Tuesday, July 29, 2008

Kuselan Fantasies - I

Huh…. What a week it was ! I’ve never been this busy and excited even when Sivaji was released. I was in India that time and also enjoyed my time with my fellow fanatics, but this time it was even better. I never really thought that I would get an opportunity to organize promotional events on my own. It’s quite an interesting story though.

Sampath, my co-fanatic was asking me about organizing something here, but both of us were not sure about what exactly can be done. When ‘Kuselan’ audio CD was released, I was pretty excited and wanted to grab a copy of it immediately. When I learnt that the only way to get it is to order it online, I couldn’t wait for the shipping time. So, I decided to call them and check the ways of getting it much sooner. This is how Jayavel Murugan, the US distributor for Kuselan got in touch with me. It was a casual chat and he asked me whether I would be interested in organizing events, for which I said YES even before he completed the question.

I was introduced to Mahesh Srinivasan, the joint distributor for Kuselan in the bay area. He wanted to meet me and know about my ideas. I did not have anything in mind until then, but as I sensed that it’s going to be bigger, I started doing my homework. I went to “Tirupathi Bhimas”, a famous restaurant in the bay area to meet Mahesh during lunch break and proposed my idea of conducting a “Kuselan friendship slogan contest”, since the movie is about friendship. As soon as I proposed my plan of action, the sponsors happily agreed to sponsor the entire event.


I designed the slogan slip for the contest and also the design of the customized Kuselan T.Shirt. The sponsors got them printed.


The Organizers : (From Left) Mahesh Srinivasan, ME and Venkatesh Gananathan
Backside of the T.Shirt

The Ultimate Day

It was all set for the Kuselan pre-release launch. I was pretty excited about the pre-release launch but at the same time, a little worried since I was a bit doubtful about the response. I got there early along with my friend Venkatesh and started making the arrangements for the event. The slogan contest counter was set up, posters were in place, slideshow was ready, but there was something missing. Aaahhh….. Gotcha! Thalaivar’s huge 25 feet vinyl hoarding that came from India needed to be put on display. It was really tough as we had to suspend it from the top, as we could not provide any cardboard for support. Moreover, the building was not tall enough and as a result, we had to leave some part of it in the ground. But, once the hoarding setup was done, it seemed to be all set for a swift take off.
Me getting the projector ready for the slideshow....
Slogan Contest Stall

25 feet Vinyl hoarding

A perfect spot to pose for a photograph

We started explaining the event to one person and then it just spread like forest fire. We didn’t have to do the explanations thereafter. My job was reduced to just judging the best slogans and the other organizers helped me with it. But it was really tough to pause the event for a while and choose the winners for that hour. The kids were enjoying the exclusive Super Star m&m candies. The best part is, people waited to know the results, even after they were done with their dinner.


The toughest job - Selecting the winning slogan

Click here for more pictures....

Besides the Ist prize of $20 gift voucher and II nd prize of Kuselan audio CD, the winning slogans were published in rajinifans.com. We also intimated the winners via email, so that they can ask their friends to see their slogan and probably the best chance to show them how special they are to them!

It was a fun filled two days and as per the “Super Star Theory”, the event was a massive hit. For those who were wondering what is the theory all about, its very simple – “Any damn thing associated with Super Star is a HIT”

People were really very happy and took part in the competition with the elated spirit. Since this kind of a promo event is first of its kind for any Indian movie, am satisfied that I could do something for my thalaivar’s movie.

Here are the links for the event related news and articles....

http://rajinifans.com/kuselan/usa/contest.php

http://www.indiaglitz.com/channels/tamil/article/40316.html

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/15859.html

http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-04/kuselan-01-24-07-08.html

http://tamilsuperhits.com/gallery/163/index.html

http://www.sivajitv.com/PhotoGallery.do?category=ct000002&id=it000436

Click the below link to check out the winning slogans.....

http://www.rajinifans.com/kuselan/usa/images/contest_winner.pdf

Finally, a big thanks to all the folks who supported me and worked with me to make this event a grandeur success. Will come back with more posts after the movie’s release. Watch out.

Tidbits :

 Learnt from the distributors who watched the movie already that the movie is rocking, especially Thalaivar’s intro
 Vadivelu’s comedy is top class
 Thalaivar delivers awesome punch dialogues. Thalaivar has changed the saying - “Maatha, Pitha, Guru, Deivam" to "Matha, Pitha, Guru, Nanban, Deivam”
 Thalaivar talks about his political entry and his affinity towards Himalayas.
 Last 20 minutes is set to melt your hearts.

Can’t wait till 31st !!!!

Monday, July 28, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 13

குற்றவாளிக் கூண்டு என்று அழைக்கப்படும் 'மேடம் அறை'யில் நின்று கொண்டிருந்தான் குமார். ஆயிரம் வாலா சரவெடி போல், இடைவிடாது பத்து நிமிடங்கள் திட்டி முடித்ததும், வாடிக்கையாக அவர் சொல்லும் “Bring your parents tomorrow” என்ற வசனத்தைப் பேசி முடித்தார். இது ஒன்றும் புதிதில்லை என்றபோதும், இந்த முறை கொஞ்சம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருப்பதால், நிச்சயமாக தப்பிக்க முடியாது என்று தோன்றியது. நேராக வகுப்பிற்கு வந்தான்.

"என்னடா, வழக்கம் போல தானே?" என்றான் ஷங்கர்.

"ஆமா டா... அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் என்னைத் தரையில உட்காரச் சொல்லியிருக்காங்க. இந்த வாட்டி எஸ்கேப் ஆக முடியாது போல இருக்கே...."

"பேசாம வீட்ல சொல்லிடு.... உங்க அப்பாவை வந்து பாக்க சொல்லு. பிரச்சனை முடிஞ்சிரும்"

"டேய், அது எல்லாம் முடியாது.... இன்னும் மூணு நாள்ல பரீட்ச்சை ஆரம்பம் ஆகுது. இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா போதும்"

"சரி, என்ன பண்ண போற?"

