Monday, May 19, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 3

ஒன்பதாம் வகுப்பு முழுப்பரீட்ச்சை விடுமுறையின் போதே பத்தாம் வகுப்பிற்கான "ஸ்பெஷல்" கிளாஸ் ஆரம்பிப்பதால், விடுமுறை சுருக்கப்பட்டிருந்தது. ஷங்கருக்கு, விடுப்பு நாட்கள் கம்மியானதில் வருத்தம் இருந்தாலும், மீண்டும் நண்பர்களைப் பார்க்கப்போவதாலும், முக்கியமாக "யூனிஃபார்ம்" அணிந்து செல்ல வேண்டியதில்லை என்பதாலும், கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிக்கும் நாளன்றே ஒன்பதாம் வகுப்பின் ரிசல்ட் என்றும் அறிவித்திருந்தார்கள். என்னதான் ஃபெயிலாவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், ஷங்கரின் மனதில் ஒரு வித “anxiety” இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக, சந்தேகக்கேஸ்களை முன்னெச்சரிக்கையாக ஒன்பதாவதிலேயே நிறுத்தி வைத்து விடுவது அனேக பள்ளிகளின் வழக்கம். இதில், அந்த பள்ளியும் விதிவிலக்கில்லை. சந்தேகக்கேஸ்கள் என்றால், ரொம்ப சுமாராகப் படிக்கும் மாணவர்கள் என்று பொருள்.

ஒன்பதாம் வகுப்பின் நான்கு செக்ஷன்களும் கூடியிருந்தன. காலையிலிருந்து வகுப்பிற்கு எந்த ஆசிரியரும் வரவில்லை என்பதால், மாணவர்களின் கூச்சல் சத்தம் உச்சத்தை அடைந்திருந்தது. ஷங்கரும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் பற்றியும், அப்போது ரிலீசான புதுப்படங்களைப் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது அவுட் ஆனால் திடீரென்று மைதானமே அமைதியில் மூழ்குமே.... அதே போல இங்கும் ஒரு திடீர் அமைதி பிறந்தது. இந்த திடீர் அமைதிகளுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது, 'மாஸ்டர்' அல்லது 'மேடம் 'மின் வருகையால் தான் இருக்கும். அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிடைத்த இடத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சிவகுரு அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பில் தான் சேர்ந்தான். ஷங்கருக்கு கணக்கு சுத்தமாக வராது என்பதாலும், சிவகுரு கணக்கில் புலி என்பதாலும், இருவரும் எளிதாக நண்பர்களாயிருந்தார்கள்.

எதிர்ப்பார்த்தது போல கையில் செங்கோலுடன், மேடம் அங்கு வந்தார். தேர்வு முடிவுகள், நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதைப் பார்த்து விட்டு தேறியவர்கள் மட்டும் தமிழ் ஸ்டாஃப் ரூமிற்கு அருகில் இருக்கும் வகுப்பறைகளில் கூடியிருக்குமாறும் அறிவித்தார். முடிவுகளைப் பார்க்க அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர்.

சிவகுருவும் ஆவலுடன் விரைந்து போக எத்தனித்தான். "வாடா, போய் பாக்கலாம்" என்று ஷங்கரை அழைத்தான்...

"நம்ம எதுக்கு அடிச்சி புடிச்சிக்கிட்டு ஓடணும்? நாம போறதுக்குள்ள எவனாச்சும் பாத்து சொல்லிருவான்" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"ஆமா, நீ எதைப் பத்தி தான் கவலைப்பட்டிருக்க?"

தனக்கு இருக்கும் “anxiety”யை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "ஏன்? ஃபெயில் ஆயிருவனு பயமா இருக்கா??" என்றான் ஷங்கர்.

சிவகுரு பதில் சொல்வதற்குள், "டேய், நம்ம எல்லாரும் பாஸ் ஆயிட்டோம். நம்ம நரம்படி கார்த்திக்கு மட்டும் 'வித்-ஹெல்டு' னு போட்ருக்காங்க" என்று ஃப்ளாஷ் நியூஸ் சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் பக்கத்து கிளாஸ் பிரேம்.

