, தலைவர் 'ரோபோ' முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புகிறார்... கொஞ்சம் பொறுங்கள்.


அரசியலுக்கு வந்து தான் எங்களை வழி நடத்த வேண்டும் என்பது அல்ல. பூப்பாதையானாலும் சரி, சிங்கப்பாதையானாலும் சரி என்றும் தலைவர் வழியில்....


-------------------------------------------------------------------------------------------------

Huge expectations, lot of guesses and buzzes surrounding Superstar's October meet with the fan club members of all districts. The media has already powered their imaginations and started publishing interesting articles to make their fortune. The situation now is more like 1996, when thalaivar was expected to enter into politics. The superstar is returning to chennai today after completing the first schedule of 'Robot' shooting in Peru. Numerous posters adorn the chennai streets like the one above, which is headlined 'Welcome to start the party". These posters also term this october meet as "October Arasiyal Puratchi Velga", which means "Let the political revolution of october win". Some of my fellow fans have already started the celebrations, assuming that this meeting's outcome is definitely going to be a political party. Some fans like me are keeping the fingers crossed. A small piece of advice to people who started celebrating Thalaivar's political entry....



Don't make assumptions. Nothing is true unless and until thalaivar himself speaks out. Building imaginations and later on getting disappointed when that doesn't happen is not thalaivar's fault. He neither gets influenced by anyone nor gets affected by the knee-jerk reactions. He knows exactly what to do and when to do. Whatever it may be, we should be ready to accept it and follow the footsteps of our beloved thalaivar...

Tuesday, September 23, 2008

Osama - An emotional stir


Shocking and Stunning – Probably I got hold of two perfect words to describe this movie. My first ever Afghan movie experience (ofcourse with subtitles) turned out to be a perfect stunner. No heavy pathos background scores, no 'stuffed' sentiment scenes, but yet this movie shakes you up with its emotion packed visual. The title appears to be very misleading as one would easily think that this movie is about Osama-bin-laden. But, it is not. A very simple story with beautiful narration – A 12 year old Afghan girl and her mother loses their jobs when Talibans take over the rule since it’s forbidden for women to work according to the Taliban regime.


Since there is no male in the family, the little girl is forcefully disguised as a boy to find a job and help the family’s survival. The girl is also named ‘Osama’ and made to work in a small store before she was called for a compulsory military training by the Talibans. The whole movie is about this little girl’s efforts to try and keep away from the Talibans, as once caught, death is the going to be the only verdict. The movie’s length is less than 90 minutes and it’s really very occupying. There was never a moment where you can detach yourselves from the movie. The movie showcases the brutal treatment of the Talibans, especially against women.


Inspired by a true incident, this movie is the first complete Afghan movie ever shot. Thanks to Siddiq Barmak for the wonderful direction and since other characters don’t really have much screen space, it is Osama (Marina Golbahari) and Espandi (Arif Herati) who score full marks. I strongly recommend this movie for all movie buffs as well as non-movie buffs

I mean, it’s a must-watch for everyone ;)


Chill !


Bye,

Monday, September 22, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 21

அல்-அமீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி...

பள்ளியின் உள்ளே நுழையும்போதே பொதுத்தேர்வின் பரபரப்பு தொற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. மாணவர்கள் இங்கும் அங்குமாய் சென்று வந்துகொண்டிருந்தனர்.

பேருந்து பள்ளியின் வாயிலைக் கடந்து உள்ளே சென்றது. இன்னொரு பேருந்தில் மாணவிகள் தனியாக வந்து இறங்கினார்கள். அவர்களுடன் வந்திருந்த இரெண்டு ஆசிரியர்களும், மாணவர்களையும் மாணவிகளையும் வரிசையில் நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். ஷங்கர், குமார், கிருஷ்ணா, பாலா மற்றும் பாபு ஆகியோர் தனியாக நின்று படித்துக்கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்து, வரிசை எண் பிரகாரம் நிற்க சொன்னார் லீலா மிஸ்.


"டேய், ஹால் டிக்கெட் கொண்டு வந்தியா?" நட்டிடம் கேட்டான் பாலா.


"அய்யய்யோ............" தலையில் கைவைத்தபடி அதிர்ச்சியாகி நின்றான்.


