Monday, June 30, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 9

இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத அந்தப் பெண்ணும் இவனுடன் சேர்ந்து அலற, அங்கு ஒரே ரகளையாகிப் போனது. சற்று நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் நட்டு வேகமாக அந்தப் பெண்ணிடமிருந்து விலகி, "ச... ச.... சா... சாரி..." என்று கூறினான். அந்தப் பெண்ணுடன் வந்திருந்த மற்ற மூன்று பெண்களும், செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். குமார், ஷங்கர், பாபு, கிருஷ்ணா, பாலா அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அவர்களுக்கும் நட்டு அப்படி செய்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அழுதுகொண்டிருந்த அந்தப் பெண் எந்த பதிலும் சொல்லாமல், வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். வழக்கம்போல எல்லாருடைய போதைக்கும் ஊறுகாய் ஆனான் நட்டு.

"என்னடா நீ... பேய் வீட்டுக்குள்ள போய் கட்டிப்புடிச்சி ரொமான்ஸ் பண்ற" என்று ஆரம்பித்தான் ஷங்கர்.

"பயத்துல தெரியாம அப்படிப் பண்ணிட்டேன்டா..... ச்ச..." என்றான் நட்டு.

"கட்டிப்புடிச்சது தான் புடிச்ச.... ஒரு நல்ல ஃபிகரா பாத்து கட்டிப்புடிச்சிருக்கக் கூடாது??" என்று கேட்டான் பாலா.

"டேய் மொட்டை... இருட்டுல அவனுக்கு கண்ணு தெரிஞ்சிருக்காது" என்று அவனுக்கு பதிலளித்தான் கிருஷ்ணா.

இப்படி ஒவ்வொருவரும் ரவுண்டு கட்டி நட்டை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக பொருட்காட்சியை சுற்றி முடித்தவுடன், அனைவரும் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.

"சரி டா... நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணாவும் பாபுவும் கிளம்பிச்சென்றனர். மற்ற அனைவரும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு, குமாரின் "டி.வி.எஸ். சேம்ப்"பில் ஷங்கரும் குமாரும் கிளம்பிச் சென்றனர்.

அப்போது திடீரென்று வாட்டசாட்டமான நான்கு பேர் வந்து நட்டின் முதுகில் வந்து கைவைத்தனர். இவர்கள் யார் என்று குழப்பத்துடன் நட்டு பார்க்க, மொட்டையும் யாரென்று தெரியாமல் குழம்பினான்.

"என் ஆளை நீ எப்படி டா கட்டிப்புடிக்கலாம்?" என்று அவன் பல்லை கடித்துக்கொண்டு கேட்க, உடனே மொட்டைக்கு எல்லாமே விளங்கியது.

"அவனா நீ???" என்று நினைத்துக்கொண்டான்.

நட்டு, அவனிடம் தான் பயத்தினால் தான் தெரியாமல் அப்படி செய்ததாக எவ்வளவோ கூறியும், அதை அவன் கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு முடிவுடன் வந்திருந்தவன் போல, நட்டைப் பிடித்து கீழே தள்ளினான். இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பாலா, நட்டை தூக்கிவிட்டு அவனிடம் சண்டைக்குப் போக, அந்தப் பையனுடன் வந்திருந்த மற்ற மூவரும் அடிக்க வந்தனர். அவர்களைப் பார்த்தால் பள்ளி மாணவர்கள் போல தெரியவில்லை.

இது, மெல்ல அங்கிருந்த கூட்டத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தது. கூட்டம் இவர்களை கவனிக்கத் தொடங்குவதை உணர்ந்து, அவன் "நீங்க எந்த ஸ்கூல்ன்னு எனக்குத் தெரியும் டா, எங்க எரியாவத் தாண்டி தானே போவீங்க.... அப்போ வெச்சிக்கிறேன் உங்களை" என்று சொல்லிவிட்டு, அவர்களுடன் கிளம்பிச் சென்றான்.

கீழே விழுந்து எழுந்ததில் அவமானப்பட்டிருந்த நட்டிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சீக்கிரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்பதற்காக, வேக வேகமாக மொட்டை, சைக்கிள் டோக்கனைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான்.

"சைக்கிள்ல ஏறு"

பதிலேதும் பேசாமல் சைக்கிளில் ஏறினான். நட்டு பேயறைந்தது போலிருந்தான். பாலாவும், எதுவுமே பேசாமல் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான்.

"நாளைக்கு காலையில பேசிக்கலாம்....வீட்ல யார்கிட்டயும் எதுவும் காட்டிக்காத" சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் பாலா.

நட்டிற்க்குத் தூக்கமே வரவில்லை. அத்தனை கூட்டத்திற்கு முன் அவன் கீழே தள்ளிவிடப்பட்டது அவமானமாக இருந்தது. தான் செய்த ஒரு காரியத்தினால் இவ்வளவு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் மீதே அவனுக்குக் கோபமாக வந்தது. நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சும்மாவே கிண்டலடிப்பார்கள், இதை வேறு சொன்னால் அவ்வளவுதான் என்று அதை நினைத்து பயமாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க, "எங்க ஏரியா பக்கம் வா, உன்னைப் பாத்துக்குறேன்" என்று அவன் மிரட்டியதும் பயமாக இருந்தது.

"நட்ராஜ்.... உன் சைக்கிள் எங்கே?" - அப்பாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தான் நட்டு. போர்வையை விலக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினான். வழக்கமாக சைக்கிளை நிறுத்தும் இடத்தில் சைக்கிளைக் காணவில்லை. ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று, முதல் நாள் பொருட்காட்ச்சிக்குப் போனதும், திரும்பி வரும்போது மொட்டையுடன் வந்ததும் ஞாபகம் வந்தது.

"ஐயையோ..... சைக்கிளை அங்கேயே விட்டுட்டேன்" என்று தலையில் அடித்துக் கொண்டான் நட்டு. நட்டின் அப்பா மீண்டும் வந்து, "சைக்கிள் எங்கப்பா காணும்?" என்று கேட்டார்.

"பாலா வீட்டுல இருக்குப்பா... பஞ்சர் ஆயிருச்சின்னு அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்" - கஷ்டப்பட்டு நம்பும்படியான ஒரு பொய்யை அவிழ்த்து விட்டான் நட்டு. உடனே மொட்டைக்கு போன் செய்தான்.

"டேய், நான் தான்... என் சைக்கிளை எக்ஸிபிஷன்லையே விட்டுட்டேன்" என்றான் நட்டு.

"அடப்பாவி.... எப்படி டா அதை மறந்துட்டு என்கூட வந்த?"

"அந்த டென்ஷன்ல மறந்துட்டேன். இப்போ சைக்கிள் உங்க வீட்டுல இருக்குறதா எங்க வீட்ல சொல்லிருக்கேன். நீ வந்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போ"

"வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு பொய் சொல்லியிருக்க. சரி, 8.45 க்கு வர்றேன். ரெடியா இரு"

"சரி, டேய்.... என் சைக்கிள் அங்க பத்திரமா இருக்குமா?"

"டேய், அதை எடுத்துட்டுப் போய் என்ன பண்ண முடியும்? பேரீச்சம்பழத்துக்காக யாரும் அவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க"

"ஓவரா பேசாத. சீக்கிரம் வா"

ஃபோனை துண்டித்துவிட்டு மின்னல் வேகத்தில் கிளம்பினான் நட்டு. அதிசயமாக, சொன்ன நேரத்தில் வந்து நின்றான் பாலா.

சைக்கிளின் பின்னால் அமர்ந்துகொண்டு தன் சைக்கிளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தான் நட்டு.

"இப்போவே போகலாமா?"

"இப்போ அங்க யாரும் இருக்க மாட்டாங்க. அதுமட்டும் இல்ல... ஸ்கூலுக்கு லேட் ஆயிடும்...."

"பயம்மா இருக்கு டா..."

"சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்ச உடனே நேரா எக்ஸிபிஷனுக்குப் போயிருவோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு" என்று கூறிவிட்டு பெடலை மிதித்தான் மொட்டை.

"எங்க ஏரியா பக்கம் போகும்போது பாத்துக்குறேன்ன்னு வேற மிரட்டினானே அவன். அவங்க ஏரியா எதுவா இருக்கும்?" என்று கேட்டான் நட்டு. உடனே பிரேக்கைப் பிடித்து சைக்கிளை நிறுத்தினான் மொட்டை.

"ஆமாம் டா... எனக்கு மறந்தே போச்சு. அடிவாங்குறதுக்கு என்னை வேற கூட்டு சேத்துக்குறியா நீ? எதுக்கும் நம்ம வேற வழியில போகலாம்" என்று கூறிவிட்டு பயத்துடன் சைக்கிளை வேறு வழியில் செலுத்தத்தொடங்கினான் பாலா.

தொடரும்...

Thursday, June 26, 2008

THE NAME IS RAJINIKANTH - Biography of the Super Star



The first picture is the actual front cover of the book and the second one is designed by me. I would've liked it much better this way.

I have never even dreamt of writing a review for a book, since me and books have always been poles apart. Since childhood, reading is one habit which my mom wanted me to cultivate, but for some reason I have always been devoid of books. Though I started reading so many books earlier, I have successfully completed only three books so far. If a book has to engage me, either it has to be extremely interesting or it should be about something which I am already interested at. The other books I have read so far – “The Da Vinci Code” (Controversies of any kind attract me more than anything else) and “Harvesting our souls” by Arun Shourie (Loved this book. Probably the best controversial flick one can ever read)

The third one is a biography and I wasn’t really concerned about the nature of the book since it was about the one and only SUPER STAR RAJINIKANTH. Any damn thing which is labelled “SUPER STAR RAJINIKANTH” would catch my attention and this book is no exception. Right from the day it was released, I was very keen to grab one copy as every other die hard thalaivar fan. Anyhow, it took sometime to reach me all the way from India. As soon as I got it, I started reading it and completed in two strokes. I am not a kind of person who keeps reading chapter by chapter for days together. First of all, thanks to Dr.Gayathri for putting up a great effort to bring out such a good book. It was a very good and neat compilation of incidents and facts.

Here goes my review...


Happy about

- The way Dr.Gayathri has presented this book. The book unfolds with the box office record of “Sivaji – The Boss” and thalaivar’s birth, both running parallel in alternate chapters.
- The Preface is excellent, which is the most important part of this entire book. It summarizes about the “Rajini Mania” and the intensity of his impact with all age groups. Even a stranger can understand why is this man always considered as "larger than life".
- The pain the author has taken to bring out small incidents especially during thalaivar’s childhood was clearly felt. Truly a great effort.
- The book has turned out to be a genuine biography, as the author has neither exaggerated, nor downplayed the incidents for the sake of sensationalism.
- Crisp narration. The writing style was different and good.
- Unearthing the facts about the differences thalaivar had with the politicians. For people who knew only a little about it with the light thrown by media, this book helps them to know what really happened. After reading this, one can really understand how misleading the newspapers can be at times.
- Open narration about thalaivar’s nervous breakdown and the incidents followed. Anyhow, it is a known fact that thalaivar never cares about his image and he has already spoken about it. Not everybody can talk about such things in public, especially despite being such a big star.
- Though his spiritual inclination is a known thing, this book explains it very well and also from where he got it.
- A complete 360 degree coverage around his family and also mentioned are the few things like Aishwarya Rajinikanth’s crush on Simbu, etc.,

Disappointed about

- Horrible spelling mistakes throughout the book. Quite a lot of them. Sometimes very irrirating as the movie names were also mentioned wrong in a few places.
- The pictures inside the books are good, but nothing great. Most of them already seen.
- The front cover of this book. Could have opted for a much better picture.
- Though the book has covered most of them, incidents like Manorama’s apology episode are missing.
- Most of thalaivar’s childhood episodes are interesting, but somehow fails to engage at times.
- Should have had more information about his relationship with his fans and may be a few incidents depicting them.
- Appendix 1 deals about Rajini’s important movies in his career, but a few of the movies are left out.
- Could’ve added some interesting information about what kind of relationships does he share with other leading actors like Vijayakanth, Sharath Kumar, etc.
- No information about the dropped movies (except Jaggubhai) in his career. It would've been interesting if some of those informations were given.
- No statistical information and milestones such as Rajini’s first ever color film, his first ever silver jubilee, etc.,

Overall, a worth read for every one and a must read for all thalaivar fanatics like me!

Monday, June 23, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 8

அனைவரது பார்வையும் பாபுவின் கை மீதே படிந்திருந்தது. அந்த அரங்கமே மௌனத்தில் மூழ்கியிருக்க, மேஜிக் நிபுணர் மட்டும் வாயில் வந்ததை மந்திரம் என்ற பெயரில் உளறிக்கொண்டிருந்தார். பாபு அதை மெல்ல வெளியில் எடுக்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. கையில் 'பிரா'வுடன் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தான் பாபு.

கையில் அதை பிடித்துக் கொண்டு, கூச்சத்தில் பாபு நெளிந்து கொண்டிருக்க, கிருஷ்ணா, மொட்டை, குமார், ஷங்கர் மற்றும் நட்டு ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். மேடையில் நின்றுகொண்டிருந்தபடியே அவர்களைப் பார்வையிலேயே பொசுக்கினான் பாபு. பற்றாக்குறைக்கு அந்த மேஜிக் ஆசாமி வேறு, "இந்த வயசுல நீ இதை நினைச்சுக்கிட்டியா" என்று கேட்டு ஜோக்கடிக்க, பாபுவின் முகம் கோபத்தால் சிவந்தது. ஒருவழியாக கைதட்டல் மற்றும் சிரிப்பலை அடங்கியதும், பாபு இறங்கி நேரே அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தான். மக்கள் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. சிறிது நேரத்தில் அடுத்த மேஜிக் வித்தையைக் காட்ட ஆரம்பித்தவுடன், மக்களின் கவனம் அதில் திரும்பியது. பாபு யாருடனும் பேசவில்லை. மேஜிக் ஷோ முடிந்ததும், கூட்டம் கலையத் துவங்கியது. ஆறு பெரும் வெளியில் வந்து நடந்துகொண்டிருந்தனர். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் சிரிப்பை மட்டும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தனர். அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக, மொட்டை, பாபுவிடம்

"டேய், 'பிரா' வெறும் பத்து ரூபா தானா??" என்று கேட்க, அனைவரும் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தனர்.

அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த பாபு, மொட்டையை துரத்தித் துரத்தி அடிக்கத் தொடங்கினான். கரும்புச்சாறு விற்கும் கடையை சுற்றி ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டு ஓட, அங்கு இருந்த கூட்டம் இவர்களை வேடிக்கை பார்க்கத்தொடங்கியது. ஓடிக்கொண்டிருந்த பாபுவை ஷங்கர் முதலில் பிடிக்க, மொட்டையை கிருஷ்ணா பிடித்தான். இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்தனர்.

"டேய், எனக்கு குஷ்பூ அப்பளம் வேணும்" என்றான் மொட்டை.

"சரி, நான் வாங்கிட்டு வர்றேன்" என்று கிளம்பினான் கிருஷ்ணா.

"அப்படியே எனக்கு மிளகாய் பஜ்ஜியும் வாங்கிட்டு வா" என்றான் ஷங்கர். "சரி" என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான் கிருஷ்ணா. பாபு,ஓரளவிற்கு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.