"வழக்கம் போல தான்..... நாளைக்கு லீவு போட்டுருவேன்"

இரெண்டு நாட்களுக்கு பிறகு.....
பரீட்சை துவங்கியது. பத்தாம் வகுப்பின் இரெண்டு செக்ஷன்களில், நன்றாக படிக்கக்கூடியவர்கள் என்பதால், அரையாண்டு பரீட்சை முடிந்தவுடன் இவர்கள் வகுப்பிற்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்திருந்தார்கள். மற்றுமொரு செக்ஷனுக்கு "ஸ்பெஷல் க்ளாஸ்" உண்டு என்று மேடம் அறிவித்திருந்தார்.
எதிர்பார்த்தபடி மேடம் குமாரைப் பற்றி மறந்துவிட்டிருந்தார். ஆனாலும், கடைசி பரீட்சை முடியும் வரை கொஞ்சம் பயமாகவே இருந்தது.

கடைசி பரீட்சையான "ஜியோக்ராபி" பரீட்சையன்று ஷங்கரும் மற்றவர்களும் நிறைய திட்டம் தீட்டியிருந்தார்கள். பரீட்சை முடிந்த கையேடு கிரிக்கெட் விளையாடுவது என்று முடிவெடுத்திருந்தனர். 'பெட்' மேட்சுக்காக அம்மாசத்திரம் டீமுடன் பேசிவிட்டு வந்திருந்தான் கிருஷ்ணா.

பரீட்ச்சை எழுதவிருக்கும் வகுப்பின் முன்னால் நின்று கொண்டு, பரீட்ச்சை ஆரம்பிக்கும் முன் கடைசி கட்ட 'நுனிப்புல் மேய்தலை' செய்து கொண்டிருந்தார்கள். கண்காளிப்பாளராக யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே பரீட்சைக்கு 'பிட்' எடுத்துச் செல்வது முடிவு செய்யப்படும். கண்டிப்பான ஆசிரியர்கள் வந்தால், 'பிட்'டை வெளியிலேயே விட்டுவிட்டுச் சென்று விடலாம் என்பதால், கடைசியாக வகுப்பினுள் நுழைவதே சிறந்த நுணுக்கமாக இருந்தது..

தேர்வு எழுதுவோர் வரிசையின்படி, கிருஷ்ணா, பாலா, ஷங்கர், ஆகிய மூவர் ஒரு வகுப்பிலும், குமார், பாபு, நட்டு ஆகியோர் வேறு வகுப்பிலும் தேர்வு எழுதும்படி இருந்தது. ஷங்கர் வகுப்பிற்கு எலிமெண்டரி வகுப்பின் ஆசிரியர் கண்காளிப்பாளராக வரவே, அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. பொதுவாக, ஆறாம் வகுப்பைத் தாண்டிவிட்டாலே, எலிமெண்டரி வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களை ஏளனமாகப் பார்ப்பது வழக்கம். பரீட்சை கண்காளிப்பளராக வேறு வந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. அனைவரும் 'பிட்டு'களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சிலர், மேலும் ஒரு படி சென்று புத்தகத்தின் பக்கத்தையே கிழித்து அவசர அவசரமாக சட்டைக்குள் திணித்துக்கொண்டிருந்தனர்.

டிசிப்ளின் சார், வழக்கம்போல ரோந்து வந்து வெளியில் நின்று படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையெல்லாம் வகுப்பிற்குள் துரத்திக் கொண்டிருந்தார். ஷங்கர், கிருஷ்ணா, பாலா மூவரும் அடுத்தடுத்த பெஞ்ச்சுகளில் அமர்ந்திருந்தார்கள். ஒரு பெஞ்ச்சில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

மணி அடித்தவுடன், ஆசிரியர் வினாத்தாள்களை விநியோகிக்கத் தொடங்கினார். பரீட்சை எழுத ஆரம்பிக்கும் முன், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். மூவருக்கும் அன்று விளையாடப் போகும் மேட்ச்சிலேயே கவனம் இருந்தது.

'காப்பி' அடிப்பதற்கு பொருத்தமான நேரம், கடைசி அரை மணிநேரம் தான் என்பது உலகறிந்த ரசகியம். அந்த கடைசி முப்பது நுமிடங்களுக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரும், ஆசிரியர், "கடைசி நிமிடங்கள்" என்று அறிவித்ததும், தங்கள் வேலையை காட்டத் துவங்கினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 'பிட்டு'கள் எல்லாம் பாயத் துவங்கின. பரீட்சை நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், பாலாவிற்கும் ஷங்கருக்கும் இடையே விடை பரிமாற்றம் நடந்துகொண்டிருந்தது.

முன்னால் அமர்ந்திருந்த பாலாவை அழைத்தான் ஷங்கர். பாலா மும்முரமாக அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த மாணவனைப் பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததில், ஷங்கரின் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த ஷங்கர், தன் இருக்கையை விட்டு எழுந்து, பாலாவின் தலையில் ஓங்கி அடித்தான். பாலா தலையை தடவிக்கொண்டே திரும்பிப் பார்க்கையில், ஆசிரியர் முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

முகத்தில் கோபம் கொப்புளிக்க, "வாட் இஸ் திஸ்?" என்றார்.

ஷங்கரும் பாலாவும் தங்கள் இருக்கையை விட்டு கூட எழாமல் அமர்ந்தபடி இருந்தனர். ஷங்கர் மட்டும் ஏளனமாக "நத்திங்" என்றான்.