முகத்தில் பெரிய புன்னகையோடு சிவகுரு ஷங்கரைப் பார்த்தான்.

ஷங்கர், "சொன்னேன்ல..... வா போகலாம்" என்று சொல்லிவிட்டு வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கையில் ஒரு பேப்பருடன் மேடம் வந்து நின்றார். பத்தாம் வகுப்பிற்கு "செக்ஷன்" பிரித்திருப்பதாகவும், யாரெல்லாம் ஒரு செக்ஷனில் இருக்கிறார்கள் என்றும் பெயர்களை படிக்கத்தொடங்கினார்.

மாணவர்களுக்கு இரெண்டு செக்ஷன்களாகவும், மாணவிகளுக்கு ஒரு செக்ஷனாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று என்னவோ நற்செய்தி அறிவிப்பது போல், முகத்தில் அத்தனை சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே அறிவித்தார். இது எதிர்ப்பார்த்தது தான் என்றாலும், ஷங்கர் எரிச்சலுடன் மெதுவாக "தூ..." என்று துப்பினான். வகுப்பில் அப்போது இருந்த அமைதியால், இந்த சத்தம் ஓரளவிற்கு நன்றாகவே கேட்டது. அருகில் இருந்த சிவகுரு, அவசர அவசரமாக, ஷங்கரின் காலை மிதித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். நல்ல வேளையாக மேடம் அதை கவனிக்கவில்லை. மாணவர்களுக்காக பிரிக்கப்பட்ட இரெண்டு வகுப்புகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் 'ஏ' வகுப்பிலும், கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்கள் 'பி' வகுப்பிலும் பிரிக்கப்பட்டு இருந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் நன்றாக படிக்கக் கூடியவர்கள் என்பதால், 'ஏ' செக்ஷனில் போட்டிருந்தார்கள். இருவரும் ஒரே செக்ஷனில் இருந்தாலும், சிவகுரு அடுத்த வருடம் அவனோடு படிக்கப் போவதில்லை என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டனர். சிவகுருவின் தந்தைக்கு திருச்சியில் மாற்றலாகியிருப்பதால், அவன் திருச்சியில் பத்தாம் வகுப்பைத் தொடரப்போவதாக ஏற்கெனவே ஷங்கரிடம் சொல்லியிருந்தான்.

அப்போது மணி மூன்று கூட ஆகவில்லை, ஆனாலும், வீட்டிற்கு போகலாம் என்று அறிவித்துவிட்டு, மேடம் சென்று விட்டார். அன்று தான் சிவகுருவுடன் கடைசி நாள் என்பதால், ஷங்கரும் அவனும் நீண்ட நேரம் வகுப்பறையிலேயே பேசிக்கொண்டிருந்தர்கள்.

ஷங்கர், சிவகுருவிற்கு விடை கொடுத்துவிட்டு புதிய கிளாசில் நண்பர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

தொடரும்...

9 comments:

Vignesh Page said...

Shankar, Did u meet sivaguru after ur school days?

Anonymous said...

ur blogs are really interesting and each episode is creating the interest of asking what's next.... superb. why don't u go as a story writer for tamil cinema?

Anonymous said...

I’m sure that the outcome will be worth to be published as a book.

Dai
Nalla oru thodar kadaikana arikuri theriyuthu da….

Bala said...

dei good continuity..
nice u've started from 9th standard annual xams..
turning point for most of the people..

Anonymous said...

fine. i think you will become a good writer as well.

Daydreamer said...

Dae Gowri,

Nijathaiyum konjam karpanaiyum kalandhu pinriyae daa. Nalla ethirkaalam irukku thambi ungalukku !!

Enakku oru special episode kuduthathukku nanri :)

Anonymous said...

hey enna apadiye oru kathaasiriyaar mathiri potu iruke..... interesting
matterlam seekiram solllu....

as of now its goin gud.... un vambhu chettai ellam epo solla pora??? atha
first podu gowri.....

Anonymous said...

hey setaya rajakal katahiyila vara characters superb.Atutha pakuthiya seekirama eluthu machi.Padikirathuku avaloda irukkom.
pls include our +1,+2 school life also

Unknown said...

Hai..
I saw ur blog really gud...
extremly happy to read ur blog..