"அந்த மேஜிக் பண்ணுறவன் மட்டும் என் கையில கிடைச்சா..... சங்கு ஊதிருவேன்" என்று கர்ஜித்தான்.

"சரி சரி, விடு" என்று சமாதானப் படுத்தினான் குமார்.

"டேய், நீ பேசாத. வேணும்னே சதி பண்ணியிருக்க நீ" என்றான் பாபு.

"சும்மா ஒரு ஜாலிக்கு தான் டா..." என்று குமார் சமாதானம் கூறுவதற்கும், கிருஷ்ணா பஜ்ஜி மற்றும் அப்பளத்துடன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

அனைவரும் கைவைத்த மாத்திரத்தில் பஜ்ஜி, அப்பளம் எல்லாம் கண நேரத்தில் காணாமல் போனது.

"உண்மையிலையே நீ பத்து ரூபாயைப் போட்டுட்டு என்ன வரணும்ன்னு நெனச்சிக்கிட்ட??" என்று மீண்டும் ஆரம்பித்தான் நட்டு.

"கிரீட்டிங் கார்டு" வரணும்ன்னு நெனச்சிக்கிட்டேன் என்று அவனுக்கு பதிலளித்து விட்டு, வேகமாக எழுந்தான்.

"டேய், அந்த ராட்டினத்துல ஒரு ரவுண்டு போகலாம்" என்றான் பாபு. ஷங்கரும் குமாரும் மட்டும் சம்மதிக்க, கிருஷ்ணா, மொட்டை மற்றும் நட்டு ஆகியோர் ராட்டினத்தில் ஏற விருப்பப்படவில்லை.

அவர்கள் மூவரும் ராட்டினத்தில் ஏற, இவர்கள் மூவரும் கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.

காலகாலமாக எல்லா பொருட்காட்சிகளிலும் தென்படும் கடைகளான கம்ப்யூட்டர் ஜோசியம், மூணு 10 ரூபாய் பிளாஸ்டிக் சாமான்கள் கடை, கீ-செயினில் பெயரைப் பதிந்து கொடுக்கும் கடை, போஸ்டர்கள் விற்கும் கடை போன்றவற்றை ஒரு சுற்று சுற்றிவிட்டு கிருஷ்ணா, நட்டு மற்றும் மொட்டை ஆகியோர் மீண்டும் அந்த ராட்டினம் சுற்றும் இடத்திற்கே வந்து நின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மூவரும் அந்த ராட்டினத்தில் சுற்றி முடித்துவிட்டு அருகில் இருந்த இன்னொரு ராட்டினத்தில் ஏறி விட்டிருந்தனர்.

அதையும் முடித்துக்கொண்டு மூவரும் இறங்கி வந்தவுடன்,

"டேய், நாகக்கன்னி பாக்கலாம் டா...." என்றான் மொட்டை.

"அதுல என்னடா இருக்கு" என்று ஷங்கர் அலுத்துக்கொண்டாலும், அனைவரும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர்.

தரையில் ஆற்றுமணலை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய பெட்டியை வைத்திருந்தனர். அந்தப் பெட்டியின் மீது, ஒரு கன்னியின் தலை மட்டும் வெளியில் தெரிய, மீதி உடம்பு பாம்பின் உடம்பாக இருந்தது.

"இந்தப் பொண்ணு உட்கார்ந்திருக்கா, இல்ல படுத்திருக்கா?"

"ஒரு வேளை ஊனமா இருக்குமோ??"

"இல்ல... அது டீ குடிக்க வரும்போது நான் பாத்திருக்கேன். நல்லா நடக்குது"

இப்படி ஒவ்வொரு வருடம் பொருட்காட்சிக்கு வரும்போதும், அந்த வெறும் கன்னியை எப்படி 'நாகக்கன்னி' ஆக்கியிருப்பார்கள் என்று ஆராய்ந்து தோற்றுப்போவார்கள்.
கொஞ்சம் தூரத்தில் நின்று அந்த நாகக்கன்னியைப் பார்த்து ஏதாவது பேசி வம்பிழுப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

"ஏய்... உன் வாலை ஆட்டு, பாக்கலாம்" என்றான் குமார்.

"என்ன முறைக்கிற?? மூஞ்சியிலேயே குத்துவேன்" என்று ஷங்கர் கையை ஓங்க,

"டேய், கொஞ்சம் சும்மா இருங்கடா... மானம் போகுது" என்று அவர்களை அடக்கினான் கிருஷ்ணா.

இவ்வளவு பேச்சுகளையும் வாங்கிக்கொண்டு, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் சிவனே என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த "நாகக்கன்னி"

அது முடிந்து வெளியில் வரவும் அவர்கள் கண்களில் தென்பட்டது, "பேய் வீடு"….

இதை மட்டும் விட்டுவைப்பானேன் என்று அதற்குள்ளும் செல்ல முடிவு செய்தனர். டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு காரிருள் சூழ்ந்திருந்தது. இருட்டில் மூழ்கியிருந்த அந்த இடத்தில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். பயத்தை போக்க, பாபு, கிருஷ்ணா, குமார் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டே வந்தனர். அந்த இருட்டில், திடீரென்று ஒரு மண்டை ஓட்டின் மேலே சிகப்பு விளக்கெரிய, நட்டு பயந்து "ஆ...." என்று அலறினான். சிறிது நேரத்தில் அந்த விளக்கு அணைந்து விட, அனைவரும் நட்டை கிண்டலடிக்கத் தொடங்கினார்.

மேலும் சில அடிகள் முன்னேறியவுடன், மூலையிலிருந்து ஒரு உருவம் திடீரென்று அவர்கள் முன் பாய்ந்து பயமுறுத்த, அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். நட்டு ஒரு படி மேலே சென்று, அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த பெண்ணை இறுக்கமாக கட்டிப்பிடித்து அலறத்தொடங்கினான்.

தொடரும்....

Wednesday, June 18, 2008

அமெரிக்கா டைரி - 'சனி'விளையாடல்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பரந்து விரிந்து கிடக்கிறது சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையம். நண்பர் ஒருவர் பாஸ்டன் போவதால், அவரை வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இரவு 10.30 மணிக்கு San Jose (சான் ஓசே என்று உச்சரிக்க வேண்டும்) விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக இருந்தது. மாலை 7.30 மணி வாக்கில் 'தோசை பிளேஸ்' இல் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், நண்பருக்கு திடீரென்று வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், இரவு 2 மணிக்கு அடுத்த விமானத்தில் தான் பயணிக்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், 10 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒரு விமானம் புறப்படுவதாகவும், விருப்பப்பட்டால் அங்கு சென்று ஏறிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இரவு இரெண்டு மணி விமானத்தில் பயணித்தால் லேட்டாகிவிடும். அவருக்கு அடுத்த நாள் பாஸ்டனில் முக்கியமான வேலை இருந்தது. இங்கிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு காரில் செல்ல 40 நிமிடங்கள் ஆகும். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று, நேராக வீட்டிற்கு சென்று, பெட்டிகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு கிளம்பினோம்.

ஏற்கெனவே தனக்கும் விமான பயணத்திற்கும் ராசியே இல்லை என்று புலம்பிக்கொண்டிருப்பவர், இந்தத் தகவலைக் கேட்டதும் மறுபடியும் புலம்பத் துவங்கினார். அப்படி என்னதான் ராசி என்று தெரிந்துகொள்வதற்காக, அவரிடம் அது பற்றிக் கேட்டேன். விமான நிலையம் செல்லும் வழியில் அவர் கூறியதாவது....

ஒவ்வொரு முறை அவர் விமானத்தில் பயணிக்கும் போதும் ஏதாவது ஒரு எதிர்ப்பாராத காரணத்தால் ஒன்று அவரால் பயணிக்க முடியாமல் போகும், அல்லது விமானத்தால் பறக்க முடியாமல் போகும். அவருக்கு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் - பஃபல்லோ(சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், Buffalo தான்) விமான நிலையத்திலிருந்து கலிஃபோர்னியா வருவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது, விமானம் ரத்து செய்யப் பட்டது தெரிந்து மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த விமானம் அடுத்த நாள் தான் என்பதால், அடுத்த நாள் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து ஒரு வழியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்து விட்டிருக்கிறார். எவ்வளவு நேரம் ஆகியும் விமானம் புறப்படுவதாக இல்லை. நீண்ட நேரம் கழித்து ஒரு அறிவிப்பு - "விமானத்தின் இன்ஜினை இயக்க தேவைப்படும் கார்டு ஒன்றைக் காணவில்லை, அதை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம், கிடைத்தவுடன் விமானத்தை இயக்கிவிடுவோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று! கேட்டுக்கொண்டிருந்த எனக்கே "என்ன கொடுமை சார் இது?" என்று தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. விமானத்தில் உட்கார்ந்திருந்த அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துப் பார்க்க முடிந்தது.

சரி, மீதிக் கதையைக் கேளுங்கள்.... மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்துவிட்டு, "மன்னிக்கவும், எவ்வளவு தேடியும் அந்த கார்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். அதனால், இந்த விமானப் பயணம் ரத்து செய்யப்படுகிறது" என்று. "அடப்பாவிகளா... என்னமோ கடலை மிட்டாயைத் தொலைச்ச மாதிரி சொல்லறீங்க" என்று கடுப்பாகிவிட்டார் நண்பர். கடவுள் புண்ணியத்தில் அடுத்த இரெண்டு மணிநேரத்திலேயே வேறு விமானத்தில் பயணிக்க ஏற்ப்பாடு செய்து தரப்பட்டு, ஒரு வழியாக வந்து சேர்ந்திருக்கிறார். இவர் சோகக்கதையை என்னிடம் சொல்லிக்கொண்டே வரும்போது திடீரென்று நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில் பயங்கர டிராஃபிக். அதுவரை காற்றாக பறந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் மெதுவாக ஊர்ந்து செல்லத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் டிராஃபிக் நின்றுகொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு இன்னும் பத்தே நிமிடங்களில் சென்று பெட்டியை செக்-இன் செய்யாவிட்டால், அந்த விமானத்தில் பயணிக்க முடியாது.

பத்து நிமிடங்களில் சென்று சேர்வது இயலாத காரியமாக இருந்ததால், அவர் பயணிக்கும் விமானமான "ஜெட் ப்ளூ" அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, வழியில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தால், ஒரு பத்து நிமிடம் தாமதமாக அவர் வரும் வரை காத்திருப்பார்கள் என்று இன்னொரு நண்பர் கூறியதும், கடைசி முயற்சியாக அதையும் செய்து பார்த்துவிடலாம் என்று முயற்சித்துப் பார்த்தார். ஆனால், யாருமே போனை எடுக்கவில்லை. அவர் இந்த முறை, என்னைப் பார்த்து, "என்ன கொடுமை கௌரி இது?" என்றார். அடித்து பிடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குள் நுழைந்தோம். உள்நாட்டு விமானங்கள் புறப்படும் "டொமெஸ்டிக் டெர்மினல்"இல் வண்டியை செலுத்தி, அவர் செல்ல வேண்டிய "ஜெட் ப்ளூ" எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் அது கிடைக்கவே இல்லை. தேடிக்கொண்டே, விமான நிலையத்தின் முடிவிற்கு வந்து விட்டோம். அது ஒரு வழிப்பாதை என்பதால், ஒரு முறை சுற்றி மீண்டும் நுழைந்தோம். இந்த முறை ஜாக்கிரதையாக யாரிடமாவது கேட்டுக்கொண்டு செல்லலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக ஓடிச்சென்று ஒருவரிடம் கேட்டபோது, அது "இண்டெர்நேஷனல் டெர்மினலில்" இருப்பதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். நண்பரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஏற்க்கெனவே பத்து நிமிடங்கள் தாமதம், இன்னும் டெர்மினலை அடைந்த பாடில்லை. "நான் எங்கே போனாலும், சனியன் என் கூடவே வருது" என்று மீண்டும் புலம்பத் தொடங்கினார் நண்பர். மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றி, இண்டெர்நேஷனல் டெர்மினலை அடைந்தோம். உள்ளே நுழைந்தவுடன் "ஜெட் ப்ளூ" தென்பட்டது. வண்டியை விட்டு இறங்கியதும், நண்பர் திரும்பிப் பார்க்காமல் ஓட, அவர் பெட்டியை இழுத்துக் கொண்டு நானும் அவருடன் ஓட, ஒரு வழியாக செக்-இன் செய்து முடித்தார். நல்ல வேளையாக இவருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். "பாத்தீங்களா, இனிமே உங்களுக்கு நல்ல காலம் தான். இவ்வளவு லேட்டா வந்தாலும் ஃப்ளைட்டை புடிச்சிட்டீங்க" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு வந்தேன். பார்க்கிங் இல்லை என்பதால், காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்த இன்னொரு நண்பர் மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றிக்கொண்டு வருவதற்காக சென்றிருந்தார். சிறிது நேரத்தில் அவர் வந்ததும், காரில் ஏறி புறப்பட்டோம்... "இந்த ஏர்போர்ட்டை சுத்துனதுக்கு கோவிலை சுத்தியிருந்தா புண்ணியமாவது கிடைச்சிருக்கும்" என்றார் அவர்.

அவர் சென்றடைந்த தகவலைப் பற்றி மற்றுமொரு நண்பரிடம் விசாரித்தபோது, இங்கிருந்து கிளம்பி நியூ யார்க் வரை சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து பாஸ்டனுக்கு செல்ல வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் ரத்தானதால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு தலை சுற்றியது...!

"சனியன் சுத்தி சுத்தி அடிக்குது" என்று அவர் அடிக்கடி கூறும் வசனம் நினைவிற்கு வந்தது!

Monday, June 16, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 7

அனைவரும் நட்டிற்காகவும் மொட்டைக்காகவும் காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நட்டு அங்கு வந்து சேர்ந்தான்.

பாபு, கிருஷ்ணாவிடம், "என்ன விஷயம், சொல்லு" என்றான்.

"இரு டா, மொட்டை வந்துரட்டும். அப்புறம் ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனியா சொல்லிக்கிட்டு இருக்கணும்"

"அவன் சொன்ன நேரத்துக்கு என்னைக்கு வந்திருக்கான்? எத்தனை மணிக்கு டா வரேன்னு சொல்லிருக்கான்?" என்று நட்ராஜிடம் கேட்டான்.

"5.30க்கு வரேன்னு சொன்னான்" என்றான்.

"அப்படின்னா, 6.30க்கு மேல தான் வருவான். டேய், நம்ம ஊர்ல பொருட்காட்சி வந்திருக்கு, சீக்கிரமா கிளம்பினா போகலாம்."

"அந்த நாய்க்கு ஒரு போனைப் போடு டா" என்றான் ஷங்கர்.

வரிசையாக ஒவ்வொருவரும் வசை பாட ஆரம்பிக்கும்போது, "திட்ட ஆரம்பிச்சிருப்பீங்களே...." என்று சொல்லிக்கொண்டே சரியாக அங்கு வந்து நின்றான் மொட்டை.

