Thursday, September 04, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 18

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினான் ஷங்கர்.


"அவன் கோபித்துக்கொண்டு எங்கேயாவது சென்றிருப்பானோ?"


"அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை.... இதுக்கெல்லாமா எங்கேயாவது போவான்?"


அவனே கேள்வி கேட்டுக்கொண்டு, அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்


ஒருவேளை, தான் முட்டாள்தனமாக பயப்படுகிறோமோ என்று கூடத் தோன்றியது ஷங்கருக்கு. வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். எங்கு சென்று தேடுவது என்று தெரியவில்லை. குமாருக்கு, இவர்களை விட்டால் பெரிதாக நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை. மனம் போன போக்கில் வண்டியை செலுத்தினான் ஷங்கர். வண்டி, நேராக நட்டு வீட்டு வாசலில் நின்றது.


"என்னடா, அதுக்குள்ள....?"


"குமாரைக் காணும் டா...... இங்க வந்தானா??"


"என்னடா உளர்ற? அவன் இங்க வரல.... அவன் எப்போவோ கிளம்பிட்டானே?"


"அவன் கிளம்பின நேரத்துக்கு, இந்நேரம் அவங்க வீட்டுக்கு போய் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆகியிருக்கணும்"


நட்டு பதிலேதும் பேசாமல் ஷங்கரையே பார்த்தான்.


"என் கூட வா..."


இருவரும் வண்டியில் நால் ரோடு பக்கம் வந்தனர். நால் ரோடு வழியாக, இரயில் நிலையம் வந்து, அப்படியே மஹாமஹக்குளத்தை அடைந்தனர்.


"எங்கேன்னு போய் தேடுறது?" என்றான் நட்டு.


"பாபு அவனை ரொம்ப திட்டிட்டானோ?" என்றான் ஷங்கர்.


"அதை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பான்னு நான் நினைக்கவே இல்ல டா..." என்றான் நட்டு.


"சரி, ஒரு முடிவுக்கு வரலாம். நேரா குமார் வீட்டுக்கே போறேன். அவன் அங்கே இருக்கானான்னு பாக்கலாம். அப்படி இல்லைன்னா, அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லிடறது தான் நல்லது" என்றான் ஷங்கர்.


அதை ஆமோதித்தான் நட்டு. மஹாமஹக்குளத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது, 'விடிவெள்ளி' பள்ளியின் அருகே கூட்டமாக இருந்தது.


"இங்கே என்னடா இவ்வளவு கூட்டம்?" என்று வண்டியை நிறுத்தினான் ஷங்கர்.


வழக்கம்போல, வட்டமாக நின்று எதையோ வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம்.அங்கிருந்த ரிக்க்ஷாக்கரர்கள், கூட்டத்தை விலக்கி, வண்டிகளை அனுமதித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தைக் கடந்து ஷங்கர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றபோது, அவசரமாக நிறுத்தினான் நட்டு.


"டேய்.... குமார் வண்டி மாதிரி இருக்கு" என்று கூறியவன், வண்டியிலிருந்து குதித்தான். ஷங்கரும் அதிர்ச்சியாகி, உடனே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, நட்டின் பதிலுக்காக படபடப்புடன் காத்திருந்தான். கூட்டத்தை விலக்கி உள்ளே சென்ற நட்டு, குமார் காலில் இரத்தம் சொட்ட அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான். ஒரு நிமிடத்தில் சுயநினைவிற்கு வந்தவனாய், ஓடிச்சென்று ஷங்கரை அவசரமாக சைகை காட்டி அழைத்தான். ஷங்கரும் அங்கு ஓடி வர, குமார் இவர்களைப் பார்த்தவுடன், உடனே எழ முயற்சி செய்து, பலனில்லாமல் மீண்டும் அமர்ந்தான். அவனால் காலை நகர்த்த முடியவில்லை.


கீழே விழுந்து கிடந்த குமாரின் வண்டியை எடுத்தான் ஷங்கர். குமாரின் வண்டிக்குக் கீழே ஒரு சைக்கிள் உருக்குலைந்து கிடந்தது.


"சைக்கிள்காரன் எங்க?" குமாரிடம் கேட்டான் ஷங்கர்.


"ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க..."


"என்னடா ஆச்சு??"

"தண்ணி அடிச்சிட்டு குறுக்க வந்துட்டான். பிரேக் போட்டும் நிறுத்த முடியல" என்றான் குமார்.


"உனக்கு வேற எங்க அடிபட்டிருக்கு?" குமாரிடம் கேட்கும்போதே, கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.


"தம்பி.... நீங்க இந்த பையனோட பிரெண்டா? இந்த பையனோட போன் நம்பர் சொல்லுங்க.... அவங்க அப்பாவை வர சொல்லணும். இவரு இடிச்சதுல சைக்கிள்காரருக்கு தலையில பயங்கர அடி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போயிருக்கங்க"


"நானே போன் பண்ணறேன். அதுக்கு முன்னால, இவனையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டிப் போகணும்"


"இவருக்கு பெருசா அடி ஒண்ணும் இல்லையே... அவங்க அப்பா வந்து சைக்கிளுக்கும் ஆஸ்பத்திரி செலவுக்கும் காசு குடுக்கட்டும்"


"அடிபட்டவருக்கு நீங்க யாரு?"


"அவரும் எங்களை மாதிரி ரிக்க்ஷாக்காரர் தான். நீ முதல்ல அவங்க அப்பாவை கூப்பிடு. போன் நம்பர் சொல்லு" என்று கிட்டத்தட்ட அதட்டினார்.


அப்போதுதான் அடிபட்டது ஒரு ரிக்க்ஷாக்காரர் என்று புரிந்தது ஷங்கருக்கு. பொதுவாகவே அங்கே இருக்கும் ரிக்க்ஷாக்காரர்கள் சரியான ரௌடிகள் என்று அனைவருக்கும் தெரியும்.


"பணத்துக்கு நான் பொறுப்பு. நான் இங்கேயே இருக்கேன்... அவன் ஆஸ்பத்திரிக்குப் போகணும்" என்று சொல்லிவிட்டு, நட்டை அழைத்தான் ஷங்கர்.


"நீ இவனை அழைச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ. இதையெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து, நட்டையும் குமாரையும் அதில் அனுப்பி வைத்தான் ஷங்கர். குமாரின் வண்டிச் சாவியை யாரோ வைத்திருந்தார்கள். ஷங்கர் அருகிலிருக்கும் கடைக்குச்சென்று, குமாரின் அப்பாவிடம் நடந்ததைக் கூறினான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவரும் அவரிடம் வேலை பார்க்கும் ஒருவரும் அந்த இடத்திற்கு வந்தனர். அங்கே பஞ்சாயத்து பண்ணிவிட்டு, நேராக ஆஸ்பத்திரிக்குச்சென்றனர். குமாருக்கு காலில் அடிபட்டிருந்தாலும், நல்லவேளையாக எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று டாக்டர் கூறினார். சைக்கிளில் வந்தவனை மருத்துவமனையில் நேரில் பார்த்து, 2000 ரூபாய் செலவிற்காக கொடுத்துவிட்டு வீடு திரும்பினர்.


குமார் வீடு.....


இந்தக் களேபரம் எல்லாம் ஓரளவிற்கு ஓய்ந்தது. காலில் கட்டு போட்டிருந்தான் குமார். நட்டும் ஷங்கரும் அருகில் அமர்ந்திருந்தனர்.


"ஒரு கொலை கேஸ் ஆகியிருக்க வேண்டியது, சைக்கிள்காரன் செத்துருப்பான்..." என்றான் ஷங்கர்.


"சைக்கிள்காரன் இல்ல.... ரிக்க்ஷாக்காரன்" என்றான் நட்டு.


"சரி, சைக்கிள்ல வந்த ரிக்க்ஷாக்காரன். போதுமா? " என்றான் ஷங்கர்.


"அவ்வளவு நேரம் எங்கே டா போயிருந்த? உன்னை எங்கேயெல்லாம் தேடுறது? "


"'காந்தி பார்க்'குல தனியா உட்கார்ந்திருந்தேன்"


"அப்படி என்னடா கோபம்? மேட்ச் தோத்துட்டோமேங்குற எரிச்சல்ல அவன் ஏதோ சொல்லிட்டான்..."


"..........."


"அந்த சைக்கிள்காரன் எப்படி வந்து விழுந்தான்?"


"நான் ரொம்ப வேகமா வந்தது உண்மை தான். ஆனா, அவன் தண்ணியடிச்சிட்டு போதையில, நேரா வந்து என் வண்டியில மோதிட்டான். பிரேக் போட்டும் தடுக்க முடியல. நல்லவேளை, அது நடந்த அஞ்சு நிமிசத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க"


குமாருக்கு கால் வலி அதிகமாக இருந்தது. ஷங்கரை பிடித்துக் கொண்டேதான் நடந்தான். ரொம்பவும் சிரமப்பட்டு நொண்டியடித்தான். நட்டும் ஷங்கரும் கைத்தாங்கலாக குமாரை அழைத்து வந்து ஹாலில் அமர்த்தினர். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய போது, குமார் வீட்டில் வேலை செய்பவர் எதிரில் வந்தார்.


"அந்த குடிகாரன் நம்மகிட்ட ரூபாய் வாங்கிக்கிட்டு, போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கப்போறானாம்" என்ற தகவலை சொன்னார்.


குமாரின் அப்பாவிற்கு கவலை அதிகமானது. குமாரிடம் ஓட்டுனர் உரிமம் வேறு கிடையாது. சட்டப்படி, விபத்து நடந்து 24 மணிநேரத்திற்குள் போலீசில் புகார் கொடுக்கலாம். அப்படிப்புகார் கொடுத்துவிட்டால், என்ன ஏது என்று விசாரிக்கக்கூட, போலீஸ் குமாரை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்ல நேரிடலாம். இதெல்லாம் அவர் கண்முன்னே ஒரு நிமிடம் வந்து போனது. பதற்றத்துடன், "இப்போ என்ன பண்ணறது?" என்று கேட்டார்.


"இன்னும் நிறைய காசு எதிர்பாக்குறான் போல இருக்கு. அது மட்டுமில்ல... அவனுக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. அவன் கூட்டாளிங்க எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க" என்றார் அவர்.


"கேட்குற காசை குடுத்துத்தொலைக்க வேண்டியது தான்" என்றார் குமாரின் அப்பா.


"மொத்த மருத்துவ செலவுகளையெல்லாம் ஏத்துக்கிட்டாலும், அவனுக்கு தனியா பத்தாயிரம் வேணுமாம்" என்றார் அவர்.


"அவன் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்குறதுக்குள்ள நாம ஏதாச்சும் பண்ணனும்"


இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஷங்கருக்கு ஒரு யோசனை தோன்றியது.


"அவன் கம்ப்ளைன்ட் பண்ணட்டும், ஆனா போலீஸ் அவன் கொடுக்குற கம்ப்ளைண்ட்டை வாங்கிக்கக்கூடாது. அப்படிப்பண்ணிட்டா என்ன?" என்று கேட்டான்.


"எப்படி?" என்பது போல் அனைவரும் அவனைப் பார்த்தனர்.


"இந்த ஏரியா கவுன்சிலரை எங்க அப்பாவுக்கு நல்லாத்தெரியும். அவர்கிட்ட சொல்லி, போலீஸ்கிட்ட பேசசொல்லலாம்" என்றான்


இந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அது உடனே நடக்க வேண்டுமே! கவுன்சிலரைப் பிடித்து, அவர் போலீசிடம் சொல்லி..... இதெல்லாம் நடப்பதற்குள் பதிவாகிவிட்டால்?? விசாரிப்பதற்கே குமாரை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துக்கொண்டு போய்விடுவார்களே....


"அதுவரைக்கும்?"


"குமார் தலைமறைவா இருக்கிறது தான் நல்லது" என்றான் ஷங்கர்.


தொடரும்....

Friday, August 29, 2008

I recommend - The Last Temptation of Christ


A sudden thought popped up after I completed watching the movie “The last temptation of Christ", which prompted this post and I’ve decided to share my experience everytime I watch an interesting Hollywood movie. I am not a movie buff and when it comes to English movies, I am always very picky and choosy. I don’t have any preferences in terms of the genre, but I love to watch any kind of controversial flicks. The one I watched was a movie of such kind, which was released in 1988.

“The Last temptation of Christ” is based on a novel, written by Nikos Kazantzakis and directed by Martin Scorsese. The movie speaks about the alternate history which says that Jesus was subjected to all human temptations like fear, reluctance, lust, doubt, depression, etc., The movie is totally filmed based on Jesus’ perspective, who was born and lived like a normal man. The main reason why most Christians shunned away from this movie was the portrayal of Jesus. They just couldn’t accept that Jesus had all the temptations, especially with Mary Magdaline. Female nudity and scenes like Jesus having sex with Mary Magdaline are too much for deeply religious people, which understandably created lot of controversy.

I felt that William Dafoe was a perfect fit for playing Jesus and his performance was the highlight. He has brilliantly expressed the fear and uncertainty of Jesus when he was sentenced to death. The movie is certainly not filmed the Bible way as it says that Jesus had a family with a lot of kids. The movie is made to raise eye brows and apparently succeeded. I disliked “The Da Vinci code” as it was boring and not riveting, but this one is certainly not like that.

