Monday, June 30, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 9

இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத அந்தப் பெண்ணும் இவனுடன் சேர்ந்து அலற, அங்கு ஒரே ரகளையாகிப் போனது. சற்று நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் நட்டு வேகமாக அந்தப் பெண்ணிடமிருந்து விலகி, "ச... ச.... சா... சாரி..." என்று கூறினான். அந்தப் பெண்ணுடன் வந்திருந்த மற்ற மூன்று பெண்களும், செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். குமார், ஷங்கர், பாபு, கிருஷ்ணா, பாலா அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அவர்களுக்கும் நட்டு அப்படி செய்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அழுதுகொண்டிருந்த அந்தப் பெண் எந்த பதிலும் சொல்லாமல், வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். வழக்கம்போல எல்லாருடைய போதைக்கும் ஊறுகாய் ஆனான் நட்டு.

"என்னடா நீ... பேய் வீட்டுக்குள்ள போய் கட்டிப்புடிச்சி ரொமான்ஸ் பண்ற" என்று ஆரம்பித்தான் ஷங்கர்.

"பயத்துல தெரியாம அப்படிப் பண்ணிட்டேன்டா..... ச்ச..." என்றான் நட்டு.

"கட்டிப்புடிச்சது தான் புடிச்ச.... ஒரு நல்ல ஃபிகரா பாத்து கட்டிப்புடிச்சிருக்கக் கூடாது??" என்று கேட்டான் பாலா.

"டேய் மொட்டை... இருட்டுல அவனுக்கு கண்ணு தெரிஞ்சிருக்காது" என்று அவனுக்கு பதிலளித்தான் கிருஷ்ணா.

இப்படி ஒவ்வொருவரும் ரவுண்டு கட்டி நட்டை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக பொருட்காட்சியை சுற்றி முடித்தவுடன், அனைவரும் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.

"சரி டா... நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணாவும் பாபுவும் கிளம்பிச்சென்றனர். மற்ற அனைவரும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு, குமாரின் "டி.வி.எஸ். சேம்ப்"பில் ஷங்கரும் குமாரும் கிளம்பிச் சென்றனர்.

அப்போது திடீரென்று வாட்டசாட்டமான நான்கு பேர் வந்து நட்டின் முதுகில் வந்து கைவைத்தனர். இவர்கள் யார் என்று குழப்பத்துடன் நட்டு பார்க்க, மொட்டையும் யாரென்று தெரியாமல் குழம்பினான்.

"என் ஆளை நீ எப்படி டா கட்டிப்புடிக்கலாம்?" என்று அவன் பல்லை கடித்துக்கொண்டு கேட்க, உடனே மொட்டைக்கு எல்லாமே விளங்கியது.

"அவனா நீ???" என்று நினைத்துக்கொண்டான்.

நட்டு, அவனிடம் தான் பயத்தினால் தான் தெரியாமல் அப்படி செய்ததாக எவ்வளவோ கூறியும், அதை அவன் கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு முடிவுடன் வந்திருந்தவன் போல, நட்டைப் பிடித்து கீழே தள்ளினான். இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பாலா, நட்டை தூக்கிவிட்டு அவனிடம் சண்டைக்குப் போக, அந்தப் பையனுடன் வந்திருந்த மற்ற மூவரும் அடிக்க வந்தனர். அவர்களைப் பார்த்தால் பள்ளி மாணவர்கள் போல தெரியவில்லை.

இது, மெல்ல அங்கிருந்த கூட்டத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தது. கூட்டம் இவர்களை கவனிக்கத் தொடங்குவதை உணர்ந்து, அவன் "நீங்க எந்த ஸ்கூல்ன்னு எனக்குத் தெரியும் டா, எங்க எரியாவத் தாண்டி தானே போவீங்க.... அப்போ வெச்சிக்கிறேன் உங்களை" என்று சொல்லிவிட்டு, அவர்களுடன் கிளம்பிச் சென்றான்.

கீழே விழுந்து எழுந்ததில் அவமானப்பட்டிருந்த நட்டிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சீக்கிரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்பதற்காக, வேக வேகமாக மொட்டை, சைக்கிள் டோக்கனைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான்.

"சைக்கிள்ல ஏறு"

பதிலேதும் பேசாமல் சைக்கிளில் ஏறினான். நட்டு பேயறைந்தது போலிருந்தான். பாலாவும், எதுவுமே பேசாமல் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான்.

"நாளைக்கு காலையில பேசிக்கலாம்....வீட்ல யார்கிட்டயும் எதுவும் காட்டிக்காத" சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் பாலா.

நட்டிற்க்குத் தூக்கமே வரவில்லை. அத்தனை கூட்டத்திற்கு முன் அவன் கீழே தள்ளிவிடப்பட்டது அவமானமாக இருந்தது. தான் செய்த ஒரு காரியத்தினால் இவ்வளவு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் மீதே அவனுக்குக் கோபமாக வந்தது. நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சும்மாவே கிண்டலடிப்பார்கள், இதை வேறு சொன்னால் அவ்வளவுதான் என்று அதை நினைத்து பயமாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க, "எங்க ஏரியா பக்கம் வா, உன்னைப் பாத்துக்குறேன்" என்று அவன் மிரட்டியதும் பயமாக இருந்தது.

"நட்ராஜ்.... உன் சைக்கிள் எங்கே?" - அப்பாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தான் நட்டு. போர்வையை விலக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினான். வழக்கமாக சைக்கிளை நிறுத்தும் இடத்தில் சைக்கிளைக் காணவில்லை. ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று, முதல் நாள் பொருட்காட்ச்சிக்குப் போனதும், திரும்பி வரும்போது மொட்டையுடன் வந்ததும் ஞாபகம் வந்தது.

"ஐயையோ..... சைக்கிளை அங்கேயே விட்டுட்டேன்" என்று தலையில் அடித்துக் கொண்டான் நட்டு. நட்டின் அப்பா மீண்டும் வந்து, "சைக்கிள் எங்கப்பா காணும்?" என்று கேட்டார்.

"பாலா வீட்டுல இருக்குப்பா... பஞ்சர் ஆயிருச்சின்னு அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்" - கஷ்டப்பட்டு நம்பும்படியான ஒரு பொய்யை அவிழ்த்து விட்டான் நட்டு. உடனே மொட்டைக்கு போன் செய்தான்.

"டேய், நான் தான்... என் சைக்கிளை எக்ஸிபிஷன்லையே விட்டுட்டேன்" என்றான் நட்டு.

"அடப்பாவி.... எப்படி டா அதை மறந்துட்டு என்கூட வந்த?"

"அந்த டென்ஷன்ல மறந்துட்டேன். இப்போ சைக்கிள் உங்க வீட்டுல இருக்குறதா எங்க வீட்ல சொல்லிருக்கேன். நீ வந்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போ"

"வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு பொய் சொல்லியிருக்க. சரி, 8.45 க்கு வர்றேன். ரெடியா இரு"

"சரி, டேய்.... என் சைக்கிள் அங்க பத்திரமா இருக்குமா?"

"டேய், அதை எடுத்துட்டுப் போய் என்ன பண்ண முடியும்? பேரீச்சம்பழத்துக்காக யாரும் அவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க"

"ஓவரா பேசாத. சீக்கிரம் வா"

ஃபோனை துண்டித்துவிட்டு மின்னல் வேகத்தில் கிளம்பினான் நட்டு. அதிசயமாக, சொன்ன நேரத்தில் வந்து நின்றான் பாலா.

சைக்கிளின் பின்னால் அமர்ந்துகொண்டு தன் சைக்கிளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தான் நட்டு.

"இப்போவே போகலாமா?"

"இப்போ அங்க யாரும் இருக்க மாட்டாங்க. அதுமட்டும் இல்ல... ஸ்கூலுக்கு லேட் ஆயிடும்...."

