Friday, August 29, 2008

I recommend - The Last Temptation of Christ


A sudden thought popped up after I completed watching the movie “The last temptation of Christ", which prompted this post and I’ve decided to share my experience everytime I watch an interesting Hollywood movie. I am not a movie buff and when it comes to English movies, I am always very picky and choosy. I don’t have any preferences in terms of the genre, but I love to watch any kind of controversial flicks. The one I watched was a movie of such kind, which was released in 1988.

“The Last temptation of Christ” is based on a novel, written by Nikos Kazantzakis and directed by Martin Scorsese. The movie speaks about the alternate history which says that Jesus was subjected to all human temptations like fear, reluctance, lust, doubt, depression, etc., The movie is totally filmed based on Jesus’ perspective, who was born and lived like a normal man. The main reason why most Christians shunned away from this movie was the portrayal of Jesus. They just couldn’t accept that Jesus had all the temptations, especially with Mary Magdaline. Female nudity and scenes like Jesus having sex with Mary Magdaline are too much for deeply religious people, which understandably created lot of controversy.

I felt that William Dafoe was a perfect fit for playing Jesus and his performance was the highlight. He has brilliantly expressed the fear and uncertainty of Jesus when he was sentenced to death. The movie is certainly not filmed the Bible way as it says that Jesus had a family with a lot of kids. The movie is made to raise eye brows and apparently succeeded. I disliked “The Da Vinci code” as it was boring and not riveting, but this one is certainly not like that.

The length of the movie is of course painful, but yet you can definitely watch it. I personally feel that all Christians, before they denounce the movie, should watch it once. Because, some Christians feel that there is nothing blasphemous about the movie.


Catch you next time with another interesting movie...


Cheers

Monday, August 25, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 17

அடுத்ததாகக் களமிறங்கினான் கிருஷ்ணா. அவன் எதிர்கொண்ட முதல் பந்து 'பௌன்சராக' அமைந்தது. அதில் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரெண்டு பந்துகளில் இரெண்டு பௌண்டரிகள் அடித்து கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினான். குமார் உற்சாகமிழந்து காணப்பட்டான். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிருஷ்ணா ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தை குமார் எதிர்கொண்டான். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த குமார், அந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட, அந்த பந்து 'யார்க்கராக' வந்து, குமாரின் லெக் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. விரக்தியுடன் வெளியேறினான் குமார்.

4 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலை. கையில் 7 விக்கெட்டுகள் மீதம் இருந்தன. யாரேனும் ஒருவர் நிலைத்து ஆடினால் ஜெயித்துவிடலாம் என்று, பாபு அடுத்து களமிறங்கிய அம்சராஜனிடம் கூறினான். ஆனால், பாபுவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த ஓவரில், அம்சராஜன் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக செழியன் களமிறங்கினான். அந்த ஓவரில் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. அந்த பௌலர் மிகச்சிறப்பாக பந்து வீசினான்.

3 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ஓவரில் கிருஷ்ணாவால் ஒரே ஒரு பௌண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. செழியன், மறுமுனையில் கிருஷ்ணாவிற்கு துணையாக நிலைத்து ஆடினான்.

இன்னும் இரெண்டே ஓவர்கள் இருந்தன. 16 ரன்கள் எடுத்தால் போதும். ஒரு ஓவருக்கு இரெண்டு பௌண்டரிகள் வேண்டும் என்ற நிலை. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை கிருஷ்ணா, சிறப்பாகத் தூக்கி அடித்தான். 'லாங் ஆன்' திசையை நோக்கிச் சென்ற பந்து, அங்கு நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் பட்டு எகிறி, பவுண்டரிக்குள் சென்றது. அம்பயர் அதை சிக்ஸர் என்று அறிவிக்க, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்றனர் 'ஃபயரிங் கன்ஸ்' அணியினர். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் பெறப்பட்டது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். கிருஷ்ணாவை பேட்டிங் முனைக்கு வரவழைக்க வேண்டும் என்பதால், பந்தை தடுத்து ஆடிவிட்டு, ஓடத்துவங்கினான். கிருஷ்ணா பேட்டிங் முனையை அடைந்து விட, செழியன் மறுமுனைக்கு சென்றடைவதற்குள் ரன் அவுட் ஆனான்.

நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர் "ஃபயரிங் கன்ஸ்" அணியினர். அம்மாப்பேட்டை அணியில் அனைவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டனர். அடுத்த பேட்ஸ்மேனாகக் களமிறங்கினான் பாலா. கடைசி ஓவரின் இரெண்டாவது பந்தை எதிர்கொண்ட கிருஷ்ணாவால், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது பந்தை எதிர்கொண்டான் பாலா. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் கட் செய்ய, பந்து பவுண்டரியை சென்றடைந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் வேண்டும். மறுமுனையிலிருந்த கிருஷ்ணா, பாலாவிடம் சென்று அறிவுரை கூறினான்.

அவுட் ஃபீல்ட் பலமாக்கப்பட்டது. அனைத்து ஃபீல்டர்களும் பவுண்டரிக்கு அருகில் நின்றனர். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து - சாதூரியமாக, மிகக் குறைந்த வேகத்துடன் பந்து வீசினான் அந்த பௌலர். பாலா வேகமாக அடித்தும், பந்து வேகமாக பயணிக்கவில்லை. டீப்-மிட்விக்கெட்டில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் தஞ்சம் புகுந்தது.

இன்னும் 2 பந்துகள். 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. புதிதாக வந்த முருகானந்த், முதல் பந்தை அடிக்க, மட்டையை சுழற்றினான். பந்து, மட்டையில் படாமல் கீப்பரிடம் சென்றது. ரன் எடுக்க வேண்டுமே என்கிற பதட்டத்தில் முருகானந்த் ஓடி வர, கிருஷ்ணா அவனை ஓட வேண்டாம் என்று சைகை காட்டினான். அவன் மீண்டும் கிரீசுக்குள் செல்வதற்குள் விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை சாய்த்திருந்தான்.

கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தாகவேண்டும். பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி பெறலாம். பேட்டிங் முனையில் கிருஷ்ணா இல்லாததால், அம்மாப்பேட்டை அணியினர் போட்டியில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினர். புதிதாக உள்ளே நுழைந்தான் நட்டு. கடைசி பந்தை மிடில் ஸ்டம்பிற்கு நேராக நேர்தியாக வீச, அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்ட முடிவில் 3 ரன்னில் தோல்வியைத் தழுவியது "ஃபயரிங் கன்ஸ்" அணி.

பந்தயப் பணமான இருநூறு ரூபாயை எதிர் அணி கேப்டனிடம் கொடுத்தான் பாபு. பாபு உட்பட அனைவரும் இறுக்கமான முகத்தோடு காணப்பட்டனர். அம்மாப்பேட்டை அணியினர் கலைந்து சென்றுவிட, இவர்கள் மட்டும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். ஒரு இறுக்கமான அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைத்தான் செழியன்.

"நான் கிளம்புறேன் டா.... சாயங்காலம் ஊருக்குப் போகணும்" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

"வெற்றிகரமா தோத்துப்போயாச்சு.... அப்புறம் என்ன? எல்லாரும் கிளம்பவேண்டியது தான??" என்றான் பாபு.

யாருமே பதில் பேசவில்லை.

"சுலபமா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.... இதைக் கோட்டை விட்டது கேவலம். 200 ரூபாயும் போச்சு. ஏனோ தானோன்னு ஆடினா இப்படித்தான்" என்றான் பாபு.

தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று நினைத்த குமார், கோபமடைந்தான்.

"தேவை இல்லாம பேசாதே. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லு" என்றான் பாபுவைப் பார்த்து.

"நீ எதுக்கு கோபப்படற? நான் உன்னை சொன்னேனா??" என்று பாபு கேட்க,

"எனக்கு முன்னால கிருஷ்ணாவை அனுப்பியிருக்கலாம். ‘கேப்டன்’ங்குற ஈகோ உனக்கு" என்றான் குமார்.

"என்னை ரன் அவுட் வேற பண்ணிவிட்டுட்டு இந்த பேச்சு வேறயா??" என்றான் பாபு.

"விடுங்க டா... யாராவது வேணும்ன்னே அப்படி ரன்-அவுட் பண்ணுவாங்களா?? இதெல்லாம் சகஜம் தானே" என்றான் ஷங்கர்.

குமார் மிகுந்த எரிச்சலடைந்தான். விருட்டென்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

"இரு டா.... எங்க போற??" என்று கேட்டு முடிப்பதற்குள், வண்டியை விரட்டிக்கொண்டு கிளம்பினான் குமார்.

"விடு டா.... போகட்டும். அடுத்த மேட்ச் அவனைத் தூக்கிருவோம்" என்றான் பாபு.

"அவன் சொல்லறதுக்கும் நீ செய்யிறதுக்கும் சரியா இருக்கும். லூசு மாதிரி பேசாதே... கோபத்துல கண்டதை பேசாம வீட்டுக்குக் கிளம்பு" என்றான் ஷங்கர்.

"அவன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல. இவன் நம்ம டீமுக்கு வேண்டாம். அடுத்த மேட்ச் அவன் ஆடினா, நான் ஆட மாட்டேன்" என்று கூறிவிட்டு பாபுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

"என்னடா இது.... ஒண்ணும் இல்லாத பிரச்னையை ஊதி ஊதி பெருசாக்கிட்டானுங்க" என்றான் பாலா.

"குமார் சொன்ன மாதிரி அவனை பேட்டிங் ஆர்டர்ல கீழே ஆட விட்டிருக்கலாம். அவனுக்கு கான்ஃபிடன்ஸ் லெவல் கம்மியா இருக்கு" என்றான் ஷங்கர்.

"நம்ம பேட்டிங் ஆர்டரை மாத்துறது ரொம்ப கஷ்டம் டா... எல்லாரும் நல்லா செட் ஆயிட்டோம். பாபு பண்ணது சரி தான்" என்றான் கிருஷ்ணா.

"யார் சரி, யார் தப்புன்னு இப்போ பேச வேண்டாம். இந்த லீவ் முடியிறதுக்குள்ள இன்னொரு மேட்ச் ஆடணும். அப்புறம் பப்ளிக் எக்ஸாம் நெருங்க நெருங்க, ரிவிஷன் டெஸ்ட், அது, இதுன்னு போட்டு டார்ச்சர் பண்ணிருவாங்க...." என்றான் பாலா.

அனைவரும் கலைந்து சென்றனர்.
ஷங்கர் வீட்டிற்குள் நுழையவும், டெலிஃபோன் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசினான்.

"ஹலோ... "

மறுமுனையில் : "ஹலோ ஷங்கர், நான் குமாரோட அம்மா பேசுறேன். அவன் இன்னும் வீட்டுக்கு வரல..... உன்கூட இருக்கானா??"

ஷங்கர் : ("அவன் எப்போவோ கிளம்பிட்டான்" என்று சொல்ல வந்தவன், வார்த்தைகளை விழுங்கிவிட்டு) "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி... கிருஷ்ணா வீடு வரைக்கும் போயிருக்கான்" என்று கூறிவிட்டு ஃபோனை துண்டித்தான்.

தொடரும்...

Monday, August 18, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 16

அட்டைப்படம் முதல் கடைசிப்பக்கம் வரை அனைத்து புத்தகங்களையும் படித்தும், பார்த்தும் முடித்தனர்.

"நேரம் போனதே தெரியல...ரெண்டு மணிநேரம் ஓடிப்போச்சு...."

"இந்த மாதிரி என்னைக்காவது 'பிரேக்' விடாம பரீட்சைக்கு படிச்சிருப்போமா?"

"சரி, இப்போ இதையெல்லாம் என்ன பண்ணறது?" புத்தகங்களைக் காட்டி, பாபுவின் பக்கத்து வீட்டுப்பையனிடம் கேட்டான் குமார்.