The length of the movie is of course painful, but yet you can definitely watch it. I personally feel that all Christians, before they denounce the movie, should watch it once. Because, some Christians feel that there is nothing blasphemous about the movie.


Catch you next time with another interesting movie...


Cheers

Monday, August 25, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 17

அடுத்ததாகக் களமிறங்கினான் கிருஷ்ணா. அவன் எதிர்கொண்ட முதல் பந்து 'பௌன்சராக' அமைந்தது. அதில் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரெண்டு பந்துகளில் இரெண்டு பௌண்டரிகள் அடித்து கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினான். குமார் உற்சாகமிழந்து காணப்பட்டான். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிருஷ்ணா ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தை குமார் எதிர்கொண்டான். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த குமார், அந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட, அந்த பந்து 'யார்க்கராக' வந்து, குமாரின் லெக் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. விரக்தியுடன் வெளியேறினான் குமார்.

4 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலை. கையில் 7 விக்கெட்டுகள் மீதம் இருந்தன. யாரேனும் ஒருவர் நிலைத்து ஆடினால் ஜெயித்துவிடலாம் என்று, பாபு அடுத்து களமிறங்கிய அம்சராஜனிடம் கூறினான். ஆனால், பாபுவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த ஓவரில், அம்சராஜன் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக செழியன் களமிறங்கினான். அந்த ஓவரில் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. அந்த பௌலர் மிகச்சிறப்பாக பந்து வீசினான்.

3 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ஓவரில் கிருஷ்ணாவால் ஒரே ஒரு பௌண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. செழியன், மறுமுனையில் கிருஷ்ணாவிற்கு துணையாக நிலைத்து ஆடினான்.

இன்னும் இரெண்டே ஓவர்கள் இருந்தன. 16 ரன்கள் எடுத்தால் போதும். ஒரு ஓவருக்கு இரெண்டு பௌண்டரிகள் வேண்டும் என்ற நிலை. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை கிருஷ்ணா, சிறப்பாகத் தூக்கி அடித்தான். 'லாங் ஆன்' திசையை நோக்கிச் சென்ற பந்து, அங்கு நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் பட்டு எகிறி, பவுண்டரிக்குள் சென்றது. அம்பயர் அதை சிக்ஸர் என்று அறிவிக்க, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்றனர் 'ஃபயரிங் கன்ஸ்' அணியினர். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் பெறப்பட்டது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். கிருஷ்ணாவை பேட்டிங் முனைக்கு வரவழைக்க வேண்டும் என்பதால், பந்தை தடுத்து ஆடிவிட்டு, ஓடத்துவங்கினான். கிருஷ்ணா பேட்டிங் முனையை அடைந்து விட, செழியன் மறுமுனைக்கு சென்றடைவதற்குள் ரன் அவுட் ஆனான்.

நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர் "ஃபயரிங் கன்ஸ்" அணியினர். அம்மாப்பேட்டை அணியில் அனைவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டனர். அடுத்த பேட்ஸ்மேனாகக் களமிறங்கினான் பாலா. கடைசி ஓவரின் இரெண்டாவது பந்தை எதிர்கொண்ட கிருஷ்ணாவால், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது பந்தை எதிர்கொண்டான் பாலா. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் கட் செய்ய, பந்து பவுண்டரியை சென்றடைந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் வேண்டும். மறுமுனையிலிருந்த கிருஷ்ணா, பாலாவிடம் சென்று அறிவுரை கூறினான்.

அவுட் ஃபீல்ட் பலமாக்கப்பட்டது. அனைத்து ஃபீல்டர்களும் பவுண்டரிக்கு அருகில் நின்றனர். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து - சாதூரியமாக, மிகக் குறைந்த வேகத்துடன் பந்து வீசினான் அந்த பௌலர். பாலா வேகமாக அடித்தும், பந்து வேகமாக பயணிக்கவில்லை. டீப்-மிட்விக்கெட்டில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் தஞ்சம் புகுந்தது.

இன்னும் 2 பந்துகள். 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. புதிதாக வந்த முருகானந்த், முதல் பந்தை அடிக்க, மட்டையை சுழற்றினான். பந்து, மட்டையில் படாமல் கீப்பரிடம் சென்றது. ரன் எடுக்க வேண்டுமே என்கிற பதட்டத்தில் முருகானந்த் ஓடி வர, கிருஷ்ணா அவனை ஓட வேண்டாம் என்று சைகை காட்டினான். அவன் மீண்டும் கிரீசுக்குள் செல்வதற்குள் விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை சாய்த்திருந்தான்.

கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தாகவேண்டும். பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி பெறலாம். பேட்டிங் முனையில் கிருஷ்ணா இல்லாததால், அம்மாப்பேட்டை அணியினர் போட்டியில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினர். புதிதாக உள்ளே நுழைந்தான் நட்டு. கடைசி பந்தை மிடில் ஸ்டம்பிற்கு நேராக நேர்தியாக வீச, அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்ட முடிவில் 3 ரன்னில் தோல்வியைத் தழுவியது "ஃபயரிங் கன்ஸ்" அணி.

பந்தயப் பணமான இருநூறு ரூபாயை எதிர் அணி கேப்டனிடம் கொடுத்தான் பாபு. பாபு உட்பட அனைவரும் இறுக்கமான முகத்தோடு காணப்பட்டனர். அம்மாப்பேட்டை அணியினர் கலைந்து சென்றுவிட, இவர்கள் மட்டும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். ஒரு இறுக்கமான அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைத்தான் செழியன்.

"நான் கிளம்புறேன் டா.... சாயங்காலம் ஊருக்குப் போகணும்" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

"வெற்றிகரமா தோத்துப்போயாச்சு.... அப்புறம் என்ன? எல்லாரும் கிளம்பவேண்டியது தான??" என்றான் பாபு.

யாருமே பதில் பேசவில்லை.

"சுலபமா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.... இதைக் கோட்டை விட்டது கேவலம். 200 ரூபாயும் போச்சு. ஏனோ தானோன்னு ஆடினா இப்படித்தான்" என்றான் பாபு.

தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று நினைத்த குமார், கோபமடைந்தான்.

"தேவை இல்லாம பேசாதே. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லு" என்றான் பாபுவைப் பார்த்து.

"நீ எதுக்கு கோபப்படற? நான் உன்னை சொன்னேனா??" என்று பாபு கேட்க,

"எனக்கு முன்னால கிருஷ்ணாவை அனுப்பியிருக்கலாம். ‘கேப்டன்’ங்குற ஈகோ உனக்கு" என்றான் குமார்.

"என்னை ரன் அவுட் வேற பண்ணிவிட்டுட்டு இந்த பேச்சு வேறயா??" என்றான் பாபு.

"விடுங்க டா... யாராவது வேணும்ன்னே அப்படி ரன்-அவுட் பண்ணுவாங்களா?? இதெல்லாம் சகஜம் தானே" என்றான் ஷங்கர்.

குமார் மிகுந்த எரிச்சலடைந்தான். விருட்டென்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

"இரு டா.... எங்க போற??" என்று கேட்டு முடிப்பதற்குள், வண்டியை விரட்டிக்கொண்டு கிளம்பினான் குமார்.

"விடு டா.... போகட்டும். அடுத்த மேட்ச் அவனைத் தூக்கிருவோம்" என்றான் பாபு.

"அவன் சொல்லறதுக்கும் நீ செய்யிறதுக்கும் சரியா இருக்கும். லூசு மாதிரி பேசாதே... கோபத்துல கண்டதை பேசாம வீட்டுக்குக் கிளம்பு" என்றான் ஷங்கர்.

"அவன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல. இவன் நம்ம டீமுக்கு வேண்டாம். அடுத்த மேட்ச் அவன் ஆடினா, நான் ஆட மாட்டேன்" என்று கூறிவிட்டு பாபுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

"என்னடா இது.... ஒண்ணும் இல்லாத பிரச்னையை ஊதி ஊதி பெருசாக்கிட்டானுங்க" என்றான் பாலா.

"குமார் சொன்ன மாதிரி அவனை பேட்டிங் ஆர்டர்ல கீழே ஆட விட்டிருக்கலாம். அவனுக்கு கான்ஃபிடன்ஸ் லெவல் கம்மியா இருக்கு" என்றான் ஷங்கர்.

"நம்ம பேட்டிங் ஆர்டரை மாத்துறது ரொம்ப கஷ்டம் டா... எல்லாரும் நல்லா செட் ஆயிட்டோம். பாபு பண்ணது சரி தான்" என்றான் கிருஷ்ணா.

"யார் சரி, யார் தப்புன்னு இப்போ பேச வேண்டாம். இந்த லீவ் முடியிறதுக்குள்ள இன்னொரு மேட்ச் ஆடணும். அப்புறம் பப்ளிக் எக்ஸாம் நெருங்க நெருங்க, ரிவிஷன் டெஸ்ட், அது, இதுன்னு போட்டு டார்ச்சர் பண்ணிருவாங்க...." என்றான் பாலா.

அனைவரும் கலைந்து சென்றனர்.
ஷங்கர் வீட்டிற்குள் நுழையவும், டெலிஃபோன் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசினான்.

"ஹலோ... "

மறுமுனையில் : "ஹலோ ஷங்கர், நான் குமாரோட அம்மா பேசுறேன். அவன் இன்னும் வீட்டுக்கு வரல..... உன்கூட இருக்கானா??"

ஷங்கர் : ("அவன் எப்போவோ கிளம்பிட்டான்" என்று சொல்ல வந்தவன், வார்த்தைகளை விழுங்கிவிட்டு) "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி... கிருஷ்ணா வீடு வரைக்கும் போயிருக்கான்" என்று கூறிவிட்டு ஃபோனை துண்டித்தான்.

தொடரும்...

Monday, August 18, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 16

அட்டைப்படம் முதல் கடைசிப்பக்கம் வரை அனைத்து புத்தகங்களையும் படித்தும், பார்த்தும் முடித்தனர்.

"நேரம் போனதே தெரியல...ரெண்டு மணிநேரம் ஓடிப்போச்சு...."

"இந்த மாதிரி என்னைக்காவது 'பிரேக்' விடாம பரீட்சைக்கு படிச்சிருப்போமா?"

"சரி, இப்போ இதையெல்லாம் என்ன பண்ணறது?" புத்தகங்களைக் காட்டி, பாபுவின் பக்கத்து வீட்டுப்பையனிடம் கேட்டான் குமார்.

"என்னால திருப்பி எங்க வீட்டுக்குக் கொண்டு போக முடியாது... இங்கேயே இருக்கட்டும்" என்றான் அவன்.

"இங்கேயேவா? வாய்ப்பே இல்ல.... என்னால எங்கேயும் ஒளிச்சிவைக்க முடியாது" என்றான் ஷங்கர்.

யாருமே அதைக்கொண்டு போகத்தயாராக இல்லை. அனைவரும், ஒரு மனதாக அவற்றை எரித்து விடுவது என்ற முடிவிற்கு வந்தனர். அதன்படி, அந்த புத்தகக்கட்டு முழுவதையும் மொட்டை மாடியில் வைத்தே எரித்தனர்.

நீண்ட நாள் திட்டமான 'பெட்' மேட்ச்சை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, அதன்படி அம்மாசத்திரம் டீமிற்கும் தகவல் சொல்லியாகிவிட்டது. டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் 'சென்டெர்' பிட்ச் பிடித்து ஆடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆட்ட வியூகங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர்.

"ஃபயரிங் கன்ஸ்" (Firing Guns) - இது தான் இவர்கள் டீமின் பெயர். இதில், இவர்கள் ஆறு பேர், செழியன், அம்சராஜன் (எ) அம்ஸ் மற்றும் முருகானந்த் ஆகியோர் மட்டும் நிரந்தர உறுப்பினர்கள்.. மற்றவர்களெல்லாம், எப்போதுமே விளையாடுவார்கள் என்று கூற முடியாது. மேட்ச் நடக்கும் சமையத்தில் யார் ஃப்ரீயாக இருக்கிறார்களோ, அவர்கள் வந்து ஆடுவார்கள்.

"ஓப்பனிங் நானும் பாபுவும் இறங்குறோம்" என்றான் ஷங்கர்.
பொதுவாகவே அவர்கள்தான் ஓப்பனிங் என்பதால், அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

அடுத்து யார் ஆடுவது என்பதில் குழப்பம் இருந்தது. பொதுவாக, அந்த இடத்தில் குமார் ஆடுவது வழக்கம். ஆனால், கடந்த சில போட்டிகளில் தன்னால் அந்த இடத்தில் சோபிக்க முடியவில்லை என்பதால், பேட்டிங் வரிசையில் நான்காம் அல்லது ஐந்தாம் இடத்தில் ஆட வேண்டும் என்று நினைத்திருந்தான் குமார். ஆனால், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் நன்றாக ஆடும் கிருஷ்ணா மற்றும் செழியனை மாற்ற, அணித்தலைவனான பாபு விரும்பவில்லை. எவ்வளவு கூறியும் பாபு சம்மதிக்காததால் குமாருக்கு விருப்பமில்லை என்றபோதும், வேறு வழியில்லாமல் தன் வழக்கமான மூன்றாம் இடத்திலேயே ஆடுவதற்கு சம்மதித்தான்.

