Friday, October 24, 2008

தீபாவளி - சில நினைவுகள்...!

என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தீபாவளியை தனியாக கொண்டாடப்போகிறேன்..... உம்ஹும்ம்..... தீபாவளியை கழிக்கப்போகிறேன் என்பதே சரி. தீபாவளி என்பது எப்போதுமே என் வாழ்வில் வெறும் விடுமுறை அளிக்கும் பண்டிகையாக மட்டும் இருந்ததில்லை. ஒவ்வொரு வருடமும், தீபாவளி எனக்கு சந்தோஷத்தை வாரிக் கொடுத்து, உற்சாகத்தை புதுப்பித்துக் கொடுத்திருக்கிறது. பெருநகரங்களில் தீபாவளி என்பது, மற்றுமொரு விடுமுறை நாளாகவே கருதப்படுகிறது. சகட்டுமேனிக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, தீபாவளியன்று அதிகாலையில் ஒளிபரப்பப்படும் மங்கள இசை முதல், இரவு சிறப்புத் திரைப்படம் வரை டி.வி.யில் காட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்தே நாளைக் கடத்தும் பலரை எனக்குத் தெரியும்.


தீபாவளி வரும் ஒரு மாதத்திற்கு முன்னரே, எனக்குள் உற்சாகம் பற்றிக்கொள்ளும். ஊரின் ஒவ்வொரு தெருவிலும் கூட்டம் அலைமோதும். எப்படி எல்லோரிடமும் இவ்வளவு காசு புழங்குகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து சிறு ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக வருவார்கள். பேருந்துகள் எல்லாம் மெயின் ரோடுகளில் செல்ல முடியாமல் சுற்றிக்கொண்டு செல்லும்.மூலைக்கு மூலை பட்டாசுக்கடைகள் முளைக்கும். பட்டாசுகளை ஒரு மாதத்திற்கு முன்னரே வாங்கி, மொட்டைமாடியில் காயப்போட்டு, ஒவ்வொரு வெடியையும் எண்ணி எண்ணி அக்கறையாக எடுத்துவைப்பது, நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தீபாவளிப் பலகாரங்களைக் கொடுப்பது என்று படு உற்சாகமாக இருக்கும்.


தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அந்த தெருவிலேயே நான் தான் முதலில் வெடி வைக்க வேண்டும் என்ற படபடப்புடன் ஆயிரம் வாலா சரத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடுவேன். காலப்போக்கில், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் குறைந்தாலும், பண்டிகை தரும் சந்தோஷமும், உற்சாகமும் சிறிதளவு கூட குறையவில்லை.


இங்கே -



மேற்கூறிய எதுவுமே இல்லாமல், நல்லெண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டு பாத் டப்பில் நின்று குளித்துவிட்டு, மற்றுமொரு சாதாரண நாள் போல, அலுவலகத்திற்கு சென்று வர வேண்டும். இந்த ஊரில், பிறந்தநாளைக் கூட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் தீபாவளி திங்கட்கிழமையன்று வருவதால், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையே நல்லெண்ணைக் குளியலையும் முடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். மிஞ்சிப்போனால் கோவிலுக்கு சென்று வரலாம். வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த தருணத்தில், குடும்பம் மற்றும் நண்பர்களைத்தவிர, நான் அதிகம் 'மிஸ்' பண்ணும் விஷயங்கள்....



நகர் உலா


தீபாவளிக்கு முதல் நாள் இரவு, கட்டாயமாக நானும், பிரதீப்பும் மற்ற நண்பர்களோடு செல்லும் 'நகர் உலா'.


10 மணிக்கு மேல் வீட்டை விட்டுக் கிளம்புவோம். கடை வீதிகள் அனைத்தையும் சுற்றி விட்டு, நள்ளிரவு தாண்டி வீடு திரும்புவோம். அந்த கூட்டத்தில் நடக்கக்கூடத் தேவையில்லை. அலையிலே அடித்து செல்லப்படும் படகு போல, நீங்களும் அடித்துச் செல்லப்படுவீர்கள்.





சாலைகளில் முளைக்கும் 'திடீர்' கடைகள்


பிளாஸ்டிக் கப்புகள், டப்புகள், துணிமணிகள், துடப்பக்கட்டைகள், என்று சகலமும் விற்றுக்கொண்டிருக்கும்.