இந்த பதில், அவரை மேலும் கடுப்பேற்றியது. பதிலேதும் பேசாமல், அங்கிருந்து சென்றார். பரீட்சை முடியும் நேரமானதால், "நேம் ஸ்லிப்" எனப்படும் பெயர் எழுத பயன்படும் சிறு காகிதத் துண்டையும், அதை விடைத்தாளுடன் கோர்ப்பதற்கு ஒரு நூலையும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யத்துவங்கினார். ஆசிரியர் தன் வேலையைச் செய்ய, ஷங்கரும் பாலாவும் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அந்த ஆசிரியரை கொஞ்சம் கூட மதிக்காமல், எதுவுமே நடக்காதது போல், மீண்டும் இருவரும் விடைகளை பரிமாறிக் கொள்வதும், கிண்டலடித்து சிரித்துக் கொள்வதுமாய் இருந்தனர். கொஞ்ச நேரத்தில், கிருஷ்ணாவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

உச்சக்கட்டமாக, பேப்பரை சுருட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மணி அடிக்கவே, அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கத் தொடங்கினார் ஆசிரியர். கிருஷ்ணா, ஷங்கர், பாலா மற்றும் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த இருவரின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டார்.

பரீட்சை முடிந்தது என்ற சந்தோஷத்துடன், மாலையில் தாங்கள் ஆடப்போகும் 'பெட்' மேட்சுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். நேரடியாக பள்ளியிலிருந்து அம்மாசத்திரம் செல்வதாக இருந்ததால், கிரிக்கெட் மட்டை, ஸ்டாம்புகள் ஆகியவற்றை எடுத்து வந்து பள்ளிக்கு அருகே இருக்கும் இளங்கோவின் வீட்டில் வைத்திருந்தனர்.

பரீட்ச்சை முடிந்து ஆறு பேறும் ஒன்றாக கூடி, சம்பிரதாயத்துக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் பரீட்சையைப் பற்றி பேசிவிட்டு, மேட்சுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பி நடக்கத்தொடங்கியதும், ஆயா வந்து வழிமறித்தார். கிருஷ்ணா, பாலா, ஷங்கர் மற்றும் இருவரின் பெயரைக் குறிப்பிட்டு,

"உங்களை எல்லாம் இப்போ உடனே மேடம் வந்து பாக்க சொல்றாங்க" என்றார்.

தொடரும்....

Wednesday, July 23, 2008

Kuselan Trailer





Thalaivaaaaaaaaaaa.......................!




Kathanayakudu - Telugu Version

Monday, July 21, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 12

கீழே விழுந்த பி.டி. வாத்தியார், வேகமாக எழுந்தார். குமாரின் நகம் பட்டு அவர் கையில் கீறல் விழுந்திருந்தது. அதிலிருந்து லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது. கோபம் தலைக்கேற, அவமானம் வேறு பிடுங்கித் தின்ன, என்ன செய்வது என்று தெரியாமல், அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார். ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று மட்டும் தெளிவாக விளங்கியது குமாருக்கு. பிரேயர் நடந்துகொண்டிருப்பதால் யாருடனும் எதுவும் பேச முடியவில்லை. தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஷங்கரிடம் "இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல" என்றான். அந்த 45 நிமிடங்கள் கழிவது சிரமமாக இருந்தது.

பிரேயர் முடிந்தவுடன், ஷங்கர், பாபு, நட்டு, பாலா அனைவரும் குமாரை சூழ்ந்துகொண்டனர். "டேய், என்னடா நீ.... நம்ம "மாடு ஓட்டி மன்னார்சாமி"ய தள்ளி விட்டுட்ட...." என்றான்

"நான் தள்ளி விடல டா... அந்த ஆளே விழுந்துட்டான்..."

எந்த நேரமும் 'ஆயா' மூலம் அழைப்பு வரலாம் என்பதால் வகுப்பில் வந்து அமர்ந்ததிலிருந்து திகிலோடு காத்துக்கொண்டிருந்தான் குமார்.

"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்னும் பழமொழிக்கேற்ப, சாவிக்கொத்து சத்தம் குலுங்க, "மேடம்" அங்கு வந்தார். நேராக குமாரை நோக்கி சென்றார். கையில் வைத்திருந்த நீளமான பிரம்பை எடுத்து குமாரின் கழுத்தில் வைத்து, அப்படியே அவனை வகுப்பின் வெளியில் தள்ளினார். போலீஸ், திருடனை தள்ளிக் கொண்டு வருவதைப் போல இருந்தது மற்ற மாணவர்களுக்கு.

குமாரை வகுப்பின் வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றார் மேடம். அவர் வந்து சென்றபின் வகுப்பு ஆரம்பித்தது. காலையில் நடைபெற்ற அனைத்து வகுப்புகளிலும் குமார் வெளியிலேயே நின்றான். 12.45க்கு மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்ததும், குமார் வகுப்பினுள் வந்தான்.

"டேய், நானும் மேடம் வரும்போது போகும்போதெல்லாம் பின்னாலேயே போய், நடந்ததை சொல்லி பாக்குறேன், அவங்க காதுலையே வாங்கிக்க மாட்டேங்கிறாங்க" என்றான்.

ஷங்கர், "சரி, இப்போ என்ன பண்ணப்போற?" என்று கேட்டான்.

"தெரியல. நான் இப்போ கிளம்பி வீட்டுக்குப் போறேன். இன்னும் அரை நாள் எல்லாம் என்னால வெளியில நிக்கமுடியாது"

"டேய், இப்போ நீ கிளம்பினா பிரச்சனை அதிகமாயிடும்...."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது டா... என்னால வெளியில நிக்க முடியாது, நான் கிளம்புறேன்" - சொல்லிவிட்டுக் கிளம்பினான் குமார்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் வகுப்புகள் நடைபெறத் துவங்கின. முன்பு எதிர்ப்பார்த்தது போல், ஆயா வந்து, குமாரை மேடம் அழைப்பதாக சொல்ல, அவன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அனேகமாக குமாரைப் பற்றி விசாரிக்க, அடுத்த அழைப்பு தனக்காகத் தான் இருக்கும் என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான். ஆனால், பள்ளி முடியும் வரை எந்த அழைப்பும் வரவில்லை. பள்ளி முடிந்ததும், அனைவரும் பள்ளி மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அரையாண்டு பரீட்ச்சை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கவிருப்பதால், நட்டின் வீட்டில் "குரூப் ஸ்டடி" செய்வதென்று முடிவானது.