"என்னால திருப்பி எங்க வீட்டுக்குக் கொண்டு போக முடியாது... இங்கேயே இருக்கட்டும்" என்றான் அவன்.

"இங்கேயேவா? வாய்ப்பே இல்ல.... என்னால எங்கேயும் ஒளிச்சிவைக்க முடியாது" என்றான் ஷங்கர்.

யாருமே அதைக்கொண்டு போகத்தயாராக இல்லை. அனைவரும், ஒரு மனதாக அவற்றை எரித்து விடுவது என்ற முடிவிற்கு வந்தனர். அதன்படி, அந்த புத்தகக்கட்டு முழுவதையும் மொட்டை மாடியில் வைத்தே எரித்தனர்.

நீண்ட நாள் திட்டமான 'பெட்' மேட்ச்சை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, அதன்படி அம்மாசத்திரம் டீமிற்கும் தகவல் சொல்லியாகிவிட்டது. டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் 'சென்டெர்' பிட்ச் பிடித்து ஆடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆட்ட வியூகங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர்.

"ஃபயரிங் கன்ஸ்" (Firing Guns) - இது தான் இவர்கள் டீமின் பெயர். இதில், இவர்கள் ஆறு பேர், செழியன், அம்சராஜன் (எ) அம்ஸ் மற்றும் முருகானந்த் ஆகியோர் மட்டும் நிரந்தர உறுப்பினர்கள்.. மற்றவர்களெல்லாம், எப்போதுமே விளையாடுவார்கள் என்று கூற முடியாது. மேட்ச் நடக்கும் சமையத்தில் யார் ஃப்ரீயாக இருக்கிறார்களோ, அவர்கள் வந்து ஆடுவார்கள்.

"ஓப்பனிங் நானும் பாபுவும் இறங்குறோம்" என்றான் ஷங்கர்.
பொதுவாகவே அவர்கள்தான் ஓப்பனிங் என்பதால், அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

அடுத்து யார் ஆடுவது என்பதில் குழப்பம் இருந்தது. பொதுவாக, அந்த இடத்தில் குமார் ஆடுவது வழக்கம். ஆனால், கடந்த சில போட்டிகளில் தன்னால் அந்த இடத்தில் சோபிக்க முடியவில்லை என்பதால், பேட்டிங் வரிசையில் நான்காம் அல்லது ஐந்தாம் இடத்தில் ஆட வேண்டும் என்று நினைத்திருந்தான் குமார். ஆனால், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் நன்றாக ஆடும் கிருஷ்ணா மற்றும் செழியனை மாற்ற, அணித்தலைவனான பாபு விரும்பவில்லை. எவ்வளவு கூறியும் பாபு சம்மதிக்காததால் குமாருக்கு விருப்பமில்லை என்றபோதும், வேறு வழியில்லாமல் தன் வழக்கமான மூன்றாம் இடத்திலேயே ஆடுவதற்கு சம்மதித்தான்.

அன்று மாலை, நட்டின் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்து, அனைவரும் அங்கு சென்றனர். இவர்கள் ஆறு பேரும் முதலில் சென்று விட, செழியன் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான். அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் என்பதால், முதலில், அவனையும் கிருஷ்ணாவையும் பயிற்சியில் ஈடுபட வைத்தான் பாபு. மற்றவர்கள் எல்லாம், இன்னொரு பந்தை வைத்து 'பீல்டிங்' பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பயிற்சி முடிந்து வந்த கிருஷ்ணா, 'பேட்'டை குமாரிடம் கொடுக்க, செழியன் பந்தை பாபுவிடம் வீசினான். ஆனால், பாபு பந்து வீசுவதைப் பார்த்தவுடன், குமார் ஷங்கரிடம் பேட்டைக்கொடுத்துவிட்டு நகர்ந்தான். பாபுவின் மேல் குமார் கோபமாக இருப்பதை உணர்ந்தான் ஷங்கர். இரெண்டு மணிநேரம் பயிற்சியை முடித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை 8 மணி - டவுன் ஹை ஸ்கூல் மைதானம்.....

அம்மாப்பேட்டை டீமில் அனைவரும் வந்திருந்தார்கள். சொன்னபடி, மைதானத்தின் மையத்தில் இருக்கும் ஆடுகளத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இவர்கள் அணியில் பாலாவைத் தவிர, அனைவரும் வந்திருந்தார்கள். அம்பயராக முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட அணி வீரர் ஓருவரை அம்மாப்பேட்டை அணியினர் அழைத்து வந்திருந்தார்கள். 'டாஸ்' போட பாபுவையும், அந்த அணித்தலைவனையும் அழைத்தார் அவர். 'டாஸ்' வென்ற அம்மாப்பேட்டை அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

'டாஸ்' எல்லாம் முடிந்து, களத்தில் இறங்கும் வேளையில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தான் பாலா. அனைவரும் அவனைப்பார்த்து முறைக்க, "சாரி டா" என்ற அவனது வழக்கமான பதிலைக் கூறினான்.

முதல் ஓவரை செழியன் வீச, அதில் 3 ரன் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை மித வேகப்பந்து வீச்சாளரான பாலா வீசினான். அதில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், அவர்கள் முதல் ஐந்து ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடினர். ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தார்கள்.