"பயம்மா இருக்கு டா..."

"சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்ச உடனே நேரா எக்ஸிபிஷனுக்குப் போயிருவோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு" என்று கூறிவிட்டு பெடலை மிதித்தான் மொட்டை.

"எங்க ஏரியா பக்கம் போகும்போது பாத்துக்குறேன்ன்னு வேற மிரட்டினானே அவன். அவங்க ஏரியா எதுவா இருக்கும்?" என்று கேட்டான் நட்டு. உடனே பிரேக்கைப் பிடித்து சைக்கிளை நிறுத்தினான் மொட்டை.

"ஆமாம் டா... எனக்கு மறந்தே போச்சு. அடிவாங்குறதுக்கு என்னை வேற கூட்டு சேத்துக்குறியா நீ? எதுக்கும் நம்ம வேற வழியில போகலாம்" என்று கூறிவிட்டு பயத்துடன் சைக்கிளை வேறு வழியில் செலுத்தத்தொடங்கினான் பாலா.

தொடரும்...

Thursday, June 26, 2008

THE NAME IS RAJINIKANTH - Biography of the Super Star



The first picture is the actual front cover of the book and the second one is designed by me. I would've liked it much better this way.

I have never even dreamt of writing a review for a book, since me and books have always been poles apart. Since childhood, reading is one habit which my mom wanted me to cultivate, but for some reason I have always been devoid of books. Though I started reading so many books earlier, I have successfully completed only three books so far. If a book has to engage me, either it has to be extremely interesting or it should be about something which I am already interested at. The other books I have read so far – “The Da Vinci Code” (Controversies of any kind attract me more than anything else) and “Harvesting our souls” by Arun Shourie (Loved this book. Probably the best controversial flick one can ever read)

The third one is a biography and I wasn’t really concerned about the nature of the book since it was about the one and only SUPER STAR RAJINIKANTH. Any damn thing which is labelled “SUPER STAR RAJINIKANTH” would catch my attention and this book is no exception. Right from the day it was released, I was very keen to grab one copy as every other die hard thalaivar fan. Anyhow, it took sometime to reach me all the way from India. As soon as I got it, I started reading it and completed in two strokes. I am not a kind of person who keeps reading chapter by chapter for days together. First of all, thanks to Dr.Gayathri for putting up a great effort to bring out such a good book. It was a very good and neat compilation of incidents and facts.

Here goes my review...


Happy about

- The way Dr.Gayathri has presented this book. The book unfolds with the box office record of “Sivaji – The Boss” and thalaivar’s birth, both running parallel in alternate chapters.
- The Preface is excellent, which is the most important part of this entire book. It summarizes about the “Rajini Mania” and the intensity of his impact with all age groups. Even a stranger can understand why is this man always considered as "larger than life".
- The pain the author has taken to bring out small incidents especially during thalaivar’s childhood was clearly felt. Truly a great effort.
- The book has turned out to be a genuine biography, as the author has neither exaggerated, nor downplayed the incidents for the sake of sensationalism.
- Crisp narration. The writing style was different and good.
- Unearthing the facts about the differences thalaivar had with the politicians. For people who knew only a little about it with the light thrown by media, this book helps them to know what really happened. After reading this, one can really understand how misleading the newspapers can be at times.
- Open narration about thalaivar’s nervous breakdown and the incidents followed. Anyhow, it is a known fact that thalaivar never cares about his image and he has already spoken about it. Not everybody can talk about such things in public, especially despite being such a big star.
- Though his spiritual inclination is a known thing, this book explains it very well and also from where he got it.
- A complete 360 degree coverage around his family and also mentioned are the few things like Aishwarya Rajinikanth’s crush on Simbu, etc.,

Disappointed about

- Horrible spelling mistakes throughout the book. Quite a lot of them. Sometimes very irrirating as the movie names were also mentioned wrong in a few places.
- The pictures inside the books are good, but nothing great. Most of them already seen.
- The front cover of this book. Could have opted for a much better picture.
- Though the book has covered most of them, incidents like Manorama’s apology episode are missing.
- Most of thalaivar’s childhood episodes are interesting, but somehow fails to engage at times.
- Should have had more information about his relationship with his fans and may be a few incidents depicting them.
- Appendix 1 deals about Rajini’s important movies in his career, but a few of the movies are left out.
- Could’ve added some interesting information about what kind of relationships does he share with other leading actors like Vijayakanth, Sharath Kumar, etc.
- No information about the dropped movies (except Jaggubhai) in his career. It would've been interesting if some of those informations were given.
- No statistical information and milestones such as Rajini’s first ever color film, his first ever silver jubilee, etc.,

Overall, a worth read for every one and a must read for all thalaivar fanatics like me!

Monday, June 23, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 8

அனைவரது பார்வையும் பாபுவின் கை மீதே படிந்திருந்தது. அந்த அரங்கமே மௌனத்தில் மூழ்கியிருக்க, மேஜிக் நிபுணர் மட்டும் வாயில் வந்ததை மந்திரம் என்ற பெயரில் உளறிக்கொண்டிருந்தார். பாபு அதை மெல்ல வெளியில் எடுக்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. கையில் 'பிரா'வுடன் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தான் பாபு.

கையில் அதை பிடித்துக் கொண்டு, கூச்சத்தில் பாபு நெளிந்து கொண்டிருக்க, கிருஷ்ணா, மொட்டை, குமார், ஷங்கர் மற்றும் நட்டு ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். மேடையில் நின்றுகொண்டிருந்தபடியே அவர்களைப் பார்வையிலேயே பொசுக்கினான் பாபு. பற்றாக்குறைக்கு அந்த மேஜிக் ஆசாமி வேறு, "இந்த வயசுல நீ இதை நினைச்சுக்கிட்டியா" என்று கேட்டு ஜோக்கடிக்க, பாபுவின் முகம் கோபத்தால் சிவந்தது. ஒருவழியாக கைதட்டல் மற்றும் சிரிப்பலை அடங்கியதும், பாபு இறங்கி நேரே அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தான். மக்கள் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. சிறிது நேரத்தில் அடுத்த மேஜிக் வித்தையைக் காட்ட ஆரம்பித்தவுடன், மக்களின் கவனம் அதில் திரும்பியது. பாபு யாருடனும் பேசவில்லை. மேஜிக் ஷோ முடிந்ததும், கூட்டம் கலையத் துவங்கியது. ஆறு பெரும் வெளியில் வந்து நடந்துகொண்டிருந்தனர். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் சிரிப்பை மட்டும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தனர். அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக, மொட்டை, பாபுவிடம்

"டேய், 'பிரா' வெறும் பத்து ரூபா தானா??" என்று கேட்க, அனைவரும் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தனர்.

அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த பாபு, மொட்டையை துரத்தித் துரத்தி அடிக்கத் தொடங்கினான். கரும்புச்சாறு விற்கும் கடையை சுற்றி ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டு ஓட, அங்கு இருந்த கூட்டம் இவர்களை வேடிக்கை பார்க்கத்தொடங்கியது. ஓடிக்கொண்டிருந்த பாபுவை ஷங்கர் முதலில் பிடிக்க, மொட்டையை கிருஷ்ணா பிடித்தான். இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்தனர்.

"டேய், எனக்கு குஷ்பூ அப்பளம் வேணும்" என்றான் மொட்டை.

"சரி, நான் வாங்கிட்டு வர்றேன்" என்று கிளம்பினான் கிருஷ்ணா.

"அப்படியே எனக்கு மிளகாய் பஜ்ஜியும் வாங்கிட்டு வா" என்றான் ஷங்கர். "சரி" என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான் கிருஷ்ணா. பாபு,ஓரளவிற்கு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.

"அந்த மேஜிக் பண்ணுறவன் மட்டும் என் கையில கிடைச்சா..... சங்கு ஊதிருவேன்" என்று கர்ஜித்தான்.