அன்று மாலை, நட்டின் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்து, அனைவரும் அங்கு சென்றனர். இவர்கள் ஆறு பேரும் முதலில் சென்று விட, செழியன் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான். அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் என்பதால், முதலில், அவனையும் கிருஷ்ணாவையும் பயிற்சியில் ஈடுபட வைத்தான் பாபு. மற்றவர்கள் எல்லாம், இன்னொரு பந்தை வைத்து 'பீல்டிங்' பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பயிற்சி முடிந்து வந்த கிருஷ்ணா, 'பேட்'டை குமாரிடம் கொடுக்க, செழியன் பந்தை பாபுவிடம் வீசினான். ஆனால், பாபு பந்து வீசுவதைப் பார்த்தவுடன், குமார் ஷங்கரிடம் பேட்டைக்கொடுத்துவிட்டு நகர்ந்தான். பாபுவின் மேல் குமார் கோபமாக இருப்பதை உணர்ந்தான் ஷங்கர். இரெண்டு மணிநேரம் பயிற்சியை முடித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை 8 மணி - டவுன் ஹை ஸ்கூல் மைதானம்.....

அம்மாப்பேட்டை டீமில் அனைவரும் வந்திருந்தார்கள். சொன்னபடி, மைதானத்தின் மையத்தில் இருக்கும் ஆடுகளத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இவர்கள் அணியில் பாலாவைத் தவிர, அனைவரும் வந்திருந்தார்கள். அம்பயராக முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட அணி வீரர் ஓருவரை அம்மாப்பேட்டை அணியினர் அழைத்து வந்திருந்தார்கள். 'டாஸ்' போட பாபுவையும், அந்த அணித்தலைவனையும் அழைத்தார் அவர். 'டாஸ்' வென்ற அம்மாப்பேட்டை அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

'டாஸ்' எல்லாம் முடிந்து, களத்தில் இறங்கும் வேளையில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தான் பாலா. அனைவரும் அவனைப்பார்த்து முறைக்க, "சாரி டா" என்ற அவனது வழக்கமான பதிலைக் கூறினான்.

முதல் ஓவரை செழியன் வீச, அதில் 3 ரன் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை மித வேகப்பந்து வீச்சாளரான பாலா வீசினான். அதில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், அவர்கள் முதல் ஐந்து ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடினர். ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தார்கள்.

பந்துவீச்சில் முதல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில், விக்கெட் கீப்பராக நின்றிருந்த பாபு, பந்தை நட்டிடம் வீசினான். நட்டு, சுழற்பந்து வீசுவான். ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், எப்படியும் விக்கெட்டை கைப்பற்றி விடுவான். பெரும்பாலும், இவனது பந்துவீச்சில், அடிக்க நினைத்து ஆட்டமிழப்பவர்கள் அதிகம். முதல் ஐந்து ஓவர்களில் அதிக ரன்களை அவர்கள் அடிக்காததால், நட்டின் பந்துவீச்சை அடித்து ஆட முற்படுவார்கள் எனத்தெரிந்திருந்ததால், பீல்டர்களை பவுண்டரிக்கு அருகில் நிறுத்திவைத்திருந்தான் பாபு. அம்மாப்பேட்டை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மன், நட்டின் முதல் மூன்று பந்துகளில் முறையே 2, 4, 4 ரன்கள் அடிக்க, நான்காவது பந்தையும் தூக்கி அடிக்க முற்பட்டு, 'கவர்ஸ்' திசையில் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணாவிடம் 'கேட்ச்' கொடுத்து அவுட்டானான்.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நட்டு துள்ளிக்குதிக்க, அனைவரும் வந்து நட்டை கட்டிக்கொண்டனர். அம்மாப்பேட்டை அணியில் அடுத்து களமிறங்கியவன் மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரன். மாவட்ட அளவில் ஆடக்கூடியவன் என்பதால், பாபு நட்டிடம் கவனமாகப் பந்து வீசுமாறு கூறினான். நட்டின் ஓவரில் மீதமிருந்த இரெண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்தான் அவன். நட்டின் அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் போயிருந்தது. ஒரு விக்கெட் எடுத்திருந்தாலும், நட்டை பந்து வீசச்செய்தது தவறோ என்று எண்ணினான் பாபு. ஆனால், அவர்கள் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததால், பாபுவிற்கு வேறு வழி இல்லை.

அடுத்த ஓவரை வீசினான் அம்சராஜன். அதில் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என்று ஷங்கரிடம் ஆலோசித்தான் பாபு.

"நட்டுக்கு இந்த ஓவர் குடுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்" என்றான் பாபு.

"குமார் கிட்ட குடுக்கலாம். அம்ஸும் குமாரும் ஒரு ஸ்பெல் முடிக்கட்டும்" என்றான் ஷங்கர்.

"சரி, அவனை போடச்சொல்லு" என்று ஷங்கரிடம் கூறினான் பாபு.

குமாரும் அம்ஸும் கட்டுக்கோப்புடன் பந்துவீசினாலும், அவ்வப்போது அவர்கள் பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், இருவரையும் அவர்கள் அடிக்கத்துவங்க, ரன்கள் வேகமாக அதிகரித்தன. சிறப்பாகப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் அழைத்தான் பாபு. அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. புத்திசாலித்தனமாக அந்த இரெண்டு ஓவர்களை மட்டும் கவனமாக ஆடினார்கள். செழியனின் பந்துவீச்சில், பாபுவிடம் கேட்ச் கொடுத்து ஒருவன் ஆட்டமிழக்க, குமாரின் பந்துவீச்சில் புதிதாக வந்த பேட்ஸ்மன் 'பௌல்ட்' ஆனான். அவன் ஆட்டமிழந்தாலும், அந்த இடதுகை ஆட்டக்காரன், மறுமுனையில் சிறப்பாக ஆடி, ரன்களை குவித்துக்கொண்டிருந்தான்.

11 ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி நான்கு ஓவரில், அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்தனர். முடிவில் , 15 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 93 எடுத்திருந்தனர்.

20 நிமிட இடைவெளியில், பாபுவும் ஷங்கரும் 'பேட்' செய்ய களத்தில் இறங்கினர். 15 ஓவரில், 94 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கினர். அவர்கள் ஆடியதைப்போலவே, முதல் ஐந்து ஓவர்கள் தடுப்பாட்டம் ஆடுவது என்று ஷங்கரிடம் கூறினான் பாபு. பாபு ஒரு முனையில் நிதானமாக ஆடினாலும், ஷங்கர் அடித்து ஆடினான்.

"டேய், லெக் சைடுல தூக்கி அடிக்காதே", "புல் ஷாட் எல்லாம் இப்போ ஆட வேண்டாம்", "ஆஃப்-ஸ்டம்ப் கார்டு எடுத்துக்கோ" என்று மறுமுனையிலிருந்து பாபு அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும், ஷங்கர் அவர்கள் போட்ட 'லூஸ்' பால்களையும், ஷார்ட் பால்களையும் பவுண்டரிக்கு அனுப்பத்தவறவில்லை. ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தனர். சிறப்பான துவக்கம் அமைந்திருந்ததால், இனிமேல் அடித்து ஆட வேண்டாம் என்று கட்டாயமாகக் கூறினான் பாபு. ஆறாவது ஓவரின் முதல் பந்தை அவர்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வீச, அதை எதிர்கொண்டான் ஷங்கர். லெக் ஸ்டெம்ப்பில் குத்தி, ஆஃப் ஸ்டெம்ப்பிற்கு எழும்பிய பந்தை கட் செய்ய முயன்ற போது, ஸ்டெம்ப்பிற்கு மிக அருகில் நின்றிருந்த விக்கெட் கீப்பர், அதை இலாவகமாக 'கேட்ச்' பிடித்தான். ஷங்கர் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் திரும்ப, அடுத்ததாக குமார் வந்தான். அவன் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினான்.

குமாரும் பாபுவும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. ஓவர்கள் இடைவெளியிலும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. பாபு பொறுப்புடன் ஆடிக்கொண்டிருக்க, அவனுக்குத்துணையாக குமார் ஒரு ரன், இரெண்டு ரன்கள் என்று ஸ்கோர் நகர உதவினான். 8 வது ஓவருக்குப் பிறகு, பாபு அடித்து ஆடத்துவங்கினான். 10 வது ஓவரின் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தார்கள்.


11வது ஓவரின் முதல் பந்தை எதிர்க்கொண்ட குமார், 'ஸ்கொயர் லெக்' திசையில் பந்தை அடித்துவிட்டு, ஓட ஆரம்பித்தான். இரெண்டு அடி எடுத்து வைத்தவுடன், மனதை மாற்றிக்கொண்டு ஓடாமல் நின்றான். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த பாபு, பாதி தூரம் வந்து விட்டு, அவன் ஓடாமல் நிற்பதைப் பார்த்ததும், மீண்டும் தன் முனையை நோக்கி ஓட, அதற்குள் அவனை ரன்-அவுட் செய்திருந்தார்கள் எதிர் அணியினர். வெறுப்புடன் குமாரைப் பார்த்துவிட்டு வெளியேறினான் பாபு.

4.5 ஓவர்களில் 35 ரன்கள் தேவை. 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தன.

தொடரும்....

Monday, August 11, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 15

கீழ் ரூமிலிருந்த ஒரு போர்வையை எடுத்து முக்காடு போட்டுக்கொண்டு மெல்ல மேலே சென்றான். பயம் இருந்தாலும், ஆவிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாமல், சுவாரசியமாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். முக்கால்வாசி மூடியிருந்த கதவின் முன், தன் முக்காடு போட்ட முகத்தோடு நின்றான் ஷங்கர். வெளியில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் மந்தமான வெளிச்சத்தில், ஷங்கரின் முகம் தெரியவில்லை. இருவரில் யாராவது ஒருவர் கவனிக்கட்டும் என்று பொறுமையாக காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர்.

சில மணித்துளிகள் கழித்து, எத்தேச்சையாக பாபு கதவைப் பார்க்க, அங்கே ஓர் உருவம் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டான். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான். பாபுவின் முகம் மாறியதை அந்த ஒரு நொடியிலேயே கவனித்துவிட்டிருந்தான் ஷங்கர். இருந்தும், அதைப் பற்றி பாபு, குமாரிடம் கூறவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் பாபு தயங்கித் தயங்கி கதவைப் பார்க்க, ஷங்கர் அதே கோலத்தில் அசையாமல் நின்றிருந்தான். பாபுவின் முகம் வெளிறியது. குமார் பேசிக்கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல்,

"டேய்..... அங்கே ஏதோ ஒரு உருவம் நிக்கிற மாதிரி இருக்கு..." என்றான்.

"நீ வேற பயந்து, என்னையும் பயமுறுத்தாத.... சும்மா இரு" என்றான் குமார்.

மீண்டும் ஒரு முறை கதவைப் பார்த்தான் பாபு.

"டேய், சத்தியமா இருக்கு டா, நீ வேணும்னா பாரு" என்றான்.
ஷங்கருக்கு சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. ரொம்ப சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

குமார், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெதுவாக கதவைப்பார்க்க, கதவு மூடப்பட்டிருந்தது. 'டக்'கென முகத்தை திருப்பிக் கொண்டு,
"கதவு மூடியிருக்கு டா..." என்றான்.

"நான் பார்த்தப்போ கதவு முழுசா மூடல...." என்று கூறிவிட்டு, மீண்டும் மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தான் பாபு. இப்போது, மீண்டும் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஷங்கர், அதே போல் முக்காடு போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

"அந்த உருவம் எனக்கு தெரியுது டா..... கதவு திறந்து தான் இருக்கு" என்றான் பாபு.

"ஷங்கரை கூப்பிடுவோமா???"

"அவன் கீழே இருக்கானே... யார் கூப்பிடறது?? நான் போகமாட்டேன்" என்றான் பாபு.

"நானும் போக மாட்டேன். பேசாம, ரெண்டு பெரும் சேர்ந்து 'லைட்'டைப் போட்டுருவோமா??? என்று கேட்டான் குமார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, ஷங்கர் மெல்ல கதவைத் திறந்தான்...

"டேய், கதவு திறக்குது டா...." நடுங்கிக்கொண்டே சொன்னான் பாபு.

பாபு இப்படி சொல்ல, குமார் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டான். பயத்தின் உச்சத்தில் பாபு இருக்க, ஷங்கர் வந்து லைட்டைப் போட்டான்.

ஷங்கரைப் பார்த்தவுடன், குமார் மற்றும் பாபுவின் முகங்களில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தாலும், ஏமாந்துவிட்டோமே என்ற ஆதங்கம் அதிகமாகத் தெரிந்தது. பாபுவிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டிருந்தது. நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை எல்லாம் சேர்த்து சிரித்தான் ஷங்கர். கட்டிலின் மீதிருந்த தலையணையை ஷங்கரை நோக்கி வீசினான் பாபு.