பந்துவீச்சில் முதல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில், விக்கெட் கீப்பராக நின்றிருந்த பாபு, பந்தை நட்டிடம் வீசினான். நட்டு, சுழற்பந்து வீசுவான். ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், எப்படியும் விக்கெட்டை கைப்பற்றி விடுவான். பெரும்பாலும், இவனது பந்துவீச்சில், அடிக்க நினைத்து ஆட்டமிழப்பவர்கள் அதிகம். முதல் ஐந்து ஓவர்களில் அதிக ரன்களை அவர்கள் அடிக்காததால், நட்டின் பந்துவீச்சை அடித்து ஆட முற்படுவார்கள் எனத்தெரிந்திருந்ததால், பீல்டர்களை பவுண்டரிக்கு அருகில் நிறுத்திவைத்திருந்தான் பாபு. அம்மாப்பேட்டை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மன், நட்டின் முதல் மூன்று பந்துகளில் முறையே 2, 4, 4 ரன்கள் அடிக்க, நான்காவது பந்தையும் தூக்கி அடிக்க முற்பட்டு, 'கவர்ஸ்' திசையில் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணாவிடம் 'கேட்ச்' கொடுத்து அவுட்டானான்.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நட்டு துள்ளிக்குதிக்க, அனைவரும் வந்து நட்டை கட்டிக்கொண்டனர். அம்மாப்பேட்டை அணியில் அடுத்து களமிறங்கியவன் மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரன். மாவட்ட அளவில் ஆடக்கூடியவன் என்பதால், பாபு நட்டிடம் கவனமாகப் பந்து வீசுமாறு கூறினான். நட்டின் ஓவரில் மீதமிருந்த இரெண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்தான் அவன். நட்டின் அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் போயிருந்தது. ஒரு விக்கெட் எடுத்திருந்தாலும், நட்டை பந்து வீசச்செய்தது தவறோ என்று எண்ணினான் பாபு. ஆனால், அவர்கள் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததால், பாபுவிற்கு வேறு வழி இல்லை.

அடுத்த ஓவரை வீசினான் அம்சராஜன். அதில் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என்று ஷங்கரிடம் ஆலோசித்தான் பாபு.

"நட்டுக்கு இந்த ஓவர் குடுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்" என்றான் பாபு.

"குமார் கிட்ட குடுக்கலாம். அம்ஸும் குமாரும் ஒரு ஸ்பெல் முடிக்கட்டும்" என்றான் ஷங்கர்.

"சரி, அவனை போடச்சொல்லு" என்று ஷங்கரிடம் கூறினான் பாபு.

குமாரும் அம்ஸும் கட்டுக்கோப்புடன் பந்துவீசினாலும், அவ்வப்போது அவர்கள் பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், இருவரையும் அவர்கள் அடிக்கத்துவங்க, ரன்கள் வேகமாக அதிகரித்தன. சிறப்பாகப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் அழைத்தான் பாபு. அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. புத்திசாலித்தனமாக அந்த இரெண்டு ஓவர்களை மட்டும் கவனமாக ஆடினார்கள். செழியனின் பந்துவீச்சில், பாபுவிடம் கேட்ச் கொடுத்து ஒருவன் ஆட்டமிழக்க, குமாரின் பந்துவீச்சில் புதிதாக வந்த பேட்ஸ்மன் 'பௌல்ட்' ஆனான். அவன் ஆட்டமிழந்தாலும், அந்த இடதுகை ஆட்டக்காரன், மறுமுனையில் சிறப்பாக ஆடி, ரன்களை குவித்துக்கொண்டிருந்தான்.

11 ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி நான்கு ஓவரில், அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்தனர். முடிவில் , 15 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 93 எடுத்திருந்தனர்.

20 நிமிட இடைவெளியில், பாபுவும் ஷங்கரும் 'பேட்' செய்ய களத்தில் இறங்கினர். 15 ஓவரில், 94 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கினர். அவர்கள் ஆடியதைப்போலவே, முதல் ஐந்து ஓவர்கள் தடுப்பாட்டம் ஆடுவது என்று ஷங்கரிடம் கூறினான் பாபு. பாபு ஒரு முனையில் நிதானமாக ஆடினாலும், ஷங்கர் அடித்து ஆடினான்.

"டேய், லெக் சைடுல தூக்கி அடிக்காதே", "புல் ஷாட் எல்லாம் இப்போ ஆட வேண்டாம்", "ஆஃப்-ஸ்டம்ப் கார்டு எடுத்துக்கோ" என்று மறுமுனையிலிருந்து பாபு அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும், ஷங்கர் அவர்கள் போட்ட 'லூஸ்' பால்களையும், ஷார்ட் பால்களையும் பவுண்டரிக்கு அனுப்பத்தவறவில்லை. ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தனர். சிறப்பான துவக்கம் அமைந்திருந்ததால், இனிமேல் அடித்து ஆட வேண்டாம் என்று கட்டாயமாகக் கூறினான் பாபு. ஆறாவது ஓவரின் முதல் பந்தை அவர்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வீச, அதை எதிர்கொண்டான் ஷங்கர். லெக் ஸ்டெம்ப்பில் குத்தி, ஆஃப் ஸ்டெம்ப்பிற்கு எழும்பிய பந்தை கட் செய்ய முயன்ற போது, ஸ்டெம்ப்பிற்கு மிக அருகில் நின்றிருந்த விக்கெட் கீப்பர், அதை இலாவகமாக 'கேட்ச்' பிடித்தான். ஷங்கர் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் திரும்ப, அடுத்ததாக குமார் வந்தான். அவன் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினான்.

குமாரும் பாபுவும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. ஓவர்கள் இடைவெளியிலும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. பாபு பொறுப்புடன் ஆடிக்கொண்டிருக்க, அவனுக்குத்துணையாக குமார் ஒரு ரன், இரெண்டு ரன்கள் என்று ஸ்கோர் நகர உதவினான். 8 வது ஓவருக்குப் பிறகு, பாபு அடித்து ஆடத்துவங்கினான். 10 வது ஓவரின் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தார்கள்.


11வது ஓவரின் முதல் பந்தை எதிர்க்கொண்ட குமார், 'ஸ்கொயர் லெக்' திசையில் பந்தை அடித்துவிட்டு, ஓட ஆரம்பித்தான். இரெண்டு அடி எடுத்து வைத்தவுடன், மனதை மாற்றிக்கொண்டு ஓடாமல் நின்றான். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த பாபு, பாதி தூரம் வந்து விட்டு, அவன் ஓடாமல் நிற்பதைப் பார்த்ததும், மீண்டும் தன் முனையை நோக்கி ஓட, அதற்குள் அவனை ரன்-அவுட் செய்திருந்தார்கள் எதிர் அணியினர். வெறுப்புடன் குமாரைப் பார்த்துவிட்டு வெளியேறினான் பாபு.