"சரி சரி, விடு" என்று சமாதானப் படுத்தினான் குமார்.

"டேய், நீ பேசாத. வேணும்னே சதி பண்ணியிருக்க நீ" என்றான் பாபு.

"சும்மா ஒரு ஜாலிக்கு தான் டா..." என்று குமார் சமாதானம் கூறுவதற்கும், கிருஷ்ணா பஜ்ஜி மற்றும் அப்பளத்துடன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

அனைவரும் கைவைத்த மாத்திரத்தில் பஜ்ஜி, அப்பளம் எல்லாம் கண நேரத்தில் காணாமல் போனது.

"உண்மையிலையே நீ பத்து ரூபாயைப் போட்டுட்டு என்ன வரணும்ன்னு நெனச்சிக்கிட்ட??" என்று மீண்டும் ஆரம்பித்தான் நட்டு.

"கிரீட்டிங் கார்டு" வரணும்ன்னு நெனச்சிக்கிட்டேன் என்று அவனுக்கு பதிலளித்து விட்டு, வேகமாக எழுந்தான்.

"டேய், அந்த ராட்டினத்துல ஒரு ரவுண்டு போகலாம்" என்றான் பாபு. ஷங்கரும் குமாரும் மட்டும் சம்மதிக்க, கிருஷ்ணா, மொட்டை மற்றும் நட்டு ஆகியோர் ராட்டினத்தில் ஏற விருப்பப்படவில்லை.

அவர்கள் மூவரும் ராட்டினத்தில் ஏற, இவர்கள் மூவரும் கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.

காலகாலமாக எல்லா பொருட்காட்சிகளிலும் தென்படும் கடைகளான கம்ப்யூட்டர் ஜோசியம், மூணு 10 ரூபாய் பிளாஸ்டிக் சாமான்கள் கடை, கீ-செயினில் பெயரைப் பதிந்து கொடுக்கும் கடை, போஸ்டர்கள் விற்கும் கடை போன்றவற்றை ஒரு சுற்று சுற்றிவிட்டு கிருஷ்ணா, நட்டு மற்றும் மொட்டை ஆகியோர் மீண்டும் அந்த ராட்டினம் சுற்றும் இடத்திற்கே வந்து நின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மூவரும் அந்த ராட்டினத்தில் சுற்றி முடித்துவிட்டு அருகில் இருந்த இன்னொரு ராட்டினத்தில் ஏறி விட்டிருந்தனர்.

அதையும் முடித்துக்கொண்டு மூவரும் இறங்கி வந்தவுடன்,

"டேய், நாகக்கன்னி பாக்கலாம் டா...." என்றான் மொட்டை.

"அதுல என்னடா இருக்கு" என்று ஷங்கர் அலுத்துக்கொண்டாலும், அனைவரும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர்.

தரையில் ஆற்றுமணலை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய பெட்டியை வைத்திருந்தனர். அந்தப் பெட்டியின் மீது, ஒரு கன்னியின் தலை மட்டும் வெளியில் தெரிய, மீதி உடம்பு பாம்பின் உடம்பாக இருந்தது.

"இந்தப் பொண்ணு உட்கார்ந்திருக்கா, இல்ல படுத்திருக்கா?"

"ஒரு வேளை ஊனமா இருக்குமோ??"

"இல்ல... அது டீ குடிக்க வரும்போது நான் பாத்திருக்கேன். நல்லா நடக்குது"

இப்படி ஒவ்வொரு வருடம் பொருட்காட்சிக்கு வரும்போதும், அந்த வெறும் கன்னியை எப்படி 'நாகக்கன்னி' ஆக்கியிருப்பார்கள் என்று ஆராய்ந்து தோற்றுப்போவார்கள்.
கொஞ்சம் தூரத்தில் நின்று அந்த நாகக்கன்னியைப் பார்த்து ஏதாவது பேசி வம்பிழுப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

"ஏய்... உன் வாலை ஆட்டு, பாக்கலாம்" என்றான் குமார்.

"என்ன முறைக்கிற?? மூஞ்சியிலேயே குத்துவேன்" என்று ஷங்கர் கையை ஓங்க,

"டேய், கொஞ்சம் சும்மா இருங்கடா... மானம் போகுது" என்று அவர்களை அடக்கினான் கிருஷ்ணா.

இவ்வளவு பேச்சுகளையும் வாங்கிக்கொண்டு, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் சிவனே என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த "நாகக்கன்னி"

அது முடிந்து வெளியில் வரவும் அவர்கள் கண்களில் தென்பட்டது, "பேய் வீடு"….

இதை மட்டும் விட்டுவைப்பானேன் என்று அதற்குள்ளும் செல்ல முடிவு செய்தனர். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு காரிருள் சூழ்ந்திருந்தது. இருட்டில் மூழ்கியிருந்த அந்த இடத்தில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். பயத்தை போக்க, பாபு, கிருஷ்ணா, குமார் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டே வந்தனர். அந்த இருட்டில், திடீரென்று ஒரு மண்டை ஓட்டின் மேலே சிகப்பு விளக்கெரிய, நட்டு பயந்து "ஆ...." என்று அலறினான். சிறிது நேரத்தில் அந்த விளக்கு அணைந்து விட, அனைவரும் நட்டை கிண்டலடிக்கத் தொடங்கினார்.

மேலும் சில அடிகள் முன்னேறியவுடன், மூலையிலிருந்து ஒரு உருவம் திடீரென்று அவர்கள் முன் பாய்ந்து பயமுறுத்த, அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். நட்டு ஒரு படி மேலே சென்று, அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த பெண்ணை இறுக்கமாக கட்டிப்பிடித்து அலறத்தொடங்கினான்.

தொடரும்....

Wednesday, June 18, 2008

அமெரிக்கா டைரி - 'சனி'விளையாடல்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பரந்து விரிந்து கிடக்கிறது சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையம். நண்பர் ஒருவர் பாஸ்டன் போவதால், அவரை வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இரவு 10.30 மணிக்கு San Jose (சான் ஓசே என்று உச்சரிக்க வேண்டும்) விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக இருந்தது. மாலை 7.30 மணி வாக்கில் 'தோசை பிளேஸ்' இல் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், நண்பருக்கு திடீரென்று வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், இரவு 2 மணிக்கு அடுத்த விமானத்தில் தான் பயணிக்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், 10 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒரு விமானம் புறப்படுவதாகவும், விருப்பப்பட்டால் அங்கு சென்று ஏறிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இரவு இரெண்டு மணி விமானத்தில் பயணித்தால் லேட்டாகிவிடும். அவருக்கு அடுத்த நாள் பாஸ்டனில் முக்கியமான வேலை இருந்தது. இங்கிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு காரில் செல்ல 40 நிமிடங்கள் ஆகும். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று, நேராக வீட்டிற்கு சென்று, பெட்டிகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு கிளம்பினோம்.

ஏற்கெனவே தனக்கும் விமான பயணத்திற்கும் ராசியே இல்லை என்று புலம்பிக்கொண்டிருப்பவர், இந்தத் தகவலைக் கேட்டதும் மறுபடியும் புலம்பத் துவங்கினார். அப்படி என்னதான் ராசி என்று தெரிந்துகொள்வதற்காக, அவரிடம் அது பற்றிக் கேட்டேன். விமான நிலையம் செல்லும் வழியில் அவர் கூறியதாவது....