"போச்சு போ.... வீட்டுக்குக் கிளம்பு"


"இப்போ என்னடா பண்ணறது?" பயத்தின் உச்சத்திற்கு சென்றான் நட்டு.


"அட தூ.... டேய், ஹால் டிக்கெட் எல்லாம் நம்ம கைக்கு வரவே இல்லை. அவங்க தான் வெச்சிருக்காங்க" என்றான் பாபு.


"ஆமால்ல..... மறந்துட்டேன். நல்லவேளை...” என்று பெருமூச்சுவிட்டான் நட்டு.


"உன்னை மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் ஹால் டிக்கெட் கொடுத்தா என்ன ஆகுறது? உன் மறதிக்கு ஒரு அளவே இல்ல?"


"ஹிஹி... மறந்துட்டேன்" வழக்கமான பதில் வந்தது நட்டிடமிருந்து.


பரீட்ச்சை அறை மிகப்பெரியதாக இருந்தது. இவ்வளவு பிரம்மாண்டமான அறையை இவர்கள் பள்ளியில் பார்த்ததில்லை. ஒரே அறையில் கிட்டத்தட்ட தொண்ணூறு பேர் அமர்ந்து பரீட்ச்சை எழுதக்கூடியதாய் இருந்தது. வரிசை எண்ணின் அடிப்படையில், ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்பட்டனர். ஒவ்வொரு இருக்கையின் மேல், அங்கு அமர வேண்டிய மாணவர்களின் வரிசை எண் எழுதப்பட்டிருந்தது. அவர்களுடைய வரிசை எண்ணெய் தேடிப்பார்த்து, அவரவர் அவரவர் இடங்களில் அமர்ந்தனர்.


90 பேர் அமரக்கூடிய அறை என்பதால், இவர்கள் ஆறு பெரும் ஒரே அறையிலேயே அமர்ந்தனர். ஆனால், ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ஒரு பலகையில் இரெண்டு பேர் அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பலகையிலும் இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள்.ஜாடையில் அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


முதல் பரீட்ச்சை தமிழ் முதல் தாள் என்பதால், அனைவரும் டென்ஷன் அதிகமின்றி காணப்பட்டனர். பேனா, பென்சில், ஸ்கேல் முதலியவற்றை சரிபார்த்துக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து, தேர்வு கண்காளிப்பாளர்கள் இருவர் வந்தனர். அனைவரும் எழுந்து வணக்கம் கூறி, பின் அமர்ந்தனர். நேரம் செல்ல செல்ல, மாணவர்களிடையே கொஞ்சம் டென்ஷன் ஏறத்துவங்கியது.


அந்த இரு கண்காளிப்பாளர்களில் ஒருவர், பலமுறை கேட்டு சலித்திருந்த அதே பல்லவியை மீண்டும் பாடினார் - "யாராவது 'பிட்டு' வெச்சிருந்தா இப்போவே குடுத்திருங்க. பறக்கும் படை வந்து பிடிச்சா உங்க வாழ்க்கையே வீணாயிரும்". யாரும் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் சொல்லி முடித்த சில நிமிடங்களில் ஒரு சில மாணவர்கள், அவர்கள் எடுத்து வைத்திருந்த 'பிட்டு'களை எல்லாம் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தனர். அவரும் அவர்களை அதட்டக்கூட செய்யாமல், அவற்றை வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்.


'பறக்கும் படை' யைப் பற்றி, முதல் முறையாக பரீட்ச்சை எழுதுவோருக்கு ஒரு கற்பனை இருக்கும். வேற்று கிரகத்து ஜந்துக்கள் போல் கூட சிலர் அவர்களை மனதிற்குள் சித்தரித்து வைத்திருப்பார்கள். ஆசிரியர்கள் அவர்களை பற்றிக்கொடுக்கும் 'பில்ட்-அப்'புகளே அதற்குக் காரணம். நட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைவரும் அடுத்த நாள் பரீட்ச்சையைப் பற்றியே அதிகம் பேசிக்கொண்டிருக்க, இவன் "பறக்கும் படை"யைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.