ஷங்கர், வீட்டிற்கு வந்து வேகமாக சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றிக்கொண்டு குமார் வீட்டிற்குச் சென்றான். தன் பைக்கில் குமாரை ஏற்றிக்கொண்டு, இருவரும் கிருஷ்ணா வீட்டை நோக்கிச் சென்றனர்.

வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஷங்கர், "உன்னைத் தேடி ஆயா வந்தாங்க...." என்றான்.

"போச்சுடா.... நாளைக்கு செத்தேன்" என்றான் குமார்.

கிருஷ்ணாவின் வீட்டை சென்றடைந்தனர். டி.வி. பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா, எழுந்து வந்து கதவைத் திறந்தான். மூவரும் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணாவின் அம்மா, மூவருக்கும் தேநீர் கொடுத்தார்.

அதைக் குடித்த கிருஷ்ணா, "என்னம்மா டீ போட்டிருக்க? என் சாய்ரா பானு எவ்வளவு நல்லா டீ போடுவா தெரியுமா??" என்றான்.

"டேய், நீ அடங்கவே மாட்டியா?" என்றான் ஷங்கர்.

"இப்படித்தான்... இவன் ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கான்ப்பா..." என்றார் கிருஷ்ணாவின் அம்மா.

"சும்மா வம்பிழுக்குறான் ஆண்ட்டி... அதெல்லாம் ஒண்ணுமில்ல..." என்றான் ஷங்கர்.

"நீங்க எல்லாரும் பாத்துக்கிட்டே இருங்க.... ஒரு நாள் திடீர்ன்னு நான் அவளை கூட்டிக்கிட்டு வரத்தான் போறேன்...." என்றான் கிருஷ்ணா.

"வாயை மூடு..." என்றார் அவன் அம்மா.

"அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.... மதம் கூட மாறுவேன்..... 'கிருஷ்ணா'ங்குற என் பேரை மாத்தி 'காதர்'ன்னு வெச்சிக்குவேன்" என்றான்.

"ஐயோ.... கடவுளே" என்று தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.

"அதை முதல்ல பண்ணு..... நீ முஸ்லிமா மாறின உடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்கன்னு நினைப்பா?? இந்த கல்யாணத்துக்கு முன்னாடி, இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.... தெரியுமா?? என்று கேட்டான் ஷங்கர்.

"அது என்னடா கல்யாணம்?" என்று ஆர்வமாக கேட்டான் கிருஷ்ணா.

"அது தெரியாதா?? அது தான் டா ‘கட்டிங்’ கல்யாணம்...." என்றான் குமார்.

"அப்படின்னா??"

"வெட்டிருவாங்க...." என்றான் ஷங்கர். அதைக்கேட்டு அதிர்ச்சியானான் கிருஷ்ணா.

"சரி சரி, கிளம்புங்க.... நட்டு வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

நட்டு வீட்டில் அனைவரும் கூடினர். "க்ரூப் ஸ்டடி" என்ற பெயரில் நட்டு வீட்டில் கும்மாளம் அடிப்பது வழக்கம். அனைவரும் ஒன்று கூடினால், எப்போதுமே "க்ரூப்" இருக்கும், ஆனால் "ஸ்டடி" இருக்காது.

"என்னடா, இந்த ஸ்கூல்ல 'ரவுடியிசம்' பண்ணறது இவ்வளவு கஷ்டமா இருக்கு... தெரியாத்தனமா அந்த பி.டி. வாத்தியார இவன் தள்ளிவிட்டுட்டான். அதுக்கு ஓவரா சீன் போடறாங்களே..." என்றான் ஷங்கர்.

"டேய், மறுபடியும் நான் தள்ளி விட்டேன்னு சொல்லாத டா... அந்த ஆளு தடுமாறி விழுந்துட்டான்..." என்றான் குமார்.

"சரி, ஏதோ ஒண்ணு.... நீ கவலைய விடு... எப்படியும் பரீட்ச்சை வருது.... இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா, அப்புறம் மேடம் மறந்துடுவாங்க" என்றான் ஷங்கர்.
அனைவரும் அதை ஆமோதித்தனர்.

"அந்த ஆளுக்கு ஏன் டா மாடு ஓட்டி மன்னார்சாமின்னு பேரு வந்தது?" எனக் கேட்டான் பாலா.

"சும்மா பசங்களை மாடு மாதிரி 'ஏய்' , 'ஏய்' ன்னு கத்தி மேய்ச்சிக்கிட்டு இருப்பாரு. அதனால தான்..." என்றான் பாபு.

"டேய் நட்டு, உங்க வீட்டுக்கு இத்தனை பேர் வந்திருக்கோம்.... சாப்பிட ஏதாவது கொண்டு வரணும்ன்னு அறிவு இல்ல? போ…. ஏதாச்சும் எடுத்துட்டு வா" என்று விரட்டினான் கிருஷ்ணா.

"வீட்ல யாரும் இல்ல டா" என்றான் நட்டு.

"அதான் தெரியுமே... உங்க அம்மா மட்டும் இந்நேரம் இருந்திருந்தா சுடச்சுட டீ குடுத்திருப்பாங்க" என்றான் பாபு.

"டேய், 'என்றென்றும் காதல்'ன்னு ஒரு குப்பை படம் வந்திருக்கு...." என்று அரட்டையை துவங்கினான் பாலா.