ஒவ்வொரு முறை அவர் விமானத்தில் பயணிக்கும் போதும் ஏதாவது ஒரு எதிர்ப்பாராத காரணத்தால் ஒன்று அவரால் பயணிக்க முடியாமல் போகும், அல்லது விமானத்தால் பறக்க முடியாமல் போகும். அவருக்கு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் - பஃபல்லோ(சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், Buffalo தான்) விமான நிலையத்திலிருந்து கலிஃபோர்னியா வருவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது, விமானம் ரத்து செய்யப் பட்டது தெரிந்து மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த விமானம் அடுத்த நாள் தான் என்பதால், அடுத்த நாள் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து ஒரு வழியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்து விட்டிருக்கிறார். எவ்வளவு நேரம் ஆகியும் விமானம் புறப்படுவதாக இல்லை. நீண்ட நேரம் கழித்து ஒரு அறிவிப்பு - "விமானத்தின் இன்ஜினை இயக்க தேவைப்படும் கார்டு ஒன்றைக் காணவில்லை, அதை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம், கிடைத்தவுடன் விமானத்தை இயக்கிவிடுவோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று! கேட்டுக்கொண்டிருந்த எனக்கே "என்ன கொடுமை சார் இது?" என்று தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. விமானத்தில் உட்கார்ந்திருந்த அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துப் பார்க்க முடிந்தது.

சரி, மீதிக் கதையைக் கேளுங்கள்.... மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்துவிட்டு, "மன்னிக்கவும், எவ்வளவு தேடியும் அந்த கார்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். அதனால், இந்த விமானப் பயணம் ரத்து செய்யப்படுகிறது" என்று. "அடப்பாவிகளா... என்னமோ கடலை மிட்டாயைத் தொலைச்ச மாதிரி சொல்லறீங்க" என்று கடுப்பாகிவிட்டார் நண்பர். கடவுள் புண்ணியத்தில் அடுத்த இரெண்டு மணிநேரத்திலேயே வேறு விமானத்தில் பயணிக்க ஏற்ப்பாடு செய்து தரப்பட்டு, ஒரு வழியாக வந்து சேர்ந்திருக்கிறார். இவர் சோகக்கதையை என்னிடம் சொல்லிக்கொண்டே வரும்போது திடீரென்று நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில் பயங்கர டிராஃபிக். அதுவரை காற்றாக பறந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் மெதுவாக ஊர்ந்து செல்லத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் டிராஃபிக் நின்றுகொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு இன்னும் பத்தே நிமிடங்களில் சென்று பெட்டியை செக்-இன் செய்யாவிட்டால், அந்த விமானத்தில் பயணிக்க முடியாது.

பத்து நிமிடங்களில் சென்று சேர்வது இயலாத காரியமாக இருந்ததால், அவர் பயணிக்கும் விமானமான "ஜெட் ப்ளூ" அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, வழியில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தால், ஒரு பத்து நிமிடம் தாமதமாக அவர் வரும் வரை காத்திருப்பார்கள் என்று இன்னொரு நண்பர் கூறியதும், கடைசி முயற்சியாக அதையும் செய்து பார்த்துவிடலாம் என்று முயற்சித்துப் பார்த்தார். ஆனால், யாருமே போனை எடுக்கவில்லை. அவர் இந்த முறை, என்னைப் பார்த்து, "என்ன கொடுமை கௌரி இது?" என்றார். அடித்து பிடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குள் நுழைந்தோம். உள்நாட்டு விமானங்கள் புறப்படும் "டொமெஸ்டிக் டெர்மினல்"இல் வண்டியை செலுத்தி, அவர் செல்ல வேண்டிய "ஜெட் ப்ளூ" எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் அது கிடைக்கவே இல்லை. தேடிக்கொண்டே, விமான நிலையத்தின் முடிவிற்கு வந்து விட்டோம். அது ஒரு வழிப்பாதை என்பதால், ஒரு முறை சுற்றி மீண்டும் நுழைந்தோம். இந்த முறை ஜாக்கிரதையாக யாரிடமாவது கேட்டுக்கொண்டு செல்லலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக ஓடிச்சென்று ஒருவரிடம் கேட்டபோது, அது "இண்டெர்நேஷனல் டெர்மினலில்" இருப்பதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். நண்பரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஏற்க்கெனவே பத்து நிமிடங்கள் தாமதம், இன்னும் டெர்மினலை அடைந்த பாடில்லை. "நான் எங்கே போனாலும், சனியன் என் கூடவே வருது" என்று மீண்டும் புலம்பத் தொடங்கினார் நண்பர். மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றி, இண்டெர்நேஷனல் டெர்மினலை அடைந்தோம். உள்ளே நுழைந்தவுடன் "ஜெட் ப்ளூ" தென்பட்டது. வண்டியை விட்டு இறங்கியதும், நண்பர் திரும்பிப் பார்க்காமல் ஓட, அவர் பெட்டியை இழுத்துக் கொண்டு நானும் அவருடன் ஓட, ஒரு வழியாக செக்-இன் செய்து முடித்தார். நல்ல வேளையாக இவருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். "பாத்தீங்களா, இனிமே உங்களுக்கு நல்ல காலம் தான். இவ்வளவு லேட்டா வந்தாலும் ஃப்ளைட்டை புடிச்சிட்டீங்க" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு வந்தேன். பார்க்கிங் இல்லை என்பதால், காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்த இன்னொரு நண்பர் மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றிக்கொண்டு வருவதற்காக சென்றிருந்தார். சிறிது நேரத்தில் அவர் வந்ததும், காரில் ஏறி புறப்பட்டோம்... "இந்த ஏர்போர்ட்டை சுத்துனதுக்கு கோவிலை சுத்தியிருந்தா புண்ணியமாவது கிடைச்சிருக்கும்" என்றார் அவர்.

அவர் சென்றடைந்த தகவலைப் பற்றி மற்றுமொரு நண்பரிடம் விசாரித்தபோது, இங்கிருந்து கிளம்பி நியூ யார்க் வரை சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து பாஸ்டனுக்கு செல்ல வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் ரத்தானதால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு தலை சுற்றியது...!

"சனியன் சுத்தி சுத்தி அடிக்குது" என்று அவர் அடிக்கடி கூறும் வசனம் நினைவிற்கு வந்தது!

Monday, June 16, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 7

அனைவரும் நட்டிற்காகவும் மொட்டைக்காகவும் காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நட்டு அங்கு வந்து சேர்ந்தான்.

பாபு, கிருஷ்ணாவிடம், "என்ன விஷயம், சொல்லு" என்றான்.

"இரு டா, மொட்டை வந்துரட்டும். அப்புறம் ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனியா சொல்லிக்கிட்டு இருக்கணும்"

"அவன் சொன்ன நேரத்துக்கு என்னைக்கு வந்திருக்கான்? எத்தனை மணிக்கு டா வரேன்னு சொல்லிருக்கான்?" என்று நட்ராஜிடம் கேட்டான்.

"5.30க்கு வரேன்னு சொன்னான்" என்றான்.

"அப்படின்னா, 6.30க்கு மேல தான் வருவான். டேய், நம்ம ஊர்ல பொருட்காட்சி வந்திருக்கு, சீக்கிரமா கிளம்பினா போகலாம்."

"அந்த நாய்க்கு ஒரு போனைப் போடு டா" என்றான் ஷங்கர்.

வரிசையாக ஒவ்வொருவரும் வசை பாட ஆரம்பிக்கும்போது, "திட்ட ஆரம்பிச்சிருப்பீங்களே...." என்று சொல்லிக்கொண்டே சரியாக அங்கு வந்து நின்றான் மொட்டை.

அவன் வந்ததும், கிருஷ்ணா எழுந்து சென்று, அந்த ரூமின் கதவை அடைத்தான். அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிருஷ்ணாவைப் பார்க்க, அவன் நடுவில் வந்து அமர்ந்து கொண்டு,

"நான் ஒரு பொண்ணை லவ் பண்ணறேன், பேரு சைரா பானு" என்று சொல்லிவிட்டு, அனைவரையும் உற்றுப் பார்த்தான்.