அவன் வந்ததும், கிருஷ்ணா எழுந்து சென்று, அந்த ரூமின் கதவை அடைத்தான். அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிருஷ்ணாவைப் பார்க்க, அவன் நடுவில் வந்து அமர்ந்து கொண்டு,

"நான் ஒரு பொண்ணை லவ் பண்ணறேன், பேரு சைரா பானு" என்று சொல்லிவிட்டு, அனைவரையும் உற்றுப் பார்த்தான்.

நட்டும் மொட்டையும் ஏதோ ஜோக் சொன்னது போல, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். குமார், பாபு மற்றும் ஷங்கர் மட்டும் அமைதியாக இருந்தது கிருஷ்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை நோக்கி, "என்னடா நீங்க மட்டும் ரியாக்ஷனே காட்டாம இருக்கீங்க?" என்றான்.

"உங்க அம்மா சொன்னாங்க" என்று பதிலளித்தான் ஷங்கர். ஷங்கர் இப்படி கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட கிருஷ்ணா, "எப்போ சொன்னாங்க, என்ன சொன்னாங்க?" என்றான். நட்டும் மொட்டையும் சிரிப்பதை நிறுத்திவிட்டு, ஷங்கரை கேள்விக்குறியோடு பார்த்தனர்.

"நீ முதல்ல சொல்லு" என்றான் ஷங்கர்.

"பொண்ணு பேரு சைரா பானு. கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவளை தான் பண்ணிப்பேன்" . அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, "அப்படின்னு எங்க அம்மாகிட்ட கதை விட்டிருக்கேன்" என்று முடித்தான்.

"அதானே பாத்தேன். நம்ம கதையில சீரியஸ் எபிசோட் வர வாய்ப்பே இல்லையேன்னு நெனச்சேன். சரியா போச்சு." என்றான் பாபு.

ஷங்கர், "எதுக்கு டா இப்படி கதை விட்ட? உங்க அம்மா ரொம்ப ஃபீல் பண்ணறாங்க. எனக்கு போன் பண்ணியிருந்தாங்க...."

"அட்வைஸ் பண்ணறேன்னு சொல்லி டார்ச்சர் போட்டாங்க டா. என்னமோ நம்ம ஸ்கூல்ல எங்க பாத்தாலும் ஃபிகருங்க இருக்குற மாதிரியும், நாம என்னமோ அதுங்க பின்னாடியே சுத்துற மாதிரியும் ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே நம்ம எல்லாரும் காய்ஞ்சி போயிருக்கோம்... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுன மாதிரி இப்படி அட்வைஸ் பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டேன். அதனால தான் இப்படி ஒரு பிட்டைப் போட்டேன்" என்று அவன் கற்பனைக் காதல் கதையைப் பற்றி சொல்லி முடித்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும், அது என்ன சைரா பானு?"

"அதுவா... திடீர்னு என்ன பேரு சொல்றதுன்னு தெரியல. அப்போ டிவியில "பம்பாய்" படம் ஓடிக்கிட்டு இருந்தது. அதுல மனிஷா கொய்ராலா பேரு சைரா பானு, டக்குன்னு அந்த பெயரையே என் லவ்வருக்கும் வெச்சிட்டேன்"

"தட்டை எல்லாம் விசிறியடிசிருக்க?"

"அது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆகிப்போச்சு...."

"இதெல்லாம் எதுக்கு?"

"டேய், நம்மள மாதிரி நல்ல பசங்களோட அருமை இவங்களுக்கு புரியணும்னா, இப்படி எதாச்சும் அதிர்ச்சி வைத்தியம் பண்ணனும். கொஞ்ச நாளைக்கு இப்படி பில்ட்-அப் கொடுத்துட்டு, அப்புறம் இல்லைன்னு சொல்லிடலாம். எங்க அம்மா உங்க யாரகிட்ட இதைப்பத்தி கேட்டாலும், ஆமாம்ன்னு சொல்லுங்க."

"அதெல்லாம் முடியாது. நான் உண்மையை சொல்லிடுவேன்" என்றான் ஷங்கர்.

"நீ அப்படியே சொல்லு, ஆனாலும் எங்க அம்மாக்கு அந்த பயம் இருந்துகிட்டே தான் இருக்கும்... என்னைத் தவிர யார் சொன்னாலும் அவங்க சந்தேகம் முழுசா தீராது"

"அட தூ..." என்று அனைவரும் துப்பினார்கள்.

"டேய், அப்போவே நான் சொன்னேனே? சும்மா சப்பை மேட்டரா இருக்கும்ன்னு. கிளம்புங்கடா, அட்லீஸ்ட் எக்ஸிபிஷனுக்குப் போகலாம்" அனைவரையும் அவசரப் படுத்தினான் பாபு.

"இப்படி எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு மொக்கை போட்டதுக்கு, நீ தான் எல்லாருக்கும் மிளகாய் பஜ்ஜியும், குஷ்பு அப்பளமும் வாங்கித் தரனும்" என்றான் பாலா.

"வாங்கித்தரேன். அதுக்கு தானே நீ வர்ற...."

பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த பொருட்காட்சி. சினிமா தவிர வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாத ஊரில், இப்படி பொருட்காட்சி நடைபெற்றால், திருவிழாக் கூட்டமாக இருக்கும்.

"ஐயோ... என் பர்ஸை மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்" என்றான் நட்டு.

"கூட்டத்தை வேடிக்கைப் பாத்துக்கிட்டே, எங்களை மறந்துட்டு எங்கேயும் போயிடாத, அது போதும்" என்றான் கிருஷ்ணா.

"செம கூட்டம், ஊர்ல இருக்குற அத்தனை பிகரும் வெளியில வர்ற ஒரே சமையம் இது தான்..." என்றான் குமார். அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அவன் இந்த பொருட்காட்சிக்கு வருவது இரெண்டாவது முறை. அவன் ஏற்கெனவே ஒரு முறை வந்திருந்து அனைத்தையும் பார்த்துவிட்டிருந்தாலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் "மேஜிக் ஷோ"வில் பாபுவை பங்கு பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஷங்கரிடம் அதைப் பற்றி முதலிலேயே கூறியிருந்தான். அதன்படி, நேராக "மேஜிக் ஷோ"விற்குள் நுழைந்தார்கள்.

மேஜிக் செய்பவர் ஒவ்வொரு வித்தைகளையும் செய்து காட்டும் போது கை தட்டல் காதைக் கிழித்தது. அப்போது, மெதுவாக பாபுவிடம் குமார் "அடுத்த மேஜிக் செய்யும் போது, பார்வையாளர்கள் யாரையாவது கூப்பிடுவார். அதுக்கு நீ போ" என்றான்.

"ஏன் டா?" என்று கேட்டான் பாபு.

"ஒரு பையில பத்து ரூபாயைப் போட்டு, நீ மனசுல என்ன நெனச்சிக்கிட்டாலும் அதை எடுத்துக் கொடுக்கிறார். நேத்து கூட ஒரு சின்னப் பையன் கைக்குட்டை வேணும்ன்னு நெனச்சிக்கிட்டான்... சரியா எடுத்துக் கொடுத்தார் டா... நீ அவரால எடுத்துக் கொடுக்க முடியாததா நெனச்சிக்கோ" என்றான் குமார்.

குமார் சொன்னதில் ஆர்வமான பாபு, என்ன பொருளை நினைத்துக் கொள்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். அதற்குள், அந்த மேஜிக் கலை நிபுணர், பார்வையாளர்களில் இருந்து யாரையாவது அழைக்க, பாபு அவசர அவசரமாக கையைத் தூக்கினான். அதிர்ஷ்ட்டவசமாக, பல பேர் கையைத்தூக்கிய போதும், பாபுவை தேர்ந்தெடுத்தார் அவர். குஷியான பாபு, மேடை மீது ஏறி நின்றான்.

குமார் சொன்ன மாதிரியே ஒரு பையைக் காட்டி, அதற்குள் பத்து ரூபாயை போடச் சொன்னார். பின்பு, பத்து ரூபாய் பெருமானமுள்ள ஏதேனும் ஒரு பொருளை நினைத்துக் கொண்டு, கண்ணை மூடி, அந்த பைக்குள் கையை விடச் சொன்னார்.

பாபுவும் அவர் சொன்னபடி, கண்ணை மூடி அந்த பைக்குள் கையைவிட்டான். அந்த மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரத்தை சொல்லி, "இப்போ நீ நினைத்த பொருள் பைக்குள் வந்தாச்சு. மெதுவா அதை வெளியில் எடு" என்றார்.

கூடிருந்த கூட்டம் மொத்தமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பாபு அதை மெல்ல வெளியில் எடுத்தான்...

தொடரும்......

Friday, June 13, 2008

Dasavatharam - Hail Kamal, not the movie.


I hate to write movie reviews, but yet I wanted to write about this movie - Dasavatharam, which is probably the most anticipated movie after Sivaji.

Note : For those who know about me, please do not consider this review as biased just because am a hardcore Rajini fan. I was also very anxiously awaiting the movie just as any other Kamal fan. Another thing to be emphasized is, am a die-hard Rajini fan, but that doesn't mean that I am a Kamal hater. I am writing this review as a normal fan, who carries the usual expectations about such a big film.

Now, the review....
Century Berryessa 10, San Jose, California - This is the theatre where I watched Dasavatharam. It was the very first show in the USA, but the tickets were available at the counter at 9pm for 9.30 show. It might be because the next day is a working day. However, the theatre was full when the movie started.

I'm not going to narrate the story here as there is nothing significant to be narrated as such. It's all about Kamal in the movie. The first twenty minutes of the movie seemed to justify the hype created, but sadly there ends the fascination. After that, its all about drama, chasing and usual cinema stuff. The biggest disappointment comes in the form of the way the story has been handled. It could have been much much better.

Kamal scores full marks as usual, but out of his ten characters, I would give maximum marks only to Rangarajan Nambi, Balram Naidu, Poovaraagan and Fletcher. May be for the rest of the characters, a bit low. Differentiating the two characters in a dual action role itself is difficult (Am not taking films like ATM, Billa into consideration as both Vijay and Ajith have not even bothered about that), but performing ten different roles in ten totally contrasting ways is simply brilliant. Not just the acting, but the body language, voice modulation and manerisms were totally different from one another for which Kamal deserves exuberant compliments. Nobody but Kamal could have done such a brilliant job. Special mention to his fantabulous 11th avathar - the dialogue writer (missed to notice the title card and I was just wondering whether it was Crazy Mohan). He has really excelled as a dialogue writer.

But, once you come out after watching the movie, you can't help the feeling that the story is made to fit the ten characters and not the other way round. A few characters seemed to be un-necessarily stuffed into the movie, just to make it ten. The "Khalifullah Khan" character is one such example. If you try to make sense the need of each and every character in the movie, the question "Is it necessary?" would arise. The movie doesn't seem to be coherent with too many characters coming in and trying to get stick in the screenplay. Asin looks cute, but her characterization was a bit irritating as it is quite difficult to imagine such a dumb teenage girl in this era.

The desperation of making this movie a commercial hit was clearly visible throughout the movie and it didnot seem like a Kamal movie at times. Mallika Sherawat singing and dancing for a tamil song in a Las Vegas night club and the pistol taking away the cancer from Avtar Singh's throat are good examples for the blemishes. When movies like "Anbe Sivam" donot get the commerical value, one cannot expect such kind of a classical film on such a huge investment. But the thing is, the movie stumbles not knowing which path to follow - the commercial or the classical. The response in the B and C centres remains to be seen, as there are nothing much in this movie to please them.

I would say that too many things are tried out in this movie, which is difficult for the audience to take. Too many things conveyed, too many characters used and everything was a overdose. There is a saying, "Too many cooks spoil the food" but, here too many ingeredients have spoiled the taste of the food. The technical qualities of this movie is not so brilliant as hyped. The second big disappointment comes in the form of the graphics used in this movie. They were a touch better than the usual tamil cinema graphics, but nothing extra-ordinary. The much expected "tsunami" set was also not so appealing.

Songs, except "Mukuntha Mukuntha" and "Kallai mattum" are pretty ordinary and the usual trend of the songs becoming big hits after the movie's release doesn't seem to happen this time. But, the background score was appreciable.

After Kamal, comedy was the next best thing in this movie. The "Balram Naidu" character was the best for me out of all the ten which was characterized beautifully for handling the comedy part. Infact, it got the movie going in the second half. Thanks to the editor for making the movie fast paced. The first half was infact better than the second. "Ulaga Nayagane" song is used as the credit song and the make-ups Kamal had to undergo for all the characters were shown briefly, which was good to see, but it was K.S.Ravikumar who spoiled the visual by his annoying screen presence and dancing. I don't really know why is he very particular about showing his face in all his movies.

There is a lot to talk about Kamal's make-ups but it is not wise to disclose everything here. It was really hard to belive that Kamal has donned certain characters as you cannot really identify him! Some makeups were really amazing and some were looking odd. Let me rate the get-ups out of ten.
Balram Naidu - Very minimal makeup yet very realistic - 10/10
Vincent Poovaraghan - 9.5/10
Fletcher - 9/10
Nambi - 9/10
Japanese - 8.5/10
Bush - 8/10 (Looked odd in the first long shot, but later on it was good)
Krishnaveni Paatti - 7.5/10
Avtar Singh - 7/10
Khalifullah Khan - 6.5/10
The tenth character is Govind, the normal looking Kamal, so I don't think I need to rate that.

There is a lyric in the song "Ulaga Nayagane" which says "Oscar dhooramillai", but after spending so much of money and putting up a lot of effort, it seems that Oscar is not even near the vision. People can now stop comparing this movie with hollywood as it is nowhere near to their technical qualities.

After the movie was over, I came out quickly and was waiting near the car for my other friends to come. They came to me, shook my hands and said "Sivaji was far better", "Thalaivar, thalaivar dhaan". Mind you, they are not Rajini fans. May be since they all know that am a Rajini fanatic made them say this to me, but I was not comparing the movie and infact I didnot even talk bad about it. They didnot like the movie as much as I did! The thing is this, people would automatically start comparing a Rajini film and a Kamal film. If we say that there is no story in Dasavatharam, his fans would argue whether Sivaji had a story in it and start making the comparisons. I am not here for comparisons and I have always insisted that Rajini and Kamal shouldn't be compared as they serve the cinema industry in two different aspects, but it is a painful fact that the story line is very feeble and hard for people to correlate.

Though not a part of the reivew, I wanted to write this because I was just wondering what it takes to please the audience. You might have put on a hell lot of efforts, show them something that they have never seen before, but it takes something special to reach the masses. Sivaji was not made with such big efforts, Rajini didnot do ten roles, but still nobody can deny the fact that when people came out from the theatres after watching "Sivaji", they felt so energetic and happy after watching "Mottai Boss" on screen. May be that is called the "Rajini magic".

One-Line:
Worth watching for Kamal.Don't carry much expectations though. Time pass, bigtime!

Monday, June 09, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 6

என்ன விஷயமாக இருக்கும் என்று ஷங்கருக்கு பிடிபடவே இல்லை. ஃபோன் செய்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, குமார் அங்கு வந்தான்.
"வாடா.... நானே உனக்கு போன் பண்ணி கூப்பிடலாம்ன்னு இருந்தேன்"

"என்னடா விஷயம்... நான் சும்மா தான் வந்தேன்"

"இனிமே தான் என்ன விஷயம்னு தெரியும்"

"என்னடா சொல்ற?"