இப்படி படிப்பைத் தவிர மற்ற விஷயங்களை அனைவரும் பேசிக்கொண்டிருக்க, குமாருக்கு மட்டும் அடுத்த நாள் பள்ளியில் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையாக இருந்தது.

தொடரும்...

Thursday, July 17, 2008

Rewind: The best of cricket's biggest tournament

Leaving behind the infamous 2007 world cup, the other three world cups over the last twelve years have been very successful and entertaining. The last world cup in the Carribean is indeed unforgettable, but for wrong reasons. As far as cricket is concerned, it was a big flop. Here are the montage video collection of the other three world cups(1996, 1999 and 2003). The memories are fresh and evergreen. Just take a look at the videos, do a quick rewind of your memories and tell me which world cup was the best according to you and why?

1996 World Cup – The most colorful world cup of the other three which was held in the sub-continent. Though India made it only till the semi-finals, this remains as my personal favorite.

Picks of the tournament : 1. India vs Pakistan (Quarter finals) at Bangalore, India

2. Kenya vs West Indies at Pune, India

3. Australia vs West Indies (Semi finals) at Mohali, India

Tournament Sensation : Aravinda de Silva (Sri Lanka) , Sanath Jayasuriya (Sri Lanka) and Sachin Tendulkar (India)



1999 World Cup - A complete package of many nail-biting contests. India progressed upto the super six stage.

Picks of the tournament : 1. Australia vs South Africa (Semi finals) at Edgbaston, England

2. Zimbabwe vs South Africa at Chelmsford, England

Tournament Sensation : Lance Klusener (South Africa) and Neil Johnson (Zimbabwe)




2003 World Cup - India's second best perfomance in world cups. It was a pretty good tournament except for the poor show in the finals.

Picks of the tournament : 1. India vs Pakistan at Centurion, South Africa

2. Canada vs West Indies at Centurion, South Africa.
(For Davison's magnificient 60 ball-hunderd)

Tournament Sensation : Sachin Tendulkar (India)

Monday, July 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 11

இந்த ஆளை எங்கேயோ பாத்திருக்கேனே..." என்று முணுமுணுத்தான் ஷங்கர். ஏதோ பொறி தட்ட, சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த குமாரை அழைத்தான். குமாரிடம், "இந்த ஆளு யாருன்னு தெரியுதா??" என்றான்.

அவரைப் பார்த்துவிட்டு "இது சேகர் டா... எங்க மாமா மாமாவோட ஃபிரெண்டு" என்றான் குமார்.

"கரெக்ட். இப்போ தான் ஞாபகம் வருது. உங்க மாமாகூட இவர நம்ம பாத்திருக்கோம். சரி, நான் சொல்லற மாதிரி செய். நேரா நீ அந்த ஆள் கிட்ட போய், “சேகர் அண்ணா, எப்படி இருக்கீங்கன்னு கேளு..."

"டேய், அவருக்கு என்னைத் தெரியாது டா.... நான் தான் அவரைப் பாத்திருக்கேன்...."

"தெரியும்.... அந்த ஆள் பேரு சேகர் தானே??"

"ஆமா...."

"அப்போ நேரா போ. நான் சொன்ன மாதிரி செய். மத்ததை எல்லாம் நான் பாத்துக்குறேன்...."

பயத்தில் நின்று கொண்டிருந்த நட்டையும் அழைத்தான் ஷங்கர்.

"நீயும் என்கூட வா...." என்றான்.

"டேய், என்னை ஏன்டா எக்கச்சக்கமா மாட்டிவிட்ற? நீயே போய் சைக்கிளை எடுத்துட்டு வா.... அவனுங்க என்னைப் பார்த்தா, மறுபடியும் பிரச்சனை பண்ணுவாங்க" என்றான்.

"நான் பாத்துக்குறேன். நீ வா" என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான் ஷங்கர்.

ஷங்கர் சொன்னபடி குமார் நேராக அங்கு சென்று "சேகர் அண்ணே... எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான். இதைக்கேட்ட அவர், குமாரை கேள்விக்குறியோடு பார்க்க, உடனே குமார், "என்னண்ணே மறந்துட்டீங்க.... எங்க மாமா கூட அன்னைக்கு ஹோட்டல்ல பாத்தீங்களே..." என்றான்.

"யாரு உங்க மாமா...?" என்று அவர் குழப்பத்துடன் கேட்க, குமார் அவன் மாமாவின் பெயரைக் கூறினான். உடனே அவரும் "ஆமா, ஆமா..... அவன் அக்கா பையனா நீ??" என்றார். பிறகு, ஷங்கரையும் நட்டையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப் படுத்தினான்.

"நேத்து இவனோட சைக்கிளை இங்கேயே விட்டுட்டு வந்துட்டான், அதான் எடுத்துட்டுப் போகலாம்ன்னு...."

நட்டைப் பார்த்ததும், "நேத்து... " என்று ஏதோ சொல்லவந்தவர், அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு, “இவன் சைக்கிள் தானா? என்று கேட்டுவிட்டு, "அங்கே நிக்கிறதுல எது உன்னோடதுன்னு பாத்து எடுத்துக்க...." என்றார்...

நட்டு சைக்கிளை எடுத்தபின், அனைவரும் சேகரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்தனர்.

"இந்த சீன்ல நான் எதுக்கு? சைக்கிளை நீயே எடுத்துட்டு வந்திருக்கலாம்" என்று ஷங்கரிடம் சொன்னான் நட்டு.

"நேத்து உன்கிட்ட பிரச்சனை பண்ணது சேகர் கிட்ட வேலை செய்ற பசங்க. சேகரை நமக்குத் தெரிஞ்சவரா காட்டிக்கிட்டா, இனிமே இவனுங்களால எப்போவுமே பிரச்சனை வராது" என்றான் ஷங்கர்.