4.5 ஓவர்களில் 35 ரன்கள் தேவை. 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தன.

தொடரும்....

Monday, August 11, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 15

கீழ் ரூமிலிருந்த ஒரு போர்வையை எடுத்து முக்காடு போட்டுக்கொண்டு மெல்ல மேலே சென்றான். பயம் இருந்தாலும், ஆவிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாமல், சுவாரசியமாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். முக்கால்வாசி மூடியிருந்த கதவின் முன், தன் முக்காடு போட்ட முகத்தோடு நின்றான் ஷங்கர். வெளியில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் மந்தமான வெளிச்சத்தில், ஷங்கரின் முகம் தெரியவில்லை. இருவரில் யாராவது ஒருவர் கவனிக்கட்டும் என்று பொறுமையாக காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர்.

சில மணித்துளிகள் கழித்து, எத்தேச்சையாக பாபு கதவைப் பார்க்க, அங்கே ஓர் உருவம் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டான். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான். பாபுவின் முகம் மாறியதை அந்த ஒரு நொடியிலேயே கவனித்துவிட்டிருந்தான் ஷங்கர். இருந்தும், அதைப் பற்றி பாபு, குமாரிடம் கூறவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் பாபு தயங்கித் தயங்கி கதவைப் பார்க்க, ஷங்கர் அதே கோலத்தில் அசையாமல் நின்றிருந்தான். பாபுவின் முகம் வெளிறியது. குமார் பேசிக்கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல்,

"டேய்..... அங்கே ஏதோ ஒரு உருவம் நிக்கிற மாதிரி இருக்கு..." என்றான்.

"நீ வேற பயந்து, என்னையும் பயமுறுத்தாத.... சும்மா இரு" என்றான் குமார்.

மீண்டும் ஒரு முறை கதவைப் பார்த்தான் பாபு.

"டேய், சத்தியமா இருக்கு டா, நீ வேணும்னா பாரு" என்றான்.
ஷங்கருக்கு சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. ரொம்ப சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

குமார், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெதுவாக கதவைப்பார்க்க, கதவு மூடப்பட்டிருந்தது. 'டக்'கென முகத்தை திருப்பிக் கொண்டு,
"கதவு மூடியிருக்கு டா..." என்றான்.

"நான் பார்த்தப்போ கதவு முழுசா மூடல...." என்று கூறிவிட்டு, மீண்டும் மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தான் பாபு. இப்போது, மீண்டும் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஷங்கர், அதே போல் முக்காடு போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

"அந்த உருவம் எனக்கு தெரியுது டா..... கதவு திறந்து தான் இருக்கு" என்றான் பாபு.

"ஷங்கரை கூப்பிடுவோமா???"

"அவன் கீழே இருக்கானே... யார் கூப்பிடறது?? நான் போகமாட்டேன்" என்றான் பாபு.

"நானும் போக மாட்டேன். பேசாம, ரெண்டு பெரும் சேர்ந்து 'லைட்'டைப் போட்டுருவோமா??? என்று கேட்டான் குமார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, ஷங்கர் மெல்ல கதவைத் திறந்தான்...

"டேய், கதவு திறக்குது டா...." நடுங்கிக்கொண்டே சொன்னான் பாபு.

பாபு இப்படி சொல்ல, குமார் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டான். பயத்தின் உச்சத்தில் பாபு இருக்க, ஷங்கர் வந்து லைட்டைப் போட்டான்.

ஷங்கரைப் பார்த்தவுடன், குமார் மற்றும் பாபுவின் முகங்களில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தாலும், ஏமாந்துவிட்டோமே என்ற ஆதங்கம் அதிகமாகத் தெரிந்தது. பாபுவிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டிருந்தது. நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை எல்லாம் சேர்த்து சிரித்தான் ஷங்கர். கட்டிலின் மீதிருந்த தலையணையை ஷங்கரை நோக்கி வீசினான் பாபு.

"நாயே....." - இதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

ஷங்கர், தரையில் உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தான். குமார் மட்டும் எழுந்து வந்து ஷங்கரை தலையணையால் அடிக்கத்தொடங்கினான். சிறிது நேரத்தில், பாபுவும் சேர்ந்துகொள்ள, பத்து நிமிடம் தொடர்ந்து அடி வாங்கினான் ஷங்கர்.

"என்னடா இப்படி அநியாயத்துக்கு பயப்படறீங்க....!"

"நான் சும்மாதான் இருந்தேன், இவன் தான் பேய் கதை எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்திட்டான்" என்றான் பாபு.

"இன்னும் நாலு மணிநேரத்துல எழுந்திரிக்கணும்" - 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினர்.

அலாரம் அலறத்துவங்கியது. தூக்கக்கலக்கத்தில் ஷங்கர் எழுந்து, அதை அணைத்து விட்டு, டி.வி.யைப் போட்டான். டி.வி. வெளிச்சத்தில் பாபுவும் எழுந்துகொள்ள, ஆர்வத்துடன் மேட்ச் பார்க்கத் துவங்கினர். எவ்வளவு எழுப்பியும், குமார் எழவில்லை.

இந்தியா முதலில் 'பேட்' செய்ததால் குஷியடைந்தனர். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான 'சைமன் டௌல்' பந்து வீச, முதல் பந்தை சித்து எதிர்கொண்டார். முதல் பந்திலேயே சித்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற, பாபுவும் ஷங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்ததாக டிராவிட் வர, ஷங்கரின் முகத்தில் ஒளி பிறந்தது. டிராவிட், ஷங்கரின் அபிமான ஆட்டக்காரர் என்பதால், உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தான். ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகிவிட, டி.வி.யை அணைத்தான் ஷங்கர்.

"அடுத்தது அசாருதீன் தான். நம்ம ராசியே சரியில்ல..... ஒருவேளை, நம்ம பாக்கலேன்னா நல்லா ஆடுவாங்களோ??"