விடைத்தாள்கள் அனைவருக்கும் முதலில் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நிரப்புவது எப்படி என்று விளக்கிக்கொண்டிருந்தனர். அது முடிந்த பிறகு, மணி அடித்தவுடன் வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது. முதலில் வினாத்தாள் வாங்கிய ஷங்கர், அவசர அவசரமாக அதை படித்துப்பார்த்துவிட்டு, பின்னால் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, சைகையிலேயே "ஈசி" என்று கூறினான்.


"அப்பாடா" என்று இருந்தது மற்றவர்களுக்கு. விறுவிறுப்பாக பரீட்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அமைதியில் மூழ்கியிருந்த அந்த அறையில், திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது. தடதடவென சத்தம் எழுப்பியவாறு, மூன்று பேர் அந்த அறையினுள் நுழைந்தனர். சொல்லிவைத்தாற்போல் மூவருமே "சஃபாரி சூட்" அணிந்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் ஆஜானுபாகுவாக, கன்னங்கரேலென்று இருந்தார். அந்த மூவரில், அவருடைய உருவமே மிரட்டும் வகையில் இருந்தது. உள்ளே நுழைந்தவர்கள், ஒவ்வொரு வரிசையாக சென்று மாணவர்களை பார்வையிட்டனர்.


யாரேனும் ஒரு மாணவனிடம் சென்று, அவனை சோதனை செய்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நட்டிற்கு உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது. பரீட்ச்சை எழுதுவதை நிறுத்திவிட்டு, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உயரமான ஆசாமியைப் பார்த்து பயந்துகொன்டிருந்தான். வேறு ஒரு மாணவனை சோதனை செய்துகொண்டிருந்த அவர், சற்றும் எதிர்பாராமல் நட்டைப் பார்க்கவே, அவன் செய்வதறியாது திகைத்தான். உடனே, பார்வையை மாற்றவேண்டும் என்று கூடத்தோன்றாமல், அவரைப் பார்த்து 'திருதிரு'வென முழித்துக்கொண்டிருந்தான்.


சனியனை தூக்கி பனியனில் போட்டுக்கொண்டதுபோல் ஒரு காரியத்தை செய்து விட, அவர் நேராக நட்டிடம் வந்தார்.


"என்னடா முழிக்கிற?, 'பிட்டு' வெச்சிருக்கியா??"


"....... இல்ல..."


"சட்டையை தூக்கு...." - அவர் இப்படி சொன்னவுடன், இதை அறையின் மற்ற மூலைகளிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, குமார், பாபு, பாலா மற்றும் ஷங்கர் அனைவரும் சைலண்டாக சிரித்துக்கொண்டிருந்தனர்.


ஒரு ஐந்து நிமிடம் சோதனை செய்துவிட்டு,


"உட்காரு......" என்று அதட்டினார்.


விட்டால் போதும் என்று, அவர் சொன்னவுடன் அமர்ந்து கடகடவென எழுத ஆரம்பித்தான். அப்போது பேப்பரைப் பார்த்து எழுத ஆரம்பித்தவன், பரீட்ச்சை முடியும் வரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.


பரீட்ச்சை முடிந்து அனைவரும் வெளியில் கூடினர்.வெளியில் வந்தவர்களிடம் பரீட்ச்சையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் லீலா மிஸ். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, அனைவரும் நட்டை பிடித்துக்கொண்டனர்.


" பிட்டும் அடிக்காம, காப்பியும் அடிக்காம அவங்ககிட்ட எப்படி டா மாட்டின?" - ஆரம்பித்து வைத்தான் பாபு.


"தெரியல டா... நான் சும்மா பாத்துக்கிட்டு இருந்தேன். அந்த ஆளு நேரா என்கிட்டே வந்துட்டான்"


"என்னமோ பெரிய ஃபிகரு வந்த மாதிரி வாயைப் பிளந்து பாத்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்..."


"அந்த ஆளு 'சட்டையைத் தூக்கு'ன்னு சொன்ன உடனே, எனக்கு சிரிப்பு தாங்கல"


"நல்ல வேளை அதோட விட்டாரு"


"கிளாஸ் ரூம் முதல், எக்சாம் ஹால் வரை - எங்கே போனாலும் காமெடியில உன் கொடிய நட்டுட்ற... கிரேட் டா...."