சைக்கிள் கிடைத்த சந்தோஷத்தில் நட்டு உற்சாகமாக நடக்க, இதை கவனித்த கிருஷ்ணா, "நட்டு, சைக்கிள் கிடைச்சாச்சு.... இதுக்கு ஒரு ட்ரீட் நீ வெச்சே ஆகணும். இல்லேன்னா, அது உன் சைக்கிளுக்கு பெரிய அவமானம்" என்றான்.

"அது என்னடா சைக்கிளுக்கு....? அவனுக்கு அவமானம்ன்னு சொல்ல மாட்டியா?" என்றான் பாலா.

"அவனுக்கு தான் மானம், ரோஷம் எல்லாம் கிடையாதே" என்றான் கிருஷ்ணா.

"ஆமா... அதான் நம்ம கூட சேர்ந்துட்டான்ல....." என்றான் குமார்.

"ஓவரா பேசாத...." - வழக்கமான பதில் வந்தது நட்டிடமிருந்து.

"ட்ரீட்டா... ச்ச... தெரிஞ்சிருந்தா மதியானம் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டேனே.." என்றான் பாபு.

நட்டைக் கேட்காமல் அனைவரும் முடிவே செய்துவிட, வேறு வழியின்றி நட்டு தலையாட்டினான்.

வழக்கமாக செல்லும் "சோழா பாஸ்ட் புட்" கடைக்கு சென்றனர், ஃபிரைடு ரைஸ், காலிஃபிளவர் மஞ்சுரியன் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு, அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

"அந்த பொண்ணுக்கு தான் டா தேங்க்ஸ் சொல்லணும். இல்லேன்னா, நமக்கு ட்ரீட்டே கெடச்சிருக்காது" என்றான் பாலா..

"டேய், ஞாயமா அந்த பொண்ணை கட்டிப்புடிச்சதுக்கு ஒரு ட்ரீட், சைக்கிள் கெடச்சதுக்கு ஒரு ட்ரீட்ன்னு ரெண்டு ட்ரீட் நீ குடுக்கணும்..." என்றான் பாபு.

"இருந்தாலும், அந்த சப்பை ஃபிகரை நீ கட்டிப்புடிச்சிருக்க வேண்டாம்...." என்றான் பாலா.

பாலா நட்டை இஷ்டத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருக்க, பாபு குறுக்கிட்டான்.

"டேய் மொட்டை.... நிறுத்துடா. நீ என்னமோ ரொம்ப ஒழுங்கு மாதிரி அவனை ஓட்டிக்கிட்டு இருக்க... நீ பண்ண மேட்டேர சொல்லிருவேன்" என்றான்.

"டேய்... நமக்குள்ள டீல்..." என்றான் மொட்டை.

என்ன விஷயம் என்று அனைவரும் பாபுவை துளைத்தெடுக்க, அவன் சொல்லத்துவங்கினான்....

"நேத்து எங்க வீட்டு மொட்டைமாடியில நின்னுக்கிட்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி குளிக்கும்போது எட்டிப்பாத்திருக்கான்.... அந்த ஆன்ட்டி இவனை கன்னபின்னான்னு திட்ட ஆரம்பிச்சு.. ஒரே ரகளை..."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன, ரெண்டு பெரும் அங்கே இருந்து எகிறிட்டோம். இனிமே எங்க வீட்டு மொட்டை மாடிக்கே போக முடியாத மாதிரி பண்ணிட்டான் டா இவன்"

அனைவரும் நட்டை விட்டுவிட்டு, மொட்டையை கலாய்க்கத் தொடங்கினர். தன் இடத்தை மொட்டை பிடித்துக்கொண்டதால், நிம்மதியடைந்தான் நட்டு.

"டேய், அந்த ஆன்ட்டி அங்க குளிச்சிக்கிட்டிருக்கும்னு எனக்கு எப்படி டா தெரியும்? நான் எதார்த்தமா எட்டிப் பார்த்தேன்..." என்றான் மொட்டை.

"எதார்த்தமாவது, பதார்த்தமாவது.... இவ்வளவு நடந்திருக்கு..... டேய், இதுக்கு ஒரு ட்ரீட் வேணும் டா..." என்றான் ஷங்கர்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்தவுடன், அனைவரும் அவரவர் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

"டேய், half-yearly பரீட்சை வருது... ஏதாச்சும் படிப்போம்..... " என்றான் கிருஷ்ணா.

"இப்போ தான் மிட்-டெர்ம் முடிஞ்சது, அதுக்குள்ள இது வேற..." என்றான் பாபு.

"சரி டா, நாளைக்கு பார்க்கலாம்"

அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை....
பிரேயர் மணி அடிக்கும் வரை குமார் வரவில்லை. கடைசி நிமிடம் வரை பார்த்துவிட்டு, அனைவரும் பிரேயருக்கு சென்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பாபுவும் ஷங்கரும் வரிசையில் கடைசியாக நின்றனர்.

"ஏன் டா அவன் வரல?" என்று ஷங்கரிடம் கேட்டான் பாபு.

"தெரியலையே. வரலேன்னா ஃபோன் பண்ணி சொல்லியிருப்பானே...." என்றான் ஷங்கர்.

பிரேயர் ஆரம்பித்தது. ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் பின்னால் நின்றுகொண்டுருக்க, வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தான் குமார். அவனும் ஷங்கரின் பின்னால் வரிசையில் நிற்க முயல, அவனை தடுத்தார் பி.டி வாத்தியார். தாமதமாக வந்ததால், பிரேயரில் கலந்து கொள்ள முடியாது என்று அவனை தடுக்க, அவன் தாமதமாக வந்த காரணத்தைக் கூறினான். அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், அவன் கையைப் பிடித்து இழுத்தார். குமார், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயன்ற போது தடுமாறி வாத்தியார் கீழே விழுந்தார்.

அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.

தொடரும்....

Wednesday, July 09, 2008

A few observations uttered...

Penning down a few of my observations in USA....

Observation 1 :

Most of the Chinese people out here don’t speak good English. Just like Keralites, they also have a unique accent for English. It can probably be termed as "Chinglish". Below is a conversation between me, my friend and a Chinese bearer in an authentic Chinese restaurant. That was the first time I went to a Chinese restaurant after landing in the United States.

The menu was totally different. I was hugely surprised by the fact that there were no “Manchurians” in the list. When I asked about it, my friend told me that they’ll be available only in Indo-Chinese restaurants. When I quickly ran through the menu, I could hardly find any vegetarian side-dishes in it. Most of the names were like titles of Chinese movies. We were trying to order fried rice and some vegetarian side dish. A lady bearer attended us. Here goes the conversation…

Bearer : Hi…

Me : Hi, We’ll have two mixed vegetable fried rice combo. But, we don’t want beef with it. Can we get something else instead of beef?

Bearer : No, No, No….. It’s a combo.

Me : Alright. What vegetables do you put in it?

Bearer : Mixed Vegetables.

Me : Ya, I know that. What vegetables are they?

Bearer : Mixed Vegetables.

Me : Mixed means?? What vegetables do you mix?

Bearer : Mixed means, mixed.

Me : I don't want certain vegetables. That's why am asking. Can you tell me what vegetables are they?

Bearer : (Pauses for a while and then) All vegethabels...

Me : Goyyaale…. (I was really frustrated)

Bearer : Whath???

Me : Vaathum illa, *****um illa…

Bearer : You wanth vegethabel friedh raaise?

I stopped talking to her and my friend took over from me....

My friend : Ya. But we don’t want beef. We want something else. Can we order fried rice separately?

Bearer : Oh, ok….. (She walked away from us quickly. We were wondering what she understood!)

After a couple of minutes, she came with some other lady who could speak better English. Both of us heaved a huge sigh of relief and explained her what we want. We learnt from her that they don’t serve fried rice separately. She also told us that we have to order a side dish and we get either fried rice or noodles(unlimited) free with it. The only veggie thing available was “Tofu” and we decided to order it. They use it as a substitute for meat. It looked like a big size paneer. Later I came to know that it is made out of the milky liquid extracted from soya beans. However, I didn’t like the taste. Rather than saying that it tasted bad, I should say that it didn’t taste anything at all!

In Chinese restaurants, another common thing is, they give you something called “fortune cookie” along with the bill. When you break it, you find a small strip of paper inside, which has a fortune or a luck message printed on it. The cookie tastes pretty good as well.




I’ve been to quite a few Chinese restaurants now and I see that their English is very unique and also, most of the Chinese people don’t know to speak proper English.

Observation 2 :

Coke vs Pepsi

I’ve tried out almost all fast food centers in my place – Carl’s Jr, McDonalds, Subway, Burger King, Taco Bell, KFC, Chipotle, Panda Express, etc. As far as I have seen, Coke is the predominant drink in most of the places. It’s a 80:20 ratio, with Coke being the highest. Here, they generalize all drinks as soda. When you ask for soda, mostly you get only coke. I could see Pepsi only in a very few places. I guess it’s the other way round in India.

Rest in next…

Signing off

Monday, July 07, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 10

நட்டும் பாலாவும் ஒரு வழியாக பள்ளியை அடைந்தனர். "ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்" பெருமூச்சு விட்டான் பாலா. மணி அடிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. வகுப்பில் இரெண்டு மூன்று பேர் மட்டும் இருந்தார்கள்.

"இந்த விஷயத்தை முதல்ல பசங்ககிட்ட சொல்லணும்" என்றான் பாலா.

"கிண்டல் பண்ணுவாங்க.... முக்கியமா கிருஷ்ணா ஓவரா பேசுவான்" என்றான் நட்டு.

"டேய், இப்போ அதுவா முக்கியம்? உனக்கு சைக்கிள் வேணுமா வேண்டாமா?"

நட்டு பதில் பேசவில்லை.

9.10 வரை யாருமே வரவில்லை. சரியாக மணி அடிப்பதற்கு இரெண்டு நிமிடங்களுக்கு முன்பு ஷங்கர், பாபு, குமார் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள்.

"என்னடா இவ்வளவு லேட்டு?" என்றான் பாலா.

"இன்னைக்கு ஒரு நாள் நீ சீக்கிரமா வந்துட்டு எங்களை கேள்வி கேக்குற" என்றான் பாபு.

"முக்கியமான விஷயம் பேசணும். நேத்து பிரச்சனை ஆயிடிச்சு"

"என்ன பிரச்சனை?" ஷங்கர் கேட்கும்போதே மணி அடித்தது. "சரி, இன்னைக்கு ஆத்தா பீரியட் இருக்கா??" என்றான்.

"இருக்கு. ரெண்டாவது பீரியட்" என்றான் பாலா.

"சரி, அப்போ பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு, எல்லோரும் பிரேயருக்குக் கிளம்பிச் சென்றனர். பிரேயர் முடிந்து வகுப்பிற்குத் திரும்புகையில், கிருஷ்ணா வழக்கம் போல தாமதமாக வந்து சேர்ந்தான்.

முதல் வகுப்பு, வகுப்பாசிரியையான வானதியின் வகுப்பு. அவர் வகுப்பில் பேசிக்கொள்ள முடியாது என்பதால், அடுத்த வகுப்பிற்காக அனைவரும் காத்திருந்தனர். மணி அடித்து அவர் வெளியே சென்றதும், அதற்காகவே காத்திருந்தது போல பாலா பின் வரிசையில் அமர்ந்திருந்த ஷங்கருக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

பத்து நிமிடங்கள் கழிந்த பின்னர், மாணவர்களால் 'ஆத்தா' என்று அன்பாக அழைக்கப்படும் வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார். அதற்குள் பாலா, ஒரே மூச்சில் நடந்ததை எல்லாம் கூறிவிட்டிருந்தான். ஆசிரியர் தன் நாற்காலியில் அமர, இவர்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.