மேட்ச் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டு, இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஷங்கர் கண்விழித்து பார்த்தபோது மணி 10 ஆகியிருந்தது. குமார் எழுந்து வீட்டிற்கு சென்றிருந்தான். பாபு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான். ஷங்கர் எழுந்தவுடன், பாபுவும் தன் வீட்டிற்குச் சென்று, குளித்துவிட்டு ஷங்கருக்கு டிபன் எடுத்து வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பாபுவிற்காக பசியுடன் காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர். சரியாக 11 மணிக்கு பாபு வந்தான். கையில் டிபன் கூடையுடன், ஒரு புத்தகக்கட்டுடன் வந்துகொண்டிருந்தான்.

"சீக்கிரம் வாடா.... செம பசி"

"முதல்ல சாப்பிடு. அதுக்கப்புறம் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு...." என்றான் பாபு.

"என்ன மேட்டர்?"

கையிலிருந்த புத்தகக் கட்டைக்காண்பித்தான் பாபு.

"நானே கேட்கணும்ன்னு இருந்தேன். என்னது அது?"

"1980கள்ல வெளிவந்த 'கில்மா' பத்திரிகை தொகுப்பு"

"உனக்கு எப்படி டா கிடைச்சது??"

"இப்போ அதுவா முக்கியம்? சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா....."

அசுர வேகத்தில் சாப்பிட்டான் ஷங்கர். மற்றவர்களுக்கும் தகவல் பறந்தது. தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் குமார் ஆஜர் ஆனான். மற்ற மூவர், அடுத்த அரை மணிநேரத்தில் ஆஜர் ஆனார்கள்.

காலிங்க்பெல் ஒலித்தது. யார் என்று பார்க்க முற்பட்டபோது, பாபு,
"அவன் என் பக்கத்துவீட்டுப் பையன். இந்த புக்ஸ் எல்லாம் அவனோடது தான்...." என்று, அவனை உள்ளே அழைத்து வந்து, அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். அவனும் சகஜமாகப் பேசினான்.

"எங்க தாத்தா சொத்து சேர்த்து வைக்கல..... இதை தான் சேர்த்து வெச்சிருக்கார்" என்றான் கிண்டலாக.

"உங்க தாத்தா நல்லா இருக்கணும்" என்று பாலா வாழ்த்தினான்.

"அவரு மண்டைய போட்டு மூணு வருஷம் ஆகுது" என்று அவன் கூறியவுடன், பாலா தர்மசங்கடத்தில் நெளிந்தான்.

"அவரோட பெட்டியில இருந்தது. யாருக்கும் தெரியாம எடுத்து பாபுகிட்ட குடுத்தேன்".

அனைவரும் மொட்டைமாடிக்குச் சென்றனர். அங்கே வட்டமாக அமர்ந்தனர்.....

தொடரும்...

Thursday, August 07, 2008

Kuselan Fantasies - II

After successfully completing the slogan contest, we geared up for another event to celebrate "Kuselan" and the friendship day, which happened to be on 3rd August this year. Madras Café, a South Indian restautant in the bay area agreed to sponsor the event. Since 'Kuselan' is a movie about friendship, we decided to capitalize on the 'friendship day' and do something innovative. Asusual, Mahesh Srinivasan took care of all the arrangements for a slideshow, friendship bands, etc., We distributed pamphlets at the theatre where "Kuselan" is screened and on 2nd August, the event kicked off.


I was there at 6pm, and started the 'Kuselan slideshow'. Many people came to me and requested to play the trailer. We distributed free friendship bands to everybody who visited our stall. Most desis around the area were keen to grab the frienship bands and as prompted by their typical 'desi' mentality, some of them requested for more frienship bands for their friends and some of them requested for some other color. The highlight was, when we gave a frienship band to a girl, she demanded for three more, saying "I have three friends". Even I have dozens of friends. Come on!! Huh!

To my surprise, the Americans didnot know about "friendship day" and when we explained about it, they were kinda surprised. I went to watch 'Kuselan' for the 5th time, straight from the restaurant after completing the event. Watched the movie with my friend and we exchanged our wishes at 12am and I gave him the frienship band.


Watching 'Kuselan' on Friendship day with one of the best buddies and presenting him a frienship band - A perfect way to celebrate frienship! It doesn't get any better than this.

Links to the articles that were published regarding the event :

http://rajinifans.com/kuselan/usa/friendship_day.php

http://www.rajinifans.com/detailview.php?title=702

http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-08-01/kuselan-01-08-08.html

http://www.indiaglitz.com/channels/tamil/article/40402.html

Monday, August 04, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 14

பரீட்ச்சை பேப்பரை கிழித்து விட்டெறிந்தார் மேடம். ஐந்து பேரும் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். கண்ணெல்லாம் சிவந்து, கண்ணுக்குக் கீழ் இருக்கும் சதைப் பகுதி துடித்துக்கொண்டிருந்தது. இவர்களுக்கு, அப்படியே ஒரு 'லேடி' விஜயகாந்த்தைப் பார்ப்பது போல் இருந்தது. "எக்கோ" அடிக்கும் குரலில், அவருக்கே உரிய ஆங்கிலத்தில், கன்னாபின்னாவென்று திட்டினார். எல்லோரது பேப்பரையும் கிழித்து எறிந்துவிட்டு, அனைவரையும் வீட்டிற்குக் கிளம்ப சொன்னார். எல்லோரிடமும் இருந்த ஒரே ஆயுதமான "மன்னிப்பு கேட்பதைக்" கையில் எடுத்தனர். அனைவரும் ஒருமித்த குரலில் "சாரி" சொல்லிக்கொண்டிருக்க, அதைக் காதில் கூட போட்டுக்கொள்ளாமல் அவர் வேலையை செய்யத்துவங்கினார்.

அடாது அலட்சியப் படுத்தினாலும், விடாது முயற்சி செய்துகொண்டிருந்தவர்களுக்கு பலன் கிடைத்தது.