"நாயே....." - இதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

ஷங்கர், தரையில் உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தான். குமார் மட்டும் எழுந்து வந்து ஷங்கரை தலையணையால் அடிக்கத்தொடங்கினான். சிறிது நேரத்தில், பாபுவும் சேர்ந்துகொள்ள, பத்து நிமிடம் தொடர்ந்து அடி வாங்கினான் ஷங்கர்.

"என்னடா இப்படி அநியாயத்துக்கு பயப்படறீங்க....!"

"நான் சும்மாதான் இருந்தேன், இவன் தான் பேய் கதை எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்திட்டான்" என்றான் பாபு.

"இன்னும் நாலு மணிநேரத்துல எழுந்திரிக்கணும்" - 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினர்.

அலாரம் அலறத்துவங்கியது. தூக்கக்கலக்கத்தில் ஷங்கர் எழுந்து, அதை அணைத்து விட்டு, டி.வி.யைப் போட்டான். டி.வி. வெளிச்சத்தில் பாபுவும் எழுந்துகொள்ள, ஆர்வத்துடன் மேட்ச் பார்க்கத் துவங்கினர். எவ்வளவு எழுப்பியும், குமார் எழவில்லை.

இந்தியா முதலில் 'பேட்' செய்ததால் குஷியடைந்தனர். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான 'சைமன் டௌல்' பந்து வீச, முதல் பந்தை சித்து எதிர்கொண்டார். முதல் பந்திலேயே சித்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற, பாபுவும் ஷங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்ததாக டிராவிட் வர, ஷங்கரின் முகத்தில் ஒளி பிறந்தது. டிராவிட், ஷங்கரின் அபிமான ஆட்டக்காரர் என்பதால், உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தான். ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகிவிட, டி.வி.யை அணைத்தான் ஷங்கர்.

"அடுத்தது அசாருதீன் தான். நம்ம ராசியே சரியில்ல..... ஒருவேளை, நம்ம பாக்கலேன்னா நல்லா ஆடுவாங்களோ??"

மேட்ச் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டு, இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஷங்கர் கண்விழித்து பார்த்தபோது மணி 10 ஆகியிருந்தது. குமார் எழுந்து வீட்டிற்கு சென்றிருந்தான். பாபு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான். ஷங்கர் எழுந்தவுடன், பாபுவும் தன் வீட்டிற்குச் சென்று, குளித்துவிட்டு ஷங்கருக்கு டிபன் எடுத்து வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பாபுவிற்காக பசியுடன் காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர். சரியாக 11 மணிக்கு பாபு வந்தான். கையில் டிபன் கூடையுடன், ஒரு புத்தகக்கட்டுடன் வந்துகொண்டிருந்தான்.

"சீக்கிரம் வாடா.... செம பசி"

"முதல்ல சாப்பிடு. அதுக்கப்புறம் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு...." என்றான் பாபு.

"என்ன மேட்டர்?"

கையிலிருந்த புத்தகக் கட்டைக்காண்பித்தான் பாபு.

"நானே கேட்கணும்ன்னு இருந்தேன். என்னது அது?"

"1980கள்ல வெளிவந்த 'கில்மா' பத்திரிகை தொகுப்பு"

"உனக்கு எப்படி டா கிடைச்சது??"

"இப்போ அதுவா முக்கியம்? சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா....."

அசுர வேகத்தில் சாப்பிட்டான் ஷங்கர். மற்றவர்களுக்கும் தகவல் பறந்தது. தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் குமார் ஆஜர் ஆனான். மற்ற மூவர், அடுத்த அரை மணிநேரத்தில் ஆஜர் ஆனார்கள்.

காலிங்க்பெல் ஒலித்தது. யார் என்று பார்க்க முற்பட்டபோது, பாபு,
"அவன் என் பக்கத்துவீட்டுப் பையன். இந்த புக்ஸ் எல்லாம் அவனோடது தான்...." என்று, அவனை உள்ளே அழைத்து வந்து, அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். அவனும் சகஜமாகப் பேசினான்.

"எங்க தாத்தா சொத்து சேர்த்து வைக்கல..... இதை தான் சேர்த்து வெச்சிருக்கார்" என்றான் கிண்டலாக.

"உங்க தாத்தா நல்லா இருக்கணும்" என்று பாலா வாழ்த்தினான்.

"அவரு மண்டைய போட்டு மூணு வருஷம் ஆகுது" என்று அவன் கூறியவுடன், பாலா தர்மசங்கடத்தில் நெளிந்தான்.

"அவரோட பெட்டியில இருந்தது. யாருக்கும் தெரியாம எடுத்து பாபுகிட்ட குடுத்தேன்".

அனைவரும் மொட்டைமாடிக்குச் சென்றனர். அங்கே வட்டமாக அமர்ந்தனர்.....

தொடரும்...

Thursday, August 07, 2008

Kuselan Fantasies - II

After successfully completing the slogan contest, we geared up for another event to celebrate "Kuselan" and the friendship day, which happened to be on 3rd August this year. Madras Café, a South Indian restautant in the bay area agreed to sponsor the event. Since 'Kuselan' is a movie about friendship, we decided to capitalize on the 'friendship day' and do something innovative. Asusual, Mahesh Srinivasan took care of all the arrangements for a slideshow, friendship bands, etc., We distributed pamphlets at the theatre where "Kuselan" is screened and on 2nd August, the event kicked off.


I was there at 6pm, and started the 'Kuselan slideshow'. Many people came to me and requested to play the trailer. We distributed free friendship bands to everybody who visited our stall. Most desis around the area were keen to grab the frienship bands and as prompted by their typical 'desi' mentality, some of them requested for more frienship bands for their friends and some of them requested for some other color. The highlight was, when we gave a frienship band to a girl, she demanded for three more, saying "I have three friends". Even I have dozens of friends. Come on!! Huh!

To my surprise, the Americans didnot know about "friendship day" and when we explained about it, they were kinda surprised. I went to watch 'Kuselan' for the 5th time, straight from the restaurant after completing the event. Watched the movie with my friend and we exchanged our wishes at 12am and I gave him the frienship band.


Watching 'Kuselan' on Friendship day with one of the best buddies and presenting him a frienship band - A perfect way to celebrate frienship! It doesn't get any better than this.

Links to the articles that were published regarding the event :

http://rajinifans.com/kuselan/usa/friendship_day.php

http://www.rajinifans.com/detailview.php?title=702

http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-08-01/kuselan-01-08-08.html

http://www.indiaglitz.com/channels/tamil/article/40402.html

Monday, August 04, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 14

பரீட்ச்சை பேப்பரை கிழித்து விட்டெறிந்தார் மேடம். ஐந்து பேரும் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். கண்ணெல்லாம் சிவந்து, கண்ணுக்குக் கீழ் இருக்கும் சதைப் பகுதி துடித்துக்கொண்டிருந்தது. இவர்களுக்கு, அப்படியே ஒரு 'லேடி' விஜயகாந்த்தைப் பார்ப்பது போல் இருந்தது. "எக்கோ" அடிக்கும் குரலில், அவருக்கே உரிய ஆங்கிலத்தில், கன்னாபின்னாவென்று திட்டினார். எல்லோரது பேப்பரையும் கிழித்து எறிந்துவிட்டு, அனைவரையும் வீட்டிற்குக் கிளம்ப சொன்னார். எல்லோரிடமும் இருந்த ஒரே ஆயுதமான "மன்னிப்பு கேட்பதைக்" கையில் எடுத்தனர். அனைவரும் ஒருமித்த குரலில் "சாரி" சொல்லிக்கொண்டிருக்க, அதைக் காதில் கூட போட்டுக்கொள்ளாமல் அவர் வேலையை செய்யத்துவங்கினார்.

அடாது அலட்சியப் படுத்தினாலும், விடாது முயற்சி செய்துகொண்டிருந்தவர்களுக்கு பலன் கிடைத்தது.

“பாடம் நடத்தும் ஆசிரியரை கேலி செய்தால் பைத்தியமாகி விடுவீர்கள்” என்று சாபம் விட்டார். பிறகு, அந்த தேர்வை மீண்டும் இப்பொழுதே எழுதுமாறு உத்தரவிட்டார். அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 5.15 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று கூறப்பட்டது. மணி அப்போதே 5.05 ஆகிவிட்டிருந்தது. அந்த அறையை விட்டு வெளியில் வந்து பார்த்ததில், பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. பாபுவும் நட்டும் வெளியில் நின்றுகொண்டிருந்தனர்.

"என்னடா ஆச்சு?"

"போட்டுக் குடுத்துட்டா டா அந்த எலிமெண்டரி"

"என்ன சொன்னாங்க?"

"ரீ- டெஸ்ட் எழுதணும். இப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல..." சொல்லிவிட்டு வேகமாக தன் பையைத் திறந்தான் ஷங்கர். மற்றவர்களெல்லாம் பிரச்சனை ஓய்ந்ததே என்ற சந்தோஷத்தில் தேர்விற்கு சென்று கொண்டிருக்க, ஷங்கர் மட்டும் புத்தகத்தை எடுத்து தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை பார்க்கத் தொடங்கினான்.

"டேய், ரொம்ப அவசியமா??? சீக்கிரமா வாடா...." என்றான் கிருஷ்ணா.

"சைக்கிள் கேப்புல 'ஒன் வேர்ட் ஆன்சர்' எல்லாம் பாத்துட்டேன்" என்றான் ஷங்கர்.

"அடப்பாவி.... சரி சரி, எழுதிட்டு எனக்கும் காட்டு...."

"இங்க கிருஷ்ணா, கிருஷ்ணான்னு ஒரு மானஸ்த்தன் இருந்தானே பாத்தியா?" என்று நக்கலடித்தான் ஷங்கர்.

"சரி, சரி.... வாரிவிடாத...."

"டேய், மேட்ச்சை கேன்சல் பண்ணிடு. இன்னொரு நாளைக்கு வெச்சிக்கலாம். அவனுங்ககிட்ட சொல்லிட்டு நீ 6.30 மணிக்கு மகாமகாக் குளத்துக்கு வந்துடு" - வெளியில் நின்றுகொண்டிருந்த பாபுவிடம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான் ஷங்கர்.

"இவன் பாட்டுக்கு இவ்வளவு சுலபமா சொல்லிட்டு போய்ட்டான்.... எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு இனிமே போய் கேன்சல் பண்ணறது? ஏற்கெனவே ஒரு மணி நேரம் லேட்டு. அவனுங்க சும்மாவே நம்மளைக் கிண்டல் பண்ணுவானுங்க, இதுல பெட் மேட்ச்சுக்குக் கூப்பிட்டுட்டு, போகலேன்ன அவ்வளோதான்" என்று புலம்பினான் பாபு.

தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்து பார்த்த போது மணி 6.30 ஆகிவிட்டிருந்தது. கிரிக்கெட் விளையாடப் போவதாக ஏற்கெனவே வீட்டில் சொல்லியிருந்ததால் பிரச்சனை இல்லை. இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்துவிடலாம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாலா ஆகியோர், பள்ளிக்கு அருகில் இருக்கும் "சொக்கையன் கடை"க்குச் சென்றனர். உடனே வீட்டிற்குச் செல்ல யாருக்கும் பிடிக்கவில்லை. சொக்கையன் கடையிலிருந்த தொலைபேசியில் குமாரை அழைத்து அவனையும் மகாமகாக் குளத்துக்கு வரச்சொன்னான் ஷங்கர்.

சொன்னபடி பாபுவும் நட்டும் அங்கு வர, குமாரும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்ததை எல்லாம் ஒரு "ஃபிளாஷ் பேக்" ஓட்டிவிட்டு, அமர்ந்தான் ஷங்கர்.

"அப்பாடா, இந்த பிரச்சனையில என் விஷயத்தை சுத்தமா மறந்திடுவாங்க" என்றான் குமார்.

"அடப்பாவி, எங்க பிரச்சனையில நீ குளிர் காயாத...." என்றான் கிருஷ்ணா.

"அப்படி இல்ல டா... பிரச்சனை முடிஞ்சதுல்ல.... விடுங்கடா..."

"என்னை மட்டும் பார்த்து, “You are a notable case in Xth ‘A’” ன்னு சொன்னாங்க டா" என்றான் ஷங்கர்.

உடனே ஆர்வமாகிப் போன குமார், "டேய், நான் மாட்டினப்போ, எனக்கும் இதே டயலாக் அடிச்சாங்க டா...." என்றான்.

"சும்மா பூச்சாண்டி காட்றாங்க. என்ன பண்ணுவாங்க? +1 சீட் தர மாட்டாங்களாமா?? போடா.... அப்படி அவங்க தரலேன்னா நம்ம எல்லாரும் டவுன் ஹை ஸ்கூல் போயிடலாம்" என்றான் பாபு.

"நானும் அதை தான் யோசிக்கிறேன். எதுக்கெடுத்தாலும் அம்மாவை அழைச்சிட்டு வா, அப்பாவை அழைச்சிட்டுவான்னு... ஒரே டார்ச்சரா இருக்கு..." என்றான் ஷங்கர்.