நட்டும் மொட்டையும் ஏதோ ஜோக் சொன்னது போல, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். குமார், பாபு மற்றும் ஷங்கர் மட்டும் அமைதியாக இருந்தது கிருஷ்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை நோக்கி, "என்னடா நீங்க மட்டும் ரியாக்ஷனே காட்டாம இருக்கீங்க?" என்றான்.

"உங்க அம்மா சொன்னாங்க" என்று பதிலளித்தான் ஷங்கர். ஷங்கர் இப்படி கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட கிருஷ்ணா, "எப்போ சொன்னாங்க, என்ன சொன்னாங்க?" என்றான். நட்டும் மொட்டையும் சிரிப்பதை நிறுத்திவிட்டு, ஷங்கரை கேள்விக்குறியோடு பார்த்தனர்.

"நீ முதல்ல சொல்லு" என்றான் ஷங்கர்.

"பொண்ணு பேரு சைரா பானு. கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவளை தான் பண்ணிப்பேன்" . அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, "அப்படின்னு எங்க அம்மாகிட்ட கதை விட்டிருக்கேன்" என்று முடித்தான்.

"அதானே பாத்தேன். நம்ம கதையில சீரியஸ் எபிசோட் வர வாய்ப்பே இல்லையேன்னு நெனச்சேன். சரியா போச்சு." என்றான் பாபு.

ஷங்கர், "எதுக்கு டா இப்படி கதை விட்ட? உங்க அம்மா ரொம்ப ஃபீல் பண்ணறாங்க. எனக்கு போன் பண்ணியிருந்தாங்க...."

"அட்வைஸ் பண்ணறேன்னு சொல்லி டார்ச்சர் போட்டாங்க டா. என்னமோ நம்ம ஸ்கூல்ல எங்க பாத்தாலும் ஃபிகருங்க இருக்குற மாதிரியும், நாம என்னமோ அதுங்க பின்னாடியே சுத்துற மாதிரியும் ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே நம்ம எல்லாரும் காய்ஞ்சி போயிருக்கோம்... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுன மாதிரி இப்படி அட்வைஸ் பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டேன். அதனால தான் இப்படி ஒரு பிட்டைப் போட்டேன்" என்று அவன் கற்பனைக் காதல் கதையைப் பற்றி சொல்லி முடித்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும், அது என்ன சைரா பானு?"

"அதுவா... திடீர்னு என்ன பேரு சொல்றதுன்னு தெரியல. அப்போ டிவியில "பம்பாய்" படம் ஓடிக்கிட்டு இருந்தது. அதுல மனிஷா கொய்ராலா பேரு சைரா பானு, டக்குன்னு அந்த பெயரையே என் லவ்வருக்கும் வெச்சிட்டேன்"

"தட்டை எல்லாம் விசிறியடிசிருக்க?"

"அது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆகிப்போச்சு...."

"இதெல்லாம் எதுக்கு?"

"டேய், நம்மள மாதிரி நல்ல பசங்களோட அருமை இவங்களுக்கு புரியணும்னா, இப்படி எதாச்சும் அதிர்ச்சி வைத்தியம் பண்ணனும். கொஞ்ச நாளைக்கு இப்படி பில்ட்-அப் கொடுத்துட்டு, அப்புறம் இல்லைன்னு சொல்லிடலாம். எங்க அம்மா உங்க யாரகிட்ட இதைப்பத்தி கேட்டாலும், ஆமாம்ன்னு சொல்லுங்க."

"அதெல்லாம் முடியாது. நான் உண்மையை சொல்லிடுவேன்" என்றான் ஷங்கர்.

"நீ அப்படியே சொல்லு, ஆனாலும் எங்க அம்மாக்கு அந்த பயம் இருந்துகிட்டே தான் இருக்கும்... என்னைத் தவிர யார் சொன்னாலும் அவங்க சந்தேகம் முழுசா தீராது"

"அட தூ..." என்று அனைவரும் துப்பினார்கள்.

"டேய், அப்போவே நான் சொன்னேனே? சும்மா சப்பை மேட்டரா இருக்கும்ன்னு. கிளம்புங்கடா, அட்லீஸ்ட் எக்ஸிபிஷனுக்குப் போகலாம்" அனைவரையும் அவசரப் படுத்தினான் பாபு.

"இப்படி எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு மொக்கை போட்டதுக்கு, நீ தான் எல்லாருக்கும் மிளகாய் பஜ்ஜியும், குஷ்பு அப்பளமும் வாங்கித் தரனும்" என்றான் பாலா.

"வாங்கித்தரேன். அதுக்கு தானே நீ வர்ற...."

பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த பொருட்காட்சி. சினிமா தவிர வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாத ஊரில், இப்படி பொருட்காட்சி நடைபெற்றால், திருவிழாக் கூட்டமாக இருக்கும்.

"ஐயோ... என் பர்ஸை மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்" என்றான் நட்டு.

"கூட்டத்தை வேடிக்கைப் பாத்துக்கிட்டே, எங்களை மறந்துட்டு எங்கேயும் போயிடாத, அது போதும்" என்றான் கிருஷ்ணா.

"செம கூட்டம், ஊர்ல இருக்குற அத்தனை பிகரும் வெளியில வர்ற ஒரே சமையம் இது தான்..." என்றான் குமார். அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அவன் இந்த பொருட்காட்சிக்கு வருவது இரெண்டாவது முறை. அவன் ஏற்கெனவே ஒரு முறை வந்திருந்து அனைத்தையும் பார்த்துவிட்டிருந்தாலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் "மேஜிக் ஷோ"வில் பாபுவை பங்கு பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஷங்கரிடம் அதைப் பற்றி முதலிலேயே கூறியிருந்தான். அதன்படி, நேராக "மேஜிக் ஷோ"விற்குள் நுழைந்தார்கள்.

மேஜிக் செய்பவர் ஒவ்வொரு வித்தைகளையும் செய்து காட்டும் போது கை தட்டல் காதைக் கிழித்தது. அப்போது, மெதுவாக பாபுவிடம் குமார் "அடுத்த மேஜிக் செய்யும் போது, பார்வையாளர்கள் யாரையாவது கூப்பிடுவார். அதுக்கு நீ போ" என்றான்.

"ஏன் டா?" என்று கேட்டான் பாபு.

"ஒரு பையில பத்து ரூபாயைப் போட்டு, நீ மனசுல என்ன நெனச்சிக்கிட்டாலும் அதை எடுத்துக் கொடுக்கிறார். நேத்து கூட ஒரு சின்னப் பையன் கைக்குட்டை வேணும்ன்னு நெனச்சிக்கிட்டான்... சரியா எடுத்துக் கொடுத்தார் டா... நீ அவரால எடுத்துக் கொடுக்க முடியாததா நெனச்சிக்கோ" என்றான் குமார்.

குமார் சொன்னதில் ஆர்வமான பாபு, என்ன பொருளை நினைத்துக் கொள்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். அதற்குள், அந்த மேஜிக் கலை நிபுணர், பார்வையாளர்களில் இருந்து யாரையாவது அழைக்க, பாபு அவசர அவசரமாக கையைத் தூக்கினான். அதிர்ஷ்ட்டவசமாக, பல பேர் கையைத்தூக்கிய போதும், பாபுவை தேர்ந்தெடுத்தார் அவர். குஷியான பாபு, மேடை மீது ஏறி நின்றான்.

குமார் சொன்ன மாதிரியே ஒரு பையைக் காட்டி, அதற்குள் பத்து ரூபாயை போடச் சொன்னார். பின்பு, பத்து ரூபாய் பெருமானமுள்ள ஏதேனும் ஒரு பொருளை நினைத்துக் கொண்டு, கண்ணை மூடி, அந்த பைக்குள் கையை விடச் சொன்னார்.