“பாடம் நடத்தும் ஆசிரியரை கேலி செய்தால் பைத்தியமாகி விடுவீர்கள்” என்று சாபம் விட்டார். பிறகு, அந்த தேர்வை மீண்டும் இப்பொழுதே எழுதுமாறு உத்தரவிட்டார். அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 5.15 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று கூறப்பட்டது. மணி அப்போதே 5.05 ஆகிவிட்டிருந்தது. அந்த அறையை விட்டு வெளியில் வந்து பார்த்ததில், பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. பாபுவும் நட்டும் வெளியில் நின்றுகொண்டிருந்தனர்.

"என்னடா ஆச்சு?"

"போட்டுக் குடுத்துட்டா டா அந்த எலிமெண்டரி"

"என்ன சொன்னாங்க?"

"ரீ- டெஸ்ட் எழுதணும். இப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல..." சொல்லிவிட்டு வேகமாக தன் பையைத் திறந்தான் ஷங்கர். மற்றவர்களெல்லாம் பிரச்சனை ஓய்ந்ததே என்ற சந்தோஷத்தில் தேர்விற்கு சென்று கொண்டிருக்க, ஷங்கர் மட்டும் புத்தகத்தை எடுத்து தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை பார்க்கத் தொடங்கினான்.

"டேய், ரொம்ப அவசியமா??? சீக்கிரமா வாடா...." என்றான் கிருஷ்ணா.

"சைக்கிள் கேப்புல 'ஒன் வேர்ட் ஆன்சர்' எல்லாம் பாத்துட்டேன்" என்றான் ஷங்கர்.

"அடப்பாவி.... சரி சரி, எழுதிட்டு எனக்கும் காட்டு...."

"இங்க கிருஷ்ணா, கிருஷ்ணான்னு ஒரு மானஸ்த்தன் இருந்தானே பாத்தியா?" என்று நக்கலடித்தான் ஷங்கர்.

"சரி, சரி.... வாரிவிடாத...."

"டேய், மேட்ச்சை கேன்சல் பண்ணிடு. இன்னொரு நாளைக்கு வெச்சிக்கலாம். அவனுங்ககிட்ட சொல்லிட்டு நீ 6.30 மணிக்கு மகாமகாக் குளத்துக்கு வந்துடு" - வெளியில் நின்றுகொண்டிருந்த பாபுவிடம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான் ஷங்கர்.

"இவன் பாட்டுக்கு இவ்வளவு சுலபமா சொல்லிட்டு போய்ட்டான்.... எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு இனிமே போய் கேன்சல் பண்ணறது? ஏற்கெனவே ஒரு மணி நேரம் லேட்டு. அவனுங்க சும்மாவே நம்மளைக் கிண்டல் பண்ணுவானுங்க, இதுல பெட் மேட்ச்சுக்குக் கூப்பிட்டுட்டு, போகலேன்ன அவ்வளோதான்" என்று புலம்பினான் பாபு.

தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்து பார்த்த போது மணி 6.30 ஆகிவிட்டிருந்தது. கிரிக்கெட் விளையாடப் போவதாக ஏற்கெனவே வீட்டில் சொல்லியிருந்ததால் பிரச்சனை இல்லை. இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்துவிடலாம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாலா ஆகியோர், பள்ளிக்கு அருகில் இருக்கும் "சொக்கையன் கடை"க்குச் சென்றனர். உடனே வீட்டிற்குச் செல்ல யாருக்கும் பிடிக்கவில்லை. சொக்கையன் கடையிலிருந்த தொலைபேசியில் குமாரை அழைத்து அவனையும் மகாமகாக் குளத்துக்கு வரச்சொன்னான் ஷங்கர்.

சொன்னபடி பாபுவும் நட்டும் அங்கு வர, குமாரும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்ததை எல்லாம் ஒரு "ஃபிளாஷ் பேக்" ஓட்டிவிட்டு, அமர்ந்தான் ஷங்கர்.

"அப்பாடா, இந்த பிரச்சனையில என் விஷயத்தை சுத்தமா மறந்திடுவாங்க" என்றான் குமார்.

"அடப்பாவி, எங்க பிரச்சனையில நீ குளிர் காயாத...." என்றான் கிருஷ்ணா.

"அப்படி இல்ல டா... பிரச்சனை முடிஞ்சதுல்ல.... விடுங்கடா..."

"என்னை மட்டும் பார்த்து, “You are a notable case in Xth ‘A’” ன்னு சொன்னாங்க டா" என்றான் ஷங்கர்.

உடனே ஆர்வமாகிப் போன குமார், "டேய், நான் மாட்டினப்போ, எனக்கும் இதே டயலாக் அடிச்சாங்க டா...." என்றான்.

"சும்மா பூச்சாண்டி காட்றாங்க. என்ன பண்ணுவாங்க? +1 சீட் தர மாட்டாங்களாமா?? போடா.... அப்படி அவங்க தரலேன்னா நம்ம எல்லாரும் டவுன் ஹை ஸ்கூல் போயிடலாம்" என்றான் பாபு.

"நானும் அதை தான் யோசிக்கிறேன். எதுக்கெடுத்தாலும் அம்மாவை அழைச்சிட்டு வா, அப்பாவை அழைச்சிட்டுவான்னு... ஒரே டார்ச்சரா இருக்கு..." என்றான் ஷங்கர்.

அடிக்கடி பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே இன்னும் பிரச்சனை பண்ணறோம், ஆனா மாட்டிக்காத மாதிரி பண்ணறோம்...." என்று சபதம் எடுத்தனர்.

"அந்த 'பெட்' மேட்ச்சை முதல்ல முடிக்கணும். நான் கேன்சல் பண்ண போனப்போ பயங்கர கடுப்பாயிட்டாங்க" என்றான் பாபு.

"அது பிரச்சனை இல்ல... வர்ற சனிக்கிழமை ஃபிக்ஸ் பண்ணிரு" என்றான் ஷங்கர்.

"சரி. இந்தியா - நியூசிலாந்து சீரீஸ் ஆரம்பிக்கிது டா.... ஆனா, நமக்கு ராத்திரி 3 மணிக்குத் தான் மேட்ச் ஆரம்பிக்கும்" என்றான் பாபு.