அடிக்கடி பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே இன்னும் பிரச்சனை பண்ணறோம், ஆனா மாட்டிக்காத மாதிரி பண்ணறோம்...." என்று சபதம் எடுத்தனர்.

"அந்த 'பெட்' மேட்ச்சை முதல்ல முடிக்கணும். நான் கேன்சல் பண்ண போனப்போ பயங்கர கடுப்பாயிட்டாங்க" என்றான் பாபு.

"அது பிரச்சனை இல்ல... வர்ற சனிக்கிழமை ஃபிக்ஸ் பண்ணிரு" என்றான் ஷங்கர்.

"சரி. இந்தியா - நியூசிலாந்து சீரீஸ் ஆரம்பிக்கிது டா.... ஆனா, நமக்கு ராத்திரி 3 மணிக்குத் தான் மேட்ச் ஆரம்பிக்கும்" என்றான் பாபு.

"எங்க வீட்ல எல்லாரும் ஊருக்குப் போறாங்க. நான் மட்டும் தான் தனியா இருக்கப்போறேன். எங்க வீட்ல மேட்ச் பாக்கலாம். எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க டா..." என்றான் ஷங்கர்.

"இராத்திரி தங்கிட்டு, திரும்ப அடுத்த நாள் காலையில எழுந்து வீட்டுக்கு போறதெல்லாம் ரொம்ப கடி... நான் வார கடைசியில வர்றேன்" என்றான் கிருஷ்ணா. மொட்டையும் நட்டும் அவனை வழி மொழிந்தனர். பாபுவின் வீடும் குமாரின் வீடும் ஷங்கரின் வீட்டிற்கு மிக அருகில் இருப்பதால், அவர்கள் மட்டும் ஒத்துக்கொண்டனர்.

பாபுவும் குமாரும் ஷங்கர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வந்து முதல் வேலையாக ரிமோட்டைக் கையிலெடுத்து சேனல்களை மாற்றத் துவங்கினான் பாபு.

உள்ளே சென்றிருந்த ஷங்கர். "94 வது சேனல்ல வருது" என்றான்.

"டேய், நான் என்ன சேனல் தேடறேன்னு தெரியுமா???"

"நீ வேற எதை தேடப்போற?? F tv தானே?"

"ஆமா ஆமா.... விவரமா யாருமே பாக்காத மாதிரி 94 வது சேனல்ல வெச்சிருக்க..." என்று சொல்லிவிட்டு அந்த சேனலை அழுத்தினான்.

"ச்ச..... தண்டம். இப்போன்னு பாத்து இன்ட்ரெஸ்டிங்கா ஒண்ணுமே இல்ல...." என்று அலுத்துக் கொண்டான் பாபு.

"இன்ட்ரெஸ்டிங்ன்னா, எது மாதிரி டா??" என்று பாபுவின் வாயைக் கிண்டினான் குமார்.

"F tv ல வயலும் வாழ்வும் போடுவாங்க. அதான் இன்னும் வரலையேன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்"

டி.வி.யை நிறுத்திவிட்டு மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சு பல விஷயங்களைத் தாண்டி, பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றில் போய் நின்றது.

"சரி, ரொம்ப நேரமாச்சு. 3 மணிக்கு எந்திரிக்கணும். மேட்ச் ஆரம்பிச்சிரும். தூங்கலாம்...." என்று சொல்லிவிட்டு குமாரும் பாபுவும் மாடியில் இருந்த ஷங்கரின் அறைக்குச் சென்றனர். ஷங்கர், வீட்டைப் பூட்டிவிட்டு, விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு மெதுவாக படியேறி மாடிக்குச் சென்றான். குமாரும் பாபுவும் ஒருவித பயத்துடனேயே இருப்பதை உணர்ந்த ஷங்கர், மறைந்திருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டான். ஆவியைப் பற்றி திகிலுடன் பேசிக்கொண்டிருந்தான் குமார். பாபு, பயத்துடனேயே அதை கேட்டுக்கொண்டிருந்தான். ஷங்கருக்கு ஒரு யோசனை தோன்றவே, உடனே கீழே சென்றான்....

தொடரும்....

Friday, August 01, 2008

Kuselan - First Information Report

Filmbox

Movie's 3rd reel - The one in which Thalaivar comes first!!

I am neither going to write a review nor discuss the scenes here

Just came back home after watching back to back shows here in San Jose. I saw the very first show in IMC6 and the next show in Century Berryessa. Let me pen down a few things about my experience...

-> Very much unlike "Thalaivar" movie. I would recommend people to go to this movie with an open mindset and sure, they'll come back with Thalaivar in their hearts.

-> Probably after "Aarilirundhu Arubadhu Varai", thalaivar has got an opportunity to showcase his acting talents. I mean, a complete exposure on his acting skills.

-> Last 20 minutes is riveting. Nobody moved in the theatre.

-> Am not a person who gets emotional for movies. Even for Thalaivar's movies like Padikkadhavan, Dharmadurai, Annamalai, etc., which has got the best emotional scenes, I was not moved. But, this movie's climax made me cry. (Confession time...)

-> Probably one of the best climaxes I've ever seen after "Anbe Sivam".

-> I bet everyone watching this movie would think about their old friends.

-> Quite obvious that all thalaivar scenes are enjoyable, but the intro is simply mind-blowing. Hats off to P.Vasu for that effort.

-> A complete family entertainer. Like Chandramukhi, this movie is sure gonna pull a lot of ladies crowd.

-> For God's sake, please dont think that am exaggerating - Most of the people cried after watching the climax. Infact, in all theatres, it has been intimated to switch on the lights two minutes later, after the movie is over. Just to give people sometime to wipe off their tears and avoid the embarrasment.

-> No vishk vishk styles, no punch dialogues, no gravity defying stunts, but still Thalaivar scores . Particularly, in the last twenty minutes. I wouldn't say that there is no specific style in this movie, as thalaivar's every gesture is a style itself.

-> Equal credits to Pasupathy, who has done a brilliant job. Probably his career best so far.

-> Very elegant, simple yet powerful perfomance from our super star.


To my fellow fans...
I consider this movie as the best answer to all the critics who question Super Star's acting abilities. Personally, I would always love to watch thalaivar in a larger than life character. But, I never felt disappointed after watching this movie. If thalaivar can amaze you with his awesome energy, punch dialogues and stunts, this is another way he can do so. Perhaps we never imagined that we would get such a brilliant movie without much commercial aspects stuffed in it. This is the time to celebrate such a good movie and be happy that we got a movie to shut the critics' mouth.

To Thalaivar...
Thalaiva! Thanks for doing this cameo before "ROBO" and giving us an opportunity to let others know that your fans don't just enjoy your ususal formula films, but also adore a brilliant flick of this kind from you. After watching this movie, am sure all true fans of yours would feel proud to be your fan, just like me.

Tuesday, July 29, 2008

Kuselan Fantasies - I

Huh…. What a week it was ! I’ve never been this busy and excited even when Sivaji was released. I was in India that time and also enjoyed my time with my fellow fanatics, but this time it was even better. I never really thought that I would get an opportunity to organize promotional events on my own. It’s quite an interesting story though.

Sampath, my co-fanatic was asking me about organizing something here, but both of us were not sure about what exactly can be done. When ‘Kuselan’ audio CD was released, I was pretty excited and wanted to grab a copy of it immediately. When I learnt that the only way to get it is to order it online, I couldn’t wait for the shipping time. So, I decided to call them and check the ways of getting it much sooner. This is how Jayavel Murugan, the US distributor for Kuselan got in touch with me. It was a casual chat and he asked me whether I would be interested in organizing events, for which I said YES even before he completed the question.

I was introduced to Mahesh Srinivasan, the joint distributor for Kuselan in the bay area. He wanted to meet me and know about my ideas. I did not have anything in mind until then, but as I sensed that it’s going to be bigger, I started doing my homework. I went to “Tirupathi Bhimas”, a famous restaurant in the bay area to meet Mahesh during lunch break and proposed my idea of conducting a “Kuselan friendship slogan contest”, since the movie is about friendship. As soon as I proposed my plan of action, the sponsors happily agreed to sponsor the entire event.


I designed the slogan slip for the contest and also the design of the customized Kuselan T.Shirt. The sponsors got them printed.


The Organizers : (From Left) Mahesh Srinivasan, ME and Venkatesh Gananathan
Backside of the T.Shirt

The Ultimate Day

It was all set for the Kuselan pre-release launch. I was pretty excited about the pre-release launch but at the same time, a little worried since I was a bit doubtful about the response. I got there early along with my friend Venkatesh and started making the arrangements for the event. The slogan contest counter was set up, posters were in place, slideshow was ready, but there was something missing. Aaahhh….. Gotcha! Thalaivar’s huge 25 feet vinyl hoarding that came from India needed to be put on display. It was really tough as we had to suspend it from the top, as we could not provide any cardboard for support. Moreover, the building was not tall enough and as a result, we had to leave some part of it in the ground. But, once the hoarding setup was done, it seemed to be all set for a swift take off.
Me getting the projector ready for the slideshow....
Slogan Contest Stall

25 feet Vinyl hoarding

A perfect spot to pose for a photograph

We started explaining the event to one person and then it just spread like forest fire. We didn’t have to do the explanations thereafter. My job was reduced to just judging the best slogans and the other organizers helped me with it. But it was really tough to pause the event for a while and choose the winners for that hour. The kids were enjoying the exclusive Super Star m&m candies. The best part is, people waited to know the results, even after they were done with their dinner.


The toughest job - Selecting the winning slogan

Click here for more pictures....

Besides the Ist prize of $20 gift voucher and II nd prize of Kuselan audio CD, the winning slogans were published in rajinifans.com. We also intimated the winners via email, so that they can ask their friends to see their slogan and probably the best chance to show them how special they are to them!

It was a fun filled two days and as per the “Super Star Theory”, the event was a massive hit. For those who were wondering what is the theory all about, its very simple – “Any damn thing associated with Super Star is a HIT”

People were really very happy and took part in the competition with the elated spirit. Since this kind of a promo event is first of its kind for any Indian movie, am satisfied that I could do something for my thalaivar’s movie.

Here are the links for the event related news and articles....

http://rajinifans.com/kuselan/usa/contest.php

http://www.indiaglitz.com/channels/tamil/article/40316.html

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/15859.html

http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-04/kuselan-01-24-07-08.html

http://tamilsuperhits.com/gallery/163/index.html

http://www.sivajitv.com/PhotoGallery.do?category=ct000002&id=it000436

Click the below link to check out the winning slogans.....

http://www.rajinifans.com/kuselan/usa/images/contest_winner.pdf

Finally, a big thanks to all the folks who supported me and worked with me to make this event a grandeur success. Will come back with more posts after the movie’s release. Watch out.

Tidbits :

 Learnt from the distributors who watched the movie already that the movie is rocking, especially Thalaivar’s intro
 Vadivelu’s comedy is top class
 Thalaivar delivers awesome punch dialogues. Thalaivar has changed the saying - “Maatha, Pitha, Guru, Deivam" to "Matha, Pitha, Guru, Nanban, Deivam”
 Thalaivar talks about his political entry and his affinity towards Himalayas.
 Last 20 minutes is set to melt your hearts.

Can’t wait till 31st !!!!

Monday, July 28, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 13

குற்றவாளிக் கூண்டு என்று அழைக்கப்படும் 'மேடம் அறை'யில் நின்று கொண்டிருந்தான் குமார். ஆயிரம் வாலா சரவெடி போல், இடைவிடாது பத்து நிமிடங்கள் திட்டி முடித்ததும், வாடிக்கையாக அவர் சொல்லும் “Bring your parents tomorrow” என்ற வசனத்தைப் பேசி முடித்தார். இது ஒன்றும் புதிதில்லை என்றபோதும், இந்த முறை கொஞ்சம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருப்பதால், நிச்சயமாக தப்பிக்க முடியாது என்று தோன்றியது. நேராக வகுப்பிற்கு வந்தான்.

"என்னடா, வழக்கம் போல தானே?" என்றான் ஷங்கர்.

"ஆமா டா... அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் என்னைத் தரையில உட்காரச் சொல்லியிருக்காங்க. இந்த வாட்டி எஸ்கேப் ஆக முடியாது போல இருக்கே...."

"பேசாம வீட்ல சொல்லிடு.... உங்க அப்பாவை வந்து பாக்க சொல்லு. பிரச்சனை முடிஞ்சிரும்"

"டேய், அது எல்லாம் முடியாது.... இன்னும் மூணு நாள்ல பரீட்ச்சை ஆரம்பம் ஆகுது. இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா போதும்"

"சரி, என்ன பண்ண போற?"

"வழக்கம் போல தான்..... நாளைக்கு லீவு போட்டுருவேன்"

இரெண்டு நாட்களுக்கு பிறகு.....
பரீட்சை துவங்கியது. பத்தாம் வகுப்பின் இரெண்டு செக்ஷன்களில், நன்றாக படிக்கக்கூடியவர்கள் என்பதால், அரையாண்டு பரீட்சை முடிந்தவுடன் இவர்கள் வகுப்பிற்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்திருந்தார்கள். மற்றுமொரு செக்ஷனுக்கு "ஸ்பெஷல் க்ளாஸ்" உண்டு என்று மேடம் அறிவித்திருந்தார்.
எதிர்பார்த்தபடி மேடம் குமாரைப் பற்றி மறந்துவிட்டிருந்தார். ஆனாலும், கடைசி பரீட்சை முடியும் வரை கொஞ்சம் பயமாகவே இருந்தது.