"கிருஷ்ணாவோட அம்மா ஃபோன் பண்ணியிருக்காங்க.... என்கிட்ட ஏதோ விசாரிக்கணும்னு சொல்லியிருக்காங்க"

"சமீப காலத்துல நம்ம ஒண்ணும் தப்பு பண்ணலையே...என்னவா இருக்கும்?"

"எனக்கும் தெரியல. அவன்கிட்ட ஃபோன் பண்ணி கேட்கலாம்னா, அவனுக்கு பதிலா அவங்க அம்மா எடுத்துட்டா என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்"

"எதுக்கும் மொட்டைக்கும் நட்டுக்கும் ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. ஒருவேளை அவங்களுக்கு எதாவது தெரியுதான்னு பாக்கலாம்"

"கேட்கலாமே.... இந்தா, நீ கேளு. நான் வந்துடறேன்" போனை குமார் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான் ஷங்கர்.

ஷங்கர் திரும்பும்போது பாபுவும் அங்கு உட்கார்ந்திருந்தான்.
"நீ எப்போ டா வந்த??"

"இப்போ தான். என்னடா நடக்குது?? கிருஷ்ணாவோட அம்மா ஏதோ விசாரிக்கணும்னு சொன்னாங்களாமே?"

"ஆமாம் டா...என்னவா இருக்கும்ன்னு தெரியாம மண்டைய உடைச்சிக்கிட்டு இருக்கேன்"

"அவனுங்களுக்கு போன் பண்ணி கேட்டியா டா?" குமாரிடம் கேட்டான் ஷங்கர்.

"கேட்டேன் டா..... எவனுக்கும் ஒண்ணும் தெரியல"

"உச்....." என்று சலித்துக்கொண்டான் ஷங்கர்.

"சரி, நீ ஃபோன் பண்ணு. அவனே போன் எடுத்தா, அவன் அதிர்ஷ்டம். இல்லேன்னா, வேற வழி இல்லை.... அவங்க அம்மா கிட்ட பேசிடு"

குமார் இப்படி சொல்ல, அது தான் சரி என்று டயல் செய்தான் ஷங்கர்.

"ஹலோ ஆன்ட்டி... ஷங்கர் பேசுறேன். போன் பண்ணியிருந்தீங்கன்னு அம்மா சொன்னாங்க..."

போனின் மறுமுனையில்....
"ஆமாம்ப்பா... இவன் என்னைப் பாடு படுத்துறான்... ரெண்டு நாளுக்கு முன்னால வீட்ல ஒரே ரகளை"

"என்னாச்சு ஆன்ட்டி?"

"சாதாரணமாத்தான் பேசிக்கிட்டு இருந்தான். திடீர்ன்னு கல்யாணத்தைப் பத்தி பேச்சு வந்துச்சு... அப்போ, இவன் திடீர்ன்னு "என்னை மன்னிச்சிக்கங்கம்மா, நான் 'சைரா பானு'ன்னு ஒரு பொண்ணை லவ் பண்ணறேன்"ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டான்..."

"அப்படியா.....??" ஷங்கர் இப்படிக் கத்தியவுடன், குமாருக்கும் பாபுவிற்கும் ஆர்வம் அதிகமானது.

"ஆமாம்ப்பா.... எங்கேயோ டியூஷன் போகும் போது பாத்தானாம். அப்போவே லவ் பண்ண ஆரம்பிச்சிடானாம்.... அவ ரொம்ப நல்ல பொண்ணு, அப்படி இப்படின்னு பேசுறான். உனக்கு தெரியுமாப்பா??"

"அப்படி எல்லாம் எனக்குத்தெரிஞ்சு எதுவும் இல்லையே ஆன்ட்டி..."

"இல்லப்பா.... அந்த பொண்ணைப்பத்தி தப்பா பேசுனா நான் பொறுத்துக்க மாட்டேன்னு சொல்லி, தட்டை எல்லாம் வீசி அடிக்கிறான்."

"................"

"நீங்களே பாத்திருந்தா கூட, இவ்வளவு நல்ல பொண்ணைப் பாத்திருக்க முடியாதுன்னு சொல்லறான்"

"..............."

"நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லறான்.... ஒரு அம்மா கிட்ட பேசுற பேச்சாப்பா இது?"

"நான் விசாரிக்கிறேன் ஆன்ட்டி.... அப்படி எல்லாம் எங்களுக்கு தெரியாம அவன் பண்ண மாட்டான்"

"அதனால தான் உனக்கு ஃபோன் பண்ணினேன். ரெண்டு நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ அவன் சித்தி வீட்டுக்குப் போயிருக்கான். அதனால தான் பேச முடிஞ்சது"

"நீங்க பயப்படாதீங்க ஆன்ட்டி..... நான் கேட்டுப் பாக்குறேன்"

"கொஞ்சம் விசாரிச்சிப் பாருப்பா.... ஆனா, நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே... அவ்வளவு தான் அப்புறம்"

'சரி ஆன்ட்டி... நான் கேட்டுட்டு சொல்லறேன். ஆனா, நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் இருக்காது"

"இல்லப்பா.... அவன் ரொம்ப சீரியஸா பேசுறான்... சாப்பாடு தட்டை விசிறி அடிக்கிறான்னா பாத்துக்கோ"

"சரி ஆன்ட்டி.... நான் பாத்துக்குறேன்"

"சரிப்பா..... எனக்கு நீ ஃபோன் பண்ணி சொல்லறவரைக்கும் நிம்மதியாவே இருக்காது"

ஷங்கர் போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டான்.
"என்னடா...சீக்கிரமா சொல்லு" என்று பாபுவும் குமாரும் ஷங்கரை துளைத்து எடுத்தனர்.

ஒரே மூச்சில் அந்த தொலைபேசி உரையாடல் முழுவதையும் சொல்லி முடித்தான். சொன்னவுடன், குமாரும் பாபுவும் சிரிக்கத் தொடங்கினர்.
குமார் : "வாய்ப்பே இல்லை.... சும்மா சொல்லறான்"

ஷங்கர் : "எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா, தட்டை எல்லாம் தூக்கி எறிஞ்சிருக்கான்... ஓவரா சீன் போட்டிருக்கானே..."

பாபு : "டேய், அவன் லவ் பண்ணறான்னு சொன்னா, எவன் டா நம்புவான்?"

ஷங்கர் : "இதை எப்படியாவது தெளிவு படுத்திக்கணும்"

குமார் : "நேரடியா கேட்க வேண்டியதுதான்"

பாபு : "அவனை இங்க வர சொல்லு...."

குமார் : "இவ்வளவு தூரம் இனிமே அவன் வரமாட்டான். நட்டு வீட்டுக்கு வேணும்னா வரசொல்லலாம்"

பாபு : "சரி, நட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு... நம்ம அங்க போகலாம்"

ஷங்கர் : "ஆமா.... ஒரு அவசர கூட்டத்தை கூட்டிட வேண்டியது தான். மொட்டைக்கும் சொல்லிடறேன். எல்லாரும் வந்துரட்டும்"

குமார் : "கிருஷ்ணாவை எப்படி வர சொல்லறது?? அவன் சித்தி வீட்டு போன் நம்பர் இருக்கா உன்கிட்ட?"

ஷங்கர் : "இருக்கு... அவனை கடைசியா வர சொல்லலாம். அவன் உடனே அங்கே வர வேண்டாம்"

பாபு : "ஏன் டா?"

ஷங்கர் : "அவன் வர்றதுக்குள்ள நம்ம எல்லாரும் பேசி வெச்சிக்கலாம்"

வீட்டிற்கு வருவதாக 'நட்டு' க்குத் தகவல் சொல்லிவிட்டு, மூவரும் கிளம்பிச் சென்றனர்.

அங்கே - மூவரும் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றனர். உள்ளே சென்ற மூவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது! வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா!

சுதாரித்துக் கொண்ட ஷங்கர், "நட்டு எங்க டா? நீ எப்போ வந்தே?" என்றான்.

கிருஷ்ணா, "இப்போ தான் டா வந்தேன். நட்டு பக்கத்துல கடைக்கு போயிருக்கான். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நானே உங்களை எல்லாம் வர சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்க எல்லாரும் வரீங்கன்னு நட்டு சொன்னான். மொட்டைக்கும் போன் பண்ணி வர சொல்லிருக்கேன். அவன் வந்துரட்டும். சொல்லறேன்..." என்றான்.

தொடரும்....

Monday, June 02, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 5

Zoology வகுப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தர்கள். சரியாக 45 நிமிடங்களில், முதல் வகுப்பின் மணி அடித்தது. அதையும் பொருட்படுத்தாமல், கணக்கை முடித்துக் கொண்டிருந்தார் வானதி டீச்சர்.

"டேய், போக சொல்லு டா... டார்ச்சர் தாங்க முடியல" என்றான் ஷங்கர்.

"இந்தாம்மா.... அதான் சொல்றான்ல... கிளம்பு" என்றான் பாபு.

கிருஷ்ணா, "டேய்... இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லேன் பாக்கலாம்" என்று வம்பிழுத்தான்.

மணி அடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், கணக்கு முடிந்தபாடில்லை. அடுத்த வகுப்பிற்காக, புதிதாக வந்திருந்த zoology ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார்.

உள்ளே, கணக்கு ஆசிரியை இருப்பதைப் பார்த்து, அவசரமாக வெளியேறினார். அதை கவனித்த வானதி, "இரெண்டு நிமிடங்கள்" என்று சைகை காட்ட, அதை ஆமோதித்து வெளியில் காத்திருந்தார்

வெளியில் காத்திருந்த zoology ஆசிரியரை கவனித்து விட்ட கிருஷ்ணா, "டேய், வந்தாச்சு டா.." என்று கிட்டத்தட்ட கத்தினான்.

ஒரே சமையத்தில் ஷங்கர், பாபு, நட்டு, கிருஷ்ணா, பாலா அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.

"எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லைன்னாலும், தப்பு இல்ல" என்றான் பாபு.

ஷங்கர், "என்ன எதிர்பார்த்த நீ? ஐஸ்வர்யா ராய் வந்து கிளாஸ் எடுக்கும்னா??"

"அப்படி இல்ல..." என்று இழுத்தான் பாபு.

"டேய், நம்ம இருக்குறது கும்பகோணம். எதிர்பாக்குறதுக்கும் ஒரு அளவு இருக்கு. எப்படியோ, இந்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்க. என்ஜாய் பண்ணலாம்"

"அது எப்படி ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டாங்கன்னு தீர்மானமா சொல்லற?" என்று ஆர்வமாகக் கேட்டான் கிருஷ்ணா.

'பொதுவா, அழகா இருக்குற டீச்சருங்க கண்டிப்போட இருக்க மாட்டாங்க. இது நான் பல வருஷமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச விஷயம்" . ஷங்கர் இப்படி சொல்ல, ஆர்வம் அதிகமானது.

உடனே, நட்டு இதற்க்கு முன் இருந்த கண்டிப்பான ஆசிரியர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஏதோ பொறி தட்டியதும், "டேய், அப்போ நமக்கு போன வருஷம் இங்கிலீஷ் எடுத்த மிஸ் ஸ்ட்ரிக்டா இருந்தாங்களே?" என்று ஷங்கரிடம் கேட்டான்.

"அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு அழகியா தெரிஞ்சா நான் ஒண்ணும் பண்ண முடியாது" என்று பதிலளித்தான் ஷங்கர்.

"எல்லா கேள்விக்கும் ஒரு பதில் வெச்சிருப்பியே" என்று நட்டு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கணக்கு ஆசிரியை வானதி வகுப்பை விட்டு வெளியேற, zoology ஆசிரியை உள்ளே நுழைந்தார்.

அனைவரும் எழுந்து நின்று "குட் மார்னிங்" கூறிவிட்டு நின்று கொண்டிருக்க, ஆசிரியர் உட்காரச் சொல்வதற்கு முன்னாலேயே ஷங்கர், கிருஷ்ணா, பாபு ஆகிய மூவர் மட்டும் அமர்ந்தனர். அவர்களைத் தவிர யாருமே அமராததால், உட்கார்ந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து நின்றனர்.

வந்திருந்த ஆசிரியர் இதை கவனித்து விட்டாலும், பெரிதாக எதுவும் கண்டுகொள்ள வில்லை. அவர் அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, தன்னை "ரூபி" என்று அறிமுகம் செய்து கொண்டார்.

வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கூறியதும், முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த பையன் முதலில் எழ, அவனை அமரச் சொல்லி விட்டு, கடைசி பெஞ்ச்சிலிருந்து ஆரம்பிக்குமாறு கூறினார்.

"நம்மள தான் கட்டம் கட்றாங்க...." என்று ஷங்கரின் காதோரம் கிசுகிசுத்தான் பாபு.

ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாபு ஆகியோரின் முறை வரும்போது மட்டும், அவர் உன்னிப்பாக பெயர்களை கவனித்துக் கேட்டுக்கொண்ட மாதிரி உணர்ந்தனர்.

"இப்பவே நம்ம மேல ஒரு கண்ணு வெச்சிருப்பாங்க" என்றான் கிருஷ்ணா.

"விடு, இது என்ன நமக்கு புதுசா?" ஷங்கர் நக்கலாக சிரித்துக்கொண்டே கூறினான்.

அன்று முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் அவர் நடத்தவில்லை. ஃப்ரீ பீரியட் கிடைப்பது எவ்வளவு அரிது, அதுவும் பத்தாம் வகுப்பில் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வெட்டி அரட்டை அடித்தனர் அனைவரும்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் யார் ஆசிரியர் என்பது தெரிந்தது. மணிக்கு கடைசி வகுப்பின் மணி அடித்ததும், ஐந்து பெரும் வகுப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

பாலா, "டேய், நம்ம டீச்சருங்களை எல்லாம் சைட் அடிக்கிறோமே... இது தப்பில்லை?" என்றான்.

“என்ன திடீர் ஞானோதயம்?” பாலாவின் தலையில் தட்டினான் பாபு.

"நம்ம மேல தப்பு இல்ல. நம்ம ஸ்கூல் அப்படி. பொண்ணுங்கள கண்ணுலேயே காட்ட மாட்டேங்கிறாங்க... அதனால தான் இந்த சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்கோம்" விளக்கம் கொடுத்தான் கிருஷ்ணா.

"அதெல்லாம் சும்மா... உலகத்துல டீச்சரை சைட் அடிக்காத ஸ்டூடன்ட் இருக்கவே முடியாது" - அடித்துக் கூறினான் ஷங்கர்.

"சரி, அதை விடுங்க. டேய், இன்னிக்கி கம்ப்யூட்டர்ல கிரிக்கெட் ஆடலாம், வீட்டுக்கு வந்துரு . குமார் கிளம்பிட்டான். அவனுக்கு போன் பண்ணி வர சொல்லிடறேன்" என்று பாபுவிடம் கூறினான் ஷங்கர்.

கிருஷ்ணா, நட்டு, பாலா ஆகியோர் வீடுகள் தொலைவில் இருப்பதால் அடிக்கடி வர முடியாது. பாபு, குமார் மற்றும் ஷங்கர் ஆகியோரின் வீடுகள் மட்டும் அருகருகில் இருந்தன.