இப்படி ஏகப்பட்ட கமெண்டுகள் மாறி மாறி பறக்க, மிக விரைவில் இந்த சம்பவம் அவர்கள் பள்ளி முழுவதும் பிரபலமானது.


கணக்குப் பரீட்ச்சை வரும் வரை, அனைத்தும் நன்றாகவே சென்றது....


தொடரும்....

Monday, September 15, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 20

தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த பாபுவை உள்ளே அழைத்தான் நட்டு. வாசலில் செருப்பை விட்டுவிட்டு, மெதுவாக உள்ளே நுழைந்தான் பாபு.

ஹாலில் கால் நீட்டியபடி குமார் படுத்திருக்க, அருகில் அமர்ந்திருந்தான் ஷங்கர். பாபுவைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்தான் குமார்.

"வா டா..." என்றான் மெலிதாக புன்னகைத்தபடி.

குமாரின் அருகில் வந்து அமர்ந்தான் பாபு.

"சாரி டா.... " என்று சொல்லும்போதே, கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது. பாபு கண்கலங்குவதைப் பார்த்து, குமாருக்கும் அழுகை வந்தது.

"நான் தான்டா சாரி சொல்லணும்" என்றான் குமார் கண்கலங்கியபடி.

எல்லோரும் கண்கலங்குவதைப் பார்த்த நட்டு, அந்த அசௌகரியமான சூழலிலிருந்து விடுபட, ஏதேனும் ஒரு ஜோக் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, உடனே அதை செயல்படுத்தினான்.

"குமாருக்கு இவ்வளவு சீக்கிரம் கால்கட்டு போடுவாங்கன்னு நினைக்கவே இல்ல...." என்றான்.

சிரிப்பதற்கு மாறாக, நட்டை அனைவரும் முறைத்தனர்.

"ஜோக் சொன்னா சிரிக்கணும். இது கூட தெரியாது? ஸ்டுப்பிட் ஃபெல்லோஸ்" என்றான் நட்டு.

"இப்போ இந்த கேவலமான மொக்கையை நீ போடலேன்னு இங்க யாரும் அழல.... எப்படி டா உன்னால மட்டும் முடியுது?" என்றான் ஷங்கர்.

ஷங்கர் போட்ட அஸ்த்திவாரத்தில் வீடு கட்ட ஆரம்பித்தனர் குமாரும் பாபுவும். அனைவரது கவனமும் நட்டின் பக்கம் திரும்பியது. வரிசையாக அவனை கலாய்க்க ஆரம்பித்தனர்.

"டேய், நிறுத்துங்க டா... ஏதோ உங்க எமோஷனைக் குறைக்கலாமேன்னு ஒரு ஜோக் அடிச்சா.... எல்லாரும் அதை விட்டுட்டு, என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க"

"எதுவா இருந்தா என்ன நட்டு.... உன் உயர்ந்த நோக்கம் நிறைவேறியாச்சு.... சந்தோஷம் தானே?" என்றான் ஷங்கர்.

"என்னைக் கொளுத்திவிட்டுட்டு குளிர் காயாதீங்க டா...."

"சரி விடு, இது வழக்கமா நடக்குறதுதானே...."

குமாரிடம், "இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டான் பாபு.

"வலி இருக்கு.... நல்ல வேளை... ஃபிராக்ச்சர் ஆகல"

"எப்படி டா ஆச்சு?"

"டேய்..... போதும் டா.... நம்ம வாசகர்கள் ரொம்ப பாவம். மறுபடியும் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஹிஸ்டரி ஆப் தி ஆக்சிடன்ட், ஜியோக்ராபி ஆப் தி இன்சிடன்ட் எல்லாம் சொல்ல முடியாது. அவனுங்க ரெண்டு பேரையும் இங்க வர சொல்லுங்க டா.... மொத்தமா எல்லாருக்கும் ஒரு தடவை கதை சொல்லிடலாம்" என்றான் ஷங்கர்.

மொட்டைக்கும் கிருஷ்ணாவிற்கும் ஃபோன் பறந்தது. அடுத்த அரை மணிநேரத்தில், இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். நடந்த கதை அத்தனையும் அனைவருக்கும் சொல்லியானது. இரவு வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபையை கலைத்தனர்.