பாபுவும் அவர் சொன்னபடி, கண்ணை மூடி அந்த பைக்குள் கையைவிட்டான். அந்த மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரத்தை சொல்லி, "இப்போ நீ நினைத்த பொருள் பைக்குள் வந்தாச்சு. மெதுவா அதை வெளியில் எடு" என்றார்.

கூடிருந்த கூட்டம் மொத்தமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பாபு அதை மெல்ல வெளியில் எடுத்தான்...

தொடரும்......

Friday, June 13, 2008

Dasavatharam - Hail Kamal, not the movie.


I hate to write movie reviews, but yet I wanted to write about this movie - Dasavatharam, which is probably the most anticipated movie after Sivaji.

Note : For those who know about me, please do not consider this review as biased just because am a hardcore Rajini fan. I was also very anxiously awaiting the movie just as any other Kamal fan. Another thing to be emphasized is, am a die-hard Rajini fan, but that doesn't mean that I am a Kamal hater. I am writing this review as a normal fan, who carries the usual expectations about such a big film.

Now, the review....
Century Berryessa 10, San Jose, California - This is the theatre where I watched Dasavatharam. It was the very first show in the USA, but the tickets were available at the counter at 9pm for 9.30 show. It might be because the next day is a working day. However, the theatre was full when the movie started.

I'm not going to narrate the story here as there is nothing significant to be narrated as such. It's all about Kamal in the movie. The first twenty minutes of the movie seemed to justify the hype created, but sadly there ends the fascination. After that, its all about drama, chasing and usual cinema stuff. The biggest disappointment comes in the form of the way the story has been handled. It could have been much much better.

Kamal scores full marks as usual, but out of his ten characters, I would give maximum marks only to Rangarajan Nambi, Balram Naidu, Poovaraagan and Fletcher. May be for the rest of the characters, a bit low. Differentiating the two characters in a dual action role itself is difficult (Am not taking films like ATM, Billa into consideration as both Vijay and Ajith have not even bothered about that), but performing ten different roles in ten totally contrasting ways is simply brilliant. Not just the acting, but the body language, voice modulation and manerisms were totally different from one another for which Kamal deserves exuberant compliments. Nobody but Kamal could have done such a brilliant job. Special mention to his fantabulous 11th avathar - the dialogue writer (missed to notice the title card and I was just wondering whether it was Crazy Mohan). He has really excelled as a dialogue writer.

But, once you come out after watching the movie, you can't help the feeling that the story is made to fit the ten characters and not the other way round. A few characters seemed to be un-necessarily stuffed into the movie, just to make it ten. The "Khalifullah Khan" character is one such example. If you try to make sense the need of each and every character in the movie, the question "Is it necessary?" would arise. The movie doesn't seem to be coherent with too many characters coming in and trying to get stick in the screenplay. Asin looks cute, but her characterization was a bit irritating as it is quite difficult to imagine such a dumb teenage girl in this era.

The desperation of making this movie a commercial hit was clearly visible throughout the movie and it didnot seem like a Kamal movie at times. Mallika Sherawat singing and dancing for a tamil song in a Las Vegas night club and the pistol taking away the cancer from Avtar Singh's throat are good examples for the blemishes. When movies like "Anbe Sivam" donot get the commerical value, one cannot expect such kind of a classical film on such a huge investment. But the thing is, the movie stumbles not knowing which path to follow - the commercial or the classical. The response in the B and C centres remains to be seen, as there are nothing much in this movie to please them.

I would say that too many things are tried out in this movie, which is difficult for the audience to take. Too many things conveyed, too many characters used and everything was a overdose. There is a saying, "Too many cooks spoil the food" but, here too many ingeredients have spoiled the taste of the food. The technical qualities of this movie is not so brilliant as hyped. The second big disappointment comes in the form of the graphics used in this movie. They were a touch better than the usual tamil cinema graphics, but nothing extra-ordinary. The much expected "tsunami" set was also not so appealing.

Songs, except "Mukuntha Mukuntha" and "Kallai mattum" are pretty ordinary and the usual trend of the songs becoming big hits after the movie's release doesn't seem to happen this time. But, the background score was appreciable.

After Kamal, comedy was the next best thing in this movie. The "Balram Naidu" character was the best for me out of all the ten which was characterized beautifully for handling the comedy part. Infact, it got the movie going in the second half. Thanks to the editor for making the movie fast paced. The first half was infact better than the second. "Ulaga Nayagane" song is used as the credit song and the make-ups Kamal had to undergo for all the characters were shown briefly, which was good to see, but it was K.S.Ravikumar who spoiled the visual by his annoying screen presence and dancing. I don't really know why is he very particular about showing his face in all his movies.

There is a lot to talk about Kamal's make-ups but it is not wise to disclose everything here. It was really hard to belive that Kamal has donned certain characters as you cannot really identify him! Some makeups were really amazing and some were looking odd. Let me rate the get-ups out of ten.
Balram Naidu - Very minimal makeup yet very realistic - 10/10
Vincent Poovaraghan - 9.5/10
Fletcher - 9/10
Nambi - 9/10
Japanese - 8.5/10
Bush - 8/10 (Looked odd in the first long shot, but later on it was good)
Krishnaveni Paatti - 7.5/10
Avtar Singh - 7/10
Khalifullah Khan - 6.5/10
The tenth character is Govind, the normal looking Kamal, so I don't think I need to rate that.

There is a lyric in the song "Ulaga Nayagane" which says "Oscar dhooramillai", but after spending so much of money and putting up a lot of effort, it seems that Oscar is not even near the vision. People can now stop comparing this movie with hollywood as it is nowhere near to their technical qualities.

After the movie was over, I came out quickly and was waiting near the car for my other friends to come. They came to me, shook my hands and said "Sivaji was far better", "Thalaivar, thalaivar dhaan". Mind you, they are not Rajini fans. May be since they all know that am a Rajini fanatic made them say this to me, but I was not comparing the movie and infact I didnot even talk bad about it. They didnot like the movie as much as I did! The thing is this, people would automatically start comparing a Rajini film and a Kamal film. If we say that there is no story in Dasavatharam, his fans would argue whether Sivaji had a story in it and start making the comparisons. I am not here for comparisons and I have always insisted that Rajini and Kamal shouldn't be compared as they serve the cinema industry in two different aspects, but it is a painful fact that the story line is very feeble and hard for people to correlate.

Though not a part of the reivew, I wanted to write this because I was just wondering what it takes to please the audience. You might have put on a hell lot of efforts, show them something that they have never seen before, but it takes something special to reach the masses. Sivaji was not made with such big efforts, Rajini didnot do ten roles, but still nobody can deny the fact that when people came out from the theatres after watching "Sivaji", they felt so energetic and happy after watching "Mottai Boss" on screen. May be that is called the "Rajini magic".

One-Line:
Worth watching for Kamal.Don't carry much expectations though. Time pass, bigtime!

Monday, June 09, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 6

என்ன விஷயமாக இருக்கும் என்று ஷங்கருக்கு பிடிபடவே இல்லை. ஃபோன் செய்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, குமார் அங்கு வந்தான்.
"வாடா.... நானே உனக்கு போன் பண்ணி கூப்பிடலாம்ன்னு இருந்தேன்"

"என்னடா விஷயம்... நான் சும்மா தான் வந்தேன்"

"இனிமே தான் என்ன விஷயம்னு தெரியும்"

"என்னடா சொல்ற?"

"கிருஷ்ணாவோட அம்மா ஃபோன் பண்ணியிருக்காங்க.... என்கிட்ட ஏதோ விசாரிக்கணும்னு சொல்லியிருக்காங்க"

"சமீப காலத்துல நம்ம ஒண்ணும் தப்பு பண்ணலையே...என்னவா இருக்கும்?"