சிறிது நேரம் பேசிவிட்டு, கலைந்து சென்றனர்.

ஷங்கரும் பாபுவும் அருகில் இருக்கும் கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு, தாமதமாக வீட்டிற்கு சென்றனர்.

ஷங்கரின் வீடு -
வீட்டிற்குள் நுழைந்ததும் கிருஷ்ணாவின் அம்மாவிடமிருந்து மூன்று முறை ஃபோன் வந்ததாக ஷங்கரின் அம்மா கூறினார். கிருஷ்ணாவைப் பற்றி ஏதோ ஒரு விஷயம் கேட்கவேண்டும் என்று கூறியதாகவும் கூறினார்.

ஷங்கர், என்னவாக இருக்கும் என்று யோசிக்கத்தொடங்கினான்....

தொடரும்....

Monday, May 26, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 4

இன்றிலிருந்து புதிய கிளாஸ். எப்படியாவது கடைசி இரெண்டு பெஞ்சுகளில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு, ஷங்கர் பள்ளிக்குக் கிளம்பினான். பிரேயர் பெல் அடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. கிளாசில் பாதி பேர் கூட இல்லை. காலியாக இருந்ததால், இடம் பிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. கடைசி பெஞ்சில் உட்கார்ந்தால், ரோந்து போகும் டிசிப்ளின் சாரிடம் மாட்டிக்கொள்ள நேரலாம் என்பதால், அதை விடுத்து அதற்கு முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.. அருகில் யாரை உட்காரச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். எப்படியும், குமாரை அழைக்க முடியாது. அவன் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அங்கு செழியன் வந்து சேர்ந்தான்.

"நேத்து மேட்சுல உன் தலைவர் வழக்கம் போல சொதப்பிட்டாரு போல..." என்று பேசிக்கொண்டே வந்து அருகில் அமர்ந்தான்.

" ஆமா... ஆனா, இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா போடுவான் பாரு" என்றான் ஷங்கர்.

"இப்ப அவன் இருக்குற ஃபார்ம்ல செஞ்சுரி எல்லாம் போட முடியாது, சிக்கன் மஞ்சுரி வேணா ட்ரை பண்ணலாம்" என்று நக்கலடித்தான்.

"பொறுத்திருந்து பார்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பாபுவும் அங்கு வந்து சேர்ந்தான்.

"டெஸ்ட் மாட்சுக்கு வேணும்னா டிராவிட் இருக்கலாம், ஒன் டே மேட்சுக்கு வேஸ்ட்டு டா" என்று அவன் பங்கிற்கு கடுப்பேற்றினான்.

"சரி டா... என்ன பெட்? இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா அடிக்கிறான்" என்று ஷங்கர் சவால் விடவும், பிரேயர் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

பிரேயருக்குக் கிளம்பும் போது அவசர அவசரமாக வகுப்பின் மற்ற மாணவர்கள் வகுப்பினுள்ளே நுழைந்தார்கள்.

பிரேயர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, வகுப்பாசிரியராக யார் இருப்பார்கள் என்று ஷங்கரும் பாபுவும் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள்.

"டேய், நம்ம ஆத்தா கிளாஸ் மிஸ்ஸா இருந்தா எப்படி இருக்கும்?" என்று ஷங்கர் கேட்க,

"அதை எல்லாம் கிளாஸ் டீச்சரா போட மாட்டாங்க டா" என்று அலுத்துக் கொண்டான் பாபு.

"ஆத்தா" என்று அன்போடு அழைக்கப்படுவது வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியை. வயது ஐம்பதைத் தாண்டி இருக்கும். நாலரை அடி உயரம். அவர், வகுப்பில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர மாட்டார் என்பதால், அவரது வகுப்பில் மாணவர்கள் "கபடி" யே ஆடுவார்கள். பிரேயர் முழுவதும் இந்த விவாதத்திலேயே நகர, வகுப்பிற்குத் திரும்பினார்கள்.

குமார், எதிர்பார்த்த படி முதல் பெஞ்ச்சில் தஞ்சம் அடைய, ஷங்கர், பாபு மற்றும் செழியன் ஆகியோர் அவர்கள் இடத்தில் அமர்ந்தனர். அவர்களது பெஞ்ச்சில் இன்னொரு இடம் காலியாக இருக்க, யாரை அழைப்பது என்று ஷங்கர் யோசித்துக் கொண்டிருந்தான். முதல் வகுப்பு எப்பவுமே வகுப்பாசிரியரின் வகுப்பாகத்தான் இருக்கும் என்பதால், யார் வரப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தவண்ணம் இருந்தனர்.

யாரோ வகுப்பிற்குள் நுழையும் சத்தம் கேட்டதும், அனைவரும் ஆவலுடன் திரும்பிப் பார்த்த போது, அங்கு கிருஷ்ணா, வியர்வையில் குளித்தபடி வகுப்பிற்குள் நுழைந்தான்.

"வாழ்க்கைல ஒரு நாளாச்சும் சீக்கிரமா வாடா" என்று சொல்லிக்கொண்டே, பாபு அவனுக்கு அருகில் உட்கார இடம் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படிப்பவர்கள். கிருஷ்ணாவும் ஷங்கரும் இதற்கு முன் ஒரே வகுப்பில் படித்ததில்லை என்றாலும், இருவருக்கும் அறிமுகம் இல்லாமல் இல்லை.

கிருஷ்ணா வந்து அமர்ந்ததும், "நட்டும் மொட்டையும் எங்கடா இருக்கானுங்க?" என்று கேட்டான். அவர்கள் இருவரும், எதிர்வரிசையில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்ததைக் காண்பித்தான் பாபு.

"அவனுங்கள இங்க வர சொல்லு டா, பொழுது போகும்" என்றான்.

ஷங்கருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் முதுகில் தட்டினான் ஷங்கர்.

அவர்கள் திரும்பியதும், "நீங்க ரெண்டு பேரும் அங்க போய் உக்காருங்க" என்றான்.
இருவரும் கோரஸாக "எதுக்கு?" என்று புருவத்தை சுருக்கி கேட்டனர்.

"எனக்கு முன்னால உட்கார்ந்திருக்குறவங்களோட மண்டைல அடிக்கடி தட்டி தட்டி விளையாடுவேன்.... பரவாயில்லையா?" என்று நக்கலாக கேட்டான்.

இதற்க்கு மேல் பேசி பலனில்லை என்று தெரிந்து கொண்டு, இருவரும் அமைதியாக எழுந்து செல்ல, நட்டும் மொட்டையும் அங்கு வந்து அமர்ந்தனர்.

ஒரு வழியாக இடப்பிரச்சனை ஓய்ந்தது. சிறிது நேரத்தில் கணக்கு ஆசிரியை வானதி வகுப்பிற்குள் நுழைந்தார்.

“என்னடா, ஓ.பி. அடிக்கிற மாதிரி யாரவது வருவாங்கன்னு பாத்தா, நமக்கு BP ஏத்துற மாதிரி வர்றாங்க.” என்று புலம்பினான் ஷங்கர்.

பாபு, "இதை விடு, zoologyக்கு புதுசா ஒரு மிஸ் வந்திருக்காங்க... சூப்பரா இருக்காங்க... நமக்கு வரணும்னு வேண்டிக்க டா" என்று எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாகக் கிளப்பி விட்டான்....

"என்னடா சொல்லற?" என்று ஷங்கர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணா zoology பீரியட் எப்போது என்று டைம் டேபிளைப் பார்த்தான்....

"டேய், அடுத்தது zoology பீரியட் தான் டா..." என்று கிருஷ்ணா கூற, அனைவரது முகங்களிலும் 'பல்பு' எரிந்தது.

தொடரும்...

Monday, May 19, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 3

ஒன்பதாம் வகுப்பு முழுப்பரீட்ச்சை விடுமுறையின் போதே பத்தாம் வகுப்பிற்கான "ஸ்பெஷல்" கிளாஸ் ஆரம்பிப்பதால், விடுமுறை சுருக்கப்பட்டிருந்தது. ஷங்கருக்கு, விடுப்பு நாட்கள் கம்மியானதில் வருத்தம் இருந்தாலும், மீண்டும் நண்பர்களைப் பார்க்கப்போவதாலும், முக்கியமாக "யூனிஃபார்ம்" அணிந்து செல்ல வேண்டியதில்லை என்பதாலும், கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிக்கும் நாளன்றே ஒன்பதாம் வகுப்பின் ரிசல்ட் என்றும் அறிவித்திருந்தார்கள். என்னதான் ஃபெயிலாவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், ஷங்கரின் மனதில் ஒரு வித “anxiety” இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக, சந்தேகக்கேஸ்களை முன்னெச்சரிக்கையாக ஒன்பதாவதிலேயே நிறுத்தி வைத்து விடுவது அனேக பள்ளிகளின் வழக்கம். இதில், அந்த பள்ளியும் விதிவிலக்கில்லை. சந்தேகக்கேஸ்கள் என்றால், ரொம்ப சுமாராகப் படிக்கும் மாணவர்கள் என்று பொருள்.

ஒன்பதாம் வகுப்பின் நான்கு செக்ஷன்களும் கூடியிருந்தன. காலையிலிருந்து வகுப்பிற்கு எந்த ஆசிரியரும் வரவில்லை என்பதால், மாணவர்களின் கூச்சல் சத்தம் உச்சத்தை அடைந்திருந்தது. ஷங்கரும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் பற்றியும், அப்போது ரிலீசான புதுப்படங்களைப் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது அவுட் ஆனால் திடீரென்று மைதானமே அமைதியில் மூழ்குமே.... அதே போல இங்கும் ஒரு திடீர் அமைதி பிறந்தது. இந்த திடீர் அமைதிகளுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது, 'மாஸ்டர்' அல்லது 'மேடம் 'மின் வருகையால் தான் இருக்கும். அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிடைத்த இடத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சிவகுரு அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பில் தான் சேர்ந்தான். ஷங்கருக்கு கணக்கு சுத்தமாக வராது என்பதாலும், சிவகுரு கணக்கில் புலி என்பதாலும், இருவரும் எளிதாக நண்பர்களாயிருந்தார்கள்.

எதிர்ப்பார்த்தது போல கையில் செங்கோலுடன், மேடம் அங்கு வந்தார். தேர்வு முடிவுகள், நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதைப் பார்த்து விட்டு தேறியவர்கள் மட்டும் தமிழ் ஸ்டாஃப் ரூமிற்கு அருகில் இருக்கும் வகுப்பறைகளில் கூடியிருக்குமாறும் அறிவித்தார். முடிவுகளைப் பார்க்க அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர்.

சிவகுருவும் ஆவலுடன் விரைந்து போக எத்தனித்தான். "வாடா, போய் பாக்கலாம்" என்று ஷங்கரை அழைத்தான்...

"நம்ம எதுக்கு அடிச்சி புடிச்சிக்கிட்டு ஓடணும்? நாம போறதுக்குள்ள எவனாச்சும் பாத்து சொல்லிருவான்" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"ஆமா, நீ எதைப் பத்தி தான் கவலைப்பட்டிருக்க?"

தனக்கு இருக்கும் “anxiety”யை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "ஏன்? ஃபெயில் ஆயிருவனு பயமா இருக்கா??" என்றான் ஷங்கர்.

சிவகுரு பதில் சொல்வதற்குள், "டேய், நம்ம எல்லாரும் பாஸ் ஆயிட்டோம். நம்ம நரம்படி கார்த்திக்கு மட்டும் 'வித்-ஹெல்டு' னு போட்ருக்காங்க" என்று ஃப்ளாஷ் நியூஸ் சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் பக்கத்து கிளாஸ் பிரேம்.

முகத்தில் பெரிய புன்னகையோடு சிவகுரு ஷங்கரைப் பார்த்தான்.

ஷங்கர், "சொன்னேன்ல..... வா போகலாம்" என்று சொல்லிவிட்டு வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கையில் ஒரு பேப்பருடன் மேடம் வந்து நின்றார். பத்தாம் வகுப்பிற்கு "செக்ஷன்" பிரித்திருப்பதாகவும், யாரெல்லாம் ஒரு செக்ஷனில் இருக்கிறார்கள் என்றும் பெயர்களை படிக்கத்தொடங்கினார்.

மாணவர்களுக்கு இரெண்டு செக்ஷன்களாகவும், மாணவிகளுக்கு ஒரு செக்ஷனாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று என்னவோ நற்செய்தி அறிவிப்பது போல், முகத்தில் அத்தனை சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே அறிவித்தார். இது எதிர்ப்பார்த்தது தான் என்றாலும், ஷங்கர் எரிச்சலுடன் மெதுவாக "தூ..." என்று துப்பினான். வகுப்பில் அப்போது இருந்த அமைதியால், இந்த சத்தம் ஓரளவிற்கு நன்றாகவே கேட்டது. அருகில் இருந்த சிவகுரு, அவசர அவசரமாக, ஷங்கரின் காலை மிதித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். நல்ல வேளையாக மேடம் அதை கவனிக்கவில்லை. மாணவர்களுக்காக பிரிக்கப்பட்ட இரெண்டு வகுப்புகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் 'ஏ' வகுப்பிலும், கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்கள் 'பி' வகுப்பிலும் பிரிக்கப்பட்டு இருந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் நன்றாக படிக்கக் கூடியவர்கள் என்பதால், 'ஏ' செக்ஷனில் போட்டிருந்தார்கள். இருவரும் ஒரே செக்ஷனில் இருந்தாலும், சிவகுரு அடுத்த வருடம் அவனோடு படிக்கப் போவதில்லை என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டனர். சிவகுருவின் தந்தைக்கு திருச்சியில் மாற்றலாகியிருப்பதால், அவன் திருச்சியில் பத்தாம் வகுப்பைத் தொடரப்போவதாக ஏற்கெனவே ஷங்கரிடம் சொல்லியிருந்தான்.

அப்போது மணி மூன்று கூட ஆகவில்லை, ஆனாலும், வீட்டிற்கு போகலாம் என்று அறிவித்துவிட்டு, மேடம் சென்று விட்டார். அன்று தான் சிவகுருவுடன் கடைசி நாள் என்பதால், ஷங்கரும் அவனும் நீண்ட நேரம் வகுப்பறையிலேயே பேசிக்கொண்டிருந்தர்கள்.

ஷங்கர், சிவகுருவிற்கு விடை கொடுத்துவிட்டு புதிய கிளாசில் நண்பர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

தொடரும்...

Thursday, May 15, 2008

A day with my demigod - SUPER STAR RAJINIKANTH

7th May, 1992 - This day happened to be the most important and unforgettable day of my life, when I met my Demi-God, Super Star Rajinikanth. I was a 7 year old kid then, when this happened. I was happily spending my vaccation in chennai with my parents. Everybody in my family knew that I am a big time Rajini fan and even in that age I never miss to watch any of his movies in theatres. As for every other fan, it was like a dream for me to meet the legendary Super Star and pose for a photograph with him. Thanks to Sethu mama for having made that happen!!

He is a photographer by profession and though he is not into cinema, fortunately for me, he was in touch with the "Kavithalaya" production house which belongs to the veteran director K.Balachander. Knowing that am a frenzied fan of the super star, he took interest to arrange a meeting with him by taking the help of his friends working in the "Kavithalaya" unit.