இரெண்டு மாதங்கள் உருண்டோடின....

இன்னும் பத்து நாட்களில் பொதுத்தேர்வு. வாழ்க்கையின் முதல் பொதுத்தேர்விற்காக அனைவரும் மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தனர். பள்ளியில், ரிவிஷன் எக்சாம் என்ற பெயரில் தேர்வு மீதே வெறுப்பு வரும் அளவிற்கு அடுத்தடுத்து தேர்வுகளை நடத்திக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு வெளியிலும் யாரைப் பார்த்தாலும் "பப்ளிக் எக்சாம்" என்று பில்ட் அப் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

வாழ்க்கையின் முதல் நடைமுறைத்தேர்வு அப்போது தான் முடிந்திருந்தது. அவற்றை சிறப்பாக முடித்திருந்த திருப்த்தியில் பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

"எக்ஸ்டெர்னல் எக்ஸாமினரை மிக்சர், ஸ்வீட் எல்லாம் கொடுத்து மங்கு ஆக்கிட்டாங்க... உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்கவே விடல" என்றான் கிருஷ்ணா.

"ஆமா டா.... ஸ்வீட் காரம் சாப்பிடறதுக்கே கிளம்பி வந்துடறானுங்க" என்றான் பாலா.

"அதை எல்லாம் விடுங்க டா... தலைவர் படம் "படையப்பா" ரிலீஸ் ஆகுது டா.. ஆனா, அது ரிலீஸ் ஆகுறப்போ நமக்கு பப்ளிக் எக்சாம் நடந்துக்கிட்டு இருக்கும்" என்றான் ஷங்கர்

"என்ன கொடுமை இது? தலைவர் படத்த ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்க முடியல...." என்று புலம்பினான் பாபு.

"ஜியாக்ரபி பரீட்ச்சையை எழுதிட்டு நேரா தியேட்டருக்கு போயிட வேண்டியதுதான்" என்றான் ஷங்கர்.

"ஆமா டா..... எப்படியாச்சும் டிக்கெட் வாங்கிரணும்" என்றான் பாபு.

"நீ கவலையே படாத.... எப்படியும் நமக்கு டிக்கெட் உஷார் பண்ணிடறேன்"

"அது போதும்...."

"இன்னிக்கி நைட்டு எங்க வீட்டுல குரூப் ஸ்டடி பண்ணலாமா?" என்று நட்டு கேட்டதற்கு, அனைவரும் கோரசாக இருகரம் கூப்பி,

"வேண்டாம் டா சாமி...." என்றனர்.

"போதும் டா நம்ம குரூப் ஸ்டடி பண்ணது. இனிமேலும் படிக்கலேன்னா வேலைக்கு ஆகாது"

படிப்பு, படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்ததால், பொதுத்தேர்வு தொடங்கும் வரை இவர்கள் வாழ்வில் சுவாரசியமாக எதுவுமே நிகழவில்லை. அதனால், நேராக பொதுத்தேர்வு ஆரம்பிக்கும் நாளுக்குத் தாவுகிறோம்...

காலை 6 மணி - ஷங்கர் வீடு.
டெலிஃபோன் மணி ஒலித்தது. ஷங்கர் எடுத்தான்.

ஷங்கர் : ஹலோ

(எதிர்முனையில்) கிருஷ்ணா : டேய், என்னடா கிளம்பியாச்சா?

ஷங்கர் : மணி 6 தான் டா ஆகுது.

கிருஷ்ணா : தெரியும் டா. எங்க அம்மா நல்ல நேரம் போறதுக்குள்ள வீட்டை விட்டுக் கிளம்பிடணும்ன்னு என்னைத் துரத்துறாங்க...

ஷங்கர் : அவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்து என்ன பண்ணப்போற? எவனும் இருக்க மாட்டான்.

கிருஷ்ணா : அதனால தான் ஃபோன் பண்ணறேன். நீ கொஞ்சம் சீக்கிரமா வாடா.... எல்லாருக்கும் சொல்லிட்டேன். நீயும் வந்துடு.

ஷங்கர் : ட்ரை பண்ணறேன்

போனை துண்டித்தான்.
---------------------------------------------------------------------------
காலை 7.40 மணி - பள்ளி வகுப்பறையில்...