கடைசி பரீட்சையான "ஜியோக்ராபி" பரீட்சையன்று ஷங்கரும் மற்றவர்களும் நிறைய திட்டம் தீட்டியிருந்தார்கள். பரீட்சை முடிந்த கையேடு கிரிக்கெட் விளையாடுவது என்று முடிவெடுத்திருந்தனர். 'பெட்' மேட்சுக்காக அம்மாசத்திரம் டீமுடன் பேசிவிட்டு வந்திருந்தான் கிருஷ்ணா.

பரீட்ச்சை எழுதவிருக்கும் வகுப்பின் முன்னால் நின்று கொண்டு, பரீட்ச்சை ஆரம்பிக்கும் முன் கடைசி கட்ட 'நுனிப்புல் மேய்தலை' செய்து கொண்டிருந்தார்கள். கண்காளிப்பாளராக யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே பரீட்சைக்கு 'பிட்' எடுத்துச் செல்வது முடிவு செய்யப்படும். கண்டிப்பான ஆசிரியர்கள் வந்தால், 'பிட்'டை வெளியிலேயே விட்டுவிட்டுச் சென்று விடலாம் என்பதால், கடைசியாக வகுப்பினுள் நுழைவதே சிறந்த நுணுக்கமாக இருந்தது..

தேர்வு எழுதுவோர் வரிசையின்படி, கிருஷ்ணா, பாலா, ஷங்கர், ஆகிய மூவர் ஒரு வகுப்பிலும், குமார், பாபு, நட்டு ஆகியோர் வேறு வகுப்பிலும் தேர்வு எழுதும்படி இருந்தது. ஷங்கர் வகுப்பிற்கு எலிமெண்டரி வகுப்பின் ஆசிரியர் கண்காளிப்பாளராக வரவே, அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. பொதுவாக, ஆறாம் வகுப்பைத் தாண்டிவிட்டாலே, எலிமெண்டரி வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களை ஏளனமாகப் பார்ப்பது வழக்கம். பரீட்சை கண்காளிப்பளராக வேறு வந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. அனைவரும் 'பிட்டு'களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சிலர், மேலும் ஒரு படி சென்று புத்தகத்தின் பக்கத்தையே கிழித்து அவசர அவசரமாக சட்டைக்குள் திணித்துக்கொண்டிருந்தனர்.

டிசிப்ளின் சார், வழக்கம்போல ரோந்து வந்து வெளியில் நின்று படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையெல்லாம் வகுப்பிற்குள் துரத்திக் கொண்டிருந்தார். ஷங்கர், கிருஷ்ணா, பாலா மூவரும் அடுத்தடுத்த பெஞ்ச்சுகளில் அமர்ந்திருந்தார்கள். ஒரு பெஞ்ச்சில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

மணி அடித்தவுடன், ஆசிரியர் வினாத்தாள்களை விநியோகிக்கத் தொடங்கினார். பரீட்சை எழுத ஆரம்பிக்கும் முன், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். மூவருக்கும் அன்று விளையாடப் போகும் மேட்ச்சிலேயே கவனம் இருந்தது.

'காப்பி' அடிப்பதற்கு பொருத்தமான நேரம், கடைசி அரை மணிநேரம் தான் என்பது உலகறிந்த ரசகியம். அந்த கடைசி முப்பது நுமிடங்களுக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரும், ஆசிரியர், "கடைசி நிமிடங்கள்" என்று அறிவித்ததும், தங்கள் வேலையை காட்டத் துவங்கினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 'பிட்டு'கள் எல்லாம் பாயத் துவங்கின. பரீட்சை நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், பாலாவிற்கும் ஷங்கருக்கும் இடையே விடை பரிமாற்றம் நடந்துகொண்டிருந்தது.

முன்னால் அமர்ந்திருந்த பாலாவை அழைத்தான் ஷங்கர். பாலா மும்முரமாக அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த மாணவனைப் பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததில், ஷங்கரின் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த ஷங்கர், தன் இருக்கையை விட்டு எழுந்து, பாலாவின் தலையில் ஓங்கி அடித்தான். பாலா தலையை தடவிக்கொண்டே திரும்பிப் பார்க்கையில், ஆசிரியர் முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

முகத்தில் கோபம் கொப்புளிக்க, "வாட் இஸ் திஸ்?" என்றார்.

ஷங்கரும் பாலாவும் தங்கள் இருக்கையை விட்டு கூட எழாமல் அமர்ந்தபடி இருந்தனர். ஷங்கர் மட்டும் ஏளனமாக "நத்திங்" என்றான்.

இந்த பதில், அவரை மேலும் கடுப்பேற்றியது. பதிலேதும் பேசாமல், அங்கிருந்து சென்றார். பரீட்சை முடியும் நேரமானதால், "நேம் ஸ்லிப்" எனப்படும் பெயர் எழுத பயன்படும் சிறு காகிதத் துண்டையும், அதை விடைத்தாளுடன் கோர்ப்பதற்கு ஒரு நூலையும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யத்துவங்கினார். ஆசிரியர் தன் வேலையைச் செய்ய, ஷங்கரும் பாலாவும் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அந்த ஆசிரியரை கொஞ்சம் கூட மதிக்காமல், எதுவுமே நடக்காதது போல், மீண்டும் இருவரும் விடைகளை பரிமாறிக் கொள்வதும், கிண்டலடித்து சிரித்துக் கொள்வதுமாய் இருந்தனர். கொஞ்ச நேரத்தில், கிருஷ்ணாவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

உச்சக்கட்டமாக, பேப்பரை சுருட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மணி அடிக்கவே, அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கத் தொடங்கினார் ஆசிரியர். கிருஷ்ணா, ஷங்கர், பாலா மற்றும் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த இருவரின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டார்.

பரீட்சை முடிந்தது என்ற சந்தோஷத்துடன், மாலையில் தாங்கள் ஆடப்போகும் 'பெட்' மேட்சுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். நேரடியாக பள்ளியிலிருந்து அம்மாசத்திரம் செல்வதாக இருந்ததால், கிரிக்கெட் மட்டை, ஸ்டாம்புகள் ஆகியவற்றை எடுத்து வந்து பள்ளிக்கு அருகே இருக்கும் இளங்கோவின் வீட்டில் வைத்திருந்தனர்.

பரீட்ச்சை முடிந்து ஆறு பேறும் ஒன்றாக கூடி, சம்பிரதாயத்துக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் பரீட்சையைப் பற்றி பேசிவிட்டு, மேட்சுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பி நடக்கத்தொடங்கியதும், ஆயா வந்து வழிமறித்தார். கிருஷ்ணா, பாலா, ஷங்கர் மற்றும் இருவரின் பெயரைக் குறிப்பிட்டு,

"உங்களை எல்லாம் இப்போ உடனே மேடம் வந்து பாக்க சொல்றாங்க" என்றார்.

தொடரும்....

Wednesday, July 23, 2008

Kuselan Trailer





Thalaivaaaaaaaaaaa.......................!




Kathanayakudu - Telugu Version

Monday, July 21, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 12

கீழே விழுந்த பி.டி. வாத்தியார், வேகமாக எழுந்தார். குமாரின் நகம் பட்டு அவர் கையில் கீறல் விழுந்திருந்தது. அதிலிருந்து லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது. கோபம் தலைக்கேற, அவமானம் வேறு பிடுங்கித் தின்ன, என்ன செய்வது என்று தெரியாமல், அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார். ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று மட்டும் தெளிவாக விளங்கியது குமாருக்கு. பிரேயர் நடந்துகொண்டிருப்பதால் யாருடனும் எதுவும் பேச முடியவில்லை. தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஷங்கரிடம் "இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல" என்றான். அந்த 45 நிமிடங்கள் கழிவது சிரமமாக இருந்தது.

பிரேயர் முடிந்தவுடன், ஷங்கர், பாபு, நட்டு, பாலா அனைவரும் குமாரை சூழ்ந்துகொண்டனர். "டேய், என்னடா நீ.... நம்ம "மாடு ஓட்டி மன்னார்சாமி"ய தள்ளி விட்டுட்ட...." என்றான்

"நான் தள்ளி விடல டா... அந்த ஆளே விழுந்துட்டான்..."

எந்த நேரமும் 'ஆயா' மூலம் அழைப்பு வரலாம் என்பதால் வகுப்பில் வந்து அமர்ந்ததிலிருந்து திகிலோடு காத்துக்கொண்டிருந்தான் குமார்.

"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்னும் பழமொழிக்கேற்ப, சாவிக்கொத்து சத்தம் குலுங்க, "மேடம்" அங்கு வந்தார். நேராக குமாரை நோக்கி சென்றார். கையில் வைத்திருந்த நீளமான பிரம்பை எடுத்து குமாரின் கழுத்தில் வைத்து, அப்படியே அவனை வகுப்பின் வெளியில் தள்ளினார். போலீஸ், திருடனை தள்ளிக் கொண்டு வருவதைப் போல இருந்தது மற்ற மாணவர்களுக்கு.

குமாரை வகுப்பின் வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றார் மேடம். அவர் வந்து சென்றபின் வகுப்பு ஆரம்பித்தது. காலையில் நடைபெற்ற அனைத்து வகுப்புகளிலும் குமார் வெளியிலேயே நின்றான். 12.45க்கு மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்ததும், குமார் வகுப்பினுள் வந்தான்.

"டேய், நானும் மேடம் வரும்போது போகும்போதெல்லாம் பின்னாலேயே போய், நடந்ததை சொல்லி பாக்குறேன், அவங்க காதுலையே வாங்கிக்க மாட்டேங்கிறாங்க" என்றான்.

ஷங்கர், "சரி, இப்போ என்ன பண்ணப்போற?" என்று கேட்டான்.

"தெரியல. நான் இப்போ கிளம்பி வீட்டுக்குப் போறேன். இன்னும் அரை நாள் எல்லாம் என்னால வெளியில நிக்கமுடியாது"

"டேய், இப்போ நீ கிளம்பினா பிரச்சனை அதிகமாயிடும்...."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது டா... என்னால வெளியில நிக்க முடியாது, நான் கிளம்புறேன்" - சொல்லிவிட்டுக் கிளம்பினான் குமார்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் வகுப்புகள் நடைபெறத் துவங்கின. முன்பு எதிர்ப்பார்த்தது போல், ஆயா வந்து, குமாரை மேடம் அழைப்பதாக சொல்ல, அவன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அனேகமாக குமாரைப் பற்றி விசாரிக்க, அடுத்த அழைப்பு தனக்காகத் தான் இருக்கும் என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான். ஆனால், பள்ளி முடியும் வரை எந்த அழைப்பும் வரவில்லை. பள்ளி முடிந்ததும், அனைவரும் பள்ளி மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அரையாண்டு பரீட்ச்சை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கவிருப்பதால், நட்டின் வீட்டில் "குரூப் ஸ்டடி" செய்வதென்று முடிவானது.

ஷங்கர், வீட்டிற்கு வந்து வேகமாக சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றிக்கொண்டு குமார் வீட்டிற்குச் சென்றான். தன் பைக்கில் குமாரை ஏற்றிக்கொண்டு, இருவரும் கிருஷ்ணா வீட்டை நோக்கிச் சென்றனர்.

வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஷங்கர், "உன்னைத் தேடி ஆயா வந்தாங்க...." என்றான்.

"போச்சுடா.... நாளைக்கு செத்தேன்" என்றான் குமார்.

கிருஷ்ணாவின் வீட்டை சென்றடைந்தனர். டி.வி. பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா, எழுந்து வந்து கதவைத் திறந்தான். மூவரும் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணாவின் அம்மா, மூவருக்கும் தேநீர் கொடுத்தார்.

அதைக் குடித்த கிருஷ்ணா, "என்னம்மா டீ போட்டிருக்க? என் சாய்ரா பானு எவ்வளவு நல்லா டீ போடுவா தெரியுமா??" என்றான்.

"டேய், நீ அடங்கவே மாட்டியா?" என்றான் ஷங்கர்.

"இப்படித்தான்... இவன் ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கான்ப்பா..." என்றார் கிருஷ்ணாவின் அம்மா.

"சும்மா வம்பிழுக்குறான் ஆண்ட்டி... அதெல்லாம் ஒண்ணுமில்ல..." என்றான் ஷங்கர்.

"நீங்க எல்லாரும் பாத்துக்கிட்டே இருங்க.... ஒரு நாள் திடீர்ன்னு நான் அவளை கூட்டிக்கிட்டு வரத்தான் போறேன்...." என்றான் கிருஷ்ணா.

"வாயை மூடு..." என்றார் அவன் அம்மா.

"அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.... மதம் கூட மாறுவேன்..... 'கிருஷ்ணா'ங்குற என் பேரை மாத்தி 'காதர்'ன்னு வெச்சிக்குவேன்" என்றான்.