Before I pen down the incident, I should explain why I chose to write about it now, after about 16 years. It is needless to explain about the intensity of that incident, which was one of the rarest moment of my lifetime and the impact it had was absolutely unimaginable. As I mentioned earlier, it happened during my 3rd standard vacation. I had about a month for the school to re-open. Unlike other times, I was so keen to go to the school and share my joy and ofcourse show the autograph and the photograph to every one and relish it. That was a typical school kid's attitude! It had an impact not only with me, but also with my family members as well. My parents and my grandmother also accompanied me during the visit. Not just me, they were also pretty thrilled about this and we just kept on talking about this for so many years! Now, just when I get to interact with so many fellow fans, I felt that it is necessary to share that ultimate moment with them.

Back to the main track - It came in as a pleasant shock when I was told to get ready to meet the super star in less than an hour. Hurriedly, I purchased an autograph book and started. My parents and my grandma also accompanied me with my uncle and we were travelling to the place where the shooting was taking place. The shooting was happening somewhere in the outskirts of chennai, in a big bungalow. When we entered the bungalow, we saw the man himself sitting in a sofa alongside with Janagaraj in the break time of the shooting. I was undergoing a mixture of emotions. I was extremely happy and at the same time, I was very nervous - a typical feeling that comes when you are extremely overwhelmed and it was hard to believe the reality! Immediately when he saw my parents coming towards him, he stood up, paired his hands together and said "vanakkam". This is no big surprise as everyone knows the humbleness and simplicity of this great man, but even then my parents were awestruck by this gesture. I hardly spoke anything to him as I was shy and stood near my mom. It was my grandma who introduced me to him as his die-hard fan. He smiled at me and asked my name, when I gave him my autograph book. He wrote my name on it and autographed it and gave it back to me, with a gentle tap on my cheeks. I was so dumb that I didnot even care to smile at Janagaraj or get his autograph as I remained there staring at the super star.



"Shot ready" was the call from the director Suresh Krishna and he wasted no time in moving towards the spot. It was my first experience to watch a cinema shooting and I was anxiously waiting to see it. There was a small room in the front side of that bungalow, out of which a board saying "Mahalakshmi bank" was hung. They shot the scene where Rajini collects money from the bank, ties up in his towel and stands up to stare at the camera, which also happens to be the beginning of the "Vetri Nichayam" song. It didnot take much time to shoot that scene and it was "okay"ed by the director in a couple of takes.

When he came out of that room, my uncle went near him and requested for a photograph with me. I was again tensed and stood beside my mom. Immediately after my uncle requested him, he showed no hesitation and said, "Ya, sure..." and even called me by my name and gently pulled my hand towards him, hugged from behind and elegantly posed for the photograph. It all happened in a flash! After the camera was clicked, he went on for shooting the next scene. It was truly amazing that he remembered my name and showed great respect to my parents despite being such a big super star.



This was the ultimate moment! Could you see the director Suresh Krishna "out of focussed" at the background?

It was like a dream come true and I apologize to the readers since am finding it really tough to narrate my emotions. It not only made my day but also made me more popular in my neighbourhood, school and among relatives. Even today, I am proud to show this photograph to everyone and I would continue to do it until I get to meet him again and take another photograph with him. This time - me hugging him!

Monday, May 12, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 2

இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களான 'சேட்டை'ய ராஜாக்களின் அறிமுகம்....

பெயர் : பாலா

அழைக்கப்படுவது : மொட்டை

பெயர்க்காரணம் : எட்டாம் வகுப்பில் மொட்டை அடித்த போது, 'மொட்டை' என்று அழைக்க ஆரம்பித்தது, முடி வளர்ந்த பின்னரும் தொடர்ந்தது. பள்ளியில் இரெண்டு மூன்று 'பாலா'க்கள் இருந்ததால், 'மொட்டை' என்ற பெயரே நிரந்தரமாகிப் போனது.

தனி அடையாளம் : 'முள்' போன்ற தலைமுடி

பொழுதுபோக்கு : நண்பர்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவது.

நீண்ட நாள் சாதனை : எல்லோரையும் நம்ப வைத்தது.

விரும்புவது : வாக்குறுதிகளை அள்ளி வீசுவது.

வெறுப்பது : அவற்றை நிறைவேற்றுவது.

பஞ்ச் : "நான் சொன்னதையும் செய்ய மாட்டேன், சொல்லாததையும் செய்ய மாட்டேன்"

அரசியல்வாதி ஆகக்கூடிய அனைத்துத் தகுதிகளும் உடையவன். பார்க்க சாதுவாக இருந்து கொண்டு, ஊமைக் குசும்புகள் நிறைய செய்பவன். "6 மணிக்கு அங்கே இருப்பேன்" என்று வாக்கு கொடுத்து விட்டால், நிச்சயமாக 7 மணி வரை அங்கு வரப்போவதில்லை என்று அர்த்தம்.
________________________________________________________

பெயர் : குமார்

தனி அடையாளம் : 'ஸ்டீரியோ' எஃபெக்ட்டில் உரக்க படிப்பது

பொழுதுபோக்கு : படிக்கிறேன் பேர்வழி என்று ஊரைக் கூட்டுவது.

விரும்புவது : வகுப்பில் முதல் ரேங்க்

விரும்பாதது : தினமும் வகுப்பிற்கு வருவது

நீண்ட நாள் சாதனை : பல முறை பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளியில் உத்தரவிட்ட போதும், கடைசி வரை அழைத்து வராமல் டபாய்த்தது.

பஞ்ச் : "வி வில் மீட்.... வில் மீட்....... மீட்........."
இந்த பஞ்ச் டயலாகிற்கும், இவனுக்கும் சம்மந்தம் இல்லை. இவன் விஜயகாந்தின் ரசிகன் என்பதால் ச்சும்மா இந்த பஞ்ச்....

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே உரிய பொதுவான குணங்களான தவறாமல் வகுப்பிற்கு வருவது, ஊர் சுற்றாமல் வீட்டிலேயே இருப்பது, போன்ற எதுவும் இல்லாத, ஆனாலும் நன்றாகப் படிக்கும் மாணவன். இவனும் ஷங்கரும் எல்.கே.ஜி யிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
_________________________________________________________

பெயர் : நட்ராஜ்

அழைக்கப்படுவது : நட்டு

பெயர்க்காரணம் : பெரிதாக ஒன்றும் இல்லை. நட்ராஜின் சுருக்கம் தான் 'நட்டு'

தனி அடையாளம் : எதையோ பரபரப்பாக துரத்துவதைப் போன்ற நடை.

பொழுதுபோக்கு : தமிழ் ஆசிரியரிடம் அடி வாங்குவது

விரும்புவது : கிருஷ்ணாவை ஓட்டுவது.

விரும்பாதது : கிருஷ்ணாவால் ஓட்டப்படுவது.

நீண்ட நாள் சாதனை : தொலையாமல் வீடு போய் சேர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமையை திங்கட்கிழமை என்று நினைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவான். திங்கட்கிழமையன்று விடுமுறை என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுவான். அப்படியே தப்பித் தவறி சரியாக பள்ளிக்கு வந்துவிட்டாலும், காலையில் சைக்கிளில் வந்து விட்டு, மாலை வீடு திரும்பும் போது மறதியில் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி விடுவான். இவனுக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் ஒன்றும் இல்லை. கடவுளே இவனை மறந்து போய் படைத்து விட்டார்.
_________________________________________________________

பெயர் : பாபு

அழைக்கப்படுவது : டமக்கு டப்பான்

பெயர்க்காரணம் : அவன் நடைக்கு ஏற்ற பேக்கிரவுண்டு மியூசிக் என்பதால் இந்த பெயர்.

தனி அடையாளம் : வகுப்பில் நோட்ஸ் கலெக்ட் செய்வது, ஆசிரியருக்கு சாக் பீஸ் எடுத்துக் கொண்டு வருவது போன்ற பொறுப்புகளை அள்ளி சுமப்பது.

பொழுதுபோக்கு : ஆசிரியர்களிடம் வில்லங்கமான சந்தேகங்களைக் கேட்பது.

விரும்புவது : சாப்பிடுவது மற்றும் தூங்குவது.

விரும்பாதது : சாப்பிடும் போது பங்கு கேட்பது, தூங்கும் போது எழுப்புவது.

நீண்ட நாள் சாதனை : எட்டாம் வகுப்பில் வளர்ந்த மீசையை இன்று வரை சவரம் செய்யாமல் வைத்திருப்பது.

பஞ்ச்: "உண்க வயிறார உண்க உண்டபின்
உருளுக அதற்கு தக"

வகுப்பில், ஆசிரியர்கள் கூறும் வேலையை பொறுப்புடன் செய்வதால், இவன் ஆசிரியர்களின் செல்லம். என்னதான் உண்மையில் இவன் கேடி என்றாலும், ஆசிரியர்களுக்கு இவனைப்பற்றி இருக்கும் நல்ல அபிப்பிராயத்தால், மாணவர்களின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லும் வகுப்பின் எம்.எல்.ஏ இவன் தான்.
_________________________________________________________

பெயர் : கிருஷ்ணா

அழைக்கப்படுவது : சீனா தானா

பெயர்க்காரணம் : கண்ணாடியை கழற்றி விட்டு, கொஞ்சம் கண்ணை சுழற்றிப் பார்த்தால் 'சீனா'க்காரர் மாதிரி இருப்பான் என்பதால் இந்த பெயர்.

தனி அடையாளம் : மூக்குக்கண்ணாடி. பாக்கியராஜ் மாதிரி அடிக்கடி அதை தூக்கி விட்டுக் கொள்ளும் மேனரிசம்.

பொழுதுபோக்கு : 'நட்'டை வெறுப்பேற்றுவது.

விரும்புவது : வெளியில் 'இமேஜ்' மெயின்டைன் பண்ணுவது.

விரும்பாதது : கஷ்டப்பட்டு மெயின்டைன் பண்ணும் 'இமேஜ்', 'டேமேஜ்' ஆவது.

நீண்ட நாள் சாதனை : ஒரு நாளும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்ததில்லை.

பஞ்ச் : "நான் பாக்க மட்டும் தான் டீசன்ட்டு, வாயைத் திறந்தா, படு லோக்கலு"

இடியே விழுந்தாலும், சட்டை மடிப்போ அல்லது தலை முடியோ கலைந்து விடாமல் பார்த்துக் கொள்வான். அனைவரும் ரஜினி வெறியர்களாக இருக்க, இவன் மட்டும் கமல் ரசிகன். டீசென்சி, இமேஜ் மெயின்டைன் பண்ணுவதெல்லாம் வெளியில் தான். கூட்டத்தோடு சேர்ந்து விட்டால், கும்மாளம் தான்.
_________________________________________________________

பெயர் : ஷங்கர்

தனி அடையாளம் : நாக்கில் நர்த்தனம் ஆடும் நக்கல்.

பொழுதுபோக்கு : ஓட்டுவது (வண்டிகளை அல்ல)

விரும்புவது : கணக்கு பண்ணுவது (ஃபிகர்களை அல்ல)

விரும்பாதது : கணக்கு போடுவது

நீண்ட நாள் சாதனை : ‘நல்லா படிக்கிற பையன்’ என்று ஆசிரியர்களை நம்ப வைத்தது.

பஞ்ச் : அளவுக்கு அதிகமா scene போடுற பொண்ணுங்களையும், ஜொள்ளு விடுற பசங்களையும் நான் ஓட்டாம இருந்ததா சரித்திரமே இல்ல...

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் செல்லமாகவும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் வில்லனாகவும் இருந்தவன். இவன் ஆசிரியர்களைப் போல மிமிக்ரி செய்வது, மாணவர்களிடையே மிகவும் பிரபலம். வகுப்பில் அடிக்கடி ஏற்ப்படும் கூச்சல், குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பவன். இந்த குரூப்பின் ஆர்கனைசர். இவர்களுக்குள் பஞ்சாயத்து, நல்லது, கெட்டது அனைத்திற்கும் இவனே பொறுப்பு.

இவர்களுக்கெல்லாம் இருக்கும் பொதுவான விஷயம் - கிரிக்கெட். இவர்களின் கிரிக்கெட் அனுபவங்களை வைத்து சென்னை-28 போல ஒரு படத்தையே எடுக்கலாம். அடுத்தது - ஊர் சுற்றுவது. கும்பகோணத்தில் ஸ்பென்ஸர் பிளாசா போன்றோ, மெரீனா 'பீச்'சைப் போன்றோ "ஹேங்-அவுட்" இல்லை என்றாலும், இவர்கள் தாறு மாறாக ஊர் சுற்றித் திரிவார்கள்.
அடுத்த பதிவில், இவர்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்த கதை...

Monday, May 05, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 1


ஒரு வழியாக, தலைப்பு முடிவாகிவிட்டது. 'சந்திரமுகி'யை கலக்கியது 'வேட்டைய'ராஜா, எங்கள் பள்ளியை கலக்கியது 'சேட்டைய' ராஜாக்கள். இது எப்படி இருக்கு??? ச்சும்மா ஒரு பஞ்ச் டயலாக் முயற்சி செய்து பார்த்தேன். சொதப்பி விட்டது... ஹி ஹி

பி.கு. இக்கதையில் வரும் கேரக்டர்களின் நிஜப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இத்தொடரின் மூலம் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.
நல்லதை மட்டும் எடுத்துக்கங்க, கெட்டதை விட்டுடுங்க...

கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் - இங்கு தான் நாங்கள் படித்தோம் என்று சொல்வதை விட,இது தான் நாங்கள் துள்ளித் திரிந்த இடம் என்று சொல்லலாம். எங்கள் ஊரிலேயே கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றிருந்தது. கண்டிப்பான விதிமுறைகள் நிறைய உண்டு.
எங்கள் பள்ளியை 'ஜெயில்' என்று சக மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையும் அப்படித்தான். ஆனால், அது விதிமுறைகளை மதித்தவர்களுக்கு. எங்களுக்கு அல்ல.

சாலையின் இரு புறமும் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் வகுப்புகளும், அதே சாலையில் கொஞ்சம் தள்ளியிருக்கும் மற்றுமொரு சிறிய கட்டிடத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வகுப்புகளும் நடைபெறும்.

எங்கள் பள்ளியில் வினோதமான விஷயங்கள் நிறைய உண்டு. கோ-எஜுகேஷன் என்று சொல்லுவார்கள். ஆனால் மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனி வகுப்புகளில் அமர்த்துவார்கள். இவ்வளவு ஏன்? காலை பிரேயர் கூட தனித்தனியாகத் தான் நடக்கும். எங்கள் ஊர் பள்ளிகளிலேயே எங்கள் பள்ளியில் தான் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” உண்டு என்று மார்தட்டுவார்கள். ஆனால், அந்த இங்கிலீஷைக் கேட்டால், காதில் இரத்தமே வந்து விடும். இதில் கொடுமை என்னவென்றால், அங்கு இருந்த ஆசிரியர்களில் முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலம் பேசவே வராது. உதாரணத்துக்கு, "நாளைக்கு வருவியா?" என்று கேட்பதற்கு, "டுமாரோ யூ கம்மிங்கா?" என்று கேட்டு நம்மை வாயடைக்க வைத்துவிடுவார்கள். சிலசமயங்களில் ஆயா கூட, அந்த ஓட்டை ஆங்கிலத்தில் பேசி "ஆப்பு" அடிப்பார். முட்டிக்கொள்வதற்கு அருகில் ஏதேனும் சுவர் இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும்.