இந்த மாதிரி கடைகளில் அதிகம் விற்பனையாவது ஜட்டி, பனியன்கள் தான். ஒரு குடையைக் கவிழ்த்து, அதில் பனியன்கள், ஜட்டிகளைப் போட்டு, ஜோடி(!) 15 ரூபாய் என்று விற்பார்கள். அதை வாங்குவதற்கு நிற்கும் கூட்டத்தைப் பார்க்க கண்கோடி வேண்டும். ஆலன் சொலி, லூயிஸ் பிலிப் போன்ற சட்டைகள்(அட லேபில் மட்டும்தாங்க…) 40 ரூபாய்க்குக் கிடைக்கும். நான் கூட ஒரு சட்டை வாங்கியிருக்கிறேன். (பார்க்க - படம் கீழே). மொட்டைமாடியில் கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் சட்டைகளை 'சுட்டு', லேபில்கள் மாற்றி, இப்படி விற்கப்படுகின்றன என்று ஒரு பரவலான பேச்சு உண்டு. உண்மையா என்று தெரியாது.




ஜட்டி, பனியன்களுக்கு அடுத்து அதிகம் விற்பனையாவது பட்டாசுகள் தான். நள்ளிரவைத் தாண்டி ஷாப்பிங்(!) செய்தால், அதிகம் பேரம் பேசாமல் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டுக் கிளம்பி விடுவார்கள். அவர்களும் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா?


மழை


சீசனில் பெய்யும் மழை. தீபாவளியன்று நிச்சயமாக கொஞ்சம் தூறலாவது போடும். ஆனால், அதற்கு முன்னர், 'ஜோ'வென ஜோராகக் கொட்டும் மழை, மழைக்கு முன்னால் வரும் மண்வாசனை. இங்கே, பேய் மாதிரி மழை கொட்டினாலும், ரசிக்க முடியவில்லை.


தீபாவளி ரிலீஸ் படங்கள்


ஏதாவது ஒரு படத்தை நிச்சயமாக தியேட்டரில் பார்த்தால்தான், அந்த தீபாவளியே முழுமையடையும். சென்ற வருட தீபாவளிக்கு, "அழகிய தமிழ் மகன்" பார்த்து வெறுத்துப்போனது மறக்கவில்லை.



'த்ரில்' அனுபவம்


பைக்கை எடுத்துக் கொண்டு தெருக்களின் வழியாக செல்லும் போது, 'வெடி', 'வெடி' என்று கத்தி, கிலியை உண்டாக்கும் சிறுவர்களிடம், பயப்படாத மாதிரி நடித்துவிட்டு, உள்ளுக்குள் உதறலுடன் வண்டியை ஓட்டும் 'த்ரில்' அனுபவம்.



தீபாவளி பலகாரம்


தீபாவளி முடிந்து ஒரு மாதம் ஆன பின்பும், எந்த வீட்டிற்கு சென்றாலும் தீபாவளிக்கு செய்த அல்லது அவர்களுக்கு வந்த பலகாரங்களைக் கொடுத்து உபசரிப்பார்கள். எப்படியும் வகை வகையான முறுக்குகளையும், பலவிதமான இனிப்புகளையும் ருசித்து விடலாம்.



தீபாவளி டிரெஸ்


என்னதான் அமெரிக்காவில் ஸ்டைலான ஆடைகள் வாங்கினாலும், நம்ம ஊரில், அலை மோதும் கூட்டத்திற்கு நடுவே நீந்திச் சென்று, அடித்து பிடித்து தீபாவளி டிரெஸ் வாங்கும் சுகமே தனி. அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய உடைகளை, பூஜை செய்து, அம்மா அப்பா காலில் விழுந்து வணங்கி போட்டுக்கொண்டால் தான் அது 'தீபாவளி டிரெஸ்'. இல்லையென்றால், அது ஜஸ்ட் அனதர் டிரெஸ் தான்..,



தீபாவளி காசு


டெலிபோன் டிபார்ட்மென்ட், தபால்காரர், கூர்கா, குப்பை அள்ளுபவர்கள், என்று வரிசையாக தீபாவளி காசு வாங்க வருவார்கள். அவர்களுக்கெல்லாம் காசு கொடுத்து, நோட்டில் கையெழுத்து போடுவது ('இதையெல்லாமா மிஸ் பண்ணுவாங்க?'ன்னு கேக்காதீங்க)