"சைக்கிளை எடுக்கப் போகும் போது அந்தப் பசங்க பிரச்சனை பண்ணுவாங்க" என்றான் பாலா.

இதைக்கேட்டு முன்னால் அமர்ந்திருந்த நட்டிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

"டேய், அவனுங்களுக்கு இதே வேலையா? அதெல்லாம் பண்ண மாட்டாங்க" என்றான் ஷங்கர்.

"இல்ல டா, அவனுங்க அங்க தான் இருப்பானுங்க. அவனுங்க யாருமே படிக்கிற பசங்க இல்ல"

“Why am I hearing murmering noise?” என்று அதட்டினார் ஆசிரியர்.

"அதானே....ஆத்தா இன்னும் பஞ்ச் டயலாக் சொல்லலையேன்னு பாத்தேன்...." என்றான் பாபு.

சிறிது நேரம் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த மணிக்குமார், திருப்பதி லட்டு ஒன்றை எடுத்து, "திருப்பதி பிரசாதம்" என்று கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு உடனே எல்லோரும் பங்கு பிரித்து சாப்பிடத் தொடங்கினர்.

அப்போது, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர், அந்த வேலையை செய்தபடியே திடீரென்று மாணவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். அதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஷங்கரும் பாபுவும், அந்த லட்டின் பெரிய துண்டு யாருக்கு என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பாபுவிடம் சண்டை போட்டு, லட்டை வாங்கி 'டக்'கென்று வாயில் போட்டான் ஷங்கர்.

அப்போது, ஆசிரியர் “What is Nazism?” என்று கேள்வி கேட்டுவிட்டு, ஷங்கரை பதிலளிக்குமாறு கூறினார்.

வாயில் பெரிய லட்டை வைத்துக்கொண்டிருந்த ஷங்கர், அதை உடனே மென்று விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல் எழுந்து நின்றான். அவசர அவசரமாக பாபு, தன் நோட்டை எடுத்து அதற்கான விடையைத் தேடினான்.

ஷங்கர் வேகமாக லட்டை மென்று கொண்டிருக்க, பாபு அவன் நோட்டில் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் திருப்பி ஷங்கரிடம் காட்டினான். ஷங்கர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, " Come on, answer me, What are you having in your mouth?" என்று ஆசிரியர் கேட்க, ஷங்கர் "லட்டு" என்றான். ஆசிரியருக்குக் கேட்கவில்லை என்ற போதும், மாணவர்கள் இதைக் கேட்டு சிரிக்கத்தொடங்கினர். "ஏய்..." என்று ஒரு அதட்டு அதட்டிவிட்டு, ஷங்கரிடம் மறுபடியும் அந்த கேள்வியைக் கேட்டார்.

பாபுவின் நோட்டைப் பார்த்து, ஷங்கர் அந்த பதிலை ஒப்பிக்க, அவனை அமரச் சொன்னார் ஆசிரியர். பெருமூச்சு விட்டபடி அமர்ந்தான்

"ஒரு லட்டு சாப்பிட கூட நிம்மதி இல்ல..." என்றான் ஷங்கர்.

"இன்டெர்வல்-ல சாப்பிட்டிருக்கலாம்" என்றான் பாபு.

ஷங்கர்,"இன்டெர்வல்-ல சாப்பிட்டு இருந்தா, லட்டு சாப்பிட்டிருக்க முடியாது. பூந்தி தான் சாப்பிட்டிருப்போம். இதுக்கே இவ்வளவு அடிதடி..." என்றான்.

"லட்டை விடுங்கடா... என் சைக்கிளுக்கு ஒரு வழி பண்ணுங்க" என்றான் நட்டு.

"சைக்கிளை இன்னிக்கி சாயங்காலம் எடுத்துட்டு வந்துரலாம். எங்கேயும் போகாது" என்றான் ஷங்கர்.

"அவனுங்க பிரச்சனை பண்ணினா?"

"பண்ணட்டும். பாத்துக்கலாம்"

"வீட்டுக்கு எல்லாம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் டா..."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்குறேன்...." என்றான் ஷங்கர்.

ஏதோ திட்டம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அன்று மாலை பள்ளி முடிந்தவுடன், அனைவரும் நேராக பொருட்காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சைக்கிளுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை நோக்கிச் சென்றான் ஷங்கர்.

"நேத்து இங்கே சைக்கிளை விட்டுட்டு போயிருந்தோம். நைட் வீட்டுக்குப் போகும் போது எடுக்கல..." பேசி முடிப்பதற்குள், அவர் பேசத்தொடங்கினார்.

"ஓ... அந்த கேசா? நேரா போய் இடதுகை பக்கம் திரும்பு. அங்க 'சைக்கிள் பார்க்கிங்' காண்ட்ராக்ட் எடுத்தவரோட ஆபீஸ் இருக்கும். அங்க போய் கேளு.... உன் சைக்கிள் அங்கே இருந்தா தான் இருக்கும். நைட்டு எல்லாம் பாத்துக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல..." என்று எறிந்து விழுந்தார்.

அவர் கூறிய திசையில் செல்ல, அங்கு ஒரு சின்ன டென்ட் போடப்பட்டு இருந்தது.

"இதுவாத்தான் இருக்கணும்" என்றான் ஷங்கர்.

அதை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, ஷங்கரின் கையைப் பிடித்து நிறுத்தினான் பாலா...

அங்கே உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து, "நேத்து பிரச்சனை பண்ணது இவனுங்க தான் டா..." என்றான்.

தொடரும்...