இந்த ஓட்டை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இல்லாத படம் காட்டுவார்கள். பள்ளிக்குள், தமிழ் வகுப்பைத் தவிர மாற்ற வகுப்புகளிலும், பள்ளி வளாகத்திலும் தமிழில் பேசக்கூடாது. மீறி யாராவது பேசினால், உடனடி தண்டனை. அந்தக் கொடுமையான ஆங்கிலத்தைக் கேட்பதற்கு அந்த தண்டனையே மேலாகயிருக்கும். அதிகமாக மீறப்படும் விதிமுறையும் இதுவாகத்தான் இருக்கும். ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடுமையான(?) விதிமுறையினால், நாங்கள் அனைவரும் எப்போதுமே 'பீட்டர்' விட்டுக்கொண்டு திரிவோம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

காலை 9.15 க்கு பிரேயர் தொடங்கும். அனைவரும் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் நடக்கும் பிரேயரில், முதல் கால் மணி நேரம் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள்(மட்டுமே) பாடப்படும். அடுத்த கால் மணி நேரம், பைபிள் வாசிக்க வேண்டும். லேட்டாக வருபவர்களுக்குத் தனியாக பிரேயர் நடக்கும். அதைத் தனியாக நடத்துபவர் தான் எங்கள் பள்ளியின் 'அஞ்சா நெஞ்சன்', 'பீட்டர்' நாயகன், திரு. ஒழுக்க வாத்தியார் அவர்கள். அதாவது 'டிசிப்ளின் சார்'. இப்படி செல்லமாக(?) இவர் அழைக்கப் பட்டாலும், இவரது உண்மையான பெயர் பல பேருக்குத் தெரியாது. எனக்கும் தான். இவரைப் பற்றி, பின்னால் பார்க்கலாம்.

யாரும் ‘இல்லை’ என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காக, "லைப்ரரி" க்கென்று ஒரு சிறிய அறையை ஒதுக்கியிருப்பர்கள். வாங்கிய புத்தகத்தை ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால், ஆயா மூலம் வகுப்பிற்கு தூது விடப்படும். சொற்ப நூல்களுடன் இயங்கிய அந்த "so called" லைப்ரரியை என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மறந்தே போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், ஒரு தீவு போல காட்சி அளிக்கும். சுற்றிலும் கீற்றுக் கொட்டகையில் வகுப்புகள். நடுவில் மைதானம். அங்கு விளையாடப்படும் அதிகபட்ச விளையாட்டுக்கள் - பாட்மின்டன் மற்றும் கிரிக்கெட். எப்போதாவது நடக்கும் 'ஸ்போர்ட்ஸ் டே' அன்று ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்றவை போக, பாட்மின்டன் மட்டும் நடக்கும். கிரிக்கெட் போட்டிகள் பள்ளியில் நடந்ததே இல்லை. ஆனால், நாங்கள் திருட்டுத்தனமாக அங்கு கிரிக்கெட் விளையாடுவோம்.

இந்த தொடர் முழுக்க, பள்ளியின் பல கேரக்டர்கள் உலா வருவார்கள். அவர்களில் முக்கியமானவர்களைப் பற்றிய அறிமுகம் இங்கே...

முதலில் - மேடம். எங்கள் பள்ளியின் முதல்வர். எப்போதுமே கையில் சாவிக் கொத்தை மாட்டிக் கொண்டு வலம் வருவார். தேவைப்பட்டால் மட்டும் செங்கோலைக்(பிரம்பு) கையில் எடுப்பார். இவரைப் பார்த்தால், மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்களும் 'மம்மி'யைப் பார்த்த எம்.எல்.ஏ வைப் போல பம்முவார்கள்.

மாஸ்டர் - 'ஜான்' பிள்ளையானாலும் 'ஆண்' பிள்ளை என்னும் பழமொழிக்கு இவரை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. உயரம் கம்மியாக இருந்தாலும், மனதால் உயர்ந்தவர். மின்னலடிக்கும் வெள்ளை நிற சட்டையையும், லூசாகத் தைத்த பேன்ட்டையும் போட்டுக்கொண்டு கையில் செங்கோலுடன் வலம் வருவார். கிட்டத்தட்ட "டி.ஆர்" மாதிரி தாடி வைத்திருப்பார். அதை அடிக்கடி, தடவி விட்டுக்கொண்டிருப்பது இவருடைய மேனரிசம். தாடி வைப்பதே அதற்காகத் தானே. நான் பள்ளியில் படித்த பன்னிரெண்டு ஆண்டுகளில், இவர் எத்தனை முறை சிரித்திருப்பார் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவர்களுக்கு அடுத்தபடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர் - லீலா மிஸ்.
எலிமெண்டரி ஸ்கூலின் முதல்வர். ஆங்கில ஆசிரியரும் கூட. மாணவர்களிடம் ரொம்பவும் கண்டிப்பாக இல்லாமல் அதே சமயம் ரொம்பவும் ஃபிரீயாகவும் விடாமல் 'balanced' ஆக இருக்கும் கேரக்டர்.

லாஸ்ட், பட் நாட் தி லீஸ்ட் - எங்கள் பள்ளியின் 'டிசிப்ளின்' மாஸ்டர் - இவர், மிலிட்டரி ஹோட்டலில் மாஸ்டராக, ச்சீ... மன்னிக்கவும்...மிலிட்டரியில் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர். எப்போதுமே மிடுக்கான உடையில் காணப்படுவார். கையில் செங்கோல் இல்லாமல் இவரைப் பார்க்கவே முடியாது. இவரது முக்கியமான வேலை, எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. பொழுதுபோக்கு - வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரவுண்ட்ஸ் வந்து, ஆசிரியருக்கு டிமிக்கி குடுத்து விட்டு வகுப்பறையில் சேட்டை செய்யும் மாணவர்களை அமுக்குவது. இவர் உடம்பில் எங்கு அடிப்பார் என்று எவராலும் கூற முடியாது. பிரம்பை சாட்டையாகக் கருதி, கண் மண் தெரியாமல் அடிப்பார்....

இவர்கள் தான் பள்ளியின் பெரிய தலைகள். பள்ளியைப்பற்றிய மற்ற தகவல்கள் எல்லாம், இடைச்செருகல்களாக அவ்வப்போது வரும். 'சேட்டைய' ராஜாக்களின் அறிமுகம் அடுத்த பதிவில்....

Monday, April 28, 2008

-தலைப்பு இன்னும் முடிவாகல-

வணக்கம்...!

என் ஸ்கூல் லைஃப், காலேஜ் லைஃப் - இதுல எது பெஸ்ட்னு கேட்டா, சந்தேகமே இல்லாம ஸ்கூல் லைஃப்-னு தான் சொல்லுவேன். ஸ்கூல்ல தான் முதன் முதலா எல்லாருக்கும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் கிடைப்பாங்க... எனக்கும் அப்படி தான்.... ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் இருக்குற பெரிய வித்தியாசம் - நண்பர்களுக்குள்ள இருக்குற ஈகோ, பாலிடிக்ஸ், கேங்-வார், இதெல்லாம் தான். எனக்கு ஸ்கூல்ல சூப்பர் ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க.

10வது படிக்கும் போது ஆரம்பிச்ச நட்பு, நாட்கள் போக போக, காலம் எங்களை இன்னும் நெருங்கிய நண்பர்களா ஆக்கியது. காலேஜ்ல எங்களுக்கு எத்தனையோ நண்பர்கள் கிடைச்சாலும், இந்த நாள் வரைக்கும் நாங்க எல்லாரும், அதே மாதிரி நெருங்கிய நண்பர்களா தான் இருக்கோம்.

நாங்க ஆறு பேர். எங்களுக்கு பயமே கிடையாது. எப்பவுமே ஒண்ணா தான் சுத்துவோம். எங்க ஸ்கூல்ல கேங் வார், கோல்ட் வார், செருப்பு வார், இப்படி எந்த வாரும் இருந்ததில்ல... ஏன்னா, ஒட்டு மொத்த ஸ்கூலுக்கும் தலைவலி குடுத்துகிட்டு இருந்தது, எங்க கேங் மட்டும் தான். என் ஸ்கூல் டேஸ்ல நடந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்து எழுதலாம்னு இருக்கேன். இப்படி ஒரு ஐடியா வந்ததுக்கு முக்கியமான காரணம் அல்லது இன்ஸ்பிரேஷன் - மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அவருடைய "ஸ்ரீரங்கத்து கதைகள்" படிச்சிட்டு பிரமிச்சிருக்கேன்.

பி.கு : இன்ஸ்பிரேஷன் சுஜாதான்னு போட்டதால நல்லா இருக்கணும்னு அவசியம் இல்ல.

இந்த ஐடியாவ என் கேங் மெம்பர்ஸ் கிட்ட சொன்னப்போ, அவங்க குடுத்த வெவ்வேற ரியாக்ஷன்ஸ் ...
"அடப்பாவி....எல்லா உண்மையையும் சொல்லிடாத டா" ,
"சூப்பர்.... அமோக வரவேற்பு கிடைக்கும்...",
“சூப்பர் டா... கண்டிப்பா எழுது, ஆனா நான் தான் ஹீரோ...”
"டேய்...மானம் போய்டும்",

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொண்ணு சொன்னாங்க. கடைசில எல்லாருமே போட்டி போட்டுக்கிட்டு, "இது ஞாபகம் இருக்கா?", "இதை பத்தி எழுது, அதை பத்தி எழுது"னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.... எல்லாருடைய "இன்புட்ஸ்" ஐயும் வாங்கி, எழுதலாம் னு இருக்கேன். "ஏதோ பண்ணு, அவுட்புட் நல்லா வந்தா சரி" னு அவங்களும் ஒத்துக்கிட்டாங்க...

எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு... ஒரு தலைப்பு வேணுமே?? அந்த விவாதம் தான் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு... ஒவ்வொருத்தன் ஒவ்வொண்ணு சொல்லறான்... கூடிய சீக்கிரமே கலந்து பேசி, ஒரு நல்ல பேரு வெச்சிருவோம். அது "கும்பகோணம் கும்மாங்கோ" ன்னும் இருக்கலாம், இல்லேனா "வெங்காயம்" ன்னும் இருக்கலாம். அவ்வளவு பெரிய கம்பெனிக்கே "ஆப்பிள்" னு பேர் வைக்கும் போது, இதுக்கு "வெங்காயம்" னு வைக்கக்கூடாதா என்ன? இதுக்கு வரிவிலக்கு பிரச்சனை எல்லாம் இல்ல... எப்படி வேணும்னாலும் வைக்கலாம்...

இதுல வரப்போற முக்கியமான கேரக்டர்களுடைய அறிமுகம், எங்க ஸ்கூல் பற்றிய விவரம், இதெல்லாம் அடுத்த பதிவில்....

Tuesday, April 22, 2008

Welcome to the IPL extravaganza !

Photos Courtesy : Dinamalar

IPL - The most hyped, expected,speculated and controversial cricket league in the world has taken off swiftly, after a glitzy opening ceremony. However, in a week's time it has become the most happening thing in this part of the world. The opening ceremony deserves a special mention as it was so lucrative and the organizers of the world cup will have to put special efforts to bring out something close to this one. Thanks to Dr.Vijay Mallya for all the efforts. For those who questioned the success of the tournament and the amount of money involved, the first round of matches has given an astounding reply.

Twenty20 - cricket's youngest child has become the most popular format in India and no wonder, the IPL has chosen to cash in on it. It was indeed exciting to watch Ricky Ponting and Ishant Sharma celebrating their success of dismissing Rahul Dravid. The biggest edge of this league is the signing of the big names in world cricket - Ricky Ponting, Adam Gilchrist, Andrew Symonds, Brett Lee, Shane Warne, Glenn McGrath, Matthew Hayden, Mark Boucher, Jacques Kallis, Sanath Jayasuriya and so on. Having bagged so many international players, one can expect the star power to workout magic interms of pulling the crowd to the staduim. Besides big time money making for the players as well as the organizers, the fact that only four international players can take field at a time, has opened up gates for accomodating young Indian players in the side. This is a great opportunity for them to rub shoulders with the veterans and to feel the pressure of playing big games.
It has been raining sixes and boundaries ever since the tournament commenced and it has been an action packed week so far. One good thing about this shortest version of the game, is its glorious uncertainity. That makes it interesting too. Unkike its rival league - the ICL, where the foreign players' perfomance over-shadowed local talents, we would like to see some match winning perfomances here from our local guys like Virat Kohli, S Badrinath, Shikar Dhawan, R Ashwin and others. Besides the U-22 players of India, the IPL has interestingly roped in a few uncapped international prospects like Luke Ronchi, the explosive wicket keeper batsman, David Hussey - Mike Hussey's sibling and a few other players from the Australian domestic circuit.

"There is no friendship on the field" - As Yuvraj Singh quotes, its gonna be a different experience for us to watch these games with the unusual scenario of the rivals playing together and unusual new rivalry building up. Who would not love to watch McGrath bowling to Ponting and Sachin Tendulkar taking on Anil Kumble? People would be keen to see how great players like Sachin tendulkar and Sanath Jayasuriya playing for the same side, operate in tandem. But, it would be interesting to see how the passion picks up among the crowd. This is new to the Indian crowd as they are only used to the nation vs nation contests. Just as football's English Premier League, we hope that the IPL should also become a massive hit and also be a giant leap towards the globalization of this wonderful game.

Sunday, March 30, 2008

Being an Indian in America

Two months passed by ever since I landed in the US. As every other alien landing in this country, I am now undergoing the transition cycle. After completing the immigration at the JFK airport, I had to go to some other terminal to catch my flight to San Francisco. It was hard to believe when someone told me that I need to catch a train to get to the other terminal. The first fascination would occur when you come out of the airport and see the roads. From then on, it happens every now and then whenever you see something new.

A transition happens in course of time which prepares you to accommodate yourself with the American lifestyle.

The first and foremost thing would be the multiplication math. With our parsimonious mindset, shopping becomes a terrible thing. Whenever you intend to buy something, you multiply it with forty, compare it with Indian money and ultimately end up buying nothing.

The way you dress up is more important in this country. When you wear tight shirts (which are famously called as short shirts back in India) t.shirts or tight pants, you will be labelled as a 'gay'. Also, guys got to be wary about choosing colors. Any pink shade or girlish color should strictly be avoided. Guys generally wear very loose dresses here. Gals dress up the other way round, obviously :D You can see the "dangerously low-waist" jeans which people wear below their waist. It would be a thriller to watch them walking as you never know when is it gonna come down!

One can never really say when the words like “dude”, “buddy”, etc surreptitiously enters your vocabulary and you start using them quite often. You get to see a variety of people here - almost people from all parts of the world can be spotted. Mexicans, Chinese and Desis(Indians living away from home) are most common, while in Desis there is another category. They are called as the ABCD - American Born Confused Desis. Well, they are really confused as to which way to lead their lives - Indian or American. When you start calling a fellow Indian as “Desi”, then you are almost done with the first phase of transition.