கிருஷ்ணா அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். அப்போது, பாபுவும் நட்டும் அங்கு வந்தார்கள். இருவரும் நெற்றி நிறைய விபூதி வைத்திருந்தார்கள். பக்தி, பரீட்ச்சை சீசனில் மட்டும் வந்து போகும். எப்போதெல்லாம் பரீட்ச்சை வருகிறதோ, அப்போதெல்லாம் பக்தியும் வரும். பாபுவும் நட்டும் நெற்றியில் விபூதி வைத்திருந்ததைப் பார்த்து, கிருஷ்ணா கிண்டலடித்தான்.

"இப்போ மட்டும் பக்தி பொங்கிருமே" என்றான்.

"டேய், நீ மட்டும் என்ன? நெத்தியே மறைஞ்சி போற அளவுக்கு பட்டை போட்டுட்டு கிளம்பிருப்ப... வியர்வையில அழிஞ்சிருக்கும்"
---------------------------------------------------------------------------

காலை 8.20 மணி

நேரம் செல்ல செல்ல, ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்வு எழுத, அருகிலிருக்கும் "அல்-அமீன்" பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால், மாணவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்ல, பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன.

பொதுத்தேர்வில் காப்பி அடித்தாலோ, பிட் அடித்தாலோ என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மேடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த பள்ளிக்கு சென்று, ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளியின் பெயரைக் காப்பற்ற வேண்டும் என்றும் அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.

பள்ளியைவிட்டுக் கிளம்புவதற்கு முன், வகுப்பறையிலேயே சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அனைவரும் மண்டியிட்டு வணங்கினர். பிரார்த்தனை முடிந்தவுடன், அனைவரும் பேருந்தில் ஏறி, அந்த பள்ளிக்கு பயணப்பட்டனர்.

தொடரும்...

Thursday, September 11, 2008

Help Needed for a young aspiring chess champ!














பத்தாம் வகுப்பு படிக்கும் இளம் செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா, அகில இந்திய அளவில் பல செஸ் போட்டிகளில் பங்குபெற்று பல சாதனைகள் புரிந்து வருகிறார்.(பார்க்க இணைப்புகள்). இவற்றைத் தவிர, இன்னும் ஏராளமான பாராட்டுப் பத்திரங்கள், சான்றிதள்களை வைத்திருக்கும் இவருக்கு, தன்னுடைய சாதனைப்பயணத்தைத் தொடர, அவரது பொருளாதார நிலைமை ஒரு தடையாக இருந்து வருகிறது.

அவரது தந்தை மின்சார பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதுவரை அனைத்து கடன்களை வாங்கி தன் பெண்ணின் சாதனைக்கு உறுதுணையாக நின்றவர், தற்போது தன் பொருளாதார சுமையை பல கரங்கள் இணைந்து ஏற்க வேண்டுகிறார். தற்போது வியட்நாமில் நடக்கவிருக்கும் அகில உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கும், இதற்குப்பிறகு அவரது வளர்ச்சியில் துணை நிற்கவும் ஒரு கார்பரேட் நிறுவனம் முன்வந்தால், அது மிகவும் பாராட்டத்தக்கது. அது உடனே நடக்காவிட்டாலும், இப்போதைக்கு அவர் வியெட்னாம் சென்று போட்டியில் கலந்துகொள்ள உதவிகள் கிடைத்தால் அதுவே இவரது சாதனைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.


இதைப்படிப்பவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். பொருளாதார உதவி மட்டுமல்ல...  

--> நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இது போன்ற ஸ்பான்சர்ஷிப் செய்கிறார்களா என்று விசாரிக்கலாம். (HRக்கு ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம்) 

--> உங்களுக்கு ஏதேனும் ட்ரஸ்ட் அல்லது இதுபோன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அமைப்பு பற்றி தகவல் தெரிந்தால், அதை எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.  

--> நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்பலாம். அவர்களையும் முயற்சிக்க சொல்லலாம். 

--> செஸ் விளையாட்டுத் திறமையை மேம்படுத்திக் கொள்ள பயன்படும் மென்பொருள் உங்களுக்குக் கிடைத்தாலோ, அதைப்பற்றித்தெரிந்தாலோ, எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.  