"எனக்கும் தெரியல. அவன்கிட்ட ஃபோன் பண்ணி கேட்கலாம்னா, அவனுக்கு பதிலா அவங்க அம்மா எடுத்துட்டா என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்"

"எதுக்கும் மொட்டைக்கும் நட்டுக்கும் ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. ஒருவேளை அவங்களுக்கு எதாவது தெரியுதான்னு பாக்கலாம்"

"கேட்கலாமே.... இந்தா, நீ கேளு. நான் வந்துடறேன்" போனை குமார் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான் ஷங்கர்.

ஷங்கர் திரும்பும்போது பாபுவும் அங்கு உட்கார்ந்திருந்தான்.
"நீ எப்போ டா வந்த??"

"இப்போ தான். என்னடா நடக்குது?? கிருஷ்ணாவோட அம்மா ஏதோ விசாரிக்கணும்னு சொன்னாங்களாமே?"

"ஆமாம் டா...என்னவா இருக்கும்ன்னு தெரியாம மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்கேன்"

"அவனுங்களுக்கு போன் பண்ணி கேட்டியா டா?" குமாரிடம் கேட்டான் ஷங்கர்.

"கேட்டேன் டா..... எவனுக்கும் ஒண்ணும் தெரியல"

"உச்....." என்று சலித்துக்கொண்டான் ஷங்கர்.

"சரி, நீ ஃபோன் பண்ணு. அவனே போன் எடுத்தா, அவன் அதிர்ஷ்டம். இல்லேன்னா, வேற வழி இல்லை.... அவங்க அம்மா கிட்ட பேசிடு"

குமார் இப்படி சொல்ல, அது தான் சரி என்று டயல் செய்தான் ஷங்கர்.

"ஹலோ ஆன்ட்டி... ஷங்கர் பேசுறேன். போன் பண்ணியிருந்தீங்கன்னு அம்மா சொன்னாங்க..."

போனின் மறுமுனையில்....
"ஆமாம்ப்பா... இவன் என்னைப் பாடு படுத்துறான்... ரெண்டு நாளுக்கு முன்னால வீட்ல ஒரே ரகளை"

"என்னாச்சு ஆன்ட்டி?"

"சாதாரணமாத்தான் பேசிக்கிட்டு இருந்தான். திடீர்ன்னு கல்யாணத்தைப் பத்தி பேச்சு வந்துச்சு... அப்போ, இவன் திடீர்ன்னு "என்னை மன்னிச்சிக்கங்கம்மா, நான் 'சைரா பானு'ன்னு ஒரு பொண்ணை லவ் பண்ணறேன்"ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டான்..."

"அப்படியா.....??" ஷங்கர் இப்படிக் கத்தியவுடன், குமாருக்கும் பாபுவிற்கும் ஆர்வம் அதிகமானது.

"ஆமாம்ப்பா.... எங்கேயோ டியூஷன் போகும் போது பாத்தானாம். அப்போவே லவ் பண்ண ஆரம்பிச்சிடானாம்.... அவ ரொம்ப நல்ல பொண்ணு, அப்படி இப்படின்னு பேசுறான். உனக்கு தெரியுமாப்பா??"

"அப்படி எல்லாம் எனக்குத்தெரிஞ்சு எதுவும் இல்லையே ஆன்ட்டி..."

"இல்லப்பா.... அந்த பொண்ணைப்பத்தி தப்பா பேசுனா நான் பொறுத்துக்க மாட்டேன்னு சொல்லி, தட்டை எல்லாம் வீசி அடிக்கிறான்."

"................"

"நீங்களே பாத்திருந்தா கூட, இவ்வளவு நல்ல பொண்ணைப் பாத்திருக்க முடியாதுன்னு சொல்லறான்"

"..............."

"நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லறான்.... ஒரு அம்மா கிட்ட பேசுற பேச்சாப்பா இது?"

"நான் விசாரிக்கிறேன் ஆன்ட்டி.... அப்படி எல்லாம் எங்களுக்கு தெரியாம அவன் பண்ண மாட்டான்"

"அதனால தான் உனக்கு ஃபோன் பண்ணினேன். ரெண்டு நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ அவன் சித்தி வீட்டுக்குப் போயிருக்கான். அதனால தான் பேச முடிஞ்சது"

"நீங்க பயப்படாதீங்க ஆன்ட்டி..... நான் கேட்டுப் பாக்குறேன்"

"கொஞ்சம் விசாரிச்சிப் பாருப்பா.... ஆனா, நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே... அவ்வளவு தான் அப்புறம்"

'சரி ஆன்ட்டி... நான் கேட்டுட்டு சொல்லறேன். ஆனா, நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் இருக்காது"

"இல்லப்பா.... அவன் ரொம்ப சீரியஸா பேசுறான்... சாப்பாடு தட்டை விசிறி அடிக்கிறான்னா பாத்துக்கோ"

"சரி ஆன்ட்டி.... நான் பாத்துக்குறேன்"

"சரிப்பா..... எனக்கு நீ ஃபோன் பண்ணி சொல்லறவரைக்கும் நிம்மதியாவே இருக்காது"

ஷங்கர் போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டான்.
"என்னடா...சீக்கிரமா சொல்லு" என்று பாபுவும் குமாரும் ஷங்கரை துளைத்து எடுத்தனர்.

ஒரே மூச்சில் அந்த தொலைபேசி உரையாடல் முழுவதையும் சொல்லி முடித்தான். சொன்னவுடன், குமாரும் பாபுவும் சிரிக்கத் தொடங்கினர்.
குமார் : "வாய்ப்பே இல்லை.... சும்மா சொல்லறான்"

ஷங்கர் : "எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா, தட்டை எல்லாம் தூக்கி எறிஞ்சிருக்கான்... ஓவரா சீன் போட்டிருக்கானே..."

பாபு : "டேய், அவன் லவ் பண்ணறான்னு சொன்னா, எவன் டா நம்புவான்?"

ஷங்கர் : "இதை எப்படியாவது தெளிவு படுத்திக்கணும்"

குமார் : "நேரடியா கேட்க வேண்டியதுதான்"

பாபு : "அவனை இங்க வர சொல்லு...."

குமார் : "இவ்வளவு தூரம் இனிமே அவன் வரமாட்டான். நட்டு வீட்டுக்கு வேணும்னா வரசொல்லலாம்"

பாபு : "சரி, நட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு... நம்ம அங்க போகலாம்"

ஷங்கர் : "ஆமா.... ஒரு அவசர கூட்டத்தை கூட்டிட வேண்டியது தான். மொட்டைக்கும் சொல்லிடறேன். எல்லாரும் வந்துரட்டும்"

குமார் : "கிருஷ்ணாவை எப்படி வர சொல்லறது?? அவன் சித்தி வீட்டு போன் நம்பர் இருக்கா உன்கிட்ட?"

ஷங்கர் : "இருக்கு... அவனை கடைசியா வர சொல்லலாம். அவன் உடனே அங்கே வர வேண்டாம்"

பாபு : "ஏன் டா?"

ஷங்கர் : "அவன் வர்றதுக்குள்ள நம்ம எல்லாரும் பேசி வெச்சிக்கலாம்"

வீட்டிற்கு வருவதாக 'நட்டு' க்குத் தகவல் சொல்லிவிட்டு, மூவரும் கிளம்பிச் சென்றனர்.

அங்கே - மூவரும் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றனர். உள்ளே சென்ற மூவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது! வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா!

சுதாரித்துக் கொண்ட ஷங்கர், "நட்டு எங்க டா? நீ எப்போ வந்தே?" என்றான்.

கிருஷ்ணா, "இப்போ தான் டா வந்தேன். நட்டு பக்கத்துல கடைக்கு போயிருக்கான். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நானே உங்களை எல்லாம் வர சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்க எல்லாரும் வரீங்கன்னு நட்டு சொன்னான். மொட்டைக்கும் போன் பண்ணி வர சொல்லிருக்கேன். அவன் வந்துரட்டும். சொல்லறேன்..." என்றான்.