"ஐயோ.... கடவுளே" என்று தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.

"அதை முதல்ல பண்ணு..... நீ முஸ்லிமா மாறின உடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்கன்னு நினைப்பா?? இந்த கல்யாணத்துக்கு முன்னாடி, இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.... தெரியுமா?? என்று கேட்டான் ஷங்கர்.

"அது என்னடா கல்யாணம்?" என்று ஆர்வமாக கேட்டான் கிருஷ்ணா.

"அது தெரியாதா?? அது தான் டா ‘கட்டிங்’ கல்யாணம்...." என்றான் குமார்.

"அப்படின்னா??"

"வெட்டிருவாங்க...." என்றான் ஷங்கர். அதைக்கேட்டு அதிர்ச்சியானான் கிருஷ்ணா.

"சரி சரி, கிளம்புங்க.... நட்டு வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

நட்டு வீட்டில் அனைவரும் கூடினர். "க்ரூப் ஸ்டடி" என்ற பெயரில் நட்டு வீட்டில் கும்மாளம் அடிப்பது வழக்கம். அனைவரும் ஒன்று கூடினால், எப்போதுமே "க்ரூப்" இருக்கும், ஆனால் "ஸ்டடி" இருக்காது.

"என்னடா, இந்த ஸ்கூல்ல 'ரவுடியிசம்' பண்ணறது இவ்வளவு கஷ்டமா இருக்கு... தெரியாத்தனமா அந்த பி.டி. வாத்தியார இவன் தள்ளிவிட்டுட்டான். அதுக்கு ஓவரா சீன் போடறாங்களே..." என்றான் ஷங்கர்.

"டேய், மறுபடியும் நான் தள்ளி விட்டேன்னு சொல்லாத டா... அந்த ஆளு தடுமாறி விழுந்துட்டான்..." என்றான் குமார்.

"சரி, ஏதோ ஒண்ணு.... நீ கவலைய விடு... எப்படியும் பரீட்ச்சை வருது.... இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா, அப்புறம் மேடம் மறந்துடுவாங்க" என்றான் ஷங்கர்.
அனைவரும் அதை ஆமோதித்தனர்.

"அந்த ஆளுக்கு ஏன் டா மாடு ஓட்டி மன்னார்சாமின்னு பேரு வந்தது?" எனக் கேட்டான் பாலா.

"சும்மா பசங்களை மாடு மாதிரி 'ஏய்' , 'ஏய்' ன்னு கத்தி மேய்ச்சிக்கிட்டு இருப்பாரு. அதனால தான்..." என்றான் பாபு.

"டேய் நட்டு, உங்க வீட்டுக்கு இத்தனை பேர் வந்திருக்கோம்.... சாப்பிட ஏதாவது கொண்டு வரணும்ன்னு அறிவு இல்ல? போ…. ஏதாச்சும் எடுத்துட்டு வா" என்று விரட்டினான் கிருஷ்ணா.

"வீட்ல யாரும் இல்ல டா" என்றான் நட்டு.

"அதான் தெரியுமே... உங்க அம்மா மட்டும் இந்நேரம் இருந்திருந்தா சுடச்சுட டீ குடுத்திருப்பாங்க" என்றான் பாபு.

"டேய், 'என்றென்றும் காதல்'ன்னு ஒரு குப்பை படம் வந்திருக்கு...." என்று அரட்டையை துவங்கினான் பாலா.

இப்படி படிப்பைத் தவிர மற்ற விஷயங்களை அனைவரும் பேசிக்கொண்டிருக்க, குமாருக்கு மட்டும் அடுத்த நாள் பள்ளியில் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையாக இருந்தது.

தொடரும்...

Thursday, July 17, 2008

Rewind: The best of cricket's biggest tournament

Leaving behind the infamous 2007 world cup, the other three world cups over the last twelve years have been very successful and entertaining. The last world cup in the Carribean is indeed unforgettable, but for wrong reasons. As far as cricket is concerned, it was a big flop. Here are the montage video collection of the other three world cups(1996, 1999 and 2003). The memories are fresh and evergreen. Just take a look at the videos, do a quick rewind of your memories and tell me which world cup was the best according to you and why?

1996 World Cup – The most colorful world cup of the other three which was held in the sub-continent. Though India made it only till the semi-finals, this remains as my personal favorite.

Picks of the tournament : 1. India vs Pakistan (Quarter finals) at Bangalore, India

2. Kenya vs West Indies at Pune, India

3. Australia vs West Indies (Semi finals) at Mohali, India

Tournament Sensation : Aravinda de Silva (Sri Lanka) , Sanath Jayasuriya (Sri Lanka) and Sachin Tendulkar (India)



1999 World Cup - A complete package of many nail-biting contests. India progressed upto the super six stage.

Picks of the tournament : 1. Australia vs South Africa (Semi finals) at Edgbaston, England

2. Zimbabwe vs South Africa at Chelmsford, England

Tournament Sensation : Lance Klusener (South Africa) and Neil Johnson (Zimbabwe)




2003 World Cup - India's second best perfomance in world cups. It was a pretty good tournament except for the poor show in the finals.

Picks of the tournament : 1. India vs Pakistan at Centurion, South Africa

2. Canada vs West Indies at Centurion, South Africa.
(For Davison's magnificient 60 ball-hunderd)

Tournament Sensation : Sachin Tendulkar (India)

Monday, July 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 11

இந்த ஆளை எங்கேயோ பாத்திருக்கேனே..." என்று முணுமுணுத்தான் ஷங்கர். ஏதோ பொறி தட்ட, சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த குமாரை அழைத்தான். குமாரிடம், "இந்த ஆளு யாருன்னு தெரியுதா??" என்றான்.

அவரைப் பார்த்துவிட்டு "இது சேகர் டா... எங்க மாமா மாமாவோட ஃபிரெண்டு" என்றான் குமார்.

"கரெக்ட். இப்போ தான் ஞாபகம் வருது. உங்க மாமாகூட இவர நம்ம பாத்திருக்கோம். சரி, நான் சொல்லற மாதிரி செய். நேரா நீ அந்த ஆள் கிட்ட போய், “சேகர் அண்ணா, எப்படி இருக்கீங்கன்னு கேளு..."

"டேய், அவருக்கு என்னைத் தெரியாது டா.... நான் தான் அவரைப் பாத்திருக்கேன்...."

"தெரியும்.... அந்த ஆள் பேரு சேகர் தானே??"

"ஆமா...."

"அப்போ நேரா போ. நான் சொன்ன மாதிரி செய். மத்ததை எல்லாம் நான் பாத்துக்குறேன்...."

பயத்தில் நின்று கொண்டிருந்த நட்டையும் அழைத்தான் ஷங்கர்.

"நீயும் என்கூட வா...." என்றான்.

"டேய், என்னை ஏன்டா எக்கச்சக்கமா மாட்டிவிட்ற? நீயே போய் சைக்கிளை எடுத்துட்டு வா.... அவனுங்க என்னைப் பார்த்தா, மறுபடியும் பிரச்சனை பண்ணுவாங்க" என்றான்.

"நான் பாத்துக்குறேன். நீ வா" என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான் ஷங்கர்.

ஷங்கர் சொன்னபடி குமார் நேராக அங்கு சென்று "சேகர் அண்ணே... எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான். இதைக்கேட்ட அவர், குமாரை கேள்விக்குறியோடு பார்க்க, உடனே குமார், "என்னண்ணே மறந்துட்டீங்க.... எங்க மாமா கூட அன்னைக்கு ஹோட்டல்ல பாத்தீங்களே..." என்றான்.

"யாரு உங்க மாமா...?" என்று அவர் குழப்பத்துடன் கேட்க, குமார் அவன் மாமாவின் பெயரைக் கூறினான். உடனே அவரும் "ஆமா, ஆமா..... அவன் அக்கா பையனா நீ??" என்றார். பிறகு, ஷங்கரையும் நட்டையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப் படுத்தினான்.

"நேத்து இவனோட சைக்கிளை இங்கேயே விட்டுட்டு வந்துட்டான், அதான் எடுத்துட்டுப் போகலாம்ன்னு...."

நட்டைப் பார்த்ததும், "நேத்து... " என்று ஏதோ சொல்லவந்தவர், அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு, “இவன் சைக்கிள் தானா? என்று கேட்டுவிட்டு, "அங்கே நிக்கிறதுல எது உன்னோடதுன்னு பாத்து எடுத்துக்க...." என்றார்...

நட்டு சைக்கிளை எடுத்தபின், அனைவரும் சேகரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்தனர்.

"இந்த சீன்ல நான் எதுக்கு? சைக்கிளை நீயே எடுத்துட்டு வந்திருக்கலாம்" என்று ஷங்கரிடம் சொன்னான் நட்டு.

"நேத்து உன்கிட்ட பிரச்சனை பண்ணது சேகர் கிட்ட வேலை செய்ற பசங்க. சேகரை நமக்குத் தெரிஞ்சவரா காட்டிக்கிட்டா, இனிமே இவனுங்களால எப்போவுமே பிரச்சனை வராது" என்றான் ஷங்கர்.

சைக்கிள் கிடைத்த சந்தோஷத்தில் நட்டு உற்சாகமாக நடக்க, இதை கவனித்த கிருஷ்ணா, "நட்டு, சைக்கிள் கிடைச்சாச்சு.... இதுக்கு ஒரு ட்ரீட் நீ வெச்சே ஆகணும். இல்லேன்னா, அது உன் சைக்கிளுக்கு பெரிய அவமானம்" என்றான்.

"அது என்னடா சைக்கிளுக்கு....? அவனுக்கு அவமானம்ன்னு சொல்ல மாட்டியா?" என்றான் பாலா.

"அவனுக்கு தான் மானம், ரோஷம் எல்லாம் கிடையாதே" என்றான் கிருஷ்ணா.

"ஆமா... அதான் நம்ம கூட சேர்ந்துட்டான்ல....." என்றான் குமார்.

"ஓவரா பேசாத...." - வழக்கமான பதில் வந்தது நட்டிடமிருந்து.

"ட்ரீட்டா... ச்ச... தெரிஞ்சிருந்தா மதியானம் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டேனே.." என்றான் பாபு.

நட்டைக் கேட்காமல் அனைவரும் முடிவே செய்துவிட, வேறு வழியின்றி நட்டு தலையாட்டினான்.

வழக்கமாக செல்லும் "சோழா பாஸ்ட் புட்" கடைக்கு சென்றனர், ஃபிரைடு ரைஸ், காலிஃபிளவர் மஞ்சுரியன் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு, அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

"அந்த பொண்ணுக்கு தான் டா தேங்க்ஸ் சொல்லணும். இல்லேன்னா, நமக்கு ட்ரீட்டே கெடச்சிருக்காது" என்றான் பாலா..

"டேய், ஞாயமா அந்த பொண்ணை கட்டிப்புடிச்சதுக்கு ஒரு ட்ரீட், சைக்கிள் கெடச்சதுக்கு ஒரு ட்ரீட்ன்னு ரெண்டு ட்ரீட் நீ குடுக்கணும்..." என்றான் பாபு.

"இருந்தாலும், அந்த சப்பை ஃபிகரை நீ கட்டிப்புடிச்சிருக்க வேண்டாம்...." என்றான் பாலா.

பாலா நட்டை இஷ்டத்துக்கு கிண்டலடித்துக் கொண்டிருக்க, பாபு குறுக்கிட்டான்.

"டேய் மொட்டை.... நிறுத்துடா. நீ என்னமோ ரொம்ப ஒழுங்கு மாதிரி அவனை ஓட்டிக்கிட்டு இருக்க... நீ பண்ண மேட்டேர சொல்லிருவேன்" என்றான்.

"டேய்... நமக்குள்ள டீல்..." என்றான் மொட்டை.

என்ன விஷயம் என்று அனைவரும் பாபுவை துளைத்தெடுக்க, அவன் சொல்லத்துவங்கினான்....

"நேத்து எங்க வீட்டு மொட்டைமாடியில நின்னுக்கிட்டு பக்கத்து வீட்டு ஆன்ட்டி குளிக்கும்போது எட்டிப்பாத்திருக்கான்.... அந்த ஆன்ட்டி இவனை கன்னபின்னான்னு திட்ட ஆரம்பிச்சு.. ஒரே ரகளை..."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன, ரெண்டு பெரும் அங்கே இருந்து எகிறிட்டோம். இனிமே எங்க வீட்டு மொட்டை மாடிக்கே போக முடியாத மாதிரி பண்ணிட்டான் டா இவன்"

அனைவரும் நட்டை விட்டுவிட்டு, மொட்டையை கலாய்க்கத் தொடங்கினர். தன் இடத்தை மொட்டை பிடித்துக்கொண்டதால், நிம்மதியடைந்தான் நட்டு.

"டேய், அந்த ஆன்ட்டி அங்க குளிச்சிக்கிட்டிருக்கும்னு எனக்கு எப்படி டா தெரியும்? நான் எதார்த்தமா எட்டிப் பார்த்தேன்..." என்றான் மொட்டை.