சென்ற வருட தீபாவளியின் போது, கேமராவை தூக்கிக்கொண்டு, நகர் உலா சென்ற போது 'க்ளிக்'கிய படங்களைக் காண, இங்கே சொடுக்கவும். அவ்வளவு கூட்டத்தில் கேமரா பிளாஷ் வருவதைப் பார்த்து, அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் ஒரு 'இன்டர்நெட்' பத்திரிக்கைக்காரன்(சரி, சரி, விடுங்க.....) என்று சொல்லிக்கொண்டு, சிறப்பு அனுமதியெல்லாம் பெற்று, கடைவீதியிலுள்ள பெரிய கடைகளின் மொட்டைமாடிகளுக்குச் சென்று போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன்(ஒரு ஆர்வக்கோளாறுதான்....ஹி...ஹி)


இங்கே நான் தீபாவளியைக் கொண்டாடிய(?) விதத்தைப் பற்றி (ஏதேனும் உருப்படியாக நடந்தால்) வேறு பதிவில் போடுகிறேன்....


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

14 comments:

Unknown said...

Its sure that u are going to miss all the fun u specified and definitely we friends are going to miss your presence da...Especially the night bfore Diwali...

Prad said...

Gowri

Excellent....You have just posted excatly the same experience which many of our frnds wld have experienced...kudos...nice one :)

Anonymous said...

dae,

it has been 6 years since i had celebrated Diwali @ kumbakonam da.. you dont get the same feel and flavour even in other cities in TN.. i just want to celebrate atleast one diwali back there da.. the days when i used to prick my mom to get me more crackers is still fresh in my mind.. also i think it was 12th standard diwali where u me pratheep all went to lakshmi stores and roamed till mid night da..

those are golden days....

hope we could relive....

narayanan said...

hmmm first time appdithan irukum...then u will become like me...

Bala said...

dei,

How could i forget the jutti photograph..
Namala reporter nu nenachitu evlo aarvama jattiyai kaamichaar..
Aiyo , i mean kaila eduthu kaaamichar..
Aniki night fulla oor suthitu lasta orey maadhiri 5 Tshirt vaangunom..
Vachu irkeeya andha t shirt?

Gowri Shankar said...

@ bala,

exactly da... How can i forget that incident?? I still have that t.shirt in india.

:)

Anonymous said...

dae mottai,

schoola irukum podu thaan thelivaa pesa maata.. ippavum apadiyae irukiyae da..


Kaila eduthu kamaichaarnu orae double meaning....

Enna chinna pulla thanamaa irukku

Bala said...

@soban

Dei adhu padikuravangalai poruthadhu

Dei naan thirunthitaen da..
ipo ellam pazhaya maadhiri illa..

enaku theriyum double meaning dhaanu..
but yaar yaar correcta kandupidikuranganu oru chinna test.
nee pass ayta..

un kitta correcta paesuna kooda double meaning le yosipey... :p

Gowri Shankar said...

Oh, idhula ipdi oru "double meaning" matter irukkunnu enakku theriyave illa... Naan appdi ellam yosikkiradhu illa...

Anonymous said...

dae gowri, bala

Neenga epdi pattavangannu indha ulagathukae theriyum da...

mavanae indha builuo ellam udambukku aagadhu di..

narayanan said...

oorey solluthu double meaning gowrinnu.....vera enna venum

Anonymous said...

நண்பர்களின் வாழ்த்துக்களை விட்டுவிட்டாயே...

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கௌரி....

மணி

UMA said...

ரொம்ப நல்ல என்ஜாய் பண்ணி எழுதியது போல உள்ளது.இப்போது அமெரிக்காவில் அப்படி சில கோவில்களில் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். நிஜமா?

Gowri Shankar said...

ஆம். இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள கோயில்களில் தீபாவளி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பட்டாசு வெடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அனுமதி வாங்க வேண்டும். சில கோவில்களில், அப்படி அனுமதி பெற்று பட்டாசும் வெடித்து கொண்டாடுவார்கள்.