"எங்க வீட்ல எல்லாரும் ஊருக்குப் போறாங்க. நான் மட்டும் தான் தனியா இருக்கப்போறேன். எங்க வீட்ல மேட்ச் பாக்கலாம். எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க டா..." என்றான் ஷங்கர்.

"இராத்திரி தங்கிட்டு, திரும்ப அடுத்த நாள் காலையில எழுந்து வீட்டுக்கு போறதெல்லாம் ரொம்ப கடி... நான் வார கடைசியில வர்றேன்" என்றான் கிருஷ்ணா. மொட்டையும் நட்டும் அவனை வழி மொழிந்தனர். பாபுவின் வீடும் குமாரின் வீடும் ஷங்கரின் வீட்டிற்கு மிக அருகில் இருப்பதால், அவர்கள் மட்டும் ஒத்துக்கொண்டனர்.

பாபுவும் குமாரும் ஷங்கர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வந்து முதல் வேலையாக ரிமோட்டைக் கையிலெடுத்து சேனல்களை மாற்றத் துவங்கினான் பாபு.

உள்ளே சென்றிருந்த ஷங்கர். "94 வது சேனல்ல வருது" என்றான்.

"டேய், நான் என்ன சேனல் தேடறேன்னு தெரியுமா???"

"நீ வேற எதை தேடப்போற?? F tv தானே?"

"ஆமா ஆமா.... விவரமா யாருமே பாக்காத மாதிரி 94 வது சேனல்ல வெச்சிருக்க..." என்று சொல்லிவிட்டு அந்த சேனலை அழுத்தினான்.

"ச்ச..... தண்டம். இப்போன்னு பாத்து இன்ட்ரெஸ்டிங்கா ஒண்ணுமே இல்ல...." என்று அலுத்துக் கொண்டான் பாபு.

"இன்ட்ரெஸ்டிங்ன்னா, எது மாதிரி டா??" என்று பாபுவின் வாயைக் கிண்டினான் குமார்.

"F tv ல வயலும் வாழ்வும் போடுவாங்க. அதான் இன்னும் வரலையேன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்"

டி.வி.யை நிறுத்திவிட்டு மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சு பல விஷயங்களைத் தாண்டி, பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றில் போய் நின்றது.

"சரி, ரொம்ப நேரமாச்சு. 3 மணிக்கு எந்திரிக்கணும். மேட்ச் ஆரம்பிச்சிரும். தூங்கலாம்...." என்று சொல்லிவிட்டு குமாரும் பாபுவும் மாடியில் இருந்த ஷங்கரின் அறைக்குச் சென்றனர். ஷங்கர், வீட்டைப் பூட்டிவிட்டு, விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு மெதுவாக படியேறி மாடிக்குச் சென்றான். குமாரும் பாபுவும் ஒருவித பயத்துடனேயே இருப்பதை உணர்ந்த ஷங்கர், மறைந்திருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டான். ஆவியைப் பற்றி திகிலுடன் பேசிக்கொண்டிருந்தான் குமார். பாபு, பயத்துடனேயே அதை கேட்டுக்கொண்டிருந்தான். ஷங்கருக்கு ஒரு யோசனை தோன்றவே, உடனே கீழே சென்றான்....

தொடரும்....

Friday, August 01, 2008

Kuselan - First Information Report

Filmbox

Movie's 3rd reel - The one in which Thalaivar comes first!!

I am neither going to write a review nor discuss the scenes here

Just came back home after watching back to back shows here in San Jose. I saw the very first show in IMC6 and the next show in Century Berryessa. Let me pen down a few things about my experience...

-> Very much unlike "Thalaivar" movie. I would recommend people to go to this movie with an open mindset and sure, they'll come back with Thalaivar in their hearts.

-> Probably after "Aarilirundhu Arubadhu Varai", thalaivar has got an opportunity to showcase his acting talents. I mean, a complete exposure on his acting skills.

-> Last 20 minutes is riveting. Nobody moved in the theatre.

-> Am not a person who gets emotional for movies. Even for Thalaivar's movies like Padikkadhavan, Dharmadurai, Annamalai, etc., which has got the best emotional scenes, I was not moved. But, this movie's climax made me cry. (Confession time...)

-> Probably one of the best climaxes I've ever seen after "Anbe Sivam".

-> I bet everyone watching this movie would think about their old friends.

-> Quite obvious that all thalaivar scenes are enjoyable, but the intro is simply mind-blowing. Hats off to P.Vasu for that effort.

-> A complete family entertainer. Like Chandramukhi, this movie is sure gonna pull a lot of ladies crowd.

-> For God's sake, please dont think that am exaggerating - Most of the people cried after watching the climax. Infact, in all theatres, it has been intimated to switch on the lights two minutes later, after the movie is over. Just to give people sometime to wipe off their tears and avoid the embarrasment.

-> No vishk vishk styles, no punch dialogues, no gravity defying stunts, but still Thalaivar scores . Particularly, in the last twenty minutes. I wouldn't say that there is no specific style in this movie, as thalaivar's every gesture is a style itself.

-> Equal credits to Pasupathy, who has done a brilliant job. Probably his career best so far.

-> Very elegant, simple yet powerful perfomance from our super star.


To my fellow fans...
I consider this movie as the best answer to all the critics who question Super Star's acting abilities. Personally, I would always love to watch thalaivar in a larger than life character. But, I never felt disappointed after watching this movie. If thalaivar can amaze you with his awesome energy, punch dialogues and stunts, this is another way he can do so. Perhaps we never imagined that we would get such a brilliant movie without much commercial aspects stuffed in it. This is the time to celebrate such a good movie and be happy that we got a movie to shut the critics' mouth.

To Thalaivar...
Thalaiva! Thanks for doing this cameo before "ROBO" and giving us an opportunity to let others know that your fans don't just enjoy your ususal formula films, but also adore a brilliant flick of this kind from you. After watching this movie, am sure all true fans of yours would feel proud to be your fan, just like me.