மேற்கண்ட வழிகளில், ஏதேனும் ஒன்றை செய்வதன் வாயிலாக, ஏதேனும் ஒரு மாற்றத்தை அந்த இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்த முடியும். ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்ய விரும்புவோர், தங்கள் விருப்பத்தை இந்த பதிவின் Comments பகுதியில் பதியலாம். பணம் அனுப்ப விரும்புவோர், கீழ்கண்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்தலாம்.

Bank Name : Citibank
Location : Chennai, India
Account # : 5050816445
Name : Karthik Lakshminarayanan
Account type : NRE

பணம் அனுப்பியோர், தயவுசெய்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை அனுப்பவும்.

hikarrthik@gmail.com
d.gowrishankar@gmail.com


மோஹனப்ப்ரியாவின் கடிதத்தைக் கீழே படிக்கவும்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

From: mohana priya [xx]
Date: Wed, Sep 10, 2008 at 5:01 PM
Subject: world youth chess championship -Vietnam-2008
To: [xx]

In continuation of the submitted, biodata and copy of chess achievements, seeking financial assistance for the participation of world youth chess championship, J.Mohanapriya studying 10th standard, extraordinary talent in world woman chess,I submit my family financial situation and the necessity to search of sponsor.

father
-------

working as an Assistant Engineer(Elect) in chennai port trust, drawing Rs.30000/ per month in total and take home pay of Rs.8500/ as I have availed all permissible loans for attending tournaments.This Rs.8500/can come for my survival only.

Mother
----------

mother is a house wife.

sister
---------

only one younger sister studying 3rd standard

1.NEED OF STANDARD and ADVANCED COACHING
------------------------------------------
To compete in the world level, we need coaching from Grand Master or Inter National Master.Our team mates in India get training from Grand Master only.We managed to maintain our level by our natural talent only.However it is not possible for long time.
The rate of coaching for Grand Master is Rs.1000/ per hour. and International Master is Rs.500/ per hour.

2.NEED OF LAP-TOP and CDs
--------------------------
To meet the opponents in National and International level, we need LAP-TOPand chess CDs to estimate about the opponents during the time of tournament.By latest,we can observe opponent playing style, attacking style and defence style. And hence we can make an instant preparation for the opponent to get good result.The same way other people are doing in the International level.

ACTUAL REQUIREMENT UP TO 31.12.2008
------------------------------------

1.Lap-Top and CDs--------------------------------------------Rs30,000/

2.Expenditure to participate world youth from
19.10.2008 to 31.10.2008 at Vietnam-------------------------Rs 50,000/

3.Coaching(minimum)-----------------------------------------Rs 50,000/

4.Participation of common wealth chess champion
ship at Nagpur ----------------------------Rs 20,000/

5.National chess championship at Mysore---------------------Rs.10,000/

Total (approximatety)------------------------ ---------------Rs.1,60,000/

Requested for the needful
N.Jayachandhar,F/O. J.Mohanapriya
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
Attached above are a few of Mohanapriya's certificates and acheivements. She is seeking help to nurture her talent and participate in international chess competitions. 

Help in any form is greatly appreciated. Your help can bring out a big difference in a young girl's life, aspiring to become a chess champion. People interested in helping her can do either one of these....

--> You may enquire with your company whether they offer such sponsorships. You may shoot an email to the HR asking about it.

-->If you come to know about any trust/organizations that offer such sponsorship, you can let us know

-->Forward this post to your friends. You may also insist them to try

-->If anybody can guide through a proper channel to get a sponsorship, you may put us in contact with them

-->If you come across any software that helps in getting trained in chess championship, you may let us know or if you have it you can send it across.

-->People willing to help in anyways, can post their comments or send email to any of the below  email ids.

-->People willing to donate money can do a direct deposit or online transfer in the follwing bank account. 

Bank Name : Citibank
Account # : 5050816445
Location : Chennai, India
Name : Karthik Lakshminarayanan
Account type : NRE

After depositing money, please do email us the remittance details in any of the below email ids...

      hikarrthik@gmail.com
  d.gowrishankar@gmail.com

We will keep you posted about Mohanapriya's developments and we will also provide acknowledgements to people who helped us.

Thanks in advance!