"எதார்த்தமாவது, பதார்த்தமாவது.... இவ்வளவு நடந்திருக்கு..... டேய், இதுக்கு ஒரு ட்ரீட் வேணும் டா..." என்றான் ஷங்கர்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்தவுடன், அனைவரும் அவரவர் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

"டேய், half-yearly பரீட்சை வருது... ஏதாச்சும் படிப்போம்..... " என்றான் கிருஷ்ணா.

"இப்போ தான் மிட்-டெர்ம் முடிஞ்சது, அதுக்குள்ள இது வேற..." என்றான் பாபு.

"சரி டா, நாளைக்கு பார்க்கலாம்"

அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை....
பிரேயர் மணி அடிக்கும் வரை குமார் வரவில்லை. கடைசி நிமிடம் வரை பார்த்துவிட்டு, அனைவரும் பிரேயருக்கு சென்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பாபுவும் ஷங்கரும் வரிசையில் கடைசியாக நின்றனர்.

"ஏன் டா அவன் வரல?" என்று ஷங்கரிடம் கேட்டான் பாபு.

"தெரியலையே. வரலேன்னா ஃபோன் பண்ணி சொல்லியிருப்பானே...." என்றான் ஷங்கர்.

பிரேயர் ஆரம்பித்தது. ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் பின்னால் நின்றுகொண்டுருக்க, வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தான் குமார். அவனும் ஷங்கரின் பின்னால் வரிசையில் நிற்க முயல, அவனை தடுத்தார் பி.டி வாத்தியார். தாமதமாக வந்ததால், பிரேயரில் கலந்து கொள்ள முடியாது என்று அவனை தடுக்க, அவன் தாமதமாக வந்த காரணத்தைக் கூறினான். அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், அவன் கையைப் பிடித்து இழுத்தார். குமார், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயன்ற போது தடுமாறி வாத்தியார் கீழே விழுந்தார்.

அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.

தொடரும்....

Wednesday, July 09, 2008

A few observations uttered...

Penning down a few of my observations in USA....

Observation 1 :

Most of the Chinese people out here don’t speak good English. Just like Keralites, they also have a unique accent for English. It can probably be termed as "Chinglish". Below is a conversation between me, my friend and a Chinese bearer in an authentic Chinese restaurant. That was the first time I went to a Chinese restaurant after landing in the United States.

The menu was totally different. I was hugely surprised by the fact that there were no “Manchurians” in the list. When I asked about it, my friend told me that they’ll be available only in Indo-Chinese restaurants. When I quickly ran through the menu, I could hardly find any vegetarian side-dishes in it. Most of the names were like titles of Chinese movies. We were trying to order fried rice and some vegetarian side dish. A lady bearer attended us. Here goes the conversation…

Bearer : Hi…

Me : Hi, We’ll have two mixed vegetable fried rice combo. But, we don’t want beef with it. Can we get something else instead of beef?

Bearer : No, No, No….. It’s a combo.

Me : Alright. What vegetables do you put in it?

Bearer : Mixed Vegetables.

Me : Ya, I know that. What vegetables are they?

Bearer : Mixed Vegetables.

Me : Mixed means?? What vegetables do you mix?

Bearer : Mixed means, mixed.

Me : I don't want certain vegetables. That's why am asking. Can you tell me what vegetables are they?

Bearer : (Pauses for a while and then) All vegethabels...

Me : Goyyaale…. (I was really frustrated)

Bearer : Whath???

Me : Vaathum illa, *****um illa…

Bearer : You wanth vegethabel friedh raaise?

I stopped talking to her and my friend took over from me....

My friend : Ya. But we don’t want beef. We want something else. Can we order fried rice separately?

Bearer : Oh, ok….. (She walked away from us quickly. We were wondering what she understood!)

After a couple of minutes, she came with some other lady who could speak better English. Both of us heaved a huge sigh of relief and explained her what we want. We learnt from her that they don’t serve fried rice separately. She also told us that we have to order a side dish and we get either fried rice or noodles(unlimited) free with it. The only veggie thing available was “Tofu” and we decided to order it. They use it as a substitute for meat. It looked like a big size paneer. Later I came to know that it is made out of the milky liquid extracted from soya beans. However, I didn’t like the taste. Rather than saying that it tasted bad, I should say that it didn’t taste anything at all!

In Chinese restaurants, another common thing is, they give you something called “fortune cookie” along with the bill. When you break it, you find a small strip of paper inside, which has a fortune or a luck message printed on it. The cookie tastes pretty good as well.




I’ve been to quite a few Chinese restaurants now and I see that their English is very unique and also, most of the Chinese people don’t know to speak proper English.

Observation 2 :

Coke vs Pepsi

I’ve tried out almost all fast food centers in my place – Carl’s Jr, McDonalds, Subway, Burger King, Taco Bell, KFC, Chipotle, Panda Express, etc. As far as I have seen, Coke is the predominant drink in most of the places. It’s a 80:20 ratio, with Coke being the highest. Here, they generalize all drinks as soda. When you ask for soda, mostly you get only coke. I could see Pepsi only in a very few places. I guess it’s the other way round in India.

Rest in next…

Signing off

Monday, July 07, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 10

நட்டும் பாலாவும் ஒரு வழியாக பள்ளியை அடைந்தனர். "ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்" பெருமூச்சு விட்டான் பாலா. மணி அடிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. வகுப்பில் இரெண்டு மூன்று பேர் மட்டும் இருந்தார்கள்.

"இந்த விஷயத்தை முதல்ல பசங்ககிட்ட சொல்லணும்" என்றான் பாலா.

"கிண்டல் பண்ணுவாங்க.... முக்கியமா கிருஷ்ணா ஓவரா பேசுவான்" என்றான் நட்டு.

"டேய், இப்போ அதுவா முக்கியம்? உனக்கு சைக்கிள் வேணுமா வேண்டாமா?"

நட்டு பதில் பேசவில்லை.

9.10 வரை யாருமே வரவில்லை. சரியாக மணி அடிப்பதற்கு இரெண்டு நிமிடங்களுக்கு முன்பு ஷங்கர், பாபு, குமார் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள்.

"என்னடா இவ்வளவு லேட்டு?" என்றான் பாலா.

"இன்னைக்கு ஒரு நாள் நீ சீக்கிரமா வந்துட்டு எங்களை கேள்வி கேக்குற" என்றான் பாபு.

"முக்கியமான விஷயம் பேசணும். நேத்து பிரச்சனை ஆயிடிச்சு"

"என்ன பிரச்சனை?" ஷங்கர் கேட்கும்போதே மணி அடித்தது. "சரி, இன்னைக்கு ஆத்தா பீரியட் இருக்கா??" என்றான்.

"இருக்கு. ரெண்டாவது பீரியட்" என்றான் பாலா.

"சரி, அப்போ பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு, எல்லோரும் பிரேயருக்குக் கிளம்பிச் சென்றனர். பிரேயர் முடிந்து வகுப்பிற்குத் திரும்புகையில், கிருஷ்ணா வழக்கம் போல தாமதமாக வந்து சேர்ந்தான்.

முதல் வகுப்பு, வகுப்பாசிரியையான வானதியின் வகுப்பு. அவர் வகுப்பில் பேசிக்கொள்ள முடியாது என்பதால், அடுத்த வகுப்பிற்காக அனைவரும் காத்திருந்தனர். மணி அடித்து அவர் வெளியே சென்றதும், அதற்காகவே காத்திருந்தது போல பாலா பின் வரிசையில் அமர்ந்திருந்த ஷங்கருக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

பத்து நிமிடங்கள் கழிந்த பின்னர், மாணவர்களால் 'ஆத்தா' என்று அன்பாக அழைக்கப்படும் வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார். அதற்குள் பாலா, ஒரே மூச்சில் நடந்ததை எல்லாம் கூறிவிட்டிருந்தான். ஆசிரியர் தன் நாற்காலியில் அமர, இவர்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.

"சைக்கிளை எடுக்கப் போகும் போது அந்தப் பசங்க பிரச்சனை பண்ணுவாங்க" என்றான் பாலா.

இதைக்கேட்டு முன்னால் அமர்ந்திருந்த நட்டிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

"டேய், அவனுங்களுக்கு இதே வேலையா? அதெல்லாம் பண்ண மாட்டாங்க" என்றான் ஷங்கர்.

"இல்ல டா, அவனுங்க அங்க தான் இருப்பானுங்க. அவனுங்க யாருமே படிக்கிற பசங்க இல்ல"

“Why am I hearing murmering noise?” என்று அதட்டினார் ஆசிரியர்.

"அதானே....ஆத்தா இன்னும் பஞ்ச் டயலாக் சொல்லலையேன்னு பாத்தேன்...." என்றான் பாபு.

சிறிது நேரம் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த மணிக்குமார், திருப்பதி லட்டு ஒன்றை எடுத்து, "திருப்பதி பிரசாதம்" என்று கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு உடனே எல்லோரும் பங்கு பிரித்து சாப்பிடத் தொடங்கினர்.

அப்போது, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர், அந்த வேலையை செய்தபடியே திடீரென்று மாணவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். அதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஷங்கரும் பாபுவும், அந்த லட்டின் பெரிய துண்டு யாருக்கு என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பாபுவிடம் சண்டை போட்டு, லட்டை வாங்கி 'டக்'கென்று வாயில் போட்டான் ஷங்கர்.

அப்போது, ஆசிரியர் “What is Nazism?” என்று கேள்வி கேட்டுவிட்டு, ஷங்கரை பதிலளிக்குமாறு கூறினார்.

வாயில் பெரிய லட்டை வைத்துக்கொண்டிருந்த ஷங்கர், அதை உடனே மென்று விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல் எழுந்து நின்றான். அவசர அவசரமாக பாபு, தன் நோட்டை எடுத்து அதற்கான விடையைத் தேடினான்.

ஷங்கர் வேகமாக லட்டை மென்று கொண்டிருக்க, பாபு அவன் நோட்டில் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் திருப்பி ஷங்கரிடம் காட்டினான். ஷங்கர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, " Come on, answer me, What are you having in your mouth?" என்று ஆசிரியர் கேட்க, ஷங்கர் "லட்டு" என்றான். ஆசிரியருக்குக் கேட்கவில்லை என்ற போதும், மாணவர்கள் இதைக் கேட்டு சிரிக்கத்தொடங்கினர். "ஏய்..." என்று ஒரு அதட்டு அதட்டிவிட்டு, ஷங்கரிடம் மறுபடியும் அந்த கேள்வியைக் கேட்டார்.

பாபுவின் நோட்டைப் பார்த்து, ஷங்கர் அந்த பதிலை ஒப்பிக்க, அவனை அமரச் சொன்னார் ஆசிரியர். பெருமூச்சு விட்டபடி அமர்ந்தான்

"ஒரு லட்டு சாப்பிட கூட நிம்மதி இல்ல..." என்றான் ஷங்கர்.

"இன்டெர்வல்-ல சாப்பிட்டிருக்கலாம்" என்றான் பாபு.

ஷங்கர்,"இன்டெர்வல்-ல சாப்பிட்டு இருந்தா, லட்டு சாப்பிட்டிருக்க முடியாது. பூந்தி தான் சாப்பிட்டிருப்போம். இதுக்கே இவ்வளவு அடிதடி..." என்றான்.

"லட்டை விடுங்கடா... என் சைக்கிளுக்கு ஒரு வழி பண்ணுங்க" என்றான் நட்டு.

"சைக்கிளை இன்னிக்கி சாயங்காலம் எடுத்துட்டு வந்துரலாம். எங்கேயும் போகாது" என்றான் ஷங்கர்.

"அவனுங்க பிரச்சனை பண்ணினா?"

"பண்ணட்டும். பாத்துக்கலாம்"

"வீட்டுக்கு எல்லாம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் டா..."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்குறேன்...." என்றான் ஷங்கர்.

ஏதோ திட்டம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அன்று மாலை பள்ளி முடிந்தவுடன், அனைவரும் நேராக பொருட்காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சைக்கிளுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை நோக்கிச் சென்றான் ஷங்கர்.

"நேத்து இங்கே சைக்கிளை விட்டுட்டு போயிருந்தோம். நைட் வீட்டுக்குப் போகும் போது எடுக்கல..." பேசி முடிப்பதற்குள், அவர் பேசத்தொடங்கினார்.

"ஓ... அந்த கேசா? நேரா போய் இடதுகை பக்கம் திரும்பு. அங்க 'சைக்கிள் பார்க்கிங்' காண்ட்ராக்ட் எடுத்தவரோட ஆபீஸ் இருக்கும். அங்க போய் கேளு.... உன் சைக்கிள் அங்கே இருந்தா தான் இருக்கும். நைட்டு எல்லாம் பாத்துக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல..." என்று எறிந்து விழுந்தார்.

அவர் கூறிய திசையில் செல்ல, அங்கு ஒரு சின்ன டென்ட் போடப்பட்டு இருந்தது.

"இதுவாத்தான் இருக்கணும்" என்றான் ஷங்கர்.

அதை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, ஷங்கரின் கையைப் பிடித்து நிறுத்தினான் பாலா...

அங்கே உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து, "நேத்து பிரச்சனை பண்ணது இவனுங்க தான் டா..." என்றான்.

தொடரும்...