You always try to be disciplined, at least pretend rather. Self-discipline is kind of enforced here, so you have no choice but to be like that. For instance, when you open a door and enter somewhere, you cannot bang the door on the face of the person following you. You got to wait for him and hold the door until he gets inside.

Then comes the choice of food. Unlike people’s imaginations, it is not a next to impossible task to survive as a vegetarian in here. There are always choices to make and it purely depends on the individual. Even in remote places where the Indian population is low, you can definitely locate a Indian grocery store somewhere around. If you are very keen to stick to the “vegetarianism”, it is very much possible. If you decide to cut loose, chicken burgers and hamburgers are always inviting.

Drinking is a social habit here and a party without drinks is never called a party. My jaws dropped and eyeballs popped out when I first saw Desi gals(am already done with the transition… he he) drinking in a party. But then, this is America. Again, this also is not a “must-cultivate” kind of culture once you step into the US. By now, so many people have challenged me that I could not remain a teetotaller anymore. I have gleefully accepted the challenge and living up to it.

USA is a land of choices – You can live the way you want. When you catch up a new habit here, you are totally responsible for it and definitely cannot put the blame to the society or people or the culture. People talking about the imposing situations which made them to drink or smoke are timorous of accepting their fault. One cannot cite a typical situation as a reason which made him drink. Situations can never be so compelling, coz they are created by us, after all!

Friday, March 14, 2008

அமெரிக்கா டைரி - கிச்சன் கில்லாடி

இரவில் நீண்ட நேரம் கண் முழிப்பது எனக்கு ஒரு வியாதியகவே ஆகிவிட்டது. அமெரிக்கா வந்ததிலிருந்து 1 மணிக்கு முன் படுத்துத் தூங்கியதாக நினைவில் இல்லை. இந்தியாவில், இரவு 2 மணிக்கு இன்டர்நெட்டில் உலவும் போது, என் நண்பர்கள் "இப்போவே US டைமிங்க்கு பழகிக்கிறியா?" என்று கிண்டலடிப்பார்கள்.. இப்போது அமெரிக்கா வந்து கூட, அந்த பழக்கம் மாறவில்லை. லேப்டாப் இல்லாமல் அமெரிக்காவில் ஒரு வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கென்றே சில வலைத்தளங்கள் கிரிக்கெட் மேட்ச் முதற்கொண்டு, சன் டிவி, ராஜ் டிவி என்று அனைத்தையும் ஒளிபரப்புகின்றன. இந்தியா பங்கேற்கும் போட்டி என்றில்லை... இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் முதல் நம்மூர் தெரு கிரிக்கெட் வரை, எந்த மேட்சை ஒளிபரப்பினாலும் ஆர்வத்துடன் பார்க்கும் ஜாதி நான். இரவு 2 மணி(குறைந்தபட்சம்) வரை இன்டர்நெட்டில் படம் அல்லது கிரிக்கெட் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. என்னுடைய டிவி, கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம்-தியேட்டர், எல்லாமே என் லேப்டாப் தான்...

காலை 9 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி. வீட்டிலிருந்து ஆபீஸ் ஒன்றரை மைல் தூரம் தான் என்பதால், 9.45 க்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும். 10 மணிக்குள் ஆபீஸ் சென்றடைந்து விடலாம். காலையில் - (ஒருவேளை சாப்பிட்டால்) , 1 பவுல் கார்ன் ஃபிளேக்சுடன் பால். மதிய உணவிற்கு மேகி நூடுல்ஸ் அல்லது நேரம் இருந்தால் காலையிலேயே சப்பாத்தி போட்டு எடுத்து டிபன் பாக்ஸில் வைத்துக்கொள்வேன். மேகி நூடுல்ஸ் என்றால், ஆபீசிலேயே மைக்ரோவேவில் வைத்துக்கொள்ளலாம்.

ஆபிஸில் செய்யும் முதல் வேலை http://www.cricinfo.com/ - வலைத்தளத்தில் இருக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் ஒரு வார்த்தை கூட விடாமல் படிப்பது. இந்தியாவில் இருந்தவரை தினமும் பேப்பர் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. இங்கு வந்தவுடன் நம் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகியது. என்னதான் CNN IBN நியூஸ் சேனல் பார்த்தாலும், தமிழ் பேப்பர் படித்த திருப்தி எதிலும் கிடைப்பதில்லை. அதனால், தினமலர் நாளிதழை ஆன்லைனில் ஒரு அலசு அலசுவேன். இவை எல்லாம் முடிந்த பிறகு தான் என் நாளே தொடங்கும்....

ஆபீஸ் முடிந்து இரவு 7 மணி வாக்கில் வீடு திரும்புவேன். இரவு தான் என்னுடைய சமையல் திறமையைக்(?) காட்ட முடியும். "பச்சை மிளகாய் cutter"ஆக என் சமையல் career-ஐத் தொடங்கிய நான், படிப்படியாக முன்னேறி தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்க கற்றுக்கொண்டதுடன் தனியாக ஆம்லெட் மட்டுமே போட கற்றுக்கொண்டிருந்தேன். முழு சமையலையும் நான் செய்ததே இல்லை. நேற்று முழுக்க முழுக்க நானே சமைக்க வேண்டும் என்ற முடிவில் முருங்கக்காய் சாம்பாரும், பாவக்காய் வறுவலும் செய்ய முடிவு செய்தேன். அதன்படி, நறுக்கிய பாவக்காய், முருங்கக்காய் ஆகியவற்றை வாங்கி வந்து, தெம்புடன் சமைக்க ஆரம்பித்தேன். முதல் படியாக, கொஞ்சம் பருப்பை எடுத்து குக்கரில் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்தேன். குக்கரின் விசிலுக்கு அருகிலிருக்கும் ஓட்டையின் வழியாக ரயில் வண்டி போல புகை வந்துகொண்டே இருந்தது. இதற்கு முன்னால் அந்த இடத்தில் ஓட்டை இருந்ததா என்று கூட சரியாக தெரியவில்லை. நெடு நேரம் ஆகியும் விசில் சத்தம் வரவே இல்லை. என்னுடன் தங்கியிருக்கும் குஜராத்தி பையனும் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தான். குக்கர் இப்படி புகைவதைப் பார்த்து, என்னிடம் "Anything wrong?" என்று கேட்டான். ஏதோ வித்தியாசமாக இருக்குமோ என்று எனக்கு தோன்றினாலும், "No, that's perfectly fine" என்று கூறி விட்டு, பாவக்காய் வறுவல் செய்வதற்கு ஆயத்தமானேன். நீண்ட நேரம் ஆகியும் விசில் சத்தம் வரவில்லை என்று நான் சொன்னதும், அடுப்பை ஆப் செய்து விட்டு, குக்கரை திற என்று போனில் என் பிரெண்ட் சொன்னாள். திகிலுடன் குக்கரை திறந்து பார்த்த போது, கருகிய வாடை அடித்தது! தண்ணீர் குறைவாக இருந்ததால், அது அடிபிடித்து, கருகிவிட்டிருந்தது! குக்கரின் சேஃப்டி வால்வை வேறு காவு கொண்டுவிட்டது. சேஃப்டி வால்வு உடைந்து தான் அங்கே ஓட்டை விழுந்திருக்கிறது என்று அவள் சொல்லிதான் தெரிந்தது! சத்தியமாக குக்கரை திறக்கும் வரை எனக்கு எந்த வாடையும் வரவே இல்லை! இருந்தாலும், மனம் தளராமல், குக்கரைக் கழுவிவிட்டு, மீண்டும் கொஞ்சம் பருப்பு, நிறைய்ய்ய்ய்ய தண்ணீர் வைத்து வேக விட்டேன். சேஃப்டி வால்வு உடைந்ததால் குக்கரை மூடி வைத்து பலனில்லை என்று அவள் சொன்னதன் பேரில், திறந்தே வைத்தேன்...

நிற்க. எனக்கு சமைக்கவே தெரியாது. என்னுடைய ஃபிரெண்ட் நித்யா, போனில் பாவக்காய் ஃபிரை எப்படி செய்வது என்று சொல்ல சொல்ல, அப்படியே செய்தேன். நடுவில், "கொஞ்சம் உப்பு போடு" என்று அவள் சொல்லும்போது, "கொஞ்சம்னா? எவ்வளோ?" என்று கேட்டேன். "உப்பு அளவெல்லாம் இங்கேயிருந்து சொல்ல முடியாது, நீயே ஒரு அளவா போடு" என்றாள். மீண்டும் ஒரு முறை, உப்புக்கு அளவு கேட்ட போது, "டேய், இனிமே உப்புக்கு அளவு கேட்டேன்னா கொன்னுடுவேன்" என்று மிரட்டினாள். நானும் ஏதோ குத்துமதிப்பாக உப்பு போட்டேன். கடைசியில், பாவக்காய் ஓவராக பிரை ஆகி, கருகி விட்டிருந்தது... அது சாப்பிடும் போது தான் தெரிந்தது! :(

பாவக்காய் சொதப்பினாலும், சாம்பார் மட்டும் ஏதோ ஜஸ்ட் பாஸ் ஆனது! ஆனால், இந்த குக்கிங் ப்ராசெஸ் முழுவதும்(கிட்டத்தட்ட 2 மணிநேரம்) என்னை பொறுமையாக வழி நடத்திய என் ஃபிரெண்ட் நித்யாவிற்கு நன்றி!

"தோல்வி தான் வெற்றியின் முதல் படி" - அடுத்த முறை நான் சமைக்கும் போது பட்டையை கிளப்புவேன் என்று நம்பிக்கை இருக்கிறது....

வார கடைசியில் கிரிக்கெட், அல்லது எங்கேயாவது ஊர் சுத்துவது என்று நாட்கள் கழிகிறது. மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளுடன், அடுத்த "அமெரிக்கா டைரி" யில் சந்திப்போம்.

Wednesday, March 05, 2008

A legend departs


Photo courtesy : cricinfo

It was a fascinating week. It was full of mixed emotions as far as a true cricket fan is concerned. India managed to thrust the thorns deep into Australia's skin after the eventful test series. Two straight demoralising defeats pushed Australia to a 'never-before' panic situation. Amidst all the drama, it was a quiet farewell for the legendary cricketer of all times - Adam Gilchrist.

Not certainly the fairy tale ending to a fabulous career, but it had to happen. Gilli would have liked a different ending to his career, but he should be a happy man at the end of the day. His contributions to Cricket Australia and world cricket is more valuable. Batting at no.7 in test matches, Gilli has produced some scintillating knocks which revolutionised the batting style in test cricket. According to me, Hayden wouldn't have been so successful without him.

His records speaks for himself - I need not put anything new. So many things are written about him at this juncture, this article is nothing special. But, being a die-hard cricket fan and since Gilli is one of my all-time favourites, I felt that it is necessary to record something from my part as curtains fall on a great cricketer's career.

I remember watching Gilli's debut ODI match way back in 1996 against South Africa which Australia lost. Ironically, Australia lost the final ODI which he took part. I am fortuante enough to watch both these matches. Like Shane Warne's and Steve Waugh's, Gilli's retirement is also on a high except for the fact that his team is not on a good run. One can hardly spot a lean patch in his career in both forms of the game, which is a rare happening for a wicket-keeper batsman. He was brilliant with the bat and amazing behind the stumps. Even though he has not had the best of relationships with the ace spinner Warne, it has never been a problem on the field. Unlike Steve Waugh, Gilli always walks out immediately without even waiting for the umpire's decision if he knows that he is out. This makes him a genuine cricketer more than his technical brilliance.

Bye Bye Gilli ! We miss you...


Signing off,
Gowri Shankar

Wednesday, February 13, 2008

My First…

Its always going to be fun when you recollect your thoughts about your first ever things in life. On a sleepless night, when I attempted to do so, I was pleasantly surprised…. I could remember sooooo many!! It made me happy and took me back to the past ;)

Here we go....

First ever theatre experience – HE-MAN (English) - 1st standard

First School - Nalini School (That school is no more now)

First ever tamil movie in theatre – Varusham 16 (When I was in 1st standard)

First ever stage experience - Appeared on stage for Pledge (U.K.G)

First uniform - White shirt and a dark brown half-trouser

First class teacher - Ms. Vimala (My English teacher, 1st standard)

First stage competition – Fancy dress – Dressed up like a doctor (2nd standard)

First stageplay – Played the role of a district collector (3rd standard)

First time ever to get a prize – A certificate in Drawing Competition (Consolation prize - 3rd Standard)

First competition ever won – English Essay competition (4th standard)

First book ever read - The Secret Seven (Never completed it though ;) )

First ever Flight travel – Madurai to Chennai (When I was in 8th standard, went all alone :D)

First ever watch – Titan (Got it when I was in my 4th standard, which I lost in a few days!)

First pet – Guppy fish (Had it in a Horlicks bottle)

First cycle – BSA Champ

First ever letter – To my aunty (I guess in 1st standard) – The letter is still with me :)

First ever out-of-state trip – Guruvayoor, Kerala

First cartoon ever watched – HE-MAN

First ever comic hero - HE-MAN

First actress who attracted me – Manisha Koirala (Bombay)

First actor who attracted me – Kamal Hassan (Don't raise your eye-brows! I was a Kamal fan till 1st standard. Then, I became a Rajini Fanatic!!)

First close friend – Pradeep Kumar

First sport – WWF (WWE now)

First favourite sportsperson – Hulk Hogan (WWE)

First favourite cricketer – Vinod Kambli (I used to wear ear-ring like him and deliberately bat left-handed)

First school trip – A trip to Thanjavur medical college for the exhibition(10th standard)

First ever theme park experience - VGP Golden Beach, Chennai (5th standard)

First ever star hotel experience - Hotel Trident, Chennai (5th standard)

First ever two-wheeler – Sunny (9th standard)

First ever Jeans – Oxemberg

First perfume – BRUT

First pocket video game - Brick game

First computer – PCL 248 MB with DOS

First software ever used – Poet (A DOS s/w, which is still with me)

First ever computer game – Prince of Persia I

First ever CD bought - Audio CD of 'Uyire' -300 rupees - 1998

First ever online shopping - Bought a T.shirt in rediff.com for 199 bucks (College 1st year)

First ever e-mail id – Yahoo! (10th standard -Not using it right now)

First ever cricket tournament played– Star Air Travels’ Cricket Competition (Played under lights- Town Higher Secondary School,Kumbakonam – 1997)

First car-driving experience – Maruti Omni (9th standard)

First gadget used – Talking watch (Very famous that time! – 7th standard)

First communication device used – Pager (10th standard)

First cellphone – Nokia 3210 (12th standard)


First cellphone operator – BPL (That was a prepaid card)

First ever fancy number – Airtel - 9894012348

First salary - Rs.3000(I was a student then)

First ever ‘cut’ experience in college – I cut the afternoon classes and came to thanjavur to meet up my school friends

First ever inter-school competition – Inter school science exhibition at Sri Matha Matriculation school (11th standard)

First ever cricket match that I watched in the stadium – India vs Pakistan, Independence Cup, M.A.Chidambaram Staduim, Chennai – 1997

First banking account - ICICI Bank, Kumbakonam (College 1st year)

First cooking experience - Omelette (Just a month ago...hehe)

First crush – Kandippa sollanuma??

First love – Ofcourse, Mom and Dad (hehe)

Why don't you try listing out yours??

Cheers,
Gowri Shankar