தொடரும்....

Monday, June 02, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 5

Zoology வகுப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தர்கள். சரியாக 45 நிமிடங்களில், முதல் வகுப்பின் மணி அடித்தது. அதையும் பொருட்படுத்தாமல், கணக்கை முடித்துக் கொண்டிருந்தார் வானதி டீச்சர்.

"டேய், போக சொல்லு டா... டார்ச்சர் தாங்க முடியல" என்றான் ஷங்கர்.

"இந்தாம்மா.... அதான் சொல்றான்ல... கிளம்பு" என்றான் பாபு.

கிருஷ்ணா, "டேய்... இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லேன் பாக்கலாம்" என்று வம்பிழுத்தான்.

மணி அடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், கணக்கு முடிந்தபாடில்லை. அடுத்த வகுப்பிற்காக, புதிதாக வந்திருந்த zoology ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார்.

உள்ளே, கணக்கு ஆசிரியை இருப்பதைப் பார்த்து, அவசரமாக வெளியேறினார். அதை கவனித்த வானதி, "இரெண்டு நிமிடங்கள்" என்று சைகை காட்ட, அதை ஆமோதித்து வெளியில் காத்திருந்தார்

வெளியில் காத்திருந்த zoology ஆசிரியரை கவனித்து விட்ட கிருஷ்ணா, "டேய், வந்தாச்சு டா.." என்று கிட்டத்தட்ட கத்தினான்.

ஒரே சமையத்தில் ஷங்கர், பாபு, நட்டு, கிருஷ்ணா, பாலா அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.

"எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லைன்னாலும், தப்பு இல்ல" என்றான் பாபு.

ஷங்கர், "என்ன எதிர்பார்த்த நீ? ஐஸ்வர்யா ராய் வந்து கிளாஸ் எடுக்கும்னா??"

"அப்படி இல்ல..." என்று இழுத்தான் பாபு.

"டேய், நம்ம இருக்குறது கும்பகோணம். எதிர்பாக்குறதுக்கும் ஒரு அளவு இருக்கு. எப்படியோ, இந்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்க. என்ஜாய் பண்ணலாம்"

"அது எப்படி ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்கன்னு தீர்மானமா சொல்லற?" என்று ஆர்வமாகக் கேட்டான் கிருஷ்ணா.

'பொதுவா, அழகா இருக்குற டீச்சருங்க கண்டிப்போட இருக்க மாட்டாங்க. இது நான் பல வருஷமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச விஷயம்" . ஷங்கர் இப்படி சொல்ல, ஆர்வம் அதிகமானது.

உடனே, நட்டு இதற்க்கு முன் இருந்த கண்டிப்பான ஆசிரியர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஏதோ பொறி தட்டியதும், "டேய், அப்போ நமக்கு போன வருஷம் இங்கிலீஷ் எடுத்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருந்தாங்களே?" என்று ஷங்கரிடம் கேட்டான்.

"அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு அழகியா தெரிஞ்சா நான் ஒண்ணும் பண்ண முடியாது" என்று பதிலளித்தான் ஷங்கர்.

"எல்லா கேள்விக்கும் ஒரு பதில் வெச்சிருப்பியே" என்று நட்டு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கணக்கு ஆசிரியை வானதி வகுப்பை விட்டு வெளியேற, zoology ஆசிரியை உள்ளே நுழைந்தார்.

அனைவரும் எழுந்து நின்று "குட் மார்னிங்" கூறிவிட்டு நின்று கொண்டிருக்க, ஆசிரியர் உட்காரச் சொல்வதற்கு முன்னாலேயே ஷங்கர், கிருஷ்ணா, பாபு ஆகிய மூவர் மட்டும் அமர்ந்தனர். அவர்களைத் தவிர யாருமே அமராததால், உட்கார்ந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து நின்றனர்.

வந்திருந்த ஆசிரியர் இதை கவனித்து விட்டாலும், பெரிதாக எதுவும் கண்டுகொள்ள வில்லை. அவர் அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, தன்னை "ரூபி" என்று அறிமுகம் செய்து கொண்டார்.

வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கூறியதும், முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த பையன் முதலில் எழ, அவனை அமரச் சொல்லி விட்டு, கடைசி பெஞ்ச்சிலிருந்து ஆரம்பிக்குமாறு கூறினார்.

"நம்மள தான் கட்டம் கட்றாங்க...." என்று ஷங்கரின் காதோரம் கிசுகிசுத்தான் பாபு.

ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாபு ஆகியோரின் முறை வரும்போது மட்டும், அவர் உன்னிப்பாக பெயர்களை கவனித்துக் கேட்டுக்கொண்ட மாதிரி உணர்ந்தனர்.

"இப்பவே நம்ம மேல ஒரு கண்ணு வெச்சிருப்பாங்க" என்றான் கிருஷ்ணா.

"விடு, இது என்ன நமக்கு புதுசா?" ஷங்கர் நக்கலாக சிரித்துக்கொண்டே கூறினான்.

அன்று முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் அவர் நடத்தவில்லை. ஃப்ரீ பீரியட் கிடைப்பது எவ்வளவு அரிது, அதுவும் பத்தாம் வகுப்பில் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வெட்டி அரட்டை அடித்தனர் அனைவரும்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் யார் ஆசிரியர் என்பது தெரிந்தது. மணிக்கு கடைசி வகுப்பின் மணி அடித்ததும், ஐந்து பெரும் வகுப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

பாலா, "டேய், நம்ம டீச்சருங்களை எல்லாம் சைட் அடிக்கிறோமே... இது தப்பில்லை?" என்றான்.

“என்ன திடீர் ஞானோதயம்?” பாலாவின் தலையில் தட்டினான் பாபு.

"நம்ம மேல தப்பு இல்ல. நம்ம ஸ்கூல் அப்படி. பொண்ணுங்கள கண்ணுலேயே காட்ட மாட்டேங்கிறாங்க... அதனால தான் இந்த சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்கோம்" விளக்கம் கொடுத்தான் கிருஷ்ணா.

"அதெல்லாம் சும்மா... உலகத்துல டீச்சரை சைட் அடிக்காத ஸ்டூடன்ட் இருக்கவே முடியாது" - அடித்துக் கூறினான் ஷங்கர்.

"சரி, அதை விடுங்க. டேய், இன்னிக்கி கம்ப்யூட்டர்ல கிரிக்கெட் ஆடலாம், வீட்டுக்கு வந்துரு . குமார் கிளம்பிட்டான். அவனுக்கு போன் பண்ணி வர சொல்லிடறேன்" என்று பாபுவிடம் கூறினான் ஷங்கர்.

கிருஷ்ணா, நட்டு, பாலா ஆகியோர் வீடுகள் தொலைவில் இருப்பதால் அடிக்கடி வர முடியாது. பாபு, குமார் மற்றும் ஷங்கர் ஆகியோரின் வீடுகள் மட்டும் அருகருகில் இருந்தன.

சிறிது நேரம் பேசிவிட்டு, கலைந்து சென்றனர்.

ஷங்கரும் பாபுவும் அருகில் இருக்கும் கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு, தாமதமாக வீட்டிற்கு சென்றனர்.

ஷங்கரின் வீடு -
வீட்டிற்குள் நுழைந்ததும் கிருஷ்ணாவின் அம்மாவிடமிருந்து மூன்று முறை ஃபோன் வந்ததாக ஷங்கரின் அம்மா கூறினார். கிருஷ்ணாவைப் பற்றி ஏதோ ஒரு விஷயம் கேட்கவேண்டும் என்று கூறியதாகவும் கூறினார்.

ஷங்கர், என்னவாக இருக்கும் என்று யோசிக்கத்தொடங்கினான்....

